கவிதைகள்
பாஷா
எது அது
ஒரு முதல் புன்னகையின்
அலை நீளத்தில்
இரு கண்கள் கவிழ்த்த
கூடாரத்தினுள் கோழிகுஞ்சாய்
மனம் சிக்கிகொண்ட
ஒரு பிற்பகலை நம்மிடம்
எடுத்து வந்தது
எது அது!
இரு விரல் உரசி
இரு தோள் உரசி
உன்னருகில் அமர
ஒரு வேண்டுகோளாய் என்
தைரியம் தரையிறங்கியபோது
ஒற்றை பார்வையால்
என்மேல் ஒட்ட வைத்தாயே
எது அது!
தோழனாய்,தமயனாய்
தொடரும் பயணத்தில்
துணைவனாய்
உன் கருவறையில் சூல்கொண்டு
பின்னொரு நாளில் நீ மடிதாலாட்டும்
தலை மகனாய்
எல்லா விருப்பத்திலும் உன்
அருகாமை விரும்பும்
எனக்குள் இருக்கும்
எது அது!
குகை வாழ்க்கை
குகையை கூடு எனக்கொள்ளுமோ
கிளையாட்டும் பறவைகள்
“குகையை கூடு எனக்கொள்ளுமோ
கிளையாட்டும் பறவைகள்”
குகையின் கேலியாய்
எதிரொளிக்கிறது எங்கெங்கும்
கூனாகி குனிந்து இருட்டினுள்
குறுக்கிக்கொள்கிறேன்!
குகை புகுவாய்
கொண்டாடி மகிழ்வாய்
வாழ்த்தொலிகள் முழங்க
எந்தையும் தாயும்
மகிழ்ந்திருந்ததாய் சொன்ன
குகைபுகுந்தேன் ஒரு நாள்
குகையின் சுவரெல்லாம்
விந்துக் கறைகள்
முத்தத்தின் ஒழுகலில்
வழியும் எச்சில்கள்
இதில் எழுதப்போவதில்லை
என் சரித்திரத்தை
வெள்ளைத் தாளொன்றுண்டு என்னிடம்
குகையிருட்டை கையள்ளி
எழுதுகோலை நிரப்புகிறேன்
எழுதும் முனையில்
எதுவும் இல்லை
விரலில் எடுத்து
விந்து பீய்ச்சி
வெள்ளைத் தாளில் எழுதுகிறேன்
பின்னொரு நாள் குகைபுகும்
யாரேனும் படிக்க கூடும்!
குகையின் வாயிலில்
சாரல் விழுகிறது
சிறகை நனைத்து
சிலிர்த்து குகை
விளையாட்டில்!
குகை வாழ்க்கைக்கு
சிறகு வேண்டுமா
குகை தத்துவம்!
உரக்க சொல்லி
உயர பறக்க எத்தனித்து
சுவர் மோதி தரைதொடுகிறேன்
பறத்தல் கூடாது
குகை விதிகள்!
பறவையென்றே சொல்லத்தான்
இறகுதிரும் சிறகுகள்!
அகன்ற வானமும்
ஆழ் பள்ளத்தாக்கும் மோதும்
குகை மறுமுனை நோக்கி
மெல்ல நடக்கிறேன்
சுவாசிக்க வேண்டும்
சிறகடிக்க பறக்க வேண்டும்.
குகையை கூடு எனக்கொள்ளுமோ
கிளையாட்டும் பறவைகள்!
- இந்தியாவில் செய்யப்பட்ட இந்திய மது வகை – Indian Made Indian liquor
- யார் காட்டுமிராண்டிகள்?
- அம்ஷன் குமாரின் பாரதியாரும் பாரதி துவேஷிகளும்
- ஐ. சாந்தனின் இரு குறுங்கதைகள்
- உடையும் புல்லாங்குழல்கள்
- தமிழ்நாடே! தமிழை நடு!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 24
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-4)
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 3. உணவு
- விளிம்பு நிலை இஸ்லாம் ஒரு முன்னுரை
- வார்த்தைகளுடையவன்
- பெரியபுராணம் – 91 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- குறுநாவல் : சேர்ந்து வாழலாம், வா! – 6
- கீதாஞ்சலி (76) நேருக்கு நேராக நானா?
- கவிதைகள்
- திண்ணை அட்டவணை – பிற்படுத்தப் பட்ட சாதியினர் விகிதாசாரம்
- இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி…
- தூய்மை படிந்து உதறி
- தேடல்
- வானவில் கொடி
- புதிய காற்று மாத இதழ் & இஸ்லாமிய இலக்கியப் பேரவை
- செர்நோபில் அணுமின் உலை விபத்தால் உடனே நேரிட்ட விளைவுகள் -7
- பிலாக் பிக்ஸன் : பின்நவீன கதை சொல்லல் முறை
- Premier Show of the documentary film on Sir C.V.RAMAN – 14th June 2006
- கண்ணகி சிலை விவகாரமும், மரபு மறு பரிசீலனைகளும்
- கண்ணகியின் சிலை பற்றிக் கருத்துகள் சில
- கண்ணகி-மரணதண்டனைக்கு எதிரான இளங்கோவடிகளின் குரல்
- கண்ணகி தமிழரின் தாய்
- கற்றதும் பெற்றதும் – வாசக அனுபவம்
- கடித இலக்கியம் – 8
- கடிதம் ( ஆங்கிலம் ) : On Mani Manik’s Facts & Figures
- Poster Design on HIV/AIDS Awareness
- இஸ்லாம் சம்பந்தமான உரையாடல்களுக்கு ஒரு எதிர்வினை
- செக்கும் சிவலிங்கமும்..
- கடிதம் ( ஆங்கிலம் )
- வாத்தியார்
- வகாபிகளின் புதிய திருக்குர் ஆன்
- ஜனாப் வஹாபியின் குழப்பம்
- ஞானியின் “கரடி”!! – An open letter to Mr.Gnani