கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++
பூரணம் அடைவது
++++++++++++++
“இது எப்போதும் அறிந்ததுதான் : காதலுக்குத் தனது ஆழம் பிரிவு வேளை வருவது வரை தெரியாது.”
கலில் கிப்ரான்.
“கலைத்துவம் என்பது நமக்குத் தெரிந்ததற்கும், மர்மமான மறைதலுக்கும் இடைப்பட்ட ஒரு எட்டு வைப்பு.”
கலில் கிப்ரான்.
+++++++++++++++++++
பூரணம் அடைதல் எப்போது ?
+++++++++++++++++++
(முன் பாகத் தொடர்ச்சி)
இவற்றை எல்லாம் உணர்ந்த பின்
இயற்கை யாகவே
பாதி வழி அறிந்திடு வான்
பரிபூரணப் பாதைக்கு !
குறிக்கோளை அடைய
சிந்திக்க வேண்டும் அவன்
தாயைச் சார்ந்துள்ள தானொரு
சேய் என்று !
தானொரு குடும்பத்தின்
பொறுப் புள்ள
ஒரு தந்தை என்று !
+++++++++
காதலில் தோல்வி யுற்ற
வாலிபன் !
கடந்த வாழ்வை எதிர்க்கும்
பழமைவாதி !
ஆலயத்தில் வழிபடும் மனிதன் !
சிறையில் அடைபட்டுள்ள
ஒரு குற்றவாளி !
ஏட்டில் எழுதிக் குவித்திருக்கும்
இலக்கியப் பண்டிதன் !
இரவின் கருமைக்கும்
பகலின்
புரியா மைக்கும் இடையே
தடுமாறும்
ஓர் அறியாப் பாமரன் !
இனிமை உறுதிக்கும்
தனிமை முட்களுக் கிடையே
தவிக்கும்
கிறித்துவ மாடக் கன்னி !
உடலுறவுப்
பலவீனத் துக்கும்
உடற்பசித் தேவைக்கும்
இடையில்
அடைபட் டிருக்கும்
ஒரு விலை மாது !
கசந்த வாழ்வுக்கும்
கையா லாகாத பணிதலுக்கும்
மையத்தில் நையும்
ஓர் ஏழை மனிதன் !
பேராசைக்கும்
மனச் சாட்சிக்கும் இடையே
போரா டாத
ஒரு செல்வக் கோமான் !
அந்தி மயங்கிய ஒளிக்கும்
உதயச் சுடர் கதிருக்கும்
உள்ள இருளை உணர்ந்த
ஒரு கவிஞன் !
+++++++++++
யார் இப்படி
அனுபவம் பெறுவார் ?
எவர் ஆஇப்படி
உலகைக் காண்பார் ?
யார் இப்படி
புரிந்து கொள்வார் ?
பூரணம் அடைய முடியும்
தொடர்ந்து
இவ ரெல்லாம்
கடவுளின் நிழலாய் !
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 4 2010)
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)
- முள்பாதை 50
- சகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்
- கானல்
- பலிகேட்கும் தேர்வுகள்
- அடடா
- கற்றது தமிழ்…
- பலி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -16
- விசாரம்
- சந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி !
- மழையின் காதலன்
- பயங்கள்
- இரவின் நிழல்
- நாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..
- உயிர் உறை ரகசியம்
- விட்டிலாயிராமல் விலகியிரு…
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு
- திருப்பூர் : தற்கொலை நகரம்
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2
- சொல்புதிது’ இலக்கியவிழா
- புலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்
- பால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்
- பெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்
- கண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை
- ஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு
- காப்பியங்களில் திருப்பு முனைகள்
- வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”
- இவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்
- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்
- மழையில் காலை
- தேடாமல் வந்தது.
- தேவை ஒரு மரணம்…
- ஓர் இரவு வானம்
- இன்ப வேரா ,துன்ப போரா ?
- பாவனை
- அசம்பாவிதம்
- விலகிப் போனவன்
- நிசப்தம்
- பரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்