கவிதைகள்
ரஞ்சினி ,ஃப்ராங்ஃபர்ட்
———————–
காலம் – மாற்றம் – தலையிடி
என் இரவுகள் பகலைவிட
நீண்டவை
என் உணர்வுகள் அறிவைவிட
அதிகமாகி
அமைதியை வேண்டியே பொழுதுகள்
கழிகிறது
ஏன் என்று எழுவது நின்று
இருக்கலாம் என்று ஆகிவிடுகிறது
அலையாக வந்த சிந்தனைகள் அமைதியாகிப்
போய்விடுகிறது
இப்போதெல்லாம் வாழ்வு பற்றிய பயம் –
எதிர்காலம் பற்றிய சிந்தனை
விசுபரூபமாகி மனம் சோர்ந்து கழைத்து
கவலைப்படுகிறது
பகலை விரும்பா இரவும்
.இரவை விரும்பா பகலுமாக
வாழ்கை நகருகிறது
முன்பில்லாமல்
புதியவை பழையவையை அதிகம்
நினைவுட்டி பயத்தைத்தருகிறது
மோகம்
விலக்க முடியாத போர்வையின்
கண கணப்பை விலக்கி
நான்
உன்னைத்தேடுகிறேன்
நீ
அங்கு இல்லை
நாம் பகிர்ந்து கொண்ட காதலும்
இனிய முத்தங்களும் நினைவுகளும் மட்டுமே
உனது மார்பில் கனவுகாணவோ
உனது உடலை ரசித்திருக்கவோ
உனது இதளைச் சொந்தமாக்கிடவோ
உனது குரலில் மயங்கிக்கிடக்கவோ
உனது கரங்களை வருடிக் கொடுக்கவோ
அணைத்திருந்து விவாதங்கள் செய்யவோ
மெல்லிய இரவில் உனது தேகம் தந்துவிட்ட
மோகத்தை நினைத்திருக்கவோ
ஏல்லாத்திற்குமாகவே உன்னை என்னவனாக்கவோ
முடியாதிருப்பினும்
அன்பைக் கொடுக்கவும் அன்பை எடுக்கவும்
எமக்கிருக்கும் உாிமை பறிபோகாதவரை
நாம் காதல் செய்வோம் .
ranjini@marley-x.de
***
- மிளகுமாமி சொல்றது என்னன்னா
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1
- கல்லூரிக் காலம் – 8 -சைட்
- தேடல்
- துகில்
- இரு கதைகள்
- விடியும் -நாவல்- (35)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து
- புதிய சாதிகள்
- அன்புதான் அனைத்துக்கும் அச்சாணி.
- எனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘
- விருமாண்டி – சில எண்ணங்கள்
- பற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)
- எரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்
- ஒரு கவிதை
- அன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து
- முதலா முடிவா ?
- கண்ணா நீ எங்கே
- ஆனைச்சாத்தன் கவிதைகள்
- எதிர்பார்ப்பு
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- ‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘
- குறியும் குறியீடும்
- உண்மை ஆன்மீகம்
- கவிதை
- அங்கீகாரம்
- பின் விளைவு
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004
- தேசபக்தியின் தேவை
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- கடிதங்கள் – பிப்ரவரி 12, 2004
- பூமத்திய ரேகை
- சாத்திரமேதுக்கடி ?
- சாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்
- உடலில் மாற்றம்.
- ஆனந்த ‘வாசன் ‘
- இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
- ஈடன் முதல் மனிதம்
- நான் கேட்ட வரம்
- கவிதைகள்
- சுவர் துளைக்கும் வண்ணத்துப்பூச்சி
- காதலர் தினக்கும்மி
- நீ கூடயிருந்தாப் போதுமடி..
- புதிய கோவில் கட்டி முடியுமா ?
- உன்பெயர் உச்சரித்து
- காதலுக்கோர் தினமாம்
- இவர்களென்ன மார்க்கண்டேயர்களா… ?