பேராசை
கோமதி கிருஷ்ணன்
1. ஆசை எனக்கு பெரிய ஆசை,
பேராசையா தெரியவில்லை.
2. பெண்ணென்ற காரணத்தால், கருவிலேயே கருகச்செய்து,
பேணும் வயிறதனை, பற்றிஎரிய வைக்கும்
பேய்குணம் போகவேண்டுமென்ற ஆசை,
எனக்கு பேராசையா தெரியவில்லை.
3-பிஞ்சான மொட்டுக்களை, iஇடுப்பொடிய வேலை வாங்கி,
கஞ்சிக்கும் எட்டாத கூலியில் மக்கச்செய்யும்,
பாவிகளின் மனம், மாறவேண்டுமென்ற ஆசை,
பேராசையா தெரியவில்லை.
4. கட்டாயக் கல்விக்கென்று, கோடிகளை சிலவழித்து,
எட்டவேண்டியவர்க்கு எட்டாமல், தட்டிச்செல்லும்
கெட்டவர்களின் மனம், மாறவேண்டுமென்ற ஆசை,
பேராசையா தெரியவில்லை.
5. அறிவுக்கண்ணைத் திறக்கச்செய்ய, ஆத்மார்த்த ஆசான்கள்,
நாடெல்லாம் நிறைய வேண்டும் அவர்கள் வயிறும், உள்ளமும், வாடாமலிருக்கவேண்டும்.
சிறாற்களுக்கு, அறிவுடன் ஆசியும், கிட்டவேண்டுமென ஆசை,
பேராசையா தெரியவில்லை.
6. எழுத்தறிவில்லா ஏழைகளின், உழைப்பதனை, தனதாக்கி
கொழுக்கும் கயவர்தன் மனம் மாறி (அவர்கள்)
கொழுகொம்பாய், மாற வேண்டுமென ஆசை,
பேராசையா தெரிய வில்லை.
7. ஸரஸ்வதி ஆலயத்திலிஇiடம், கிடைத்த கண்மணிகள்,
‘சரச் ‘ஸிலும் ‘டிரக் ‘க்கதிலும், தடுமாறாமல்
‘ராகிங் ‘லும், பொலிந்திடாமல், பெற்றவர்கள் மனம் குளிர படித்துத்தேறி,
சொந்த நாட்டிர்க்கும் வீட்டிற்க்கும், உழைக்க வேண்டுமென்ற ஆசை,
பேராசையா தெரியவில்லை.
8. நாகரீகம், என்ற பேரில், நாணமின்றி திரியும் குணம்,
நஞ்சாக பரவ விட்டு, நாள்கடந்து நினைந்துருகி,
நடுக்கடலில், தத்தலிக்கும் நிலைமாறி, நாமெல்லாம், நிம்மதியாய் நிலையாய்
குடும்பவாழ்வு, வாழவேண்டுமென்ற ஆசை,
பேராசையா தெரியவில்லை.
9. ஸ்ரீதேவியாய், மறுமகளை, ஆரத்தியுடன் அழைத்தபின்,
ஸ்ரீதனம் என்ற பேரில், சித்ரவதைசெய்ய்யாமல்
பெற்ற பெண்ணாய் பேணும் குணம், பெற்றவள்க்கு தொற்ற வேண்டுமென்ற ஆசை
பேராசையா தெரியவில்லை.
10- அளவாக பெற்றெடுத்து, வளமாக வாழ்வதர்க்கு,
அளவான ஆசையுடன் அஞ்சாமல் உழைத்த்திட்டால்
நன்மை பல பெறுவதுடன், நானிலத்தில் நம்பர் ‘ஒண் ‘ஆகிடலாம்
அறிவுமிகுந்த இiந்தியனால் என்ற ஆசை,
பேராசையா தெரியவில்லை.
11. வாக்குறிதிகளை வாரிவிட்டு, ஓட்டுவாங்கி, பதவிஏர்க்கும் எத்தர்கள்,
கொடுத்தவாக்கை பறக்க விட்டு, மனசாட்ச்சியை புதைக்காமல்,
நல்லவர்களாய் உழைக்க புத்தி, வரவேண்டுமென்றா ஆசை,
பேராசையா தெரியவில்லை.
12. நாட்டுப்பற்று, வீட்டுப்பற்று, நன்னடத்தை,
நாவடக்கம், நன்னெறி, நல்லுழைப்பும் சேர்ந்து விட்டால்,
நம் நாட்டை உலகமெல்லாம் புகழுமென்று ஆசை
பேராசையா தெரியவில்லை.
tpsmani@hotmail.com
- எங்கே அவள்
- பசுமையாகும் மார்க்சியமும்,புதிய பார்வைகளும்
- இரண்டு தலைகள் கொண்ட மனிதனுடன் ஒரு நேர்முகம்
- இந்த வாரம் இப்படி (விவாதம் இல்லாமல் சட்டங்கள், பெண்கள் இட ஒதுக்கீடு, ஈராக் போர், பாகிஸ்தான் உறவு)
- 5140
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐந்து
- அம்மாச்சி
- ஓ போடு……………
- எதிர்காலத்தில் ஒரு நாள்………….
- குழியும் பறித்ததாம்!
- முதல் காஷ்மீர்ப் போரில் ஆங்கிலேயர் செய்த மோசடி
- கடிதங்கள்
- மாப்பிள்ளைத் தோழன்
- பிரியும் பாதையும் பிரியா மனமும்
- அன்னையர் தின வாழ்த்து
- சாப்பாடு
- மறுபிறவி எடுத்தால்
- இரண்டு கவிதைகள்
- கவித்துளிகள்(ஹைக்கூ)
- ஏன் அமெரிக்க விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியம் ஏழை நாட்டு விவசாயிகளுக்குப் பேரிடியாக இருக்கிறது ?
- கழுதைப் புலிகளும், நத்தைகளும், சில மனிதர்களும்
- தாயின் தனிச்சிறப்பு
- ஹாங்காங்கில் ஸார்ஸ்- எண்ணிக்கைகளுக்கு அப்பால்
- தூண்டில்காரர்கள்
- எதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி (கிருத்திகாவின் ‘தீராத பிரச்சனை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 60)
- சென்னைத்தமிழில் கணினி
- கவிதை பற்றி
- மதமும் தம்மமும் – மதம் குறித்த பெளத்த கோட்பாடு
- பொருந்தாமையின் துக்கம் (பிராந்து – நாஞ்சில் நாடனுடைய சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)
- ஒரு புளிய மரத்தின் கதை – ஒரு காலங்கடந்த பார்வை
- சாக்கியார் முதல் சக்கரியா வரை
- பிற வழிப்பாதைகள் (சு சமுத்திரம்,பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி)
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 3 லின்னஸ் பவுலிங்
- அறிவியல் மேதைகள் டாரிசெல்லி (Torricelli)
- காலச்சுவடு மலர் – ஒரு சுயமதிப்பீடு
- தின கப்ஸா – விட்டுக் கொடுத்தல் சிறப்பிதழ்
- பேராசை
- அமெரிக்க கவிஞர் பில்லி கொலின்ஸ் (Billy Collins)
- உயிரின் சொற்கள்
- காலம்
- இனியொரு வசந்தம்!!
- அன்னை
- இயந்திரப் பயணங்கள்
- பசுமைப் பார்வைகள் :சுற்றுச்சூழல் அரசியல் – 2
- ப சிதம்பரம் நியூஜெர்ஸியில் பேசுகிறார்
- தினகப்ஸா – குடிமகள் சிறப்பிதழ்
- வரங்கள் வீணாவதில்லை…