என் தேசத்தில் நான் — சிறிய இடைவேளைக்குப் பின்னர்
மதுமை சிவசுப்பிரமணியன்
செம்புழுதி
தீண்டத் தீண்ட
விளையாடி திரிந்த
என் பிஞ்சுப் பாதங்கள்
செங்குருதி
தீண்டிவிடும் என்பதற்காய்
திரியாமல்
இருக்கின்றன……
புகையிலைத் தோட்டத்தினூடு
பனிமூட்ட காலையின்
பள்ளி சென்ற
பொழுதின் உயிர்ப்புக்கள்…
சோதனைச் சாவடியினூடு
போர்மூட்ட சாலையில்
ஏனோ கிடைக்கவில்லை…..
பனம் பழங்கள்
பொறுக்கிய
தோப்புக்கள் எல்லாம்
வெறுமையாய்….
திரும்பிப் பார்க்கின்றேன்
அவை
சோதனைச் சாவடிகளை
அலங்கரித்திருந்தன……..
சந்தேக துன்புறுத்தல்களினால்
அடையாளங்களை
மூடிக் கொள்கிறேன்..
அடையாள அட்டை மட்டும்
விடாப்பிடியாய்
பிறந்த இடம் : இணுவில்
எனக் காட்டுகிறது…..
தினம் விரும்பும்
என் துறைமுக சாலைகள்
இன்று
முட்கம்பி வேலிகளுக்குள்…
மனது மட்டும்
அதை ஊடறுத்துப்
பார்த்து
காயம் பட்டுக் கொள்கின்றது…..
என் வீதிகளில்
வரும்
“த..யீ..ர்….” என்ற
தயிர்க்காரி
வருவதேயில்லை….
வரவே முடியாதோ
என்று நினைக்க மட்டும்
எனக்கு
சக்தியேயில்லை….
பஸ் பயணங்களில்
என்னை மறந்திருக்கும்
நான்
இப்போதெல்லாம்
கந்த சஸ்டி கவசத்துடன்
கிளைமோர் ஒன்றும்
வெடிக்காமல் இருக்க…..
காக்க காக்க
கனகவேல் காக்க……..
பாதம் வருடும்
அலைகள்
அளைய பிரியமாய்
இருக்கின்றேன்….
மனித வேட்டைகளால்
மனிதர்கள்
போவதில்லை என்ற
உண்மை
உறைக்காமல்;………
இராணுவச் சிப்பாயின்
நீ யார்? – என்ற
கேள்விக்கு
“இலங்கையன்” ( Sri Lankan )
எனச் சொல்லத்தான்
ஆசைப்படுகின்றேன்….
அவன் என்னை
“இலங்கைத் தமிழனாய்” ( Sri Lankan Tamil)
பார்க்கின்ற போதும்……
……………….
பிறந்த நற் பொன் நாடு
நற்றவ வானிலும்
நனி சிறந்தது – என
யார் சொன்னார்கள்?
திருத்தி எழுதிக் கொள்ளுங்கள்….
நாங்கள் சொந்த நாட்டில்
தான்
நரகத்தில் உழல்கின்றோம்……….
வலிக்கும் போதெல்லாம் இன்னும் தொடரும்………..
- காகம்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்
- வாசிப்பவருக்கு நெருக்கமான கவிதைகள்
- ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
- திருமுகப்பில்…..
- மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13)
- வண்ணச்சீரடி
- நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1
- கடிதம்
- வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள்
- பிரபல அமெரிக்க நடிகையின் திருட்டு
- விழித்தெழும் பாரதத்தை நோக்கி..
- என் தேசத்தில் நான் — சிறிய இடைவேளைக்குப் பின்னர்
- பெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- ‘வினாடிக் கணக்கு’
- மாரியம்மன் கதை
- கடிதம்
- டாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை
- சாந்தன் என்கிற எழுத்துக் கலைஞன்
- அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்
- புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை
- பகலில் வரலாற்றை உருவாக்குகிறேன்
- கீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..!
- புதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8
- ஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்
- கலை இலக்கிய ஒன்றுகூடல்
- இணைய இதழா? அச்சுப் பதிப்பா? எது சிறந்தது?
- சாதாரணமான மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் – தேரு பிறந்த கதை – வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்
- கடித இலக்கியம் – 17
- வகாபிய புரோகிதர்களுக்கு
- திரு நேசகுமாருக்கு பதில்
- தேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு
- லண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு
- தவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )