பாப்லோ நெருடாவின் கவிதைகள் -35 << கோதுமைப் பதார்த்தம் நீ >>
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உன் பாதம் முதல்
உன் கூந்தல் வரை பளிச்சிடும்
ஒளிச் சுடரும்
உன் மெல்லிய உடலுக்குள்
ஒளிந்துள்ள வல்லமையும்
உன்னத முத்துக்கள் அல்ல !
சில்லிட்ட வெள்ளியும்
அல்ல !
நீயோ கோதுமைப்
பண்டத்தில்
உண்டாக்கப் பட்டவள் !
வெப்பக் கணப்பில் விளைந்த
மாவுப் பதார்த்தம் !
தானியப் பயிர்கள்
அறுவடை செய்த போது
மேனிக் குள்ளே வளர்ந்தன
உன்னதக் கதிர்கள் !
தக்க பருவ காலத்தில்
உப்பிய மாவுப் பதார்த்தம் !
உருண்டு திரண்டு பொங்கின
இரண்டு கொங்கைகள் !
என் காதல்
எரியும் நிலக்கரியாய்
உனக்குக்
காத்திருக்கும் தயாராய்க்
காசினியில் !
கோதுமை ரொட்டி போல்
குவிந்த நெற்றி
உன்னிரு கால்கள் !
உன் வாய் இதழ்கள் !
நான் புசிக்கும் உணவாய்த்
தோன்றினாய் நீ
உதய வேளை ஒளியோடு !
என் காதலி
பச்சைக் கொடி காட்டும்
கோதுமைத்
தின் பண்டம் !
குருதியின் பாடத்தைக்
கற்றுக் கொடுத்தது உனக்கு
அக்கினி !
கோதுமை மாவிலிருந்து !
உனது புனிதத்தை
நீயே
உணர்ந்து கொண்டாய்
உன் தாய்மொழியும்
உன் நறுமணமும்
கோதுமைப்
பண்டத்தி லிருந்து
உண்டானவை !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 4, 2009)]
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -35 << கோதுமைப் பதார்த்தம் நீ >>
- இயன்றதின் பொருட்டு…
- ஒலிகள் ஓய்வதில்லை
- சிவம்; மானுடத்தின் மீது காதல் கொண்ட மகத்தான மனிதர்;;;;
- நான் அறிந்த மணி
- நாகூர் ஹனீஃபா பற்றி அப்துல் கையூம் மற்றும் மலர்மன்னனின் கட்டுரைகள்
- மணமகள்
- விலை மகள்
- “சாமியாடிகளின் கறை படிந்த பிரதேசமும் அலைந்துகொண்டிருக்கும் எண்களும்”
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திநாலு
- நீயும் பொம்மை நானும் பொம்மை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -1
- ‘ நான் அவனில்லை’..
- கத்தியின்றி இரத்தமின்றி வன்முறை
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூமியும் நிலவும் பூர்வீகத்தில் ஒன்றே என்னும் புதிய நியதி !
- இன்றைய சிறுவர் நாளை உலகம்
- பங்கருக்குள் இருந்து ஒரு மூச்சுக்காற்று
- கவிஞர் வைகைச் செல்வியின் (DVD) ஆவணப் பட வெளியீட்டு விழா
- சங்கச் சுரங்கம் – 13: கொங்கு தேர் வாழ்க்கை
- இரு கவிதைகள்
- வேத வனம் விருட்சம் – 33
- பாரினைக் காக்கும் பசுமை
- பாவேந்தர் இன்றிருந்தால்.
- சந்திப்பின்வதம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இரண்டாம் அத்தியாயம்
- நடிகர் நீலுவுக்கு பஹ்ரைனில் பாராட்டு விழா
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் கீதம் >> கவிதை -7