தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)
தமிழில்: சிபிச்செல்வன்
நற்குணம்
நீ ஒரு பெண்
அதை மறக்ாமலிருப்பது நல்லது
உன் வீட்டு வாசற்படியைக் கடக்கும்போது
ஆண்கள் ஷாடையாகப் பார்ப்பார்கள்.
நீ தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தால்
ஆண்கள் உன்னைத் தொடர்ந்து வந்து விசிலடிப்பார்கள்.
நீ தெருவைக் கடந்து பிரதான சாலையில் நடக்க ஆரம்பித்தால்
ஆண்கள் உன்னை ஒழுக்கங்கெட்ட பெண்ணென்று திட்டுவார்கள்.
உனக்கு நற்குணமில்லையெனில்
நீ திரும்பி போகலாம்,
நற்குணமிருந்தால்
இப்போது நீ நடந்துகொள்வதைப்போலவே
தொடர்ந்து செய்
ஓடு! ஓடு!
உன் பின்னால் ஒரு நாய்க்கூட்டம்
ஞாபகம், ராபீஸ், (வெறிநாய்க்கடிநோய்)
உன் பின்னால் ஒரு ஆண் கூட்டம்
ஞாபகம், பாலுறவு நோய் (சிபிலிஸ்)
ஒரு சில வார்த்தைகள்
“எல்லா வீடுகளிலும் அவர்கள் ஒரு பொருளை விற்கிறார்கள்.”
– யார் அவர்கள் ?
“பெண்கள்”
– அவர்கள் எதை விற்கிறார்கள் ?
“சுதந்திரம்”
– வாங்கும் பொருளுக்கு மாற்றாக எதைத் தருவார்கள் ?
“கொஞ்சம் உணவு தருவார்கள், அணிந்துகொள்ள கொஞ்சம் புடவைகள்”
மேலும் கொஞ்சம் வாரமொருமுறை மாமூல் உடலுறவு” இருக்கிறது.
– சுதந்திரத்தைத் தவிர இந்த உலகில் வேறு என்ன பெரியதாக என்ன இருக்கிறது ?
சுதந்திரத்திற்கு விலையில்லை. மனித உரிமை சட்டத்தின் பார்வையில் இவை சட்டத்திற்குப் புறம்பானவை.
“அவள் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இந்தச் சமூகம் சட்டப்படி அவளுக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை”
தன் சொந்த காலில் நிற்பதற்கும், நடப்பதற்கும் அவளால் முடியுமா ?
“இதுவரையில் இல்லை”
– அவளுடைய உணவு, உடைக்கு யாரையும் சந்திராமல் தானே வாழ முடிவெடுத்தால் அவளால் சிரிக்கவும் பேசவும் இயலுமா ?
‘இதுவரையில் இல்லை. ‘
நமது சமூகத்தின் வழக்கம் என்னவெனில் விற்கப்பட முடியாதவற்றை ஏளனமாகப் பார்ப்பது.
– இந்த சட்டதிட்டங்களை யார் உருவாக்கினார்கள் ?
“சில ஆண்கள் ?”
மகத்தான விஷயம்தான், நல்லது ஆண்கள் நன்றாக அறிவார்கள்
வியாபார தந்திரங்களையும், நிறுவனத்தின் சில்லறைத்தனமான விதிமுறைகளையும்.
—-
sibichelvan2003@yahoo.co.in
- ‘இடிபாடுகளுக்கிடையில்” – வெளி ரெங்கராஜனின் கட்டுரைத் தொகுப்பு
- முரண்பாடுகளின் மொத்த உருவம் ஈ வெ ரா
- து ணை -பகுதி 8 / குறுநாவல்
- தேன்கூடு
- வேஷங்கள்
- விடுதலை
- மா..மு..லி
- அகத்தின் அழகு
- அறிவியல் கதை – (விண்வெளியில்) சமைப்பது எப்படி ? (மூலம் : எலன் க்ளேஜஸ்)
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – ஹோ சி மின்
- பாப்லோ நெருதாவின் துரோகம்
- வீங்கலையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மக்களுக்கு மறுவாழ்வளிப்பதும் மீன் பிடித்தல், உள்நாட்டு நாவிகம் உட்பட்ட கடற்கரைப் பாதுகாப்பு
- ஏ.எம். குர்ஸிதின் ஒரு கவிதை
- அதீத வாழ்வு
- றகுமான் ஏ. ஜெமில் கவிதைகள்
- வம்ச விலக்கு
- நிழல்களைத் தேடி …. (2)
- கையிருப்பு மானிடராய் வாழ்ந்து செல்வீர்
- கவிதைகள்
- பெரிய புராணம் – 20. ஆனாய நாயனார் புராணம்
- உயிரே
- அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்
- தொலைக் கடத்தி
- ஆசி. கந்தராஜாவின் உயரப் பறக்கும் காகங்கள் ஒரு பார்வை
- கடிதம் – ஏப்ரல் 1, 2005
- பெண்கள் எதிர்கொள்ளும் காலங்களின் பதிவு
- வெளி ரெங்கராஜனின் கலையும் வாழ்க்கையும்
- விஷ்வதுளசி -இணையாத உறவுகள்
- சுமதி ரூபனின் ‘யாதுமாகி நின்றாள் ‘
- எழுநிலை மாடம்
- கவிதை….
- ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-4
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 2
- நெருப்பு நிலவன் பேனா மையில் கலந்திருப்பது என்ன ? விளம்பர மையா ?
- பூகோள அச்சின் சாய்வு, சுற்று வீதியின் மாறுதல். பனியுகமும் பனியுகத்தில் தோன்றிய பண்டைக் காலத்து யானைகளும். (6)
- யுனித்தமிழ் – ஜிமெயில் – கூகுள் குழுமம்
- வலி
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன், ஆங்கில மூலம்: கரோலின்ரைட்)
- விடியலை நோக்கி
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஐந்து: லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு
- சடச்சான்
- புஷ்பராஜன் நூல் வெளியீடு
- பெரியார் மீதான விமர்சனங்களும், உண்மைகளும்
- குரங்குகளின் ராஜ்ஜியத்தில்…