கவிதைகள்
தேவமைந்தன்
அவன் அவள் அது – என்னும்….
வேதாந்தம் படித்தது போதும்
சித்தாந்தம் படி
என்றார் நண்பர். தத்துவ வித்தகர்.
நன்றாய்த் தேடினேன். கிடைத்தது.
சைவ சித்தாந்தக் களஞ்சியம்.
‘அவன் அவள் அதுவெனும்
அவைமூ வினைமையின்…. ‘
சூத்திரம் படித்தேன். மறுபடி. மறுபடி.
விளக்கமும் படித்தேன்.
மலைத்தேன்.
‘அவன் ‘ – சரி.., ‘அவள் ‘ – ம்..ம்.., அது எது ?
அறிவு மிக்கவர் பலரைக் கேட்டேன்.
சொற்களை அம்பாரமாகக் குவித்தனர்.
ஆகவே குழப்பமும் அதிகம் ஆனது.
எல்லோரை யும்தான் கேட்டோம்; இவனையும்
கேட்டே வைப்போம் என்றொரு சின்னஞ் சிறுவனை
அழைத்தேன். கேட்டேன்.
கேட்ட என் விழிகளை ஆழமாய் நோக்கினான்.
வினைக்கு எதிர்வினை மீண்டது போல
‘ம்..ம்.. ? தெரியாது தாத்தா..தெரியாது! ‘
ஓடினான், சிறுமியோடு விளையாட்டுத் தொடர.
ஒற்றைச்சொல்தான் ‘தெரியாது! ‘ –
தெரியாது இருப்பது அது.
ஒற்றைச் சொல்லைத் தவிர்ப்பதால் விளைவது
கற்றை கற்றைக் கூளமாய், விளக்கமே.
வெறுமை
வெறுமையை விரட்ட வழிகள் தேடினேன்.
வழிகளா இல்லை ? வந்தன வரிசையாய்.
கடற்கரை சென்றேன். கடலலை சுருண்டு
தடபுட லாக வந்தே கரையைத் தழுவி
நுரைவிரல் நுனிகளை நீட்டி
நண்டு வளைகளை நெண்டிக் கிளப்பி
எட்டும் வரை கைகளை நீட்டித் துழவி
மீண்டும் பின்னே உள்ளுக் கிழுத்தது.
திரும்பவும் மறுஅலை அதையே செய்தது.
திரும்பத் திரும்பப் புதிய அலைகள்
வந்து போயின. செய்ததே செய்தன.
சித்தத் திரைக்குப் பின்னே இருந்து
தலையை நீட்டிப் பார்த்தது வெறுமை.
தப்பித் தோடவே திரும்பினேன்.
ஆகா! அரசு விளம்பரம்.
‘அரிய நூல்கள். அரிய வாய்ப்பு!
அந்தவூர் இந்தவூர் எங்கெங் கிருந்தும்
அந்தப் பதிப்பகம் இந்தப் பதிப்பகம்
அந்த மொழியில் இந்த மொழியில்
இத்தனை இத்தனைத் தலைப்புகள்
இவரவர் எழுதிய இந்தநூல் அந்தநூல்.. ‘
விடுவேனா ? நாடினேன். தெரிந்தவர் தேடி
வணக்கம் பண்ணியும் தலையைச் சாய்த்து
‘விஷ் ‘ஷைச் செய்தும் அவரவர்க்கு ஏற்ப,
காலே அரையே முக்காலே மூணுவீசம்
பதவிக்கு ஏற்பவே புன்னகை வீசியும்
நகர்ந்தேன். அவ்வப் பொழுது காட்சியில்
பரப்பிய புத்தகம் பற்பல பார்த்தேன்.
அரைத்த மாவையே அரைத்தவை, அச்சில்
அழகு பூண்டுஉள் அடக்கம் அற்றவை,
கடைசி அட்டையில் கவனம் வைத்துநூல்
ஆசான் புகழை அவரே சொன்னவை,
தமிழைப் படித்த தகுதியால்
அவரவர் விரும்பிய வண்ணம் வகுத்த
திருக்குறள் உரைகள், சிரிப்பு
வரவே கூடாதெனக் கங்கணம் கட்டி
அங்கங் கிருந்து ‘அடித்த ‘
‘ஜோக் ‘குகள் நிரம்பிய ‘சொதசொத ‘ ‘புக் ‘குகள்,
ஜாதகம் சமையல் வாஸ்து பெங்சூயி
எண்ணியல் பெயரியல் மணியியல்..
எண்ணவே இயலா அத்தனை ‘டைட்டில் ‘கள்.
‘எத்தைத் தின்றால் பித்தம் தீரும் ? ‘
என்பது போல எதைவாங் குவது
எதைத்தான் படிப்பது ? குழப்பம்.
சித்தத் திரைக்குப் பின்னே இருந்து
தலையை மட்டும் அல்ல;
உடம்பையே வெளியில் கொண்டு வந்து
‘பப்ப ரப்ப ‘ எனக் கால்களைப் பரப்பி,
‘இப்போ தென்ன செய்வாய் மானுடா ?! ‘
என்றது வெறுமை. என்னதான் செய்வேன்..
‘வெடுக் ‘கெனக் கால்களில் விழுந்து,தாள் பணிந்தேன்.
சிரித்தது. பரிவாய்ப் பார்த்தது. சொன்னது.
‘நானே மையம். என்னைத் தவிர்க்க
உனது முன்னோர் பாடுகள் பட்டதால்,
காணும் சிற்பம் கேட்கும் இசைகள்
பூணும் புதுப்புதுப் புனைவுகள்
அறிவியல் வசதிகள் எல்லாம் வந்தன.
என்னைத் தவிர்க்க விரும்பினால்
போன போக்கில் போகும் போக்கை
விடுத்து ஆக்க வழிக்குத் திரும்பு! ‘
என்றது. ‘கற்பனை அடா,இது! ‘
என்கின் றீர்களா ? என்னதான் செய்வது!
இருக்கலாம். ஆனால் ஒன்றும்
அடாத கற்பனை அல்லவே ?
****
karuppannan.pasupathy@gmail.com
- கீதாஞ்சலி (62) உனை நாடிச் செல்வது! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஹர்ஷன், அவுரங்கசீப், ஐயா வைகுண்டர் மற்றும் விவேகானந்தர் பாறை நினைவாலயத்திற்கு திமுகவின் பங்கு
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் மூன்று: நல்லூர் ராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்!
- வர்க்க பயம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 9
- எட்டாயிரம் தலைமுறை
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம், பகுதி மூன்று)
- பார்வைகள்
- பூவினும் மெல்லியது…
- தீக்குளித்து மாண்ட 8000 நகரத்தார் குடும்பங்கள்
- வரலாற்றை எழுதுவதை முன்வைத்து
- முஹம்மது நபி(ஸல்) என்ன செய்திருப்பார்கள் ? ( ஆங்கிலத்தில்: இப்ராஹீம் ஹூப்பர் )
- தியானம் கலைத்தல்…
- அருவி
- அல்லாவுடனான உரையாடல்
- பெரியபுராணம் – 77 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- ஒரு பாசத்தின் பாடல்
- கவிதைகள்
- கவிதைகள்
- எடின்பரோ குறிப்புகள் – 9
- சில கதைகளும், உண்மைகளும்
- காந்தம் போல் எல்லோரையும் கவர்ந்தவர் கோல்வல்கர்
- நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் கோட்பாடுகள் [100 Years of Einstein ‘s Theories]
- புனித முகமூடிகள்
- தகவல் பிழைக்கு வருந்துகிறேன்
- விவாதம்:சூபிசம் – வகாபிசம் -உள்ளும் புறமும்
- பழையத் துறவியும் ஜானி வாக்கரும் !
- நான் கண்ட சிஷெல்ஸ் – 11 சிஷெல்ஸின் சில முக்கிய தீவுகள்
- பயணக்கிறக்கம் (Jet lag)
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்-3
- நீதிக்குத் தவித்த நெஞ்சம் – டி.வி.ஈச்சரவாரியாரின் ‘ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள் ‘
- அவுஸ்திரேலியாவில் தமிழ் போதனாமொழி -மூத்த – இளம் தலைமுறையினர் சங்கமித்த எழுத்தாளர் விழா -“ உயிர்ப்பு” நூல் வெளியீடு
- உண்மையின் ஊர்வலங்கள்.. -1
- உயிர்மெய் – பெண்கள் காலாண்டிதழ்
- கடிதம் – ஆங்கிலம்
- பின் நவீன இசை : ஒரு திருப்புமுனை
- கவிதைகள்
- இரு கவிதைகள்
- மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2
- செலாவணியாகாத நாணயங்களைத் திரும்பப் பெறுகிறேன்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘
- துக்ளக்கில் வெளிவந்த மலர் மன்னன் கட்டுரையும், கிறிஸ்துவர்கள் விநியோகித்த துண்டுப்பிரசுரமும்
- புலம்பெயர் வாழ்வு (1)
- மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும்
- கலைச்செல்வன் ஓராண்டு நினைவொட்டிய நாள் – 5 மார்ச் 2006
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-10) (Based on Oscar Wilde ‘s Play Salome)