கவிதை
மாலதி
கொழகொழத்த ஒரு கவிதையைப்
பலநாளாகச் சீரமைத்து வருகிறேன்
என்னோடான அதன் பகை காரணமறியாதது.
என்னை மலைமேலிருந்து குப்புறத்தள்ளியும்
தீமிதிப்பாதங்களில் சுத்தியல் உந்தின
ஆணிப்பாய்களில் பல்லிளித்தும் என்
புன்னகைகளை விலை தள்ளி விற்றுத்தீர்த்தது.
நெடுநாளாக நான் நாத்திகவாதி
நம்பிக்கைகளின் வித்தெல்லாம் வெந்தபின்
தானே என் தோட்டங்களைச் சேர்கிறது ?
என் வண்ணங்களை மொழிகளை வாசலில்
இறைத்தபின் உள்ளிருக்கமுடிந்தது
அல்லது தீபங்களை மணிப்பரல்களை
வெளிவந்தபின்பே நிரல் படுத்த
முடிந்தது.அதற்காகக்
கிணறுகளைப் பாதைகளில்
தோண்டி விட முடிவதில்லை.
அடுப்புகளும் எரிவதில்லை
வீதிகளில்
மழை பெய்யக் காத்திருப்பேன்
கூரையோரங்களிலாகிலும்.
தொனிக்கின்ற பறவைகளின்
சிறகுகளால் வாழ்வேன்.
கிறுக்கிக் கிறுக்கிச் சில
சூத்திரங்களால்
செயற்கை முத்துக்களைப்
பெற்றுப் பூரிப்பேன்
எனினும் ஒரு கவிதை
ஒற்றைக் கவிதை எனக்கென்று
இல்லாமலே போனதே!
அது நிச்சயம் கவிதை தான்..
———————————————-
malti74@yahoo.com
- விடியும்!:நாவல் – (25)
- வாரபலன் – மறுபடி எழுத்து ப்ராப்தி
- முகம்
- திசை ஒன்பது திசை பத்து – புதிய நாவல்
- அமலா.. விமலா..கமலா
- மஹேஸ்வரியின் பிள்ளை
- வசியப்படுத்தப்பட்ட பொம்மை (The Enchanted Doll by Paul Gallico)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 2
- கவிதை
- கடிதங்கள் – டிசம்பர் 4,2003
- நடை முறை
- வாழ்வே வரமா
- இறங்கிய ஏற்றம் :
- காலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து
- இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் !
- தொல் திருமாவளவன் புத்தக வெளியீடு
- ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும்
- வாசம்
- கவிதைகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 88-இயற்கையும் எதார்த்தமும்-மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘
- கடித இலக்கியம்:ஒரு மூத்த சகோதரியின் அந்த நாள் ஞாபகங்கள்;பழைய சென்னை பற்றிய செய்திகள்.
- நோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)
- EPR முரண்-1
- நெப்டியூன் கட்டிய சூரிய மண்டலம்
- ஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்
- அப்பாவும் நீயே
- குழந்தை.
- பத்தினிப் பாதுகை..
- ஹெச் ஜி ரசூலின் ‘மைலாஞ்சி ‘ – பலவீனமும் பலமும்
- குறும்பு
- அமைதி
- பண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்
- நகுலன் கருத்தரங்கும் பரிசளிப்பு விழாவும் – தேதி 6-12-2003
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995)
- தமிழ் சினிமாவில் சண்டியர்…
- நூல் வெளியீடு : அழைப்பிதழ் : மெய்ப்பொருள் கவிதை கருத்தரங்கம்
- தி.ஜானகிராமனின் பெண்கள்,ஆண்கள்,கிழவர்கள்
- நினைவலைகள் – *** டை ***
- பிதாமகன்