கவிதைகள்
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
01
இருக்கட்டும் எதற்கும்…!
பத்தாண்டுகளுக்கு முன்
நான் அனுப்பிய கடிதமொன்றை
பத்திரமாய் வைத்திருந்து
பிரதியொன்றை எனக்கின்று
அனுப்பித்தந்த நண்பனின்
அன்பைப்போல
இருக்கட்டும் எதற்கும் என்று
இதுபோல் இன்னும்
எத்தனையோ நம்
எல்லோரிடமும்.
02
அவனவன் பாடு
கண்டு கொள்ளாமல்
இருந்திடல் கூடும்
சிலருக்கு.
கண்டு கொண்டாலும்
கைவசப்படுவதில்லை
சிலருக்கு.
கண்டதையும் கொள்வதிலும் உண்டு
கணிசமான சிக்கல்கள்.
அவனவன் பாடு.
சிலதை கண்டு கொள்ளாமல் இருப்பதும்.
சிலதை கண்டும் கொள்ளாமல் இருப்பதும்.
03
பட்டங்களும் பட்டமும்…!
மக்கள் திலகம்
நடிகர் திலகம்
மக்கள் கலைஞர்
நவரச நாயகன்
காதல் மன்னன்
காதல் இளவரசன்
ஆக்சன் கிங்
அல்டிமேட் ஸ்டார்
உலக நாயகன்
சூப்பர் ஸ்டார்
சுப்ரீம் ஸ்டார்
நடித்துப் பெற்ற பட்டங்களுடன்
நாயகர்கள் சுவரெங்கும்
சுவரெங்கும் சுவரொட்டி
சுவரொட்டி செல்லுமவன்
படித்துப்பெற்ற பட்டம் மட்டும்
பத்திரமாய் பெட்டிக்குள்.
- மடயர்க்குப் பாடம் சொல்வாய்!
- வார்த்தை டிசம்பர் 2008 இதழில்…
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினேழு
- காயம்பட்ட நியாயங்கள்.
- தீவிரவாதம்
- கரித்துண்டால் குறித்துவைத்த தோற்றம் மறைவின் குறிப்புகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -13 << தீவிலே அடித்த புயல் ! >>
- கொத்தணிக் குண்டுகள்-Cluster bombs
- கவிதைகள்
- ஓர் சந்திப்பு!
- மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்…
- வனத்தின் தனிமரம்
- கடவுளின் காலடிச் சத்தம் – 6 கவிதை சந்நிதி
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -1
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன், சனிக் கோள்களின் துணைக் கோளில் அடித்தள திரவக் கடல் [கட்டுரை: 45]
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங் கதை) -1
- கேமந்த் கர்கரே, அசோக் காம்தே, சந்தீப் உண்ணிகிருஷ்ணன் – ஒரு கலை அஞ்சலி
- நீ வரப்போவதில்லையென..
- தாகூரின் கீதங்கள் – 58 கனல் பொறி எழுப்பட்டும் !
- வேத வனம் விருட்சம் 13
- வாழ்வும் வலியும்
- உருவமற்ற நிழல் பொழுது/ மனம்
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: ட்ரூமன் கப்போட் (1)