கவிதைகள்
நண்பன்
1. கால்கள்……………
***********
சாலையோரம்
கழிவோடு கழிவாக
அமர்ந்திருக்கிறான் –
அங்கு வந்து செல்லும்
பல கால்களையும்
பார்த்துக் கொண்டே…..
வளர்ச்சியை முடித்ததும்,
இன்னும் வளருகின்றதும்,
வளராமல் சூம்பிப் போனதும்
எனப் பலப்பல
கால்கள்
அவன் கவனம் கருகின்றன…..
சாதியைத்
தேடாத பார்வையால்
கால்களைப்
பார்த்துக் கொண்டிருக்கிறான்.
சில கால்களின்
வசீகர அழகு
அவன் உத்தேசத்தை
மறக்கடிக்கும் –
பசியை மறக்க
வைக்கும்
புகை வலிப்பைப் போன்று…
எல்லாக் கால்களையும்
கவனிப்பது
அவன் உத்தேசமில்லை –
நீர் வற்றிய குளத்து
கொக்கைப் போல
அவன்
கவனமெல்லாம்
அணி செய்யப்பட்ட
கால்களைத்
தேடிக் கொண்டிருக்கும்….
இன்றைய
இரவுப் பொழுதிற்கு
இரை கிடைக்குமா –
இந்தக் கால்களில்
ஒன்றிலிருந்து ?
அரக்கப் பசியுடன்
கால்களைக்
கவனமாகப்
பார்த்துக் கொண்டிருந்தான் –
பக்கத்தில்
வேலையற்றுக் கிடந்தன
ஊசியும், நூலும்…..
****************************************
2. வார்த்தைகள்………..
வார்த்தைகள்
கை தேர்ந்த
முகமூடியாளர்கள் –
ஒரே சமயத்தில்
ஒன்றாக, பலவாக
பிறப்பெடுக்கும்.
நுகர்வோர் தரமறிந்து
சேவகம் செய்யும்
கை கட்டி….
தடுக்கினால்
குழியும் பறித்து விடும்
பலர் முன்னிலையில்.
இந்த வார்த்தைகளிடம்
கொஞ்சம் எச்சரிக்கையோடு
இருங்கள் –
தனியே ஒன்று;
கூடினால் இன்னொன்று –
வேடமிடுவதில்
இவைகளும் மனிதர்கள் தான்…….
***********************************************
3. பசுவதை……………
கட்டாக்காலி மாடு
நடுவீதியில் –
இரைமீட்டிக் கழிக்கும்.
பிளாட்பாரத்து வாசி
வாழ்க்கையைப் போல.
மடிவற்றிய மாடுகள்
நடுத் தெருவில்
சோரமுற்று
சுமந்து கொண்டு வந்தால்
வீட்டுக்குள் அன்பாக சேர்ப்பு…
மடியில் கனமுள்ள
மாடுகள்
நன்றாகக் கவனிக்கப் படும் –
சத்து ஊசிகள் குத்தப் பட்டு.
இல்லையென்றால் –
அனாதை ஜீவனம்…
சுவரொட்டி உரித்து…
பந்தக்கால் வாழை திருடி…
எச்சில் தொட்டியில் பிச்சையெடுத்து…
என்று ஏதோ ஓர் வகையில்
வாழ்க்கை ஜீவனம்…
இங்கு….
பசுவதை
கழுத்தை அறுப்பது
மட்டும் தான்.
***************************************
pmdshaji@sify.com
- விடியும்!:நாவல் – (25)
- வாரபலன் – மறுபடி எழுத்து ப்ராப்தி
- முகம்
- திசை ஒன்பது திசை பத்து – புதிய நாவல்
- அமலா.. விமலா..கமலா
- மஹேஸ்வரியின் பிள்ளை
- வசியப்படுத்தப்பட்ட பொம்மை (The Enchanted Doll by Paul Gallico)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 2
- கவிதை
- கடிதங்கள் – டிசம்பர் 4,2003
- நடை முறை
- வாழ்வே வரமா
- இறங்கிய ஏற்றம் :
- காலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து
- இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் !
- தொல் திருமாவளவன் புத்தக வெளியீடு
- ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும்
- வாசம்
- கவிதைகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 88-இயற்கையும் எதார்த்தமும்-மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘
- கடித இலக்கியம்:ஒரு மூத்த சகோதரியின் அந்த நாள் ஞாபகங்கள்;பழைய சென்னை பற்றிய செய்திகள்.
- நோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)
- EPR முரண்-1
- நெப்டியூன் கட்டிய சூரிய மண்டலம்
- ஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்
- அப்பாவும் நீயே
- குழந்தை.
- பத்தினிப் பாதுகை..
- ஹெச் ஜி ரசூலின் ‘மைலாஞ்சி ‘ – பலவீனமும் பலமும்
- குறும்பு
- அமைதி
- பண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்
- நகுலன் கருத்தரங்கும் பரிசளிப்பு விழாவும் – தேதி 6-12-2003
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995)
- தமிழ் சினிமாவில் சண்டியர்…
- நூல் வெளியீடு : அழைப்பிதழ் : மெய்ப்பொருள் கவிதை கருத்தரங்கம்
- தி.ஜானகிராமனின் பெண்கள்,ஆண்கள்,கிழவர்கள்
- நினைவலைகள் – *** டை ***
- பிதாமகன்