பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
விளக்கின் ஒளி நீ ! அமுதுக்கு
வெறுப்பு நிலவு நீ !
புண் படுத்திய இரகசியத்தை
மண்ணில் பரப்பும்
மல்லிகை நீ !
அச்சக் காதலி லிருந்து
வெண்மையும் மென்மையும்
கொண்ட கைகளி லிருந்து
பொழியும்
அமைதி நிலையை என்
விழிகளில் !
ஏற்றி வைக்கும்
ஒளிப் பரிதியை
எனது
ஐம்புலன் களில் !
என்னருங் காதலி !
எத்தனை விரைவில் நீ
கட்டி முடித்தாய்
இனிய ஓர் எழுச்சியை
எனது புண் பட்ட
இடங்களில் ! வேட்டைப்
பறவை யோடு நீ
போராடி
நாமிருவரும் சேர்ந்து
இப்போது
ஒற்றைக் குடித் தம்பதிகளாய்
எப்படி நிற்கிறோம்
இவ்வை யத்தின் முன்பு !
என்னினிய கொடூரக் காதலி !
என்னருமை மாட்டில்டி* !
அப்படித்தான் இருந்தது
அப்போதும் !
அப்படித்தான் இருக்கிறது
இப்போதும் !
அப்படித்தான் இருக்கும்
இனிமேலும்
அன்று மலர்ந்த
கடைசிப் பூவோடு
ஆயுட் காலம் நமக்குச்
சமிக்கை
அறிவிக்கும் வரை !
அப்புறம் நீ ஏது ?
நான் ஏது ?
ஒளி விளக்கு ஏது ?
ஆயினும்
பூமிக்கு அப்பால்
அதன் நிழல் இருட்டைத்
தாண்டி
உயிரோ டிருக்கும்
நமது காதல்
உன்னதம் !
***************************
*மாட்டில்டி – (Matilde)
பாப்லோ நெருடாவின் காதலி
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 10, 2009)]
- சு.மு.அகமது கவிதைகள்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- சில அமானுட குரல்களும் பிள்ளை பேயும்
- ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை
- தட்டையாகும் வளையங்கள்
- அச்சம் தவிர்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி எட்டு
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -7
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினாறாவது அத்தியாயம்
- தாவூத் பாய்க்கோ குஸ்ஸா கியூன் ஆத்தா ஹை?
- ஏதும்…
- ரிபப்ளிகன் கட்சியும் இலவச பிரியாணி பொட்டலங்களும்:
- வாழ்க்கை நினைவுகளின் எச்சம்
- பொறித்த அப்பள பொறியல் நட்பு
- ஒரு நிலாக்கிண்ணம்
- :நான்கு ஹைக்கூ கவிதைகள்:
- பூரண சுதந்திரம் ?
- கடவுளுடன் ஒரு நீண்ட உரையாடல்
- ஈழ சகோதரர்கள்
- தன்மை
- காங்கிரஸ் கவனிக்க !
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! காந்த விண்மீன்களில் தீவிரக் காமாக் கதிர் வெடிப்புகள் ! (High Energy Gamma-Ray Bursts fr
- The Other Song – Screening
- வாசகர் வட்டம் இணையப் பெருவெளியில் சிங்கைவாழ் தமிழர்கள்
- ‘சமசுகிருதம்’ பற்றிய கட்டுரை
- இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு – ஆகஸ்ட் 23
- A STREETCAR NAMED DESIRE = screening
- சிங்கப்பூர் – கவிமாலை விருது விழா
- காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீடு – மெட்ராஸில் மிருது – வஸந்தா சூரியா
- அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்னும் குறியீட்டு நாவல்
- “புறநானூற்றில் அவலம்”
- ஜெயமோகனின் “காடு” நாவலை முன் வைத்து
- கோலம் – வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தின் தொடக்க விழா
- பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர் சய்மன் காசிச் செட்டி
- வேதவனம் -விருட்சம் 46
- என். விநாயக முருகன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 48 << விளக்கின் ஒளி நீ >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -3 (முன் பாகத் தொடர்ச்சி)
- பயணம்….
- பகைத்துக் கொள்!
- நடை வாசி
- கடைசி ஆலமரம்
- துளிகள் நிரந்தரமில்லை
- ஜிக்ஸா விளையாட்டு