கவிதைகள்…
பட்டுக்கோட்டை தமிழ்மதி (சிங்கப்பூர்)
1.கப்பல்… கப்பல்…
அவன்
சின்னஞ்சிறியவன்
என்னுயிர் சேர்ந்தவன்.
நான்
பூவரைந்து காட்டினால்
பூவாய் மலர்ந்து புன்னகைப்பான்.
காளையை வரைந்தால்
முட்டு என்று ஓடுவான்.
குருவியைத்தான்
வரைய நினைத்தேன்.
அவன்
கப்பல் என்றான்.
அந்நேரம்
எழுதுகோல் எழுதாமல்
பிடிவாதம் பிடிக்க…
அவனும் கேட்காமல்
அடம் பிடிக்க…
ஓ
கைமூடி கைதிறந்தால்
கையில் காசுபோல…
காகிதத்தை
மடித்தேன்…பிரித்தேன்…
கப்பல்…
இனிய கடிதத்தை
எழுதி மடித்ததில்…
பிரித்துப் படித்ததில்…
எழும் மகிழ்ச்சி
எனக்கும் அவனுக்கும்.
உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
உரக்கக் கத்தினான்
கப்பல்…கப்பல்…
கற்றது கையளவு என்பார்கள்…
அவனுக்கு
கடலும் கையளவு…
2.இல்லை இல்லை
பூக்காத மரத்தில்
பறித்த பூ ?
பதரைக் குத்தி
புடைத்த அரிசி ?
திறந்த கூண்டில்
இருந்த குருவி ?
அம்புக்குத் தப்பி
வீழ்ந்த புறா ?
உழுதவன் கணக்கில்
எழுதி வைக்கும் இலாபம் ?
நிரில்லாக் காவிரியில்
நீந்தியிருக்கும் மீன் ?
சிவகாசி மத்தாப்பு
சிரித்த பின் மிச்சம் ?
விடிந்த பின் வானில்
வெளிச்சமிடும் தாரகை ?
புறபடும் நொடியில்
அடைந்த தூரம் ?
ஓடி முடித்து
நின்ற நொடி வேகம் ?
விண்வெளி மிதக்கையில்
விழ வைக்கும் ஈர்ப்பு ?
புத்தகம் புறட்டினான்
சின்னவன் என்னவன்
கிளையிலிருந்த
கிளிகளை எண்ணினான்.
கிளிகள் பறந்த பின்
கிளையிலிருப்பது ?
இருப்பது
இல்லையென்று சொல்லாமல்
கிளையில் கிளி
சுழி என்றான்
சுட்டிப்பயல்.
3.ஓவியமாய்…
உங்களுக்கனுப்ப வாங்கிய
வாழ்த்தட்டை படத்தில்
உங்களோடு நானுமிருக்கிறேன்.
ஆமாம்
யார் கண்ணிலும் படாமல்
அந்த ஒவியத்தில்
அதோ…
அந்த மரத்துக்குப் பின்
மல்லிகைப்பூச்செடி மறைவில்
நீங்களும் நானும்
ஒளிந்து பிடித்து
விளையாடிக்கொண்டிருக்கிறோம்
வெகுநேரமாய் இந்த
வாழ்த்தட்டை வண்ணப் பூங்காவில்.
—-
thamilmathi@yahoo.com
- நீ சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்
- தமிழ் நாட்டு அரசியலில் நடிகர்கள்
- வாரபலன் ஜூன் 3 , 2004 – மலேசியா ஸ்பெஷல் சேடிஸம் – இத்தாலிய பிட்ஸா எமெர்ஜென்ஸி – கேரள புஷ் மாங்கல்ய பிரஸ்னம்
- கலை வளர்க்கும் பூனைகள்
- உறுத்தல்
- மஸ்னவி கதை 9.1 — சிங்கமும் முயலும் (தொடர்ச்சி)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -22
- ஹிண்டு பேப்பரும் குத்துவிளக்கும்
- பிறந்த மண்ணுக்கு – 4
- தீர்ப்பு
- பாலைவன மூளைகளும் பேரீத்தமரங்களும்- மத்திய கிழக்கை முன்வைத்து
- விகிதாச்சார பிரதிநிதித்துவம் – பல்வேறு முறைகள்
- அன்பு
- கவிக்கட்டு – 9 -அன்றொருநாள் அம்மா
- ஈன்ற பொழுதில்….
- ஆதிமூலம்
- அன்புடன் இதயம் – 20 – பனிரெண்டாம் குடியரசுத் தலைவா
- அம்மா+ அப்பா+காதல்
- தமிழவன் கவிதைகள்-எட்டு
- அதனதன் இரகசியங்கள்
- நிறம்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 5)
- சோனியா காந்தி – ஒரு நடுநிலைப் பார்வை
- நயாகரா நீர்வீழ்ச்சிப் பள்ளத்தாக்கில் இயங்கும் நீரழுத்த மின்சக்தி நிலையங்கள் [Hydroelectric Power Stations in the Niagara Falls E
- மலட்டுத்தனம் என்ற குறியீடு : செம்பனே ஓஸ்மனே அவர்களது க்ஸாலா நாவலில் ஆண் பெண்கள் பாத்திரப் படைப்பு பெறும் தலைகீழ் மாற்றம்
- ஆட்டோகிராஃப் ‘செந்தமிழ் தேன் மொழியாள் ‘
- வன்முறையின் நிறம் (போராட்டம் -கன்னட நாவல் அறிமுகம்)
- சூதாட்டமும் காதலும் (ஒரு சங்கீதம்போல – மலையாள நாவல் அறிமுகம் )
- நி னை வு ப் பு கை
- மெய்மையின் மயக்கம்: 2
- மெதுவாக உன்னைத் தொட்டு..
- வாக்கிய அமைப்புகள்
Thinnai – Weekly Tamil Magazine - தேனீ – கட்டுப்பாடும் கலகமும்
- அன்னமிட்ட வெள்ளெலி
- கடிதம் ஜூன் 3,2004
- மலை ஆமணக்கு எண்ணெயிலிருந்து கார் ஓட்டும் எண்ணெய்
- கவிதைகள்
- சிகரெட் நண்பன்
- அச்சம்
- கவிதைகள்…
- எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு என் அஞ்சலி
- கடிதம் – ஜூன் 3,2004
- கடிதம் ஜூன் 3, 2004
- கடிதம் ஜூன் 3,2004
- கடிதம் ஜூன் 3 , 2004
- கருணையினால்தான்..