கவிதைகள்
கணேஷ்
சருகுகள்
மழை நாட்களில்
எத்தனை
காகிதக் கப்பல்கள்
அந்த முற்றத்தில்
மண் பிள்ளையார்களும்
தொப்பை நாணயங்களும்
எத்தனை கிடக்கும்
அணில் போல் கிறீச்சிடும்
அந்த ராட்டினக் கிணற்றில்
அந்த ரேழியில்
எத்தனை கதைகள்
என் பாட்டியுடன்
இரவில் அச்சுறுத்தும் கொல்லையும்
தலையணையுடன் பிறந்த
வாசற் திண்ணையும்
இவை எல்லாவற்றிற்கும்
சாட்சியாய் நின்ற
கூடத்துத்தூணும்… … …
அடுக்குமாடி குடியிருப்புகளில்
நுழைந்ததால்
தொலைந்து போய்
இன்றோடு
ஆண்டுகள் இருபது !
நடுத்தர வர்க்கம்
விபத்தில் சிக்கியவனுக்கு
உதவி செய்ய
நாலணா தராமல் போன
நடத்துனா¢டம் காசு கேட்க
கண்ணாடி கதவுகளிட்ட
அலுவலகங்களில் நுழைய
அக்கம் பக்கம் வலிய சென்று
அறிமுகம் செய்து கொள்ள
பருவப் பெண்களொடு
கலகலப்பாய் புழங்க
தெருக்கோடி சென்ற
பூக்காரனை உரக்க கூப்பிட
தயக்கம் !
ஏனோ விரட்ட முடியவில்லை
இது இலையுதிர்காலமோ
விழுதுகள் உதறிய வேர்கள்
பொக்கை வாயும்
சுருங்கிய தோலுமாய்
சருகுகளாக காத்திருக்கும்
பழுப்பு இலைகள்
வயது வளர்ந்து
தளர்ந்து போனதால்
விரட்டப்பட்ட
பஞ்சுத் தலைகள்
பிஞ்சு மனங்கள்
அசுர வேக வாழ்க்கையில்
சல்லிக் காசுகள்
அள்ளிக்கொண்டு போன
அஸ்திவாரங்கள்
குடும்பக் கூட்டின்
குண்டுத்தூண்கள்
உதிரத்திற்கு உரமிட்டவர்கள்
இன்று
முதியோர் இல்லத்தில்
ஏன் இந்த அவல நிலை
நமக்கும்
நாளை உண்டு
ந்ரையும் உண்டு
நிஜம்
கால் கட்டை விரல்கள்
கட்டப்பட்டன
ஒற்றை விளக்கு தலைமாட்டில்
தாயே !!!
உன் மரணம்
ஜனித்து விட்டிருந்தது
வாய் விட்டு
இல்லை
வயிறு விட்டு அலறினேன்
மழையாய் அழுதேன்
நீளமாய் பயமாய்
இருந்தது இரவு
மறு நாள் காலை
இறுதி ஊர்வல வண்டிக்கு
சில நூறுகள்
சாஸ்தி¡¢களிடம்
சில நூறுகள்
மந்திரங்களைக் குறைக்கச் சொல்லி
சில நூறுகள்
வெட்டியானிடம்
சில நூறுகள்
என்று பேரங்கள்
ஆரம்பித்தன !
நிஜங்கள் உறுத்தின !
இப்படித்தான் பேரமாய்
போய்விடுமோ
என் மரணமும் !
முகவா¢
நான்கு வயதில்
வாத்தியாராய் வருவேன் என்றேன்
ஆறு வயதில்
போலீஸ்காரனாய் வருவேன் என்றேன்
பத்து பன்னிரண்டு வயதில்
விஞ்ஞானியாக ஆசைப்பட்டேன்
பதினெட்டு வயதில்
கவிஞனாக நினைத்தேன்
முன் இருபதுகளில்
ந்டிகனாக விரும்பினேன்
முப்பது வயதில்
இன்று
அப்பாவாக இருக்கிறேன் !!!
ganeshadhruth@yahoo.co.in
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ? (கட்டுரை 49)
- பெண்ணியம்
- அநங்கம் இதழ்-கலந்துரையாடல் நிகழ்வு
- பார்வைக் கோணம் – முத்துலிங்கத்தின் வெளி
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திரெண்டு
- ஈரம்
- “நெருப்பு” என்று சொன்னாலும் சுடும்”
- உங்கள் பெயர் என்ன?
- தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 2
- இன்றைய நாட்காட்டியின் கதை
- உடைந்த மாதாவும் உடையாத மாடுகளும்
- செஞ்சுடரில் பூனைக் கண்கள்
- புல்லாங்குழல்
- மறைதல் பொருட்டு வலி
- வேத வனம் விருட்சம் 17 கவிதை
- என் பாவம் கடவுளுக்குப் பிடித்திருக்கிறது
- தேங்காய்களை தின்று அசைகிற கொடி
- வேத வனம் விருட்சம் 18
- கவிதைகள்
- வ. சுப. மாணிக்கனாரும் வள்ளுவச் செயல் நெறியும்
- தமிழர் கருத்துக் கருவூலம் – அன்றைய விடுகதையும் இன்றைய விடுகதையும்
- இன்னபிறவும்….
- பன்னீர்ப்பூக்கள்
- நினைவுகளின் தடத்தில் – (23)
- அம்பைக்கு இயல் விருது2008ம் ஆண்டுக்கான இயல் விருது
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: பாமரனுக்கு…சிந்தனைகள் – பிலேஸ் பஸ்க்கால்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -18 << பூமியின் காயங்கள் ! >>
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்
- பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்
- தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 1
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -2 பாகம் -6
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -6)
- பிரபல எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மூன்று புத்தம்புதிய நூல்கள்
- உன்னால் வீண்பழி சுமந்தவனின் அறை
- வார்த்தை ஜனவரி 2009 இதழில்…
- தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ புத்தகம் வெளியீடு
- காலம் சஞ்சிகையின் 31 வது இதழ் வெளிவந்துவிட்டது!
- நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய ‘முகம்மது இஸ்மாயில் -இபுராஹிம் பீவி நினைவு ‘ நாவல் -கட்டுரைப் போட்டி
- சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்
- கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 63 வாழ்க்கைப் பயணத்தின் முடிவு !
- தீக்குச்சியாகட்டும் புத்தாண்டு
- கவிதைகள்
- “காட்சிகள் மாறுகின்றன…!”