தாஜ் கவிதைகள்
தாஜ்
ரண களம்
————
எம் மக்களுக்கு
நவீனச் சித்திரங்கள்
புரிவதே இல்லை.
தீர அறிந்தவர்கள்
எப்பவும் மௌனம்.
இப்பவும் அதீதிகளே
சபையலங்காரம்.
மனிதர்களை பூதங்களாகவும்
பூதங்களை மனிதர்களாகவும்
உரக்கக் கணிக்கின்றார்கள்.
இறுகலான காட்சிகளின்
அமைப்பியல் அப்படி.
ஒடுக்கப்பட்ட குரல்களின்
கொந்தளிப்பான வடிவம் அது.
துண்டாடப்பட்ட ஜீவன்களால்
நிற்ம் மாறிய பூமி
ஊரின் பரப்பை விழுங்கும்
கல்லறைகள்
வானை முட்டும்
கந்தக மேக அலை
தீய்க்கப்பட்ட பசுமை
வீழ்த்தப்பட்ட ஆலம்
துவசமான பூங்கொடிகள்
அங்கே ஓடித்திரிந்து
வாழ்விடம் தேடும்
ஊனக்கிளிகளின்
படபடப்புமாய்
கோரப்பிடியில் இறுகுமது
சகோதரக் குடாமண்.
*****
அரங்கேற்ற நேரம்
———————-
பார்வைக்குத்
திறக்கப்பட்டது
என் சித்திரக் கூடம்.
தலைப்பு:
நிர்வாணம்.
விரிந்தே கிடந்தது
குறிப்பேடு.
கண்டுகொண்டவர்களின்
காலடிச் சுவடுகளும்
பதிவுவில்லை.
காலம் தாழ்கிறது.
காற்றின் பெரு வெளிக்கே
அள்ளி தரலாம்
நிச்சயம்
பேரண்டம் காணும்.
****
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com
- கீதாஞ்சலி (94) நான் பிரியும் வேளை!
- பிரச்சினைக்குள்ளான, போப்பின் சமீபத்திய உரையின் தமிழாக்கம
- வணக்கம் துயரமே! அத்தியாயம் – 6
- பெண்/பெண்
- மடியில் நெருப்பு – 7
- இரவில் கனவில் வானவில் 6
- திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்…
- வடகொரியாவின் அணுஆயுதச் சோதனையும் கிழக்காசியாவின் ஆயுதப் பரவலும்.
- பேசும் செய்தி – 3
- பெரியபுராணம் – 107 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- அப்சல் மரண தண்டனை – ஓர் அலசல்
- திரிசங்கு
- கயிற்றரவு
- தாஜ் கவிதைகள்
- நான் ?
- நன்றி. மீண்டும் வராதீர்கள்.
- சாமிச்சண்ட
- இதமிழிசைப் பாடல் -. தொட்டுத் தொட்டுப் பார்க்கட்டுமா சிட்டுக்குருவியே
- மகா அலெக்ஸாண்டர் இந்தியப் போரில் தோல்வி அடைந்தாரா?
- கீதாரிகள் உலகம்
- சு.ரா.வுக்கு இறப்பே இல்லை! ( சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன்.)
- போராளியின் பயணம்
- கடித இலக்கியம் – 26 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
- ‘கவிபாஸ்கரி”ன் தொட்டில் கனவு!
- பெண் மொழி ≠ ஆண் மொழி
- சம்பங்கி – சண்பகம் – சண்பகராசன் கதை
- உருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”
- “கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?”
- தோளைத் தொட்ட கைகள்
- நான் தான் நரகாசூரன் பேசறேன்….
- கணக்கு !
- இராஜேஸ்வரி- பெண்கள் சிறுகதைப்போட்டி. 2006
- தொடரும் இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ்
- அறிவிப்பு:
- நேச குமார் என்ற பெயரில் எழுதுபவர் கவனத்திற்கு: