மூன்று கவிதைகள்
பாரதிராமன்
அதிகப்பிரசங்கம்
எனக்கு இவ்வாறு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்
அம்மாவும் கடவுள்
அப்பாவும் கடவுள்
ஆசான் கடவுள்
அதிதியும் கடவுள்
இருந்தபோது அவ்ர்கள் எல்லோரும்
சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள்
ஒருவர்பின் ஒருவராய்
எல்லாக் கடவுள்களும்
ஒருநாள் செத்துப்போனார்கள்
இருந்தாலும்
மீண்டும் மீண்டும் அவர்கள்
தோன்றிக்கொண்டேயிருந்தார்கள்
சண்டை போட்டுக்கொண்டு
செத்து மடிவதற்கு
தோற்றமும் சண்டையும் சாவும்
இறப்பதேயில்லை
கடவுளைப்போல
நீங்களும்
உங்கள் பிள்ளைகளுக்கு
இதையே சொல்லிக்கொடுங்கள்
காரணகாாியங்கள்
உாிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது கோழி
பாம்பு விழுங்கிய முட்டையிலிருந்து வந்த கோழி
கீாி கடித்துக் குதறிய பாம்பு
பாப்பாத்தி கொன்றுபோட்ட கீாி
உற்றுப்பார்க்காத பாப்பாத்தி
உறக்கம் கலைந்த குழந்தை
உயிர்த்துச் சிாித்துக் கிடக்கிறது
கணித்துக்கொண்டிருக்கிறது காலம்
கவலையற்றதாய் தன்பாட்டுக்கு
ஏனென்று கேளாமல் எதையும்.
விசித்திரக்காதல்களும் காதல் விசித்திரங்களும்.
அவளை அவன் காதலித்தான்
அவள் வேறு ஒருத்தனையும் காதலித்தாள்
***** **** ****
அவள் காதலித்தது போதும் என்றாள்
அவனும் போதுமே என்றான்
இருவருக்கும் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது-
வெவ்வேறு இடங்களில்
**** **** ****
இனி எத்ற்குக் காதல்
என்ற முடிவுக்கு அவன் வந்திருந்தான்
சாவதற்கு வேறு வழிகள் அவனுக்குப் புலப்பட்டுவிட்டன.
**** **** *****
கடைசியில் கதாநாயகி வில்லனை மணந்தாள்
கதாநாயகன் முதலில் வில்லனுக்கு நன்றி கூறினான்
**** **** *****
காதலன் கைவிட்டான்
கல்யாணம் நின்றுபோனது
காதலன் கை கொடுத்தான்
கல்யாணம் நடந்துபோனது
காதலன் கை சோர்ந்தான்
கல்யாணம் ஓய்ந்துபோனது
**** ****** *****
- உலக நடை மாறும்
- வீட்டுக் குறிப்புகள் சில
- கடிதங்கள்
- விடியும்! நாவல – (4)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினான்கு
- அம்மா எனக்கொரு சிநேகிதி.
- மூன்றாவது தோல்வி
- வாரபலன் ஜூலை 4, 2003 (ஆயிஷா, கநாசு, மலையாள இலக்கிய உலகு, வரம்புகளுக்கு அப்பால்)
- மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் ( தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை – வெளி ரங்கராஜனுடைய நூல் அறிமுகம்)
- மறக்கமுடியவில்லை
- மூன்று கவிதைகள்
- என்னுள் நீயானாய் சக்தி ஓம்
- பணமே உன் விலை என்ன ?
- குறிப்புகள் சில-10 ஜூலை 2003 (திராவிட இயக்கம்-ஹேபர்மாஸ்,தெரிதா-சூசன் சொண்டாக்-பசுமையாகும் பிரான்சின் அரசியல் சட்டம் ?)
- நந்தன் கதை – மு ராமசுவாமியின் இயக்கத்தில்
- மூன்று கவிதைகள்
- முகவரி மறந்தேன்…
- பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)
- பிரிட்டன் புளுடோனிய உற்பத்தி அணு உலையில் பெரும் தீ விபத்து [Britain ‘s Windscale Plutonium Production Reactor Fire Accident]
- நேற்றான நீ
- சொல் தேடி பயணம்…
- மூன்று கவிதைகள்
- செந்தாமரையே
- என் கவிதையும் நானும்
- ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
- ‘தான் ‘ எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் உயிர் பெற….
- சீதாயணம்!
- மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
- காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி
- தமிழினி வெளியீடாக
- தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 68)
- அல்லி-மல்லி அலசல்- பாகம்3