கவிதைகள்
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)
ஒட்டு மாமரம்
அந்தப்பக்கம் போய்
ஆண்டுகள் ஆகிவிட்டன
ஒரே ஊருக்குள்ளிருந்தும்
எட்டிப்பார்க்காமல் திரும்பியது
என் மனத்தில் சுமைதான்
அதன் நினைவையும்
நிழலையும்
நான் அதிகமாகத்தான்
எழுதியிருந்தேன் என்பதைவிட
ஆழமாய் உணர்ந்து
அவதிப்பட்டிருக்கிறேன்
எட்டிப்பார்க்காததை எண்ணி
அது ஏதோ வாய்திறந்து
அழுவதாக நினைத்து
மனம் தானாகக்கனத்துக்
கரைகிறது கண்களில்
கோடையின் வாடையை
வரவிடாமல் தடுத்த
அதன் அடர்த்தியை
உணர்ந்தவர்கள் எல்லாம்
கைதிகள் ஆனார்கள்
விடுதலை வேட்கையை
விட்டுத்-தாலைத்தார்கள்
சூரியக்குதிரைகள்
நுழைய முடியா
அடர்த்தி அரண்
நான்
அதன் அணைப்பில்
து-ங்கி விழித்தவன்
அதன் பரிசுகளைச்
சுவைத்து ருசித்தவன்
எப்போதோ வரும்
மின்னல் நினைப்போடு இருந்து-காண்டு
எழுதிக்குவிப்பதில்
எத்துணைப் போலித்தனம்
என்னிடம்…!
—-
மேகமே ஒரு கேள்வி!
பிச்சினிக்காடு இளங்கோ , சிங்கப்பூர்
படைபடையாய் வான்தரையில்
படையெடுக்கும் கூட்டமே
படையெடுக்கக் காரணம்தான்
பகருவீர்கள் கொஞ்சமே! —- மண்ணில்
விடையிலாது ஏங்குகின்ற
விளைபயிர்கள் பார்த்துதான்
விழிநீரைச் சிந்தவே
விரைந்துவந்தோம் நாங்களே
வெள்ளுடைதான் žருடையோ
விதவைக்கோ லம்தோனுதே
விதவைகூட வான்வெளியில்
வீதியுலா ஆகுமோ ?—- விண்ணில்
உள்ளக்குறை உள்ளவர்கள்
ஒருவர்கூட இல்லையே
உலவநாங்கள் விதவைபோல
ஒருதடையும் இல்லையே!
உப்புநீரில் மூழ்கமூழ்க
உடல்தூய்மை போனதோ
உப்புநீரில் குளிக்கயுங்கள்
உள்ளம்மிக ஒப்புமோ ?—-போற்றும்
ஒப்பிலாத மழைவளத்தை
உலகம்உய் யதூவவே
உப்புநீரா ? பார்ப்பதில்லை
உள்ளம்மிக ஒப்புமே
மழையிலாது வாழ்வதற்கு
மனிதயினம் முயலுமோ
மழைமறந்து மரமழித்து
மனிதன்வா ழஇயலுமோ!—-நாளும்
தழைத்திருக்கும் இயற்கைவளம்
தரணியெங்கும் காணவே
உழைத்துநாங்கள் சிந்துகிறோம்
உயர்மழையாம் வியர்வையை
ஏழையென செல்வரென
இரண்டுப்பார்வை இல்லையே
இருளடைந்த நெஞ்சிருக்கும்
இழிபிறப்பு தொல்லையே –ஓங்கும்
தோழமையை உயிரினங்கள்
தோள்கொடுத்துப் பேணவே
தோன்றுகிறோம் கார்முகிலாய்
தொழுதுநீங்கள் வணங்கவே
—-
ilango@stamford.com.sg
- வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி
- பிசாசின் தன் வரலாறு – 3
- திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்….
- இந்தியா பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் பொய்களை நீக்க வேண்டும்
- வாரபலன் – ஏப்ரல் 29,2004 – தூக்கங்கெடுக்கும் தூக்கம் , ஸ்விஸ் நாடகக்காரர்கள் , மலையாள ஹரிதகம்
- ரஜினி – ‘ தமிழ் நாட்டின் குழப்பவாதி ‘
- ஜோனதன் கிர்ஷ் எழுதிய ‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் ‘
- நாராயண குரு எனும் இயக்கம் -1
- சூன்யம்
- கதை 6 : வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும்
- கரடி ரூம்
- தவிப்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-17
- ஆறுவது சினம்
- விருதுகள், பரிசுகள் – சில கேள்விகளும், குறிப்புகளும்
- அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை
- பாவண்ணனின் இரண்டு நுால்கள்
- சமீபத்தில் படித்த நூல்கள் 1- ராஜ் கெளதமன் , எல்லீ வீசல் , கவிஞர்கள், ரோஜர் வாடிம்
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் 2
- பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய பொறியியல் மகத்துவமான ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower in Paris (1887-1889)]
- இன்னொரு தினம்:
- கவிதைகள்
- அன்புடன் இதயம்- 15
- ஞாபக மழை
- ஏமாற்றுக்காரி
- இயக்கம்
- தாலாட்டு
- கடைசியாய்….
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 3
- முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் காலமானார்
- முகத்தைத் தேடி
- இரண்டு கவிதைகள்
- கவிதை
- கடல் தினவுகள்
- இரவின் மடியில் ஆனந்தமாய் உறங்க…
- மத மாற்றமா ? மத ஒழிப்பா ?
- இணையத்தில் தமிழ் நூல்கள்
- கலாசாதனாலயா – சென்னை நடனக் குழு
- எழுத்தாளர் கந்தர்வன் மறைவு
- கடிதம் – 29 ஏப்ரல்,2004
- கேள்வியின் நாயகனே!
- சிவவாக்கியர் திருவாக்கியங்கள்
- கவிதை உருவான கதை – 4
- நாய்க்கும் நீரிழிவு வரும்
- இன்னும் விடியாமல்
- தமிழ்வலை சுற்றி…. 1 (நா கண்ணன், உதயா, அருணா ஸ்ரீநிவாஸன்)
- போய்வருகிறேன்.
- உடல் தீர்ந்து போன உலகு
- நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன
- விழிமீறல்
- வரவுயில்லாத செலவு
- கவிதை
- நட்பாராய்தல்
- கதவுகளும் சுவர்களும்
- விடியல்
- வினாக்கள் வியப்புகளாகட்டும்
- தமிழவன் கவிதை-3
- உள்ள இணையாளே
- உடலால் கட்டிய வாழ்வு
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)