பாரதீ…
புதியமாதவி. மும்பை
பாரதி..
‘நீ படி ‘ என்றாய்
படித்தோம்
‘பட்டங்களை எடு ‘ என்றாய்
எடுத்து முடித்தோம்.
பட்டமும் பதவியும்
எங்கள் நிலையை
உயர்த்தும் என்றாய்
உயர்த்தியது
எங்கள் விலையை
உ
ய
ர்
த்
தி
ய
து..!!!
இருட்டறையில்
இலவசமாக
விற்கப்பட்ட
நாங்கள்
இன்று-
பட்டப்பகலில்
பணத்திற்காக
விற்கப்படுகின்றோம்!
அடுப்பறை விறகுக்கு
ஒருபக்கம் தீ
இந்த-
அலுவலக விறகுக்கு
இருபக்கமும் தீ..!
வாழ்க்கையில்
ஒருதடவைதான்
தீக்குளித்தாள் சீதை.
இன்று-
வாழ்வதற்காகவே
நித்தமும்
தீக்குளிக்கின்றாள்
பதிவிரதை..!!
பார்ர்ர்ர்ர்ரதி.!!
உன்
அக்னிக்குஞ்சு
அணுவாகி விட்டது..
வெடிக்கும்முன்பே
விழித்து எழு..
அன்புடன்,
புதியமாதவி.
மும்பை
puthiyamaadhavi@hotmail.com
- வைரமுத்துக்களின் வானம்-3
- நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா ?
- கடிதங்கள்
- ஹே பக்வான்
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2
- பச்சைக்கிளி
- வேலை
- கங்காணி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு
- கல்பாக்கம்
- தமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்
- காதல் கருக்கலைப்பு
- திருவிழா
- வைரமுத்துவே வானம்
- இருவர்
- பாராட்டு
- காலத்தின் கட்டாயம்
- பூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்
- வாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)
- கறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை
- ஆனந்தியின் டயரி : காதலா காவலா ?
- பாரதீ…
- ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்
- மொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு
- கவிதை மொழியும் உரை நடை மொழியும்
- என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும்
- கிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை
- அகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)
- கடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்
- தூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்
- மார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்!
- அரசியல் : ஒரு விளக்கம்
- பலிகொடுத்து வழிபடுவதைப் பற்றி…
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3
- சிலநேரங்களில்
- மேலும்…
- ஒரு மத்தியான நேரத்து சிந்தனை..
- மனம்
- சோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து
- குமரி உலா 3
- பல்லாங்குழி
- கற்றதனாலாய பயனென்கொல்
- விடியும்! நாவல் – (14)