கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
சிறுவரோடு விளையாடும் ஞானி
++++++++++++++
எத்தனை விதமான பெண்டிர் ?
++++++++++++++
சிறுவரை விட்டு அகன்றார்
குருநாதர்.
வாலிபன் உரக்கக் கேட்டான் :
“மேலும் கூறுவீர்
இவ்வூர் மாதரைப் பற்றி.”
அருகில் வந்தார் குருநாதர்
மரக் குதிரையில்.
“உன் முதற் காதலி
கன்னி அழகு உனக்குத்தான் !
களிப்பும் விடுவிப்பும்
அளிப்பாள் !
இரண்டாம் மாது
குழந்தை யில்லா விதவை !
பாதி மனைவி ஆவாள் உனக்கு !
மூன்றாம் மாது
வேண்டாம் உனக்கு !
திருமணம் ஆன மாது !
ஒரு பிள்ளையும் உண்டு.
முதற் பதிக்குப் பிறந்த பிள்ளை !
அவளது அன்புப் பகிர்வு
அந்தப் பிள்ளை மீதுதான் !
உந்தன் மீது
உண்டா காது உறவு !
சிந்திப்பாய் இப்போது !
வந்த வழியே திரும்பிச் செல் !
மரக் குதிரையை
திருப்ப வேண்டும் நான் !
++++++++++
சிறுவரை விளித்துக் கொண்டு
குருநாதர் நெருங்கினார்.
“மேலும் ஒரு கேள்வி மேதையே !”
“சீக்கிரம் கேள்
குதிரைச் சவாரிக்காரி
உதவிக்கு நான் தேவை.”
நேசிக்கப் போகிறேன்
நான் அவளை.”
வாலிபன் மீண்டும் கேட்டான் :
“ஈதென்ன விளையாட்டு
மேதையே ?
உமது ஞானத்தை ஏன் இப்படி
ஒளித்து வைக்கிறீர் ?”
குருநாதர் கூறினார் :
“என்னைத் தலைவனாய் ஆக்க
இம்மக்கள் விழைகிறார் !
குற்றத்தை விசாரித்து நான்
நீதி சொல்ல,
வேத நூலை விளக்க
வேண்டு மென விழைகிறார் !
என்னறிவு அதற்கு
இடங் கொடுக்க வில்லை !
இன்பத்தில் மூழ்க்க என்னை
இழுக்குது என்னறிவு !
நானொரு
கரும்புத் தோட்டம் !
அதே சமயத்தில் அதனைத்
கடித்து இனிப்பைச் சுவைப்பதும்
நான் தான் !”
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 1 2010)
- முள்பாதை 54
- பரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி
- நினைவிழத்தல்
- நம்பிக்கை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -3
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2
- கானலென்றறியாமல்
- காற்றோடு காற்றாய்…
- ஹிந்துஸ்தானின் இன்றைய நிலைமை:
- தலித் இலக்கிய நிராகரிப்பின் எதிரொலி
- புண்பட்ட பூமி, புண்பட்ட மனங்கள் – மதச்சுதந்திரமும் மதச்சார்பின்மையுமா மருந்து?
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்
- முகம்
- வெளிச்சம்..
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3
- தாய்மை
- தண்டனை
- உள்ளொன்று வைத்து…
- பத்திரமும் தைரியமும்
- வால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி
- மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை
- இவர்களது எழுத்துமுறை – 14 டாக்டர். மு.வரதராசனார்
- தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்
- பிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா
- மரித்தோரின் திருநாளில்
- கவிஞனாகும் முன் சில ஆயத்தங்கள்
- ஐந்தறிவு பார்வை!
- மாடவீதி
- சுவர் சாய்ந்த நிழல்கள் …!
- திரவநீர் கனவுகள்
- எதிர்பார்ப்புகள்
- பிரியாத பிரிவுகள்
- மழை நாள்
- மீட்சியற்ற வனத்தின் கானல்