தீக்குள் விரலை வைத்தால்….
மணவழகன் ஆறுமுகம்
ஆயிரம் கொலுசுகள்
அபிநயம் புரிந்தாலும்,
அரை நொடியில் அறிந்திடுவேன்…
குறைதீர்க்கும் உன் கொலுசின் ஓசைதனை!
உலகத்தார் வளையெல்லாம்
ஒன்றாக ஒலித்தாலும்,
உள்ளத்தால் உணர்ந்திடுவேன்
உன் வளையல் பாசைதனை!
மல்லிகை மலர் தொடுத்து – நீ
மங்கையரோடு சென்றாலும்
மனம்தனிலே அறிந்திடுவேன்…
‘நலம் ‘ கேட்கும் உன் நடையை!
கண் அசைவிலே உயிர் வாழும்
என்ஆசைதனைக் கேட்பாயா!
உடல் மட்டும் காதலல்ல
உயிரிலும் உள்ளததை -நீ
உணராமல் போவாயா!
ஒரு முறை பறிக்கச்சொல்லி – நீ
வரும் வழியில் தவமிருக்கும் – என்
பார்வையதை – உன்
பார்வையால் பறிப்பாயா ?
பாதங்களின் படுதலுக்காய் – உன்
பாதைகளில் காத்திருக்கும் ‘ஏதோவொன்று ‘
‘என் இதயம் ‘ என்பதை – நீ
இன்றாவது அறிவாயா ?
என்,
உயிர் உதிர்ந்து போகுமுன்னே
ஒற்றைச் சொல்லை
ஒருமுறை உதிர்ப்பாயா…
‘உனக்கும் கூட என்னைப் பிடிக்கும் என்று ‘
***********
a_manavazhahan@hotmail.com
- முரண்பாடு
- கனவு நதியும் நிஜ மீன்களும்
- ஆடம் ஸ்ட்ரீட் அழகி
- தேவதை
- 3-D
- அது ஒரு மழை நேர இரவு..!
- நேர்த்திக்கடன்….
- பூர்வீகம் இந்திரலோகம், பேரு தேவகுமாரன்
- சேவியரும் குஜராத்தின் ஆதிவாசிகளும்
- போருக்குப் பின் அமைதி
- நினைத்தேன்…சொல்கிறேன்…தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி…
- கடிதங்கள்
- சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களிடம் கருத்துக்கணிப்புகள்
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 12 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- மானுடம்
- இதுவும் வேறாக
- பகட்டு
- ‘உயிரோடு தமிழ்கூடும் போது ‘
- மழைக்கால நினைவுகள்
- ஒவ்வாமை என்னும் எரிமலை (ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 49)
- ஓர் நாள்
- தீக்குள் விரலை வைத்தால்….
- இலக்கணம் மாறுதோ ?
- பூசை வைக்கும் தொழில் – உரைவெண்பா
- அறிவியல் துளிகள்-15
- கதிரியக்கச் சூழ்நிலையில் மனிதர் கவனமாய் வாழ முடியுமா ?
- நா.முத்துக்குமாரின் ‘குழந்தைகள் நிறைந்த வீடு ‘. – கவிதைப்புத்தக விமர்சனம்
- இந்த மனசு
- கசடதபற இதழ் தொகுப்பு by சா.கந்தசாமி – ஒரு பார்வை
- தப்பித்தலின் கணங்கள் -லியோ டால்ஸ்டாயின் அன்னா காினீனா குறித்து
- நாவலும் வாசிப்பும் – நூலின் முன்னுரை
- வாயு (குறுநாவல் -அத்தியாயம் இரண்டு )
- க்ரிக்கெட் கடவுள்
- காதலர் தினக் கும்மி
- இணைய(ா) நட்பு!
- அணைப்பு