இடைவெளி
ரா. கணேஷ்
அப்பா….!
இரவு தூக்கத்தில்
என்
இரண்டு கால்களையும்
இடுப்பில்
சுமந்திருக்கிறீர்கள்
நீங்கள்
கூர் செய்த
பென்சில்கள்
இன்னும்
என் நினைவில்
எழுதிக்கொண்டு
இருக்கின்றன
என் பா£ட்ஷை
நேரங்களில்
நீங்களல்லவா
என் விடிகாலை
அலாரம்
உங்கள்
உள்ளங்கை சூட்டிலும்
கைவிரல் ஜவ்வுகளிலும்
என் இளவயது
அச்சங்கள்
தொலைந்து
போயிருக்கின்றன
நான் சைக்கிள்
சவா¡¢ பழக
நீங்கள்
வேலைக்கு
விடுமுறை சவா¡¢
பிரதி மாதம்
முதல் தேதி
நீங்கள்
வாங்கி வரும்
ஜாங்கி¡¢
நெஞ்சில்
இன்னமும்
ஜீராவாய்
ஒழுகிக் கொண்டு
இருக்கிறது
எங்கு பிசகினோம் ?
யார் கண் திருஷ்டி ?
இமைக்கும் கண்ணுக்கும்
இடையில்
கள்ளி வேலி
எப்படி ?
என் இடுப்பில்
வேட்டி ஏறியதும்
உங்கள் பாசம்
ஏன்
அம்மணமாயிற்று ?
நான் கட்டிய
காதல் கோட்டை
நம் உறவிற்கு
பிரமிடாய்
போனதேன் ?
ஒரே வீட்டில்
இரண்டு
முகாம்களிட்டு
வாழ்கிறோம்
நம் வீட்டில்
வசதிகள்
வளர்பிறையாய்
சூ¡¢யனாய்
ஒளிர்ந்த
நம் உறவோ…
கிரகணமாய்
தேய்ந்து கொண்டு
நீங்கள்
பேசத் தயாராயில்லை
எனக்கோ
பேசத் திராணியில்லை
வருந்த மட்டும்
செய்வதால்
வி¡¢ந்து போன
உறவு
உதடுகளாய் ஒட்டுமா என்ன ?
– ரா. கணேஷ்
சென்னை
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -3 பாகம் -4
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் 40. சாலை இளந்திரையன்
- வேத வனம் விருட்சம் 23
- இலங்கைப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை சொல்வதா?
- மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் !
- ஸ்கொட்டிஸ் வேட்டைக்காரரின் நாய்
- இணையத்தில் தமிழ்
- சாபம்
- மோந்தோ-4
- நினைவுகளின் தடத்தில் – (25)
- காதல் ஒரு விபத்து
- நடிகன்
- என் சின்னமகள் மற்றும் மனைவியின் விமர்சனக் குறிப்புகள்
- உன் பழைய கவிதைகள்
- கண்ணீரின் குரல்கள்
- சங்கச் சுரங்கம் -2 : குறிஞ்சிப் பாட்டு
- நாற்காலிகள்…
- நிறைவுக்காக
- ‘போல்’களின்றி…
- விஸ்வரூபம்
- அவரும் இவரும் நீயும்!
- இடைவெளி
- கடவுள்
- மும்பை அரோரா ஞாயிறுகள் – நான் கடவுள்
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 2 வ. உ. சிதம்பரம் பிள்ளை
- செய்திகள் மட்டுமே சித்திரமானால் – ஸ்லம்டாக் மில்லியனர் குறித்து
- சை.பீர்முகம்மது
- குறுங்கதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -23 << என் மௌனப் பசிகள் ! >>
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் !அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியைச் சூடேற்றுமா ?(கட்டுரை 51)
- கலில் கிப்ரான் கவிதைகள்<< என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே ! >> கவிதை -1 (பாகம் -3)
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- இலங்கைத் தமிழன் – நேற்று இன்று நாளை