கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று = கவிதை -9
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++++++++++++++
காதல் உலகு ஒரு சூனியம்
++++++++++++++++++++++++++++++
நமது உயிர் வாழ்வை
இருட்டடிக்கும்
ஒரு சூனியத்தைப் போற்று !
நமது காதலால்
உருவான
இந்தக் குடியிருப்பிடம்
தோன்றியது
சூனியத் துக்கு !
எப்படியோ வெறுமை
புகுந்திடும்
இவ்வுயிர் வாழ்வு மங்கிப் போய் !
மீண்டும் மீண்டும்
போற்று அந்த விளைவை !
+++++++++++++
வெகு காலங் களாய்
வெறுமையில் கடத்தினேன்
எனது குடிவாசத்தை !
பிறகு ஒரே பாய்ச்சலில்
கரத்தின் ஒரே சுழற்சியில்
அப்பணி முடிந்தது !
நான் யார் என்பது
நழுவிப் போனது !
முன்னிருப்பது
கண்ணுக்குத் தெரியாது !
ஆபத்தைத் தரும் அச்சம்
அகன்றது !
எனது நம்பிக்கையும்
மலைமேல் ஏறும் தேவையும்
விடுதலை பெற்றன !
++++++++++++
இங்குள்ள குன்று இப்போது
வெறுமை நோக்கி
வெளியே வீசப் பட்ட
ஒரு துரும்பு இழையின்
சிறு துணுக்கு !
பொருளற்றுப் போயின
நான் கூறும்
இந்த வார்த்தைகள் !
குடிவாசம், சூனியம், சிறு துரும்பு
குன்று, வாய்ச் சொற்கள்
கூறுகின்ற
அர்த்தம் யாவும்
பலகணி வழியே கூரையில்
சரிந்து
நழுவிச் செல்லும் !
*****************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 10, 2010)
- ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட
- ஆயுத மனிதன் (The Man of Destiny ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -17
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் = கவிதை -28 பாகம் -3
- அஜ்னபி
- உயிர்பெருக்கில் குளிர்காய்தலை குறித்து
- அம்மா
- உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்
- காதலி எனும் கிறுக்கல்கள்!
- இந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை
- திராவிட அரசு திராவிடச் சான்றோர் வேண்டுகோளைச் செவிமடுக்குமா?
- காற்றாடிகளுடன் உறவாடிய நாட்கள்
- முள்பாதை 29
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று = கவிதை -9
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று
- வேத வனம் விருட்சம் 85
- ஆபிதீனின் கதை, “அங்கண ஒண்ணு, இங்கண ஒண்ணு”
- பட்சியும் கனகாம்பரமும்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010
- என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்பு
- பெத்தமனம் பித்து
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -14
- பத்துப்பாட்டில் தொழிலும், தொழிலாளர்களும்
- கொங்குநாட்டுத் தமிழ் குழந்தை (புலவர் குழுந்தை)
- பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீ ரங்கம் வி. மோஹனரங்கன்
- குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?
- சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு