எனக்கு வேண்டும் வரம்
(கவியோகி வேதம்)
**********************
வரம்வேண்டிக் கெஞ்சுகின்றேன்! வாகீசா! உடனே தா!
சிரம்வலிக்கும் அளவிற்குச் சிறுமைகள் தொடருதப்பா!
..
நீ அளித்த சோலைமண்ணில் நிஜவிடத்தைக் கலக்கின்றார்!
நீகொடுத்த மேனிக்குள் நீள் ‘மலத்தைச் ‘ சேர்க்கின்றார்!
.
சோலையினை ரசிக்காமல் சுருட்டி(ல்)அதைப் பற்றவைப்பார்!
காலையிலும்,மாலையிலும் கழிவுகளைக் கொட்டுகின்றார்!
..
எனக்கோர்- ‘தீக் ‘ கண்கொடு! எரியவைப்பேன் இவர்களையே!
இனிக்கும் இவ்வுடலை ‘எய்ட்ஸ் ‘ வ(ை)ரப் படுத்துகின்றார்!
.
கர்மவினை கழித்திடவே கருணையுடல் நீதந்தாய்!
தர்மம்நின்று, வாழ்வுசெய்து தளராமல் உனைநினைத்து,
..
யோகத்தால்,பயிற்சிகளால் உள்நரம்பைப் பொலிவுறுத்தித்
தாகமுற ஒளியேற்றி ‘உட்கண்ணில் ‘ தழைக்காமல்,
.
கண்டபடி இன்பமுறும் கயவர்களைப் பொசுக்கிடவே
சுண்டிஅன்று ‘பாடிய ‘ கா ளமேகச்சூள் ‘நாக்கை ‘த் தா!
..
பகட்டுச் சொற்களினால் பதவியேற்று,மக்கட்கே
தகவாய்நன் மைசெய்யாத் தடியர்களைப் புடைத்திடவே
..
என்கையில் ‘பிறர் ‘ அறியா இயந்திரத் தடியும்,தா!
மென்சொல்லைப் பேசாமல் மேலான என்நாட்டை,
.
சாதிப் பிரச்னைக்குள், சகதியாம் வன்முறைக்குள்
ஊதிவிட்டு உள்மகிழும் உலுத்தர்களை உதைத்திடவே
..
இரும்பான கால்தனியே இரகசியமாய்த் தந்துவிடு!
கரும்பாக நாடெங்கும் கருணையாட்சி வர,வரம்தா!
..
உன்னால் இயலாதா ? உடனே சொல்லிவிடு!
என்னதவம் நான் செய்தால் இவ்வரம் பெற்றிடலாம் ?
.
என்பதை இப்போதே இறுதிசெய்! இல்லையென்றால்,
மன்பதையில் என்வாழ்வின் மகத்துவம்தான் என்ன என்ன ?
..
வீடு ‘தீ ‘ப் பற்றினால் வீணன்போல் நிற்பதுவா ?
ஓடுகளில் கல்கலந்தால் உட்கார்ந்து ரசிப்பதுவா ?
..
மேகத்தில் ‘அமிலம் ‘என்றால் விஞ்ஞானி வருந்தானா ?
தாகமுற,வேகமுற, தளிர்மேனி நடுக்கமுற,
..
தினசரியைப் பார்ப்பதற்கே தேள்கொட்டும் தினவெடுக்க
மனம்வருந்திக் கேட்கின்றேன் மகேசனே! வரம்தாயேன்!
..
இரண்டிலொன்று செய்துவிட்டு எப்படியும் ‘உள் ‘ சேர்வேன்!
வரம் ‘முக்தி ‘ கேட்டேனா ? வாழ்வினிமை கேட்டேனா ?
..
அசுரர்களைப் பொசுக்கஇப்போ அவதாரம் தேவைஅப்பா!!
குசும்பில்லை என்வரத்தில்! கொதிப்புத்தான்! உடன் கொடப்பா!
***************************(கவியோகி வேதம்)
- விடாது கருப்பு
- விடியும்!-நாவல் – (27)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தேழு
- வாசகர்கள் கவனத்திற்கு
- விமோசனம்
- நான் கணேசனில்லை…
- ஆரியம் இருக்குமிடம், அக்ரகாரம் மட்டுமல்ல
- விலங்குப் பலி x ஐீவகாருண்யம்
- வாரபலன் – குறும்பட யோகம்
- கடிதங்கள் – டிசம்பர் 18, 2003
- தொடரும் ‘ரசவாதம் ‘ -கண்ணனின் எதிர்வினை குறித்து
- அழகான மரம் (இந்திய பாரம்பரியக் கல்வி பற்றி)
- எளிதாய்
- நிறக்குருடுகள்
- கவிதைகள்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -3)
- எத்தனை காலமாய்…
- எனக்கு வேண்டும் வரம்
- திரை அரங்கில்
- புரிந்ததா
- நன்றி
- ரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003]
- ஐரோப்பிய GPS உலக துல்லிய இடம் காட்டும் அமைப்பு துவக்க ஐரோப்பிய தலைவர்கள் பச்சைக்கொடி:
- எனக்குப் பிடித்த கதைகள் – 90-அகமாற்றத்தின் நிறம்-ஜயதேவனின் ‘தில்லி ‘
- அடிப்படைகள் தகர்ந்த போது கிழக்கில் தெரிந்த ஒளிக்கீற்றுகள்
- எரி செல் (fuel cell) உபயோகப்படுத்தலில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது.
- நகைச்சுவைத் துணுக்குகள்
- சி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கப் படுகிறது.
- சி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கும் விழா
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மொரிஸ் ப்லான்ஷொ (Maurice Blanchot – 1907 -2003)
- வரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும்: அலன் ஸாக்கலுடன் ஷூலியன் பாக்கினி : உரையாடல் மொழியாக்கம்
- அலன் ஸாக்கலுடன் -ஜ_லியன் பாக்கினி உரையாடல் :வரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும் :தமிழ் பின்நவீனத்துவம் குறித்த சில குறிப்புகளுடன்
- கனடாவில் கவிஞர் புகாரியின் ‘அன்புடன் இதயம் ‘ கவிதை நூல் வெளியீடு – டிசம்பர் 13, 2003- வாழ்த்துரை
- ஒரே வரி
- வாசகர்கள் ,படைப்பாளிகள் கவனத்துக்கு
- குறும்பாக்கள்
- பால்யம்.
- நீயே உனக்கு சாட்சியாளன்!
- சங்கம் சரணம் கச்சாமி
- சூட்சுமம்
- செம்பருத்தி
- முன்னோடி
- கை நழுவின பகலிரவுகள்
- புரியாமல் கொஞ்சம்…