கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-2 மதுக்குடி அங்காடி (The Tavern)
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
மதுக்குடி அங்காடி
ஒயின் உள்ளது பெரிய அண்டாவில் !
ஆயினும் கிண்ணங்கள் இல்லை !
அவ்வித மாயின் சரி !
உடம்பு மினுமினுக்கும்
ஒவ்வோர் காலைப் பொழுதிலும் !
மேனி மிளிரும் எமக்கு
மீண்டும் மாலைப் பொழுதில் !
+++++++++++
எதிர்காலம் எமக்கில்லை என்று
இடித்துரைப்பார் அவரெல்லாம் !
அப்படி சொல்வது சரிதான் ! அதை
ஒப்புக் கொள்ளும் எமதுள்ளம் !
கவிஞர் ரூமி (The Tavern)
+++++++++++++
முன்னுரை :
பாரசீகக் கவிஞர் ஜெலாலுதீன் ரூமி 1207 ஆம் ஆண்டில் தற்போது ஆ·ப்கானிஸ்தான் எனப்படும் பூர்வீகப் பாரசீக தேசத்தில் உள்ள பால்க் (Balkh) என்னும் இடத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே மங்கோலியர் படயெடுப்புக்கு அஞ்சி அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டுத் துருக்கியில் உள்ள கொன்யாவுக்கு ஓட வேண்டியதாயிற்று. அங்குதான் ரூமி தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கடந்தார். நாஷாப்பூரில் (Nashapur) சில காலம் தங்கிய போது கவிஞர் அத்தார் (Poet Attar) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவரது குடும்பத்தினருக்குக் கிடைத்தது. ரூமிக்கு வாய்த்த மகாக் குருமார்களில் முதல்வர் (Mentors) கவிஞர் அத்தார். ரூமியின் ஞானக் கொடையை அறிந்த கவிஞர் அத்தார் “அஸ்ரார் நமா” (Asrar Nama – The Book of Secrets) என்னும் நூலை அன்பளிப்பாகக் கொடுத்தார். 1226 இல் ரூமி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன்.
அறிஞராகத் திகழ்ந்த ரூமி டெர்விஸ் (Dervish) இஸ்லாமியக் குரு ஸாம்ஸ் ஆ·ப் தபிரிஷ் (Shams of Tabriz) அவர்களை 1244 இல் சந்தித்த பிறகு புத்துயிர் பெற்று அவரது ஆன்மீகச் சிந்தனையில் மகத்தான ஒரு திருப்பம் ஏற்பட்டது. “நெடுங் காலமாய் முன்பு நான் நினைத்து வந்த அந்தக் கடவுளைக் கண்டேன்,” என்று ரூமி அந்த தேவதூதரைக் கண்ட போது பெருமிதம் கொண்டார். மதக்குரு ஸாம்ஸ் அவர்களுக்குப் பிறகு ரூமியின் சிந்தனையைச் செழிக்கத் தூண்டியவர் ஸலாதீன் ஸர்கப் (Saladin Zarkub) பிறகு ஹ¤ஸம் (Husam) என்பவர். கவிஞர் ரூமி பல கவிதைகளில் விளிக்கும் “நீ” என்பது கடவுளா, ஸாம்ஸா அல்லது யார் என்பதை வாசகர்தான் யூகித்துக் கொள்ள வேண்டும்.
ஞானக் கவிஞர் ரூமி ஓர் மதஞானி, பேரறிஞர், இஸ்லாம் மதத்தின் ஒரு தூணாகக் கருதப்படுபவர். 1244 ஆண்டு ஆன்மீகத் திருப்பத்துக்குப் பிறகு ரூமி தனது 38 ஆவது வயது முதல் 24,000 பாக்கள் கொண்ட “மத்னாவி” (Masnavi or Mathnawi) என்னும் தன் படைப்பு நூலை எழுதத் துவங்கினார். அவரது அடுத்த புகழடைந்த நூல் “திவான்-இ-ஸாம்ஸ்-இ-தாமிரிஷ் (Divan-E-Shams-E-Tabriz – The Collective Poems of Shams of Tabriz) என்பது. ரூமியின் கவிதைப் படைப்புகளில் ஒரு வித “மாயப் புதிர்” (Mystic Connotation) புரிந்தும் புரியாத பொருளில் புலப்படும். ரூமியின் பட்டப் பெயர் “மௌலானா”. மௌலானா என்றால் நமது கோமான் (Moulana means our Master) என்று பொருள். ரூமிக்குப் பிடித்த இசைக் கருவி புல்லாங்குழல். பாரசீகப் பாக்களை இசைக் கருவிகள் மூலம் பாடலாம் அல்லது வாசிக்கலாம்.
ரூமியின் கவிதைகள் பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அவரது ஞானக் கருத்துக்கள் அகில நாடுகளுக்கும் உகந்தவை. கவிஞர் ரூமி கொய்னாவைச் சார்ந்த “மெவ்லெவி மதக்குழு நெறி” (Mevlevi Dervish Order, called Whirling Dervishes) எனப்படும் “இசைப்பா ஆட்டக் குழுவின்” துவக்கப் பிதா. ரூமி இஸ்லாமியர், யூதர், கிறித்துவர் ஆகிய மூன்று மத இனத்தவர் மீதும் சமமான மதிப்பைக் கொண்டவர். பாரசீகக் கவிஞர் ரூமி உலகிலே மிகப்பெரும் “ஸ¤·பி மாயப் புதிர் கவிஞராக” (Sufi Mystic Poet) மதிக்கப் படுகிறார். ரூமியின் கருத்து : “கடவுளைத் தவிர வேறோர் கடவுள் இல்லை. கடவுள் என்பவர் ஒருவரே.” 1273 டிசம்பரில் ரூமி நோய்வாய்ப் பட்டுத் தன் மரணத்தைத் தானே முன்கூட்டி அறிவித்துப் புகழ் பெற்ற கஜல் (Ghazal) கவிதை ஒன்றை எழுதினார்.
++++++++++++++++
கவிதை -2 பாகம்-2
மதுக்குடி அங்காடி
குடிபோதை இனமொன் றுள்ளது !
அத்துடன் சேர்ந்து
பித்துடன் மகிழ்வீர் !
கூச்சல் வீதியில் நடப்பீர்
கூக்குரல் நாயகர் ஆகி !
ஆசை தீரும் மட்டும்
அருந்துவீர்
உம்மை
அவமதித்துக் கொண்டு !
++++++++++++
இரு கண்களை மூடிக் கொள்
மறு கண்ணால் நீ பார்த்திட !
கரங்களை விரித்திடு
கைகளைக் குலுக்க வரும் போது !
இந்த வட்டத்தில் நீ
வந்து உட்கார் !
ஓநாய் போல் நடிப்பதைத்
தவிர்த்திடு !
ஆட்டிடையன் பரிவு
உள்ளத்தில் நிரம்புவதை
உணர்ந்திடு !
+++++++++++++
இரவு வேளையில்
உன்னருங் காதலி
திரிகிறாள் உன்னைத் தேடி !
ஆறுதல் அளிக்க வருவோரை
ஏற்றுக் கொள் ளாதே !
வாயை மூடிக் கொள்
வாயிக்குள்
உண்டியைத் திணித்த பிறகு !
உன் காதலி வாயை
உன் வாயால் சுவைத்திடு !
++++++++++++++
“என்னை விட்டுப் போனாள் அவள்”
“என்னை விட்டுப் போனான் அவன்,”
என்று முணுமுணுத்து நொந்தால்
இருபது பேர் உன்னை நெருங்குவார் !
கவலை படுவதைக் காலி செய் !
மனக்கவலை
உனக்குத் தருபவன் யாரென
நினைத்திடு !
++++++++++++
சிறைக் குள்ளே நீ ஏன்
தங்கி யுள்ளாய்
அறைக் கதவு முழுவதும்
திறந்துள்ள போது ?
முக்கோணப் பயத்தில்
முடங்காது நீ வெளிச் செல் !
சிந்தித்து
மௌனமாய் வாழ்ந்திடு !
+++++++++++
வாழ்வு வட்டத்தை விரிவாக்கித்
தாழ்ந்து பணிவாய்
எப்போதும் !
விரைந்து செல் தணிவாய் !
எந்தன் தலையில் கொந்தளிக்கும்
விந்தை
பறவைகள் பயணம் பற்றி !
ஒவ்வோர் அணுவும்
தனக்குள் சுழலும் ! எனது
மனத்தின் காதல் அவைதான் !
+++++++++++++
காவல் துறை அதிகாரியைக்
கண்டு அஞ்சுவார்
குடிகாரர் !
ஆனால் காவல் துறை
அதிகாரியும் குடிக்கின்றார் !
இங்குள்ள மக்கள்
நேசிப்பர்
மது மண்டும் இருவரையும்
மாறு பட்ட
சதுரங்கக்
காய்கள் போல் !
***************************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
+++++++
On-line texts and translations of Rumi
“MA-AARIF-E-MATHNAVI A commentary of the Mathnavi of Maulana Jalaluddin Rumi (R.A.)”, by Hazrat Maulana Hakim Muhammad Akhtar Saheb (D.B.), 1997
Four new translations of Rumi poems by Coleman Barks
Rumi poetry set to beautiful Persian Music on Mp3 and CD
The Masnavi I Ma’navi
Dar al Masnavi
(Rumi.net) Rumi’s little-known biography and poems (Quatrains and Odes) in English by
Quatrains at Iranian.com
On Rumi
The Foundation of Universal Lovers of Mevlana Jelaluddin Rumi (EMAV)
The Rubaiyat of Rumi
Rumi, Poet of Love and Justice
Jalaluddin Rumi
About Rumi, English translations and personal/rare biography
Several Rumi Poems (Quatrains and Odes) in English
Iranian studies site
The Threshold Society and Mevlevi Order
The Mevlevi Order of America
Official website of the Family of Jalal al-Din Muhammad Rumi
Mevlana
Mawlana Jalal al-Din Rumi- Mevlevi webpage
RumiOnFire.com – A Tribute to Rumi
What goes round…
Rumi Lectures at Harvard University
Rumi and the Tradition of Sufi Poetry
Mewlana Jelal Ad-Din Rumi
Treasures of Persian Literature
Guernica Magazine (guernicamag.com) on the 800th anniversary of Rumi’s birth
Sermon on Rumi
Can Rumi Save Us Now?
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 8, 2009)]
- ஞானோதயம்
- நானும் கொஞ்சம் குப்பை சேர்க்கிறேன்
- மொட்டை மாடி இரவுகள்
- எல்லைக் கோட்டை தாண்டிச் சென்ற தலை
- (மலேசியா) தமிழ்க்கல்வியின் அடிமடியில் கைவைக்கும் அரசின் புதிய திருத்தம்
- இருளில்
- வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…
- விலையேற்றம் கட்டுப்படுமா?
- நினைவுகளின் தடத்தில் – (40)
- முள்பாதை 9
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -1
- வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா…(நகைச் சுவை சிறுகதை)
- மழைப்பேறு
- புதுப் பெண்சாதி
- ஞானோதயம் (நிறைவு பகுதி)
- பெயர் மறக்கடிக்கபட்ட பின்னிரவு
- பொங்குநுரை
- நீராலான உலகு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -1
- மணல் வீடு சிற்றிதழ் மக்கள் கலை இலக்கிய விழாவிற்கான அழைப்பிதழ்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் `குடும்ப சங்கமம்`
- அன்புள்ள திண்ணை யர்க்கு
- சுற்றுச்சூழலைக் காக்கும் புதுக்கவிதைகளைப் பற்றிய ஓர் ஆய்வு நூல்.
- பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ கட்டுரைகள்.
- திவாகரின் “எஸ்.எம்.எஸ்.எம்டன்” தமிழ்ப் புதினத்தின் களங்களை விரிவு படுத்தும் புதிய வரவு.
- மாறும் மனச்சித்திரங்கள்
- அணு ஆயுதப் போரில் நேரும் அகோர விளைவுகள்.(கட்டுரை: 1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-2 மதுக்குடி அங்காடி (The Tavern)
- வேத வனம் விருட்சம் 63
- கார்முகிலின் முற்றுகை
- அனுகூலம்