கடவுளுக்கு ஒரு கடிதம்
கவிதா நோர்வே
அன்பு நண்ப,
சக தோழர்க்கு எழுதி எழுதி
சொற்கள் தீர்ந்த கணத்தில்
நினைவில் வருகிறாய் நீ.
நலமா?
சொல்லமுடியாத வலிகளும்
அலறியும் கேட்கப்படாத கத்தல்களும்
எழுதி எழுதி ஊர் சேராக் கடிதங்களும்
மீண்டும் என் சேகரிப்புக்கே வருகிறது
மொய்த்துக்கிடக்கும்
அலறல்களின் அடியில்
எஞ்சிக் கிடக்கும்
என் உயிரின் மிச்சத்திற்கு
இன்று கடைசிநாளாய் இருக்கலாம்
என்னைச் சுமந்த மனிதர்களும்
என் சொந்த மண்ணும் சேர்ந்தே
என்னைத் தூக்கிலிடலாம்
நெருக்கி வரும்
மனித படலத்தின்
இரச்சல் தாண்டி
என் அலறல் கேட்கிறதா?
மதுரை அல்ல
வெறும் தீக்குச்சி கூட
கண்களால் பற்றவைக்க முடியாதென்று
தெரிந்த பின்னும் சிலை வைக்கும்
மனிதர்களும்,
பாலை மணலில் விதை போட்டு
கனியும் எனக் காத்திருக்கும்
மனிதர்களும் போல…
நானும் கடவுள் பற்றிச் சொல்லி
காலம் கடந்து விட்டேன்
மண் புசிக்கும் மனித குவியல்களுக்குக்
கடவுள்களே காரணி என்று கூவி
மௌனியாகிவிட்டேன்.
மனித கபாலங்களை
தணியாத ஆசையோடு சுமக்கும்
உன்னிடம் தஞ்சம் அடையும்
என் இன மக்கள்
உன் சுடுகாட்டிலேயே
உன்னைத் தூக்கிலிடுவர்
உயிர்த்தெழுந்தாயே உன்னை
மீண்டும் சிலுவையிடுவர்
ஆண்வர்க்கம் உச்ச ஆதிக்கம்
செய்யும் மசூதிகள்
புராதண பொருட்களாகும்
என் கனவு யுகத்தில்
இக்கடிதம் உரத்து
வாசிக்கப்படும்
அதுவரை…
இல்லாத என் அப்பனிற்கு
எழுதிய கடிதங்களுடன் சேர்ந்து
இதுவும் ஒன்றாய் கிடக்கட்டும் விடு!
kavithai1@hotmail.com
- சட்டக் கல்லூரியில் இரத்தக் காட்டேரிகள்
- ஒரு அசலான மனுஷன் – என். எஸ். கிருஷ்ணன்
- நூலாய்வு : கனவுச் சந்தை (உலகச் சிறுகதைகள் – எஸ்.ஷங்கரநாராயணன் மொழிபெயர்ப்பு)
- “பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் துவக்கப் புள்ளியாக ஒபாமா”
- நினைவுகளின் தடத்தில் – (21)
- தானத்தில் சிறந்தது உடல்தானம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -1 பாகம் -5
- நகரத்தின் ஆன்மாக்கள்
- தாகம்
- ஒரு தினக் குறிப்பு
- அப்பாவின் சொத்து
- எப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை
- வார்த்தை நவம்பர் 2008 இதழில்
- தாகூரின் கீதங்கள் – 56 எல்லாம் நீ ! எனக்குரியவன் நீ !
- வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்
- உறவுச் சங்கிலிகள்
- குட்டி மகளின் ஞாபகம்
- நிழலற்ற பெருவெளி…
- நிலையின்மை
- மானிடவியல்
- மௌனித்த நேசம்
- தீபாவளி 2008
- கடவுளின் காலடிச் சத்தம் – 4 கவிதை சந்நிதி
- எம்.பி.எம்.அஸ்ஹர் என்னும் உன்னத மனிதர்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -11 << அடிக்கடி மாறுபடும் ஒருத்தி ! >>
- இதயம் சிதைந்த இயந்திர மனிதன்
- வேத வனம் விருட்சம் 11 கவிதை
- மக்கள் சக்தி இயக்கம் நடத்தும் “அரசியல் பேசுவோம்” நிகழ்ச்சி
- திசைமாறிய பறவைகளின் கூடு
- இந்திய தேசியக் கொடி நிலவில் விழும் உளவியுடன் சந்திரனில் தடமிட்டு இடம் பிடித்தது ! (கட்டுரை : 3)
- ஒரு மாறுபட்ட மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்!
- ஒரு பனை வளைகிறது !
- நெருப்பில் காய்ச்ச வேண்டிய பொதுப்புத்தி
- திருகுர் ஆன் மொழிபெயர்ப்பும்,புரிதலும்
- அட்மிஷன்
- ஜேர்மனியில் நூல்தேட்டம் ஐந்தாவது தொகுதியின் வெளியீடு
- “அநங்கம்” மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 37 கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 36 ச.து.சு.யோகி
- கவிதை௧ள்
- நாம் காலாண்டிதழ்
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினைந்து
- ” கண்ணம்மா என்னும் அழகி “
- விஸ்வநாதன் ஆனந்த்
- நனவாகும் கனவு
- ஒபாமா
- கடவுளுக்கு ஒரு கடிதம்
- மதிப்புமிகு மயில்சாமி அண்ணாத்துரை அவர்களூக்கு ஒரு பாராட்டு மடல்
- கடலில் வீசப்பட்ட குழந்தை
- கோடி கொடுத்துத் தேடினால்
- பாவலர் பாரதியார் நினைவேந்தி…!
- வரம்புகளை மீறி