மீண்டும் ஒருமுறை

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

ஸ்ரீபன்


இந்த நெடிய நீண்ட இருள்
ஏனக்கு பழகிப்போய்விட்டது

வுhழ்தலின் அர்த்தம் புரியாவிட்டாலும்
உயிர் வாழ்தலின்மேல் உள்ள சிறிய பற்று
ஏன்னையும் பதுங்கு குளிக்குள் தள்ளிவிட்டது

மரண ஓலங்களும்
மனிதரின் இழப்பும் கூட
எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை
இப்போதெல்லாம்

தீர்ப்பு மரணமென எழுதியபின்
எதற்காகத் தாமதிக்கிறீர்கள்
தினம் தினம் மெல்ல மெல்ல
கொல்லவேண்டாமே

கொடிய சர்ப்பமொன்று
வானத்திலிருந்து
தனது தீ நாக்கால்
எனது பிரதேசமெல்லாம்
வாரிப்போகும் அந்த நாளுக்காய்
காத்திருக்கத்தொடங்கிவிட்டேன்

மரணதண்டனைக்கு முன்
ஒரு முறை கேட்பார்களாம்
கடைசி ஆசை என்னவென்று
அது நான் மீண்டும் பிறந்தால்

என் வயதுக்குரிய என் வாழ்க்கையை
தந்துவிடுங்கள்

எப்போதும் சிரித்த முகம்கொண்ட
மனிதர்களிடையே
மரணபயமற்ற தெருக்களினுடாக
குதூகலமாய் ஓடவேண்டும்

சாப்பிட இருந்தும் மறுக்கும் குழந்தை
நிலாச் சோறூட்டும் அம்மா
பறவைகள் மட்டுமே பறக்கின்ற வானம்
திருவிழா காலத்துக்கு மட்டும் வெடிச்சத்தம்

எல்லைகளற்று பறந்துNபுhகும் வானம்பாடி போல
பாடசாலைவிட்டு பாய்ந்து போகும் சிறிய மனிதர்கள்

பயமென்ற வார்த்தையும்
பசியென்ற வார்த்தையும்
கேட்காத பூமியில் நான் பிறக்கவேண்டும்
மீண்டும் தமிழனாய்

நிலாவைப் பிடிப்பதோ முகில்களுக்குள் பறப்பதோ
வானவில்லில் கலந்து கரைந்து போவதோ
எனது ஆசை இல்லை
சாதாரண வாழ்க்கைகூட கனவுதான் எனக்கு

கொடிய சர்ப்பத்துக்காய்
காத்திருக்கத் தொடங்குகிறேன்


Series Navigation

ஸ்ரீபன்

ஸ்ரீபன்

மீண்டும் ஒருமுறை

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

புஷ்பா கிறிஸ்ரி


திரும்பிப் பார்க்கிறேன்
கனவு தெரியவில்லை..
தெரிந்தால் நிச்சயம்
அந்தக் கவுதாரி, காக்கை, ஆட்காட்டி
கத்துவது என் காதுகளில் கேட்கும்
குளத்துக்கருகில் குந்திக்கொண்டிருக்கும்
கொக்குக்கு மீன் கிட்டுமோ
நிச்சயம் என் கண்களில் கொக்கு தெரியும்
அது என் ஊர்பற்றிய கனவு தான்
தொடரட்டும் என்று நினைத்துத்
திரும்பிப் படுத்தேன்
தூக்கம் கலைந்து விட கனவு பறந்து விட
கண்கள் தூங்க மறுக்க
ஏக்கம் நெஞ்சை நிறைக்க
மீண்டும் அந்தக் கனவு வருமா ?
வயல்வெளிகளில் தெரிந்த பச்சை நிறமும்
அங்கே கண்ட பச்சை அலைகளும்
கடற்கரை அருகில் தெரிந்த வெள்ளை அலையும்
காலாற நடந்த ஈர நிலமும்
மண்ணில் கால்பதித்த போது
வந்த மனச்சாந்தியையும்
என் கனவு கலைந்து
அழித்து விட்டதே!
மீண்டும் வருமா என் கனவு
கண்களுக்குள் தெரிந்திடுமா
காட்சிகள் மறையாமல்
மீண்டும் வந்திடுமா ?


Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி