புதிய மாதவி
மரணம் அழகானது
ஆடைகளின்றி
அலங்காரமின்றி
உயிர்த்துடிப்பை
பிடித்து இழுத்து
அணைத்து
வாழ்க்கையைப் பிரசவிக்கும்
மரணம் அழகானது.
அம்மா..
கருப்பைச் சுமக்கும்
உன் உடல்மட்டும்தான்
உனக்கும் எனக்குமான
உறவின் மிச்சம்
என்ற என் கணக்குத் தவறானது
என் உள்ளங்கைப் பிடித்து
உன் உயிர்ப்பிரிந்த தருணங்களில்
என் நரம்பு மண்டலங்களைச்
சிலிர்க்க வைத்தது
காற்றில் கலந்த
உன்னுயிர்மூச்சு.
ஒற்றை அறையில்
கட்டில் கால்களில்
கட்டப்பட்ட உறவு.
சிறைக்கம்பிகளுக்கு நடுவில்
தொட்டுத் தழுவிய
விரல்களாய்
தவித்த வேதனைக் காட்சிகள்
ஒரு நொடியில்
விட்டு விடுதலையாகி
காற்று மண்டலத்தில்.
அம்மா..
மரணம் அழகானது.
உறவுகளைப் பிரித்த
சாத்தானின் பல்லிடுக்குகளில்
சிக்கித் தவித்த
நாட்களை
வெற்றி கொண்ட
மரணம்
அழகானது.
மரணப்படுக்கையில்
எரிந்து விழுந்த
நட்சத்திரக் கூட்டங்கள்
நீ எழுதி முடித்த
கவிதையை வாசிக்க
காத்திருக்கின்றன.
சிதையில் மூட்டிய
தீயின் வெளிச்சத்தில்
மீண்டும்
வாழ்க்கையின் தரிசனம்.
அம்மா..
உன்னைப் போலவே
உன் மரணமும்
அழகானது.
——————
(** 19-07-2007 எங்களை விட்டுப் பிரிந்த என் அம்மாவுக்கு……**)
puthiyamaadhavi@hotmail.com
- சூட்டு யுகப் பிரளயம் ! ஈரோப்பில் வேனிற் புயல் ! இங்கிலாந்தில் பேய்மழை ! -6
- விநாயகர் துதி!
- மரணம் அழகானது
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- கடிதம்
- கடிதம்
- கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு
- ஒரு தாயின் புலம்பல்
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 16
- ஈரோடு புத்தகத் திருவிழா – 2007
- நல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- அரவிந்தன் நீலகண்டனின் அற நெறி!?
- கவிதை சுடும் !
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9
- சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்
- புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்
- அன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’
- மைதாஸ்
- ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 20
- வீராயி
- தீர்வு
- நாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு!
- வெள்ளை மாளிகை வல்லரசர் !
- காதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் !
- மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!
- போர் நாய்
- புரிந்துகொள்ளல்