கவிதைகள்
புஷ்பா கிறிஸ்ரி
இரத்த தானம்
இன்னொருவர் நலம் காத் திரங்கி
இன்னொருவர் துயர் போக்குமி ன்பத்தில்
எத்தனை மகிழ்ச்சி எத்தனை மகிழ்ச்சி
அத்தனை மகிழ்விலும் மனத்தினில் கிளர்ச்சி
அத்தனை நிகழ்விலும் எத்தனை நெகிழ்ச்சி
எத்தனை சக்தி என்னுள் எத்தனை சக்தி
இன்னும் இனிக்கும் இள மனத்து வெற்றி
மண்ணில் நிலைக்கும் மனித மன முக்தி
எத்தனை நிறங்கள் எத்தனை மனங்கள்
எத்தனை குணங்கள் எத்தனை குலங்கள்
அத்தனை மனிதரிலும் எத்தனை எண்ணங்கள்
அன்பை மதித்திடும் மனிதாபிமான வண்ணங்கள்
குருதியின் நிறம் சிவப்பென்று ஒன்றாய்
உறுதி கூறி நின்ற பெரியவர் சிறியவர்
தானம் தந்து நின்றே தம் மனிதத்து
மானம், மாண்பு காத்து நின்றார்
நானும் ஒரு துகளாய், பொறியாய்
வானின் கீழோர் நிழலாய் நின்று
பாசம் காத்து மனித நேயம் பார்த்து
தானம் செய்த நாளை மறந்திடேனே
எத்தனை தாய், தந்தை, தம்பி, தங்கை
அத்தனை அண்ணன், அண்ணி, மாமன், மாமி
நல்ல நட்புகள், நேசங்கள், பாசங்கள், எல்லாம்
நலமாகிட உதவும் என் இரத்த தானம் தானே
புஷ்பா கிறிஸ்ரி
—-
அந்த வீடு
மனம் வியாகுலமாய்
அழுது கொண்டது
காலாரக் கொஞ்சம் நடந்து போக
அந்தப் பெரிய வீடு வந்தது
நாயும் தெரியவில்லை
வாசலில் பலகை இல்லை
நாய்கள் ஜாக்கிரதை என்று
காவல் காரனும் இல்லை
மஞ்சள், சிவப்பு என்று
பலவர்ண கலவையில்
குரோட்டன் செடிகள்
வீட்டைச் சுற்றி
அழகு காட்டினாலும்
சுவர்கள் மட்டும்
அழுக்காகிக் கிடந்தன
உள் வீட்டு மனிதர்
மனத்தைப் போல்
இரவு மட்டுமே பல்துலக்கி
காலை தேனீர் குடித்து
வாரம் ஓருமுறை குளித்து
மறு நாட்களில்
வாசனைத் தைலம் பூசி
அழகாய் உடுத்திக் கொண்டு
குளிருக்குப் பயந்து
குளிக்க மறந்த
வெள்ளைக் காரனாய்
உயர்ந்து நின்றது
அந்த வீடு
புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com
- உணவுச் சங்கிலிகள்
- புழுத் துளைகள் (குறுநாவல் – 4)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15
- விளிம்பு
- என்னைப் பெத்த அம்மாாாாஆ…
- காடன்விளி
- கல்யாண ரத்து தீர்மானம்
- காயம்
- தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ?
- நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்
- இது எப்படி இருக்கு…. ?
- இந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்
- முரண்பாடுகளின் முழுமை
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1
- அன்புடன் இதயம் – 14 – காற்று
- மலைப்படுகடாம். ஒரு சித்திரம்
- வா
- மைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்
- காசு
- டாலர்க் கனவுகள்
- அனுபவம்
- வெற்றி
- மரபும் புதிதும் : இரு கவிதைகள்
- தொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004
- உலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]
- டான் கில்மோர்
- குளிர்பானங்கள்
- ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்
- கவிதை உருவான கதை-2
- சரியும் மணல் மடிப்புகள் நடுவே
- நந்திக் கலம்பகம்.
- குதிரைவால் மரம்
- ஜங் அவுர் அமான்!
- என்னோடு என் கவிதை
- ஓட்டப்பந்தயம்
- காலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது
- ஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்!
- தேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து
- மலர் வசந்தம் – நிழற்படத் தொகுப்பு
- கடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘
- கடிதங்கள் ஏப்ரல் 15,2004
- 2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது
- கடிதம் – ஏப்ரல் 15, 2004
- வாழும் வகை
- ஏசுநாதர் வாழ்க்கை : நடன நாடகம் – ஏப்ரல் 18 , 2004
- தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்
- கடிதம் – ஏப்ரல் 15,2004
- உயிர்மைக்கு ஒரு கடிதம்
- யூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04
- அளவுகோல்
- எந்த செய்தி – யார் பிரசுரித்தது ? தினகரன் – தினத்தந்தி தினமலர்
- என்னைப் பொறுத்தவரை
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்
- உயிர் தொலைத்தல்
- அம்மணம்
- அவதாரம்
- மன்னித்து விடலாம்….
- பகல் மிருகம்
- தீர்மானிக்காதவரை.. .. ..
- வசந்தத்தின் திரட்சி
- கவிதைகள்
- சத்தியின் கவிக்கட்டு 3
- தமிழவன் கவிதைகள்-ஒன்று
- என் பிரிய தோழி
- வேர்கள்
- துரோகர்(துரோணர்)
- ஓவியம்
- பரம்பொருள்
- புத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்!
- திரேசா