பாப்லோ நெருடாவின் கவிதைகள் -23 << என் மௌனப் பசிகள் ! >>
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உன் வாய், உன் குரல்,
உன் கூந்தல்
அனைத் துக்கும் ஏங்குவேன்
மௌனப் பசியில் வாடி !
இரை தேடிச் செல்கிறேன்
தெருவிலே !
ஊட்டம் அளிப்பதில்லை
உணவு வகைகள் !
காலை விடிவு
என்னைக் கொந்தளிக்க வைக்கும் !
உன் பாதத் தடங்களை
அளந்திட
அடிக்கோல் தேடுகிறேன் !
உன் தனித்துவச் சிரிப்பினைக்
காணப் பசி எனக்கு
உண்டாகும் !
காட்டுத் தனமாய்ச் செய்த
அறுவடைக்
கறை நிறத்தில் உன் கைகள்
காணப்படும் !
வெளுத்த விரல்களின்
பவளக் கல் நகங்களைப்
பார்க்கப் பசி !
வாதாம் பருப்பு போன்ற
உன் சதையைச்
சுவைத்திட இச்சை எனக்கு !
சூரிய ஒளிநடனம்
பொன்னுட லாக்கும்
உன்னெழில் மேனியைச்
சுவைத்திட இச்சை எனக்கு !
அகந்தை முகத்திலே
உள்ளது உனக்கு
அரச பரம்பரை மூக்கு !
மின்னல் வெட்டும்
இமைகளின் நிழலைச்
சுவைத்திட இச்சை எனக்கு !
இங்கு மங்கும்
இச்சை மிகுந்து நான்
நடமாடி வருகிறேன் !
காலை இளம் பரிதியின்
கதிரொளியைச்
சுவாசித்து
வேட்டை யாடுவேன்
உன்னையும்
உன் நெருப்பு நெஞ்சையும்
வெட்ட வெளியிலே
பெருவியன்
வேங்கை போல் தேடி !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 9, 2009)]
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -3 பாகம் -4
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் 40. சாலை இளந்திரையன்
- வேத வனம் விருட்சம் 23
- இலங்கைப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை சொல்வதா?
- மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் !
- ஸ்கொட்டிஸ் வேட்டைக்காரரின் நாய்
- இணையத்தில் தமிழ்
- சாபம்
- மோந்தோ-4
- நினைவுகளின் தடத்தில் – (25)
- காதல் ஒரு விபத்து
- நடிகன்
- என் சின்னமகள் மற்றும் மனைவியின் விமர்சனக் குறிப்புகள்
- உன் பழைய கவிதைகள்
- கண்ணீரின் குரல்கள்
- சங்கச் சுரங்கம் -2 : குறிஞ்சிப் பாட்டு
- நாற்காலிகள்…
- நிறைவுக்காக
- ‘போல்’களின்றி…
- விஸ்வரூபம்
- அவரும் இவரும் நீயும்!
- இடைவெளி
- கடவுள்
- மும்பை அரோரா ஞாயிறுகள் – நான் கடவுள்
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 2 வ. உ. சிதம்பரம் பிள்ளை
- செய்திகள் மட்டுமே சித்திரமானால் – ஸ்லம்டாக் மில்லியனர் குறித்து
- சை.பீர்முகம்மது
- குறுங்கதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -23 << என் மௌனப் பசிகள் ! >>
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் !அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியைச் சூடேற்றுமா ?(கட்டுரை 51)
- கலில் கிப்ரான் கவிதைகள்<< என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே ! >> கவிதை -1 (பாகம் -3)
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- இலங்கைத் தமிழன் – நேற்று இன்று நாளை