தனிமை
சு.சுபமுகி
1.
என் தனிமை
எனக்காக விதிக்கப்பட்டதோ
ஒரு வேளை
இது நானே உருவாக்கிக் கொண்டதோ
புரியவில்லை.
எங்கு சென்றாலும் பின் தொடர்கிறது
இந்த தனிமை
தனிப் பிரதேசத்திலும்
ஜனநடமாட்டத்திலும் கூட
என்னை தனியனாய் மாற்றிவிடுகிறது
இந்த தனிமை
வரமா? சாபமா?
தனிமை பற்றிய கேள்வியில் முழ்கி
புரியாமல் நிற்கின்றேன்
தனியாய்.
2.
எனது உள்ளத்தின் முரண்பாடுகள்
குறுக்கும் நெடுக்குமாய் அலைகிறது
எனக்குள்ளேயே.
நான்கு சுவர் மட்டுமே
என்னைச் சுற்றி- ஆயினும்
நால்வகைப் போர் நடக்கிறது
ஒருவரிக்குள் அடைக்கப் பார்க்கின்றேன்
முயன்றும் கூட தோற்கிறேன்
காரணம்
நான் அடைத்து வைக்க நினைப்பது
என் கற்பனையை மட்டுமல்ல
என் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் தான்
3.
சில சமயங்களில் சூன்யமாகிப் போகிறேன்
எனக்கு நானே
புரியா விடைக்குள்
தெளிவான வினாவுடன்
காத்திருக்கிறேன்
சில சமயங்களில் புரியாமல் போகும்
மற்றவர்களுக்கு
என் கவிதைகள்
சில நேரங்களில் எனக்கும் தான்
என் பக்கத்து நாற்காலி
காலியாகத்தான் உள்ளது
என் உள்ளமும்.
கண்ணாடியில்
என் முகம் காணத் தயங்குகிறேன்
என் தனிமையை
அது அடையாளம் காட்டிவிடுமோ என்று.
குளிர்ந்த காற்றை விட
தெளிந்த வெப்பம்
மேலானதுதான்
என் தனிமைக்கு.
என் இதழ்கள்
சிரிப்பை வெளிப்படுத்தக்கூட
தயங்குகின்றன.
என் அழுகையும் உடன் வருமோ
என்ற பயத்ததால்.
எனது பேனாவின் நுனியில் நிற்கின்றேன்
தயங்கியபடி
எனக்கான வார்த்தைகளை தேடி.
எனது கவிதைகள் கூட விரும்பவில்லை
எனது இறுக்கத்தை.
-சு.சுபமுகி(மாணவி)
அனுப்பியவர்: issundarakannan7@gmail.com
- பிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்
- நிகழ்கால குறிப்புகள் – மே 2008 -1
- ‘திருக்குர்ஆனும் நானும்….’ – சுஜாதா : அஞ்சலி
- போதி மரம்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 12
- மனிதம் நசுங்கிய தெரு !
- மீட்சி
- தேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)
- மும்பை விசிட்-சில தகவல்கள்
- நிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2
- கடிதம்
- தனிமை
- செப்புவோம் இவ்வன்னை சீர்
- தாஜ் கவிதைகள்
- வானம்
- துவம்சம்” அல்லது நினைவறா நாள்
- நீளக்கூந்தல்கா¡¢யின் அழகானச் செருப்பு
- உலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள்
- விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு
- மலர்மன்னன்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -6
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 21 மகாகவி பாரதியார்
- அதிசய மனைவி லட்சுமியும், மோகன்லாலின் இரு படங்களும்
- லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமின் தமிழ் சேவைக்கு இயல் விருது.
- ” நாளை பிறந்து இன்று வந்தவள் ” மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 20 ஏழையின் காதலன் !
- தாகூரின் கீதங்கள் – 31 உன் உன்னத அழைப்பு !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 8 (சுருக்கப் பட்டது)
- புரண்டு படுத்த அன்னை
- தெய்வ மரணம் – 2
- முஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை
- National Folklore Support Centre announces Sir Dorabji Tata Fellowships For North Eastern India
- அன்புள்ள விலங்குகள் : என்.எஸ்.நடேசனின் “வாழும் சுவடுகள்”
- கடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்
- உள்ளூர் கோயபல்ஸ்கள்!
- அகரம்..அமுதாவின் வெண்பாக்கள்!
- கடிதம்
- மலர் மன்னனுக்கு பதில்!
- திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி
- எவ்வித ஆதாரமும் சொல்லாமல்