அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
இரா. றஜீன்குமார்
நித்திலம் கொழித்த கடல்தானிது!
நித்திலம் கொழித்த கடல்தானிது
ஊழியாடி….
கடல் கரைமேவாதென்ற
மனிதச் செருக்கின் கழுத்தறுத்துப் போனது.
புனல் கொண்ட மனிதரும் தரைதட்டிய மீன்களுமாய்
ஒழுங்கமைவைப் புரட்டிப்போட்டது.
உலகம் முழுவதும் மனித உணர்வுகள்
மீள உறையும்வரை உறைநிலை நீங்கின!
தொழில் முறையில் உயிர்பிடுங்க உருவான படையணிகள்
உயிர் மீட்கும் பணியில்! ?
அயரா முயற்சிக்கும்
விடுதலை முனைப்புக்கும்
வாழ்வின் எழுச்சிக்கும்
கரை மேவா அற்றைப் பொழுதுவரை
அலைகளே ஒப்புவமை
தப்பிப் பிழைத்த ஒரு குழந்தைக்கு
ஒன்பது பேர் உாிமை கோாினர்
கடன்கள் இரத்துச்செய்யப்பட்டன
நிதிகள் இறைக்கப்பட்டன.
புராண தாிசனங்களும்
மயான வைராக்கியங்களுமாய்
சனங்கள் கதைகள் கூறினர்
வறுமையால்
ஒடுக்குமுறையால்
யுத்தத்தால்
மீண்டும் சுனாமியால்
மானிடர் மாளாரென
எவரும் உறுதி தந்தாரில்லர்.
இற்றைப் பொழுதில்
ஒரு குறித்த நிலப்பரப்பின்மீது
ஒரு குறித்த இனத்தின்மீது
ஒரு குறித்த மதத்தவாின்மீது
சுனாமியை எப்படி ஏவலாம் என்பதில்
சிலர் தம் ஆய்வினைத் தொடரலாம்
அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
வாழ்வும்
நம்பிக்கைகளும்
அவைமீதான அச்சுறுத்தல்களும்
வானைப்போல் விாிந்துபடும்.
—-
17.01.05
- துணை – பகுதி 3
- இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!
- அறிவியல் கதை! – ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு! ‘
- டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்
- தமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.
- உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.
- சென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு
- தமிழா….தமிழா!
- கண்ணன் காலடியில்
- வின்சன்ட் வான்கோவின் இரத்தம்
- ஒவ்வாமை
- எப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )
- மனைவியின் சிநேகிதர்
- கணவனின் தோழியர்
- தொப்புள் கொடி!
- கவிதை
- உனது மொழியை பு ாியாத பாவி நான்
- சாலையோர நடைபாதை
- விழிப்பு
- உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Splitting & Drift to Smaller Continents)
- கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்
- கடிதம் – பிப்ரவரி 03, 2005 – திருமாவின் தனித் தன்மை
- ‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்
- சித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)
- எழுத்தின் மீது ஒடுக்குமுறை
- தமிள் வால்க
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கழிவு நீர் பாசனம் ! நல்லா சாப்பிடுங்க சார் !
- பிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)
- உறவு
- கவிக்கட்டு …. 47
- பேரழிவுச் சூலாயுதம்!
- பெரியபுராணம் – 29
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சுநாமி ஊழியம்
- குருவிகள்