கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -1
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“வாழ்க்கை நதியின் முடிவில் அழகுத்துவத்தின் தெய்வீகத் தளத்தில் மனிதர் ஆக்கிய சிறைக் கூண்டு விதிகளில் நான் மாட்டிக் கொண்டேன். கடவுள் அளித்த விடுதலைக் கொடையை நான் அனுபவிக்காதபடி தடுக்கப் பட்டு, அழகுமயப் படைப்பின் நடுவில் புறப்பணிப் பட்டேன் ! மனித நியதிப்படி என் காதலுக்கும் தாகத்துக்கும் விழிப்புணர்வு தரும் அழகுத்துவம் ஒவ்வொன்றும் அவமதிப்பாகக் கருதப்படுகிறது ! நான் வேட்கையுறும் நல்வினை எல்லாம் மனிதர் விதிப்படி தேவையற்றவை.”
கலில் கிப்ரான் (உள்ளொளி) (Vision)
+++++++++
Fig. 1
Kahlil Gibran Paintings
The Music Man
<< மழை பாடும் கீதம் >>
கவிதை -21 பாகம் -1
விண்ணி லிருந்து தெய்வங்கள்
புள்ளிகளாய் விடுகின்ற
வெள்ளி
இழைச் சாரல் நான் !
இயற்கை
வயலையும் நிலத்தையும்
வளப்படுத்தி வனப்பாக்கும்
எனைப் பற்றி !
+++++++++++++++++
நளின முத்துக்கள் நான் !
புலரும் காலைப் புதல்வி
பூங்காவைப்
பொலி வாக்க
இஸ்தார்* அழகியின்
கிரீடத்தில் பறித்தவை !
+++++++++++++
மலைகள் நகைக்கும் நான்
அழுதிடும் போது !
மலர்கள் பூரிக்கும் நான்
பணியும் போது !
வையம் மலர்ந்திடும் நான்
வளப்படுத்தும் போது !
++++++++++++++
நிலமும் முகிலும் காதலர் !
இருவருக்கும் இடையே
நானொரு
கருணைத் தூதுவன் ! நான்
வயலின் தாகம் தணிப்பவன் !
முகிலின் தவிப்பைத்
தீர்ப்பவன் !
+++++++++++++++
எனது வருகையை அறிவிப்பது
இடி முழக்கம் !
எனது புறப்பாட்டை
உனக்குப் புலப்படுத்துவது
வான வில் !
*************
*Ishtar, the Assyrian Venus
*************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 8, 2009)]
- ஞானோதயம்
- நானும் கொஞ்சம் குப்பை சேர்க்கிறேன்
- மொட்டை மாடி இரவுகள்
- எல்லைக் கோட்டை தாண்டிச் சென்ற தலை
- (மலேசியா) தமிழ்க்கல்வியின் அடிமடியில் கைவைக்கும் அரசின் புதிய திருத்தம்
- இருளில்
- வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…
- விலையேற்றம் கட்டுப்படுமா?
- நினைவுகளின் தடத்தில் – (40)
- முள்பாதை 9
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -1
- வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா…(நகைச் சுவை சிறுகதை)
- மழைப்பேறு
- புதுப் பெண்சாதி
- ஞானோதயம் (நிறைவு பகுதி)
- பெயர் மறக்கடிக்கபட்ட பின்னிரவு
- பொங்குநுரை
- நீராலான உலகு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -1
- மணல் வீடு சிற்றிதழ் மக்கள் கலை இலக்கிய விழாவிற்கான அழைப்பிதழ்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் `குடும்ப சங்கமம்`
- அன்புள்ள திண்ணை யர்க்கு
- சுற்றுச்சூழலைக் காக்கும் புதுக்கவிதைகளைப் பற்றிய ஓர் ஆய்வு நூல்.
- பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ கட்டுரைகள்.
- திவாகரின் “எஸ்.எம்.எஸ்.எம்டன்” தமிழ்ப் புதினத்தின் களங்களை விரிவு படுத்தும் புதிய வரவு.
- மாறும் மனச்சித்திரங்கள்
- அணு ஆயுதப் போரில் நேரும் அகோர விளைவுகள்.(கட்டுரை: 1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-2 மதுக்குடி அங்காடி (The Tavern)
- வேத வனம் விருட்சம் 63
- கார்முகிலின் முற்றுகை
- அனுகூலம்