கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -3
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++
இயற்கையும், மனிதனும்
++++++++++++++
“நேற்று நமது ரொட்டியில் குருதியைக் கலந்து அதை உண்டோம். நம் குடிநீரில் கண்ணீர்த் துளைகளைக் கலந்து அதை அருந்தினோம். ஆனால் இன்று நாம் காலைக் கன்னிகளின் கைகளிலிருந்து வெகுமதியாக வாங்கத் துவங்கி பழங்காலத்து இனிய வசந்தத்தின் நறுமண ஒயினைக் குடித்தோம்.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
+++++++++++++++++++
இயற்கை அழிக்கும் மனிதன்
+++++++++++++++++++
புள்ளினம் புலம்புவதைக் கேட்டு
“அழகிய பறவைகளே !
அழுவதின் காரணம் கூறுவீர்”
என்றேன்.
அருகினில் பறவை ஒன்று
கிளை முனையில் அமர்ந்து
பேசியது :
“ஆதாமின் புதல்வர் கோர
ஆயுதங்கள் ஏந்தி
எம்மை எதிரி களாய் எண்ணி
எம்மோடு போர் புரிய
இந்தக் களத்துக்கு
வந்திடும் வேளை இது !
விடை பெற்றுக் கொள்ளும்
ஒவ்வொரு பறவையும் !
மனித ஆவேசத்துக்கு முதலில்
பலியா காமல்
யார் தப்பிப் பிழைப்பார்
என்பதை
யாம் அறியோம் !
++++++++++
யாம் செல்லும் இடமெல்லாம்
எம்மைத் தொடரும்
மரணம் !”
குன்றின் சிகரங் கட்குப்
பின்புறத்தில்
குப்பென எழுந்திடும் பரிதி
வழுக்கிச் சரியும்
உச்சாங் கிளைகளின்
கிரீடத்தில் !
அந்த அழகை வியந்து
என்னைக் கேட்டேன் நான் :
“இயற்கை வடித்த அற்புதத்தை
ஏனழித்து விட்டுச்
சூனிய மாக்க வேண்டும்
இந்த
மானிடக் கும்பல் ?
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 1 2010)
- முள்பாதை 54
- பரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி
- நினைவிழத்தல்
- நம்பிக்கை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -3
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2
- கானலென்றறியாமல்
- காற்றோடு காற்றாய்…
- ஹிந்துஸ்தானின் இன்றைய நிலைமை:
- தலித் இலக்கிய நிராகரிப்பின் எதிரொலி
- புண்பட்ட பூமி, புண்பட்ட மனங்கள் – மதச்சுதந்திரமும் மதச்சார்பின்மையுமா மருந்து?
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்
- முகம்
- வெளிச்சம்..
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3
- தாய்மை
- தண்டனை
- உள்ளொன்று வைத்து…
- பத்திரமும் தைரியமும்
- வால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி
- மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை
- இவர்களது எழுத்துமுறை – 14 டாக்டர். மு.வரதராசனார்
- தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்
- பிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா
- மரித்தோரின் திருநாளில்
- கவிஞனாகும் முன் சில ஆயத்தங்கள்
- ஐந்தறிவு பார்வை!
- மாடவீதி
- சுவர் சாய்ந்த நிழல்கள் …!
- திரவநீர் கனவுகள்
- எதிர்பார்ப்புகள்
- பிரியாத பிரிவுகள்
- மழை நாள்
- மீட்சியற்ற வனத்தின் கானல்