உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
பி.கே சிவகுமார்
உமா மகேஸ்வரி பற்றி:
1971ல் பிறந்த உமா மகேஸ்வரி 1985லிருந்து எழுதி வருகிறார். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றவர். நட்சத்திரங்களின் நடுவே (1990), வெறும் பொழுது (2002), கற்பாவை(2004) ஆகிய கவிதைத் தொகுதிகளும், மரப்பாச்சி (2002), தொலைகடல் (2004) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும், யாரும் யாருடனும் இல்லை (2003) என்ற நாவலும் வெளியாகியுள்ளன. கதா விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, இந்தியா டுடேயின் சிகரம் விருது, ஏலாதி, இலக்கிய சிந்தனை, கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசுகள் பெற்றவர். ஆண்டிப்பட்டியில் வசிக்கிறார்.
கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து:
”உமா மகேஸ்வரியின் கதைகளில் அழகியல் இயல்பாக வெளிப்படுவது இங்கே விசேஷமாய்க் குறிப்பிடத்தக்கது. அழகியலுக்கு எதிரான ஒரு பொதுக்கருத்தை தமிழ் இலக்கியச் சூழல் முன்வைத்து, இலக்கிய நுண் உணர்வினை அரசியலுக்குப் பலி கொடுத்துவிட்ட சூழலில் அர்த்தமுள்ள மறுப்பாக உமா மகேஸ்வரியின் அழகியல் மலர்ந்திருக்கிறது. வலிந்து ஏற்றப்படாத மலர்ச்சி அது. மணற்கன்னியும், ஏகாந்த மரமும் இந்த அழகியலின் எழிலையும் – கன்னி, ஏகாந்தம் என – சோகத்தையும் ஒருசேர மலர்விக்கின்றன. மற்ற கதைகளின் போக்கிற்கு உமா மகேஸ்வரியின் அழகியல் பார்வை இயல்பான வலிமையை அளிக்கிறது.
முன் உதாரணம் இல்லாத தனித்த பார்வையும், தனித்த பாணியும் கொண்ட இந்தக் கதைகளின் தொகுப்பை வெளியிடுவதில் எனி இந்தியன் பதிப்பகம் பெருமை கொள்கிறது.”
உமா மகேஸ்வரியின் என்னுரையிலிருந்து:
”இந்தக் கதைகளைப் படிக்கும்போது நான் எழுதாமல் விட்ட கதைகள் என்னைச் சூழ்ந்து சுழல்கின்றன. எப்போதும் ஏதாவது ஒரு கதையுடன் இருப்பது எவ்வளவு ஆசுவாசமானது!”
பதினான்கு சிறுகதைகள் புத்தகத்தில் உள்ளன.
மொத்த பக்கங்கள் 112. விலை ரூபாய் 65. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், #102, எண் 57,பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ்,தெற்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600 017. தொலைபேசி: +91-44-24329283. புத்தகத்தை இணையத்தில் ஆன்லைனில் வாங்க: http://www.AnyIndian.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ? (கட்டுரை 49)
- பெண்ணியம்
- அநங்கம் இதழ்-கலந்துரையாடல் நிகழ்வு
- பார்வைக் கோணம் – முத்துலிங்கத்தின் வெளி
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திரெண்டு
- ஈரம்
- “நெருப்பு” என்று சொன்னாலும் சுடும்”
- உங்கள் பெயர் என்ன?
- தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 2
- இன்றைய நாட்காட்டியின் கதை
- உடைந்த மாதாவும் உடையாத மாடுகளும்
- செஞ்சுடரில் பூனைக் கண்கள்
- புல்லாங்குழல்
- மறைதல் பொருட்டு வலி
- வேத வனம் விருட்சம் 17 கவிதை
- என் பாவம் கடவுளுக்குப் பிடித்திருக்கிறது
- தேங்காய்களை தின்று அசைகிற கொடி
- வேத வனம் விருட்சம் 18
- கவிதைகள்
- வ. சுப. மாணிக்கனாரும் வள்ளுவச் செயல் நெறியும்
- தமிழர் கருத்துக் கருவூலம் – அன்றைய விடுகதையும் இன்றைய விடுகதையும்
- இன்னபிறவும்….
- பன்னீர்ப்பூக்கள்
- நினைவுகளின் தடத்தில் – (23)
- அம்பைக்கு இயல் விருது2008ம் ஆண்டுக்கான இயல் விருது
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: பாமரனுக்கு…சிந்தனைகள் – பிலேஸ் பஸ்க்கால்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -18 << பூமியின் காயங்கள் ! >>
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்
- பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்
- தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் கையில் எடுத்த சாதியும் வர்ணமும் – 1
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -2 பாகம் -6
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -6)
- பிரபல எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மூன்று புத்தம்புதிய நூல்கள்
- உன்னால் வீண்பழி சுமந்தவனின் அறை
- வார்த்தை ஜனவரி 2009 இதழில்…
- தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ புத்தகம் வெளியீடு
- காலம் சஞ்சிகையின் 31 வது இதழ் வெளிவந்துவிட்டது!
- நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்திய ‘முகம்மது இஸ்மாயில் -இபுராஹிம் பீவி நினைவு ‘ நாவல் -கட்டுரைப் போட்டி
- சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்
- கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 63 வாழ்க்கைப் பயணத்தின் முடிவு !
- தீக்குச்சியாகட்டும் புத்தாண்டு
- கவிதைகள்
- “காட்சிகள் மாறுகின்றன…!”