பூரண சுதந்திரம் ?
சி. ஜெயபாரதன், கனடா
பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டிப்
போராடினோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
பூகம்பம் நிற்காமல்
மும்மூர்த்தி யானது
பங்களா தேசமாய் !
கட்டுப்பாடுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டிகளுக்கு !
ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
கண்ணன் குளிக்கும் மாதர்
புடவை
களவாடு வான் !
பூரணச் சுதந்திரம் ஒரு போர்க்களம் !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுச் சேலையைப்
பலர்முன்
பற்றி இழுப்பான்
துச்சாதனன் !
பூரணச் சுதந்திரம் ஒரு குருச்சேத்திரம் !
ஆலயத்தை இரவில் தகர்த்து
வேரறுப்பது
பூரணச் சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப் பெட்டி ஆக்குவது
நவயுகச் சுதந்திரம் !
பூரணச் சுதந்திரம் மத
யானைகளை அவிழ்த்து விடும் !
விட்டு விடுதலை ஆகும்
சுதந்திரம் !
விலங்கு போட்டுக் கொள்ளும்
சுதந்திரம் !
கட்டவிழ்த்தோடும் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனி போல்
நட்டு வளரும் சுதந்திரம் !
சுதந்திரம்
சுட்ட பழமா ? அல்லது
சுடாத பழமா ?
எட்டித் தொட முடியாச்
சிகரத்தில்
சீராக வளரும்
பூரணச் சுதந்திரம் !
மதச் சுதந்திரத்தில்
முழு விடுதலை பெற்றவர்
மோகன் தாஸ் காந்தி !
போதி மரத்தடியில்
பூரண விடுதலைக்குக்
கடும் தவமிருக்கிறார்
போலிச் சாமியார் !
+++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) August 15, 2009 (R-3)
- சு.மு.அகமது கவிதைகள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- சில அமானுட குரல்களும் பிள்ளை பேயும்
- ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை
- தட்டையாகும் வளையங்கள்
- அச்சம் தவிர்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -7
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்
- தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?
- ஏதும்…
- ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்:
- வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
- பொறித்த அப்பள பொறியல் நட்பு
- ஒரு நிலாக்கிண்ணம்
- :நான்கு ஹைக்கூ கவிதைகள்:
- பூரண சுதந்திரம் ?
- கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்
- ஈழ சகோதரர்கள்
- தன்மை
- காங்கிரஸ் கவனிக்க !
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் காமாக் கதிர் வெடிப்புகள் ! (High Energy Gamma-Ray Bursts fr
- The Other Song – Screening
- வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்
- ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை
- இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு – ஆகஸ்ட் 23
- A STREETCAR NAMED DESIRE = screening
- சிங்கப்பூர் – கவிமாலை விருது விழா
- காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீடு – மெட்ராஸில் மிருது – வஸந்தா சூரியா
- அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்னும் குறியீட்டு நாவல்
- “புறநானூற்றில் அவலம்”
- ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து
- கோலம் – வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழா
- பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி
- வேதவனம் -விருட்சம் 46
- என். விநாயக முருகன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)
- பயணம்….
- பகைத்துக் கொள்!
- நடை வாசி
- கடைசி ஆலமரம்
- துளிகள் நிரந்தரமில்லை
- ஜிக்ஸா விளையாட்டு