உயிர் தொங்கும் வாழ்க்கை

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

த.அஜந்தகுமார்


கதவை அடித்துச் சாத்திவிட்டு
குண்டி காட்டிப் போகிறார்கள்
நெளித்தபடி.

கோபத்தில் கைகள்
நடுங்குகின்றன
உள்ளங்கை வியர்க்கிறது

கதவை இழுத்துத் திறந்து
காற்றில் குளிக்கிறேன்
கனவுகளில் மாத்திரம்!

விழிப்பின் நினைவில்
சுவர்கள் நெருங்கி
என்னை நொருக்க மூச்சு முட்ட முட்ட
சாவின் விளிம்பில்
முனகியபடி தொங்குகிறேன் .

Series Navigation

த.அஜந்தகுமார்.

த.அஜந்தகுமார்.