கவிதைகள்
ஆ. மணவழகன்
வாழ்க்கை வணிகன்
பாருங்க சார்!
தெய்வப் புலவர் வள்ளுவர்
எழுதியது சார்!
வாழ்க்கைக்குத்
தேவையான வழிகளைச்
சொல்வது சார்!
மூன்று பெரும்பகுப்புகள் …
நூற்று முப்பது அதிகாரங்கள்…
ஆயிரத்து முந்நூற்று முப்பது
குறள்களைக் கொண்டது சார்!
வெளியில் வாங்கினா
இருபத்தி ஐந்து ரூபாய் சார்!
கம்பெனி விளம்பரத்துக்காக
வெறும் பத்து ரூபாய் சார்!
—————————-
தொடர்வண்டிச் சிறுவன்
மலிவு விலையில்
விற்றுச் சென்றான்…
திருக்குறளோடு..
‘வாழ்க்கையையும்’ ..!
***
தித்திப்பு
வெயிலின் வேட்கைக்கு
செதில் செதிலாய்க் கடித்து,
சுவைத்துச் சுவைத்து விழுங்கிய
வெகுநேரம் கழிந்த பின்பும்..
வீடு வந்து குடிக்கும்
நீரோடு உட்செல்லும்…
பெருநெல்லியின்
சுவையோடு..
காட்டுக் கள்ளிமடையானின்
தித்திப்பு!
இதோ,
உன்
நினைவின்
ஒவ்வொரு துளியிலும்!
***
ந(£)கரியம்
————-
சாக்கடை நாற்றத்தோடு
செயற்கை நீரூற்றுகள்!
வேரோடு பறித்து
வேற்றிடத்தில் நடப்பட்டு
அலங்காரத்திற்கு மட்டும்
அணிவகுக்கும் மரங்கள்!
முளைக்காத தானியங்கள்!
விதையில்லா கனிகள்!
உயிர் இல்லா முட்டைகள்!
தாய்-தந்தை உறவறியா
குளோனிங் குழந்தைகள்!
பார்த்துப் பல ஆண்டுகள்
ஆனாலென்ன?
பக்கத்து வீட்டில்
வாழ்ந்தால் என்ன?
விரல் அசைவில்
நலம் கேட்டு
வேலை என்று
விரைந்தோடும் மனிதர்கள்!
ஆணிவேரில்
வெண்ணீர் ஊற்றும்
அறிவியல் வளர்ச்சிகள்!
எதைக் காட்டிச் சொல்வேன்?
‘பச்சைக் கம்பு தின்றதே இல்லை’
ஆதங்கப்பட்ட தோழிக்கு…
ஆடுகளை மலையில் விட்டு..
அருகிருக்கும் கொல்லையில்
கதிரொடித்து…
பால் பருவ கம்பைப்
பக்குவமாய் நெருப்பிலிட்டு…
இம்மி ஊதித் தாத்தா கொடுத்த
இளங்கம்பின் சுவைக்கு
இன்றுவரை மாற்றில்லை என்று!
***
– ஆ. மணவழகன்
manavazhahan_arumugam@yahoo.com
- கீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து – 1 – யோகத்துக்கு அப்பால்………..
- தேர்தலும், அதற்கு அப்பாலும்-1
- தலித்தலைவர்களின் தலித் துரோகங்கள்!
- புலம் பெயர் வாழ்வு 8 – எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்
- எடின்பரோ குறிப்புகள் – 14
- த னி ம ர ம் நாளை தோப்பாகும் – தொடர்கதை -1
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-19)
- குறுநாவல்:சேர்ந்து வாழலாம், வா! – 1
- தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்
- கற்பதை விட்டொழி
- தோணி
- கால மாற்றம்
- இயற்கையின் மர்ம முடிச்சு
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம்
- கவிதைகள்
- பெரியபுராணம் — 87 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- பிரமோத் மகாஜனின் மறைவு
- உண்மையைத் தேடியலைந்தபோது
- தேர்தலும், அதற்கு அப்பாலும்-2
- ‘இருதய சூத்திரம்’
- விருந்தோம்பின் பாடல்
- கண்டதும் காதல்
- எழுத்தாளர் சோமகாந்தனின் இழப்புத் தமிழ்கூறும் உலகிற்குப் பேரிழப்பு!
- யாத்ரா பிறந்த கதை
- கடித இலக்கியம் – 3
- நாயின் வயிற்றில் மணிக்கயிறு
- சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் 20 ஆண்டுகள் கடந்தும் கதிரியக்கம் -2
- செயற்கை கருப்பை – ஒரு வரம் தாய்மார்களுக்கு
- காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?-2
- செந்தமிழ் நாடெனும் போதினிலே
- வளர்ந்த குதிரை – 2
- உடன்பிறப்புக்கு என் நன்றி.
- அப்பாவின் அறுவடை
- ஒற்றைப் பனைமரம்
- தொடரும் வெளிச்சம் – பளீரென்று
- கவிஞர் மனுஷ்ய புத்திரனின் மலேசியா- சிங்கப்பூர் பயணம்
- கற்புக் கனல் அன்னை மர்யம்
- கடிதம்
- இவர்கள் அழிக்கப்படவேண்டும்
- மனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 19