கவிதைகள்
கி சீராளன்
(1)
எனக்கான அரிசியில்
என்பெயரெழுது இறைவா
பசிக்கிறது.
(2)
ஏழையென்றும் அடிமையென்றும்
எவனுமில்லை நாட்டினில் – பாரதி
நீ சொன்னசொல் பலித்ததில்லை
என்றுமிந்த பூமியில்
செல்வந்தன் ஒப்பவில்லை
ஒருநாளும் உன்மொழி.
காசின்றி கப்பல்கள் ஓடவில்லை
விண்முட்டும் மாளிகை கட்டவில்லை
சொகுசு காாாார்கள் மாயமில்லை
மந்திரத்தில் மாங்காய் விளைவதூமிலை.
கொள்ளையடிக்கும் காசினில் இங்கே
சொர்க்கத்தை காட்டுவம் வாரீர்
இந்திர சுகமிங்கு தோற்கும்
நட்சத்திர விடுதிகள் பாரீர்
எளிமையென்றொரு சொல்லே
ஏழ்மைக்கு மட்டும்தான் இங்கே.
பகட்டு பீதாம்பரங்கள் தானே
இந்தப் பாரினை ஆளுது காணீர்
ஏழு தலைமுறையல்ல – சேர்ந்த ப ணம்
ஏழுலகில் கொடி நாட்டும்.
மொட்டை வெயிலினில் வியர்த்து
வெட்ட வெளியினில் கூடும்
பஞ்சை பராரியை கேளும்
தின்னும் ஓருருண்டை சோறு – அவர்
தொண்டைக்கு மட்டுமே போறும்.
தத்தத்தரிகிட தித்தோம்
தத்தத்தரிகிட தித்தோம்
நித்தம் சோற்றுகிங்கே ததிங்கின தத்தோம்
ஏழைகள் யாருமில்லை என்றீர்
நாங்கள் எங்கே மாள்வது கேளீர்
காசாய் தின்னுது ஒரு கூட்டம்
அவர் கட்டையில போனாலும்
வேண்டுமொரு கூட்டம்.
கடைவழிக்கு வாராது காண் வேதாந்தம்
வெட்டிப் பேச்சோடு போயாச்சு
உள்ளவரை தூற்றிக்கொள் நியதியாச்சு
பிறந்தபின் சாவதற்குள் மிச்சம் எதுவென்றால்
அஃதிங்கே வாழ்ந்த சுகமென்றே சொல்லிடுவார்
நாங்கள் வாழ்ந்தே சாகின்றோம் என் றவரே
மற்றவர் குருதி மஞ்சள் குளிக்கின்றார்.
காலம் காலமாய் சேர்த்தாச்சு
அவன் பிள்ளைக்கும் சேர்த்து வச்சாச்சு
என்பிள்ளைக்கும் சேர்த்து வச்சேனே
ஒரு திருவோடு மட்டும் அவன் சொத்தாச்சு.
பாரதி உன்சொல் உண்மையில்லை
ஏழையென்றோரும் ஒழியவில்லை
செல்வ ஏறியவன் உன்சொ ல் கேட்பதில்லை.
கி. சீராளன்
punnagaithozhan@yahoo.com
- துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘
- தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!
- பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
- பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?
- முதலாம் தீர்மான கோட்பாடு
- மிட்டாதார்
- கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5
- வீடற்றவன்…
- யமேய்க்கனுடன் சில கணங்கள்!
- (இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்
- வீடு
- செரிபடட்டும்
- விதிகளின் மீறுகை
- சாத்தானுடன் போகும் இரவு
- காத்திரு காத்திரு
- பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கைநுனி மின்மினி
- மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)
- ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?
- சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- ஸி. செளரிராஜன் கவிதைகள்
- ஜெயமோகனின் கொற்றவை
- சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்
- சேதிராயர்
- உயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்
- சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘
- மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘
- நான் கண்ட சிஷெல்ஸ் – 7
- இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து
- பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)
- விண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa
- பாட்டி
- சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்
- கவிதைகள்
- அபத்தங்களின் சுகந்தம்
- ஈரமான தீ
- கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- எச்சங்கள் இன்னும்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு
- கடிதம்
- ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை
- ஹெச்.ஜி.ரசூலுக்கு….
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)