சம்பந்தமில்லை என்றாலும் 12 : தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

எஸ்ஸார்சி


சம்பந்தமில்லை என்றாலும் தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்
தமிழில் எ. பொன்னுசாமி
வெளியீடு: அ ஆ பதிப்பகம், தி. நகர் சென்னை 17. முதல்பதிப்பு டிசம்பர்-1992. விலை ரூ.25

———————————————————————————————————————-
மதச்சார்பின்மைக்கு உழைப்பதாக வேஷம் போடும் அரசியல் தலைவர்கள் இரகசியமாக ஜாதி முறையை ஆதரிக்கும் வரை கடவுளே வந்தாலும் ஜாதியை ஒழிக்கமுடியாது. தமிழாக்கியவன் -கருத்து.
———————————————————————————————————————-
பிராமணர்களில் ஏன் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லை. . பிராமணர்கள் படித்தவர்கள் தானே தவிர அறிவாளிகள் அல்ல என்பதைப் புரிந்துகொண்டால் இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இருக்காது. படிப்பிற்கும் அறிவிற்கும் உலகளவு வித்தியாசமுண்டு.
பக்கம் 2
——————————————————————————————————————-
நேர்மையும் நாணயமும் கொண்ட அறிவார்ந்த உத்தமகுணத்தை வளர்த்துக்கொள்ள பிராமணன் தவறிவிட்டான்.
பக்கம் 3
———————————————————————————————————————-
தமிழ் அல்லது திராவிடா என்பது தென்னிந்தியாவில் மட்டும் பேசும் ஒரு பாஷை. ஆரியர்கள் வருமுன் இது இந்தியா முழுவதும்
பேசப்பட்ட மொழி. காஷ்மீரத்திலிருந்து குமரி முனை வரை பேசப்பட்ட மொழி இது. உண்மையில் இந்தியா முழுவதும் நாகர்களால்
பேசப்பட்ட மொழியாகும் என்பதே.
பக்கம் 64
———————————————————————————————————————-வட இந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை விட்டு அதற்கு பதில் சமசுகிருதத்தைப்பேசினர். தென்னிந்திய
நாகர்கள் தங்கள் தய்மொழியை வைத்துக்கொண்டு ஆர்ய பாஷையான சமசுகிருதத்தை நிராகரித்துவிட்டார்கள்.
பக்கம் 65
———————————————————————————————————————
நாகர் என்பது தென்னிந்திய மக்களின் இனம் அல்லது கலாசாரப்பெயர்.
திராவிடர் என்பது இவர்களின் மொழிவழிப்பெயர்.
பக்கம் 65
———————————————————————————————————————-
தஞ்சை ஜில்லாவின் பறையன், பள்ளன், சக்கிலியன் ஆகிய ஜாதிகளை சேர்ந்தவர்கள் பிராமணன் தங்கள் உறைவிடம் வந்துபோனால்
நல்லதில்லை என்று நம்பி மிகக்கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
-ஹெமில்வே தஞ்சை கெசட்டில்.
———————————————————————————————————————-
புத்த மதத்தினருக்கு எதிராக பிராமணர்கள் உண்டாக்கிய அவமதிப்பும் வெறுப்புமே தீண்டாமையின் தோற்றத்திற்கான ஆணிவேர்
என்று கூறமுடியும்.
பக்கம் 86
———————————————————————————————————————-
தீண்டாமைக்கும் இறந்த பசுவை உபயோகப்படுத்தியதற்குமான தொடர்பு அத்தனை பெரியதாக அத்தனை நெருங்கியதாக இருப்பதால் தீண்டாமைக்கு இதுவே மூலகாரணம் என்பது மாற்றமுடியாததாகத்தெரிகிறது.
பக்கம் 90
———————————————————————————————————————-
ரிக் வேத ஆரியர்கள் உணவிற்காக பசுவைக்கொன்று உன்டார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
அக்னிக்காக குதிரைகள் காளைகள் எருதுகள் மலட்டுப்பசுக்கள் செம்மறியாடுகள் பலியிடப்பட்டன என்று ரிக்வேதம் கூறுகிறது
(எக்சு 91.14) ரிக்வேதத்தின்படி பசுக்கள் வாளாலும் கோடரியாலும் கொல்லப்பட்டன.( 72.6)
பக்கம் 94
———————————————————————————————————-

விஷ்ணுவிற்கு குள்ளமான எருதும், வளமான கொம்புள்ள காளையை விரித்ராவை அழித்த இந்திரனுக்கும், கறுப்பு பசுவை புஷனுக்கும்,செம்பசுவை ருத்ரனுக்கும் பலியிடவேண்டும். (தைத்திரிய பிராமணா)
பக்கம் 95.
———————————————————————————————————————-
மதம் என்ற பெயரால் பிராமணர்கள் கொன்ற பசுக்களின் மொத்த எண்ணிக்கையைச் சொல்லி மாளாது.
பக்கம் 101
———————————————————————————————————————-
பிராமணன் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்தியது தங்களுக்கு மேல் அந்தசுத்தைப் பெற்றிருந்த புத்தபிட்சுக்களிடமிருந்த அந்த உயர் தானத்தைப்பறிக்கவே.
இழந்த இடத்தைப்பிடிக்க பிராமணர் என்ன செய்ய வேண்டும்? .,, ஒரு படி அதிகம் போய் மாமிசம் உண்பதை விடுவதோடு, மரக்கறி
உண்பவர்களாகவும் மாறத்தான் முடியும் அதைத்தான் செய்தார்கள்
பக்க 128
———————————————————————————————————————-
அசோகர் பசுவதையை ஒரு குற்றமாகக் கருதவில்லை. பக்க 131
———————————————————————————————————————-
பசு புனிதமானதாகி ஊருக்கு வெளியில் இருந்தவர்கள் தொடர்ந்து மாட்டிறைச்சி உண்பதால் தொடக்கூடாதவர்கள் ஆகி ப்பின்
தீண்டப்படாதவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். பக்கம் 138
———————————————————————————————————————-
வேத காலங்களில் தீண்டாமை இல்லை. அசுத்தமானவர்கள் தானிருந்தார்கள். மனு காலத்தில் தீண்டாமை இல்லை. அசுத்தமானது என்பது மட்டுமே இருந்தது. மனுவால் வெறுக்க மட்டுமே செய்யப்பட்ட சண்டாளர்கள் கூட அசுத்தமானவர்களே தவிர தீண்டப்படாதவர்களல்ல. பக்க 159
———————————————————————————————————————-
கி. பி. 200 ல் தீண்டாமை இல்லை. கி. பி. 600 ல் பிறந்தது என்று முடிவு செய்ய முடியும். மனு மாட்டிறைச்சி உண்பதை தடுக்கவில்லை.
குப்த மன்னர்க:ளால் தான் பசுவதை ஒரு குற்றமாக்கருதப்பட்டது.,,,,, தீன்டாமை இங்கு புத்தமதத்தினரும் பிராமணர்களும் தங்களுக்குள் உயர்ந்தது யார் என்ற போட்டி போட்டதால் ஏற்பட்டது.
பக்கம் 168


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

எஸ்ஸார்சி


சம்பந்தமில்லை என்றாலும்

திராவிடத்தால் வீழ்ந்தோம்
ஆசிரியர்: குணா, வெளியீடு: தமிழக ஆய்வரண் பெங்களூர் நவம்-திசம்பர்-1994 விலை உருபா 10.00 பக்கம்-82

———————————————————————————————————————-
ஞா. தேவநேயப்பாவாணர் நினைவாக,,,,,,,,
———————————————————————————————————————-
இந்திக்காரன் இந்திக்காரனாக வாழ்கிறான்,கன்னடன் கன்னடனாக வாழ்கிறான் தெலுங்கன் தெலுங்கனாக வாழ்கிறான், மலையாளி
மலையாளியாக வாழ்கிறான், நாம் மட்டும் திராவிடனாக வாழவேண்டுமா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.- தமிழக ஆய்வரண்
———————————————————————————————————————-
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியிடமிருந்து 1994 சூன் 25-26 ஆம் பக்கல்களில் குடந்தையில் நடத்தவிருந்த ஒரு கருத்தரங்கில் திராவிட மாயை என்னும் தலைப்பில் கருத்துரையாற்ற ஒரு அழைப்பு வந்தது.,,,,,,,,,,, அக்கருத்தரங்கிற்காக நானெழுதிய கட்டுரையே இது. முன்னுரையில்
———————————————————————————————————————-
ஆரியக்கொள்கையின் மறுபக்கமே திராவிடக்கொள்கை. ஆரியமும் திராவிடமும் சியாமிய ஒட்டுப்பிறவிகள். ஆரியக்கொள்கை திராவிடக்கொள்கை ஆகிய இரண்டுமே இனவெறிக்கொள்கைகளாகும். பக்கம் 1
———————————————————————————————————————-
எந்த ஒரு ஆரியப்படைஎடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்ததுண்டா? பக்கம் 2
———————————————————————————————————————-
வள்ளுவமும் அதன் எதிர்மறையாகத்தோன்றிய பார்ப்பனியமும் தெற்கில் தோன்றியவை. தெற்கில் தோன்றி வடக்கு நோக்கி ப்பரக்க நெடுக்க பயணம் போன சாதிவெறிக்கொள்கையே பார்ப்பனியம் ஆனால் கலப்பினக்கொள்கையாகிய ஆரியமெனும் நிறவெறிக்கொள்கையோ வடக்கில் தோன்றித் தெற்கே வந்தது.
பக்கம் 4
——————————————————————————————————————
பார்ப்பனியக்கொடுநெறிகளை ச்சட்ட வடிவமாக்கிய மனு நூல் ஆரியரால் ஆக்கப்பட்டதன்று. சாளுக்கியர் என்னும் கன்னடப்பேரரசாளர்
ஆக்கிய நூலே. ( கி.பி அய்ந்தாம் நூற்ராண்டு இரண்டாம் புலிகேசி ஆளுகையின் போது)
பக்கம் 5
———————————————————————————————————————-
தமிழும் தமிழரினமும் ஆரியப்படைஎடுப்பால் கெட்டனவா,திராவிடராம் கன்னடர் தெலுங்கர் மராத்தியர் ஆகியோரால் கெட்டனவா?
பக்கம் 7
———————————————————————————————————————-
திராவிடராம், கன்னடரும் தெலுங்கரும் , மலையாளிகளும் தமிழகத்தில் ஊடுருவி மண்பறிப்பு வடிவில் மடிபறிப்பு ச்செய்ததுடன் தமிழகத்தின்
எல்லையோரங்களிலுள்ள பச்சைத்தமிழ்ப்பகுதிகளையெல்லாம் தத்தம் குடியேற்றங்களாக ஆக்கிக்கொண்டனர்.
பக்கம் 8
———————————————————————————————————————-
பெரியாரின் செயற்பாடுகளையும் திராவிட இயக்கத்தின் செயற்பாடுகளின் பின்னணியில் மார்வாடிகள் முழுமையாக வளர்ந்து தமிழகப்பொருளியலை தங்கள் முழுக்கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதையும் பார்க்கும்போது…,,,,,,,,
பக்கம் 14
———————————————————————————————————————-
தமிழ் பார்ர்ப்பனரெல்லாம் தங்களை ஆரியர் என்று நம்பிக்கெட்டனர். வழியும் தெரியாது வரலாறும் தெரியாது, தமிழரினத்திடமிருந்து
அயன்மையாகி வேரற்று நிற்கின்றனர். அத்துடன் பெரியாரின் திராவிடக்கொள்கையும் பார்ப்பனரெதிர்ப்பும் சேர்ந்து அவர்களை
மீளாமுடியாப்படுகுழியில் தள்ளின. பக்கம் 21
———————————————————————————————————————-
தமிழ்ப்பார்ப்பனரான இராசாசிக்குத் தமிழகத்தின் எல்லைகளை மீட்க வேண்டுமென்று இருந்த அக்கரை கூடத் திராவிட இயக்கத்தினருக்குதை இருந்ததில்லை. சென்னை மாநகரைத் தெலுங்கர்கள் பறித்துக்கொண்டு போகாமல் அரவமின்றி காத்த பெருமை
எல்லாம் இராசகோபாச்சாரியாருக்கே போய்ச்சேரும். பக்கம் 42
———————————————————————————————————————-
தேவிகுளம் பீர்மேடு தமிழருடையதென வலியுறுத்தும் முகமாக 20/02/1956 அன்று தமிழகத்தில் நடந்த வேலை நிறுத்தத்தில் தமிழரசுக்கழகம்
தமிழகப்பொதுவுடைமைக்கட்சி,தமிழக சொசலிசக்கட்சி ஆகியன மட்டுமே பங்கெடுத்தன.
பக்கம் 48
———————————————————————————————————————-
அத்துணைத்துரைகளுமே இன்று மார்வாடிகள்,குசராத்திகள்,பார்சிகள், சிந்திகள் போன்ற வடவரின் முற்றுடைமை ஆகிவிட்டன. அதற்கு
அடுத்த நிலையில் இருப்பவர்கள் தெலுங்கர்கள் கன்னடர்கள் முதலானோர்.
பக்கம் 57
———————————————————————————————————————-
பேதைத்தமிழனோ எல்லோரும் நம்மவரே எனப்பட்டாங்கு படிப்பவன். எல்லோருக்கும் நல்லவனாக இருந்து கெட்டவன்.
தெலுங்கன் தன்னுடைய மனக்கதவை அடைத்துக்கொண்ட பின்னர், கன்னடனும் அதேபோல் தன் உள்ளக்கதவை இழுத்து மூடிக்கொண்டபின்னர் தமிழன் மட்டுமே தன் திருவுளவாயை அகல விரியத்திறந்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய பேதமை!
பக்கம் 72
———————————————————————————————————————-
தமிழகம் மட்டும் தமிழ் நாடாக இல்லை. பக்கம் 76


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும் – திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

எஸ்ஸார்சி



திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்.
வெளியீடு .திருநெல்வேலிசைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் ஆள்வார்பேட்டை சென்னை 18 முதற்பதிப்பு சனவரி 1944
விலை -சொல்லப்படவில்லை. பக்கம்-115

———————————————————————————————————————-
ஆராய்ச்சியாளரோவெனின் ஔரிருவர் நீங்கலாக பிறரெல்லாம் பிறநாட்டுச்செய்திகளாயின் மறைந்த உன்மையை வெளிப்படுத்துவதும்
தமிழ் நாட்டுச்செய்திகளாயின் வெளிப்பட்ட உண்மையை மறைத்துவைப்பதுமே தொழிலாகக்கொண்டுள்ளனர்.
முகவுரையில்
———————————————————————————————————————-
பழந்தமிழர் தம்முன்னோரைத்தென்புலத்தார் என்றமையாலும் தெற்கே அமிழ்ந்துபோன குமரி நாடே தமிழர் தம் தொல்லகம் என்பதுணரப்படும். பக்கம் 7
———————————————————————————————————————-
தமிழம்- த்ரமிளம்-த்ரமிடம்-த்ரவிடம்-திரவிடம்-திராவிடம் எனத்திரிந்தது.
தலைக்கழக்காலத்தில் தமிழ் செந்தமிழ்,கொடுந்தமிழ் என இரண்டாகவகுக்கப்பட்டது. .செந்தமிழ் நாட்டைச்சூழ்ந்த பன்னிரு நாடுகள்
கொடுந்தமிழ் நாடுகளாயிருந்தன. பக்கம் 8
———————————————————————————————————————-
வைத்தூற்றி (funnel) என்னும் மலையாளச்சொல்லும், கெம்பு என்னும் கன்னடச்சொல்லும் எச்சரிக்கை என்னும் கன்னட தெலுங்குச்சொல்லும் தமிழுக்கு இன்றியமையாதவை. பக்கம் 21
———————————————————————————————————————-
இழிந்தோன் ஈ என்றும், ஒத்தோன் தா என்றும் உயர்ந்தோன் கொடு என்றும் கூற விதித்தனர் முன்னோர்.
பக்கம் 22
———————————————————————————————————————-
சேரலன் -சேரலம்
கேரளன்-கேரளம் பக்கம்29
———————————————————————————————————————-
அக்ரஹாரம்- பார்ப்பனச்சேரி பக்கம்-53
———————————————————————————————————————-
கன்னடம் என்பது கருநடம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. கருநடம் அல்லது கருநாடகம் என்னும் சொல்லுக்கு இருபொருள்கள் கூறப்படுகின்றன. 1. கரிய நாடு 2. கருங்கூத்து என்பன.
கருநாடகம் என்பது பழமையான அநாகரீகத்தைக்குறிக்கலாம். பக்கம் 54
———————————————————————————————————————-‘‘கொடுங்கருநாடர் ,கொடுங்கரு நாடரும்’’ சிலம்பு,25/156,106.
பம்பாய் மாகாணமும், ஐதராபாத் சீமையும் சென்னை மாகாணமும் கூடுகின்ற இடத்துக் கொடுந்தமிழ் வழக்கு வடசொற்கலப்பால் 6 ஆம் நூற்றாண்டிற்குப் பின் கன்னடமென வேறு மொழியாகப்பிரிந்து பின்பு சிறிது சிறிதாகத் தெற்கே தள்ளி வந்து தற்போது நீலமலை வரை பரவியுள்ளதென்க. பக்கம் 59
———————————————————————————————————————-
பண்டைத்தெலுங்கு நாட்டின் ஒருபாகம் கலிங்கம் என்னும் பொதுப்பெயர் கொண்ட முப்பகுதியாயிருந்தது. அதனால் திரிகலிங்கம்,
-திரிலிங்கம்-தெலுங்கம்-தெலுங்கு என மருவிற்று பக்கம் 81
———————————————————————————————————————-
15 ஆம் நூற்றாண்டிற்குப்பின் பாண்டியர் வலி குன்றியதால் தெலுங்கர் பலர் தமிழ் நாட்டில் குடியேறிவிட்டதாலும் பாண்டி நாட்டில் பல தெலுங்க வேளிரும் குருநில மன்னரும் தோன்றினர். அங்ஙனம்தோன்றிய வேள் அகங்களுள் எட்டயபுரமும்,பாஞ்சாலங்குறிச்சியும் தலைமையானவை. பக்கம் 86
———————————————————————————————————————-
துளுவ நாட்டிலிருந்து பல நூற்றாண்டிற்கு முன்னரே வேளாளர் பலர் தொண்டைமண்டலத்திற்கு குடிவந்தனர் அவர் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர். அவர் மொழி தொன்று தொட்டுத்தமிழே பக்கம்-103
——————————————————————————————————————–
உப்பு தீந்தினாயெ நீரு பர்வெ- உப்புத்தின்றவன் நீர் பருகுகிறான் (துளு-தமிழ்)
மல்ல புதெ மெல்ல ஜாவொடு- பெரிய பொதியை மெல்ல இறக்கு. ,,
பாயிடு மக மக, பஞ்சிடு பக பக- வாயால் மகன் மகன், வயிற்றில் பகை பகை.
பக்கம்-112
———————————————————————————————————————-

சில சூழ்ச்சிப்பொறிகளின் பழைய அமைப்புக்கள் இன்றும் கீழ் நாட்டில்தான் உள்ளன. பக்கம்-115


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

எஸ்ஸார்சி



சமூகநீதியின் தொடக்க வரலாறு. வெளியீடு: அன்னை நாகம்மை பதிப்பகம் 2/141 கந்தசாமிநகர் பாலவாக்கம் சென்னை-41
டிசம்பர்-1994, விலை ரூ 12

——————————————————————————————————————
தகுதியும் திறமையும் உள்ள மேலாதிக்கசாதியாரின் சதியினால்தான் நாடு பின்தங்கியுள்ள தென்பதை நாட்டுமக்கள் உணர்ந்துவிட்டார்கள்,
முன்னுரையில்
———————————————————————————————————————-நான்கு வேதங்களையும் நுட்பமாக ஆராய்ந்து சிந்து வெளித்தமிழகத்தின் சீர்மையை விளக்கி எழுதியவரும், குத்தூசி குருசாமி வாழ்க்கை வரலாற்றுறாசிரியரும், அடிநாள் தொட்டு திராவிட இயக்கத்தொடர்புடையவரும் ஆகிய தோழர் குருவிக்கரும்பை வேலு,,,,,,,,,,,அவர்களுக்கு
என் மனம் நிறைந்த நன்றி நன்றியில்
———————————————————————————————————————-
இழிவு கொண்ட மனிதர் என்ப
திந்தியாவில் இல்லையே,,,,,,,,,,,,
வாழிகல்வி செல்வம் எய்தி
மனமகிழ்ந்து கூடியே
மனிதர்யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே,,,,,,,,
பாரதியார் எந்த உணர்வோடு பாடினார். ,,,,,,,,விடுதலைப்போராட்டத்தைத்தலைமை ஏற்று நடத்தியவர்கள்
இந்தத்தூய்மையான மனத்தோடு இருந்தார்களா? பக்கம் 12
———————————————————————————————————————-
பெரியார் மட்டும் உறுதிபடைத்தவராக இல்லாதிருந்தால் நாம் தமிழ்மக்கள் எந்த அளவுக்குப்பின்தங்கியிருந்திருப்போம் என்று சொல்லவேமுடியாது,,,,,,,,,சூது சூழ்ச்சி வஞ்சகம் பொறாமை ஆகியவற்றை எதிர்த்துப் பெரியார் தொடங்கிய பெரும் போராட்டம்தான் இந்த குருகுலப்போராட்டம். பக்கம் 13
———————————————————————————————————————-
ஆங்கிலம் படித்தவர்கள் மேலானவர்கள் என்ற எண்ணம் இன்னும் ஒழியவில்லை. ஆங்கில மொழியின் மீதுள்ள மோகம் இன்னும் தணியவில்லை,,,,,,,,,,,
காமராசர் பெரியார் போன்ற ஒப்பற்ற தலைவர்கள் ஆங்கிலம் இல்லாமலே பெருஞ்சாதனைகளை நடத்திக்காட்டமுடியும் என்று மெய்ப்பித்துக்காட்டிய பிறகும் இந்த அதிகார வர்க்கம் திருந்தவில்லை என்பது வேதனைக்குரியது. பக்கம் 19
———————————————————————————————————————-
தமிழ் நாட்டிலே காங்கிரசுக்கட்சியின் தூண்களாகவும் மக்கள் போற்றும் தலைவர்களாகவும் விளங்கியவர்கள் மூன்று மணிகள்-ஒப்பற்ற
பொன்மணிகள்.
சேலம் வரதராசுலு நாயுடு
திருவாரூர் கலியாண சுந்தர முதலியார்
ஈரோட்டு இராமசாமி நாயக்கர்
இந்த மூன்று பேருடைய அயராத உழைப்பால்தான் தமிழ் நாட்டில் நாட்டுணர்வு வளர்ந்தது. பக்கம் 24
———————————————————————————————————————
வரகனேரி ,,,, வெங்கடேச ஐயரின் மகன் தான் சுப்பிரமணிய ஐயர்.,,,,,,மேற்படிப்புக்கு இலண்டன் சென்றார்.
திருக்குறளை ஐயம் திரிபறக்கற்றவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் கம்பராமாயண ஆராய்ச்சி
நூல் எழுதியுள்ளார்.
பாரத கலாச்சாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குருகுலம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்.
பக்கம் 29
———————————————————————————————————————-
ஔமாந்தூர் இராமசாமி ரெட்டியார் ஒரு நல்ல தலைவர்.,,,,,,,,,1948 ஆம் ஆன்டு வாக்கில் தமிழக முதலமைச்சராக இருந்தார்..
ஔமாந்தூரார் பையன் அப்பள்ளியில் பயின்றான்.
பிராமண பசங்கன்னா ஒசத்தியா நயினா? ஒருநாள் தண்ணீர் தாகமெடுத்தது. வழியில் இருந்த பானையில் மொண்டு குடித்தேன்
நான் தொட்டதும் தீட்டாகிப்போச்சாம். அந்த வழியாக வந்த பிரமச்சாரி வாத்தியார் பாதித்தண்ணீர் குடிக்கும்போதே என் கன்னத்தில் ஔங்கி
அறைந்தார். சூத்திரப்பய உனக்கு என்ன கொழுப்பு என்று பொரிந்து தள்ளினார் தீட்டுன்னா என்ன நயினா? என்று கேட்டான் பையன்.
பக்கம்43
———————————————————————————————————————-
‘நீ ஈரோட்டுக்குப்போ பள்ளிக்கூடத்தில் நடந்த அட்டூழியங்களை ராமசாமி நாயக்கர் நயினாவிடம் செப்பு’ ரெட்டியார் அனுப்பிவைத்தார்.
தனித்தனிச்சாப்பாடு-தனித்தனிதண்ணீர்பானை-சாதிவேற்றுமை- உயர்வு தாழ்வு பெரியாருக்கு சினம் பொங்கியது.
பக்கம் 45
———————————————————————————————————————-
அது ஒரு தேசிய நிறுவனம் என்ற நிலையில்தான் தமிழ் நாடு காங்கிரசு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்தது.
பக்கம் 50
———————————————————————————————————————-
காங்கிரசு செயற்குழு திருச்சியில் 1925 ஏப்ரல் 27 ம் நாள் கூடியது. பக்கம் 49
———————————————————————————————————————-
மகாத்மா காந்தியடிகள் குருகுலம் குறித்துப்பேசும்போது, ‘நடந்தது சரி . இனிமேல் சமபந்தி நடத்துவதாக வாக்குக்கொடுங்கள். நான் நாயுடுவிடமும் நாயக்கரிடமும் பேசி இந்தப்பிரச்சினையை முடிவுக்குக்கொண்டு வருகிறேன் ‘ என்று கூறினார்.
அண்ணல் காந்திடிகளின் சொல்லையும் ஐயர் ஏற்றுக்கொள்ளவில்லை. பக்கம் 58
———————————————————————————————————————-
மூதறிஞர் ராஜாஜி
கே. சந்தானம்
டாக்டர். சந்தானம்
இவர்களெல்லாம் வ வே சு ஐயர் செய்த ஒரு மோசமான செயலை ஆதரிக்கிறார்கள் என்றால் அதன் பின்னணி என்ன?
பக்கம் 63
———————————————————————————————————————-
இந்தியா முழுவதும் யாரைத்தங்கள் விடிவு காலத்தை உருவாக்கத் தோன்றிய கதிரவன் என்று எதிர்பார்த்தார்களோ அந்தக்கதிரவன்
பார்ப்பனீய மூடுபனியால் மறைக்கப்பட்ட கதிரவனாகி விட்டார்.
அப்படிப்பட்டவர்கள் வலையில் காந்தியடிகள் சிக்கிக்கொண்டார். பக்கம் 71
———————————————————————————————————————-
காந்தி அடிகள் தடம் புரண்ட வரலாறுகள் ஒன்றா இரண்டா ? பக்கம் 72
———————————————————————————————————————-
ஒரு தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடனைத் தோள்மேல் கைபோட்டு அக்கிரகாரத்துக்குள் அழைத்து வந்த பாரதியைச் சாதியிலிருந்து விலக்கி
வைத்த அக்கிரகார வாசிகள் எப்படி உயர்வு கொடுப்பார்கள் என்று காந்தியடிகளால் கருத முடிந்தது. பக்கம் 78
———————————————————————————————————————-

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

எஸ்ஸார்சி



திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்
தாமசு டிரவுட்மன் -வெளியீடு; சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் -காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ.150 பக்கம் 340 மே 2007 தமிழில்-இராம.சுந்தரம்


எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்ப தம்மை அழைத்துக்கொண்ட பிரான்சிசு ஒயிட் எல்லிசு என்ற தமிழறிஞரின் பெயர் தமிழுலகம் பரவலாக அறிந்திருந்தது,,,,,,,,,,தம் பொறுப்பிலிருந்த அரசாங்கத்தங்கச்சாலையில் திருவள்ளுவரின் உருவம் பொறித்த இரண்டு வராகன் தங்க நாணயங்களை வார்த்த பெருமைக்குரியவர்.,,,,,,,,,,
1856 இல் கால்டுவெல் எழுதி வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற அரிய ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு
முன்னரே,1816 இல் திராவிட மொழிக்குடும்பம் என்ற புலமைக்கருத்தாக்கத்தைக் கண்டுணர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் எல்லிசு.
ஆ.ரா.வெங்கடாசலபதி – புகுமுன்
———————————————————————————————————————-
இந்நூல் ஒரு முற்றுப்புள்ளி அல்ல. ஒரு தொடக்கம், மற்றவர்களுக்கு ஒரு தூண்டுகோல்.
-தாமசு டிரவுட்மன்
———————————————————————————————————————-
ச்டூவர்ட் என்ற பேர் பெற்ற மெய்யியலாளர் 1827இல் வெளியிட்ட தம் நூலொன்றில் சமசுகிருதம் கிரேக்கத்தை ஒத்துள்ளது. ஏனெனில் அது
கிரேக்கமாகவே இருந்தது. அதை இந்தியாவிற்குள் நுழைந்த அலெக்சாண்டர்களின் வீரர்களிடமிருந்து ஒட்டுக்கேட்ட சூதுவாது நிறைந்த
பிராமணர்கள் தங்களது புரோகிதத்தொழிலுக்கு மக்களை அடிமைப்படுத்தும் நோக்கில் அதைத்தழுவி புரியாத ஒருவகை இலத்தீனைப்போன்றதொரு மொழியை உருவாக்கிக்கொன்டனர் என்றார்.
இக்கருத்தை முன்வைக்க மெய்னர்சின் நூலும், ஜி. எசு.பெயரின் நூலும் வழி காட்டின.
-பக்கம் 57
———————————————————————————————————————-
ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளும் கிளை மொழிகளும் சிறிதும் பெரிதுமாக எழுதப்பட்ட படைப்புக்களைக் கொண்டுள்ளன. இவற்றை
எல்லாம் ஐரோப்பியர்கள் ஆராய்ந்து படிக்காவிட்டால் அவை குறிக்கும் மக்களைப்பற்றியும் தேசங்களைப்பற்றியும் எதுவும் அறிய முடியாமல் போய்விடும். ஆங்கிலேயர்களின் இலக்கியச்சொத்து இந்தியா.
லெய்டன்- –பக்கம் 76
———————————————————————————————————————-
சட்டம் இந்திய மண்ணுக்கே உரியதாக இருந்தது,,, வானியல் சோதிடம், கணிதம் என்பதில் இந்தியச்சாதனை உலக மக்களின் அன்றாட வாழ்வில் முத்திரை பதித்தது. இன்று வழக்கிலுள்ள அரபு எண்கள் உண்மையில் இந்தியாவின் கொடையாகும். சுழி அதைப்பயன்படுத்தும் இயற்கணிதம் மற்றும் முக்கோண கணிதம் ஆகியவற்றுக்கும் இந்தியாவே தாயகம். இவை ஐரோப்பாவிற்கு அரேபியா வழியாகச்சென்று மத்திய காலத்தில் ரோமன் எண்களாக மாறின. பக்கம் -82
———————————————————————————————————————-
பாணினி குறித்து ஆயிரத்துக்கும் குறையாத படைப்புக்கள் ஐரோப்பிய மொழிகளில் உள்ளதைக்காணும்போது பாணினி தொடர்ந்து படிக்கப்பட்டு வருவதை அறிய முடிகிறது. பக்கம்-92
———————————————————————————————————————-
அப்போதுதான் சென்னையில் அறிமுகமாகி இருந்த வைசூரி (பெரியம்மை) நோய்க்கான மருந்து குறித்து- எல்லிசு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘ தேவதையும் தன்வந்திரியும் உரையாடும் தன்மையில் அமைந்துள்ள இது. படிக்க ஆர்வமூட்டுவது.
இந்த ஊசி மருந்து நோயால் பாதிக்கப்பட்ட பசுவின் முலைக்காம்பிலிருந்து வந்தது என்றும் அது பஞ்சகவ்யத்தை அடுத்த ஆறாவது என்றும் மனித குலத்தை இந்த அச்சம் தரும்நோயினின்று காக்கப்பசு தந்தது என்றும் கூறுகிறது. பக்கம் 142
———————————————————————————————————————
சென்னை அரசாங்கம் 15/12/1797 இல் இந்திய மொழிகளில் நற்புலமை பெறும் அரசுப்பணியாளர்களுக்கு 1000 வராகன் பரிசளிக்கப்படும்
என அறிவித்தது.. ,,,,,,,,, ஒரு எழுத்தரின் மாத ஊதியத்தை விட இருபது மடங்கு இது அதிகமானது. பக்கம் 150
———————————————————————————————————————-
மாமடி வெங்கையா ( 1764-1834) மண்பாண்டம் மற்றும் பீங்கான் தொழிலில் ஈடுபட்ட கோமுட்டி வணிகர். வனிகத்திலிருந்து ஒதுங்கிய பின்
தெலுங்கு சமசுகிருத அகராதிகளை த்தொகுக்கும் பணியில் பதினான்கு ஆன்டுகள் ஈடுபட்டு அவற்றை நிறைவு செய்தார். இவரது
அறிவாற்றலைக்கண்டு பொறுக்காத பிராமணர்கள் இரண்டு முறை இவரது வீட்டை இடித்துத்தங்கள் எதிர்ப்பைத்தெரிவித்தனர்.
பக்கம் 180
———————————————————————————————————————-
திராவிடச்சான்று குறித்த எல்லிசின் கருத்து ஆகாயத்திலிருந்து குதித்தன்று என்பதும் புனித ஜார்ஜ்கோட்டைக் கல்லூரி அறிஞர் குழுவின் உதவியால் உருவானது என்பதும் தெளிவு. பக்கம் 206
———————————————————————————————————————-
திராவிடச்சான்று குறித்த ஆய்வில் எல்லிசுடன் ஈடுபட்ட சங்கரய்யா, பட்டாபிராம சாசுதிரி ஆகியோர் தெலுங்கு பிராமணர்களாவர் என்பது மனங்கொள்ளத்தக்கது. பக்கம் 224
———————————————————————————————————————-
காம்பெல் ,,,,,,,, இலக்கியத்தை மீட்டெடுத்தல் வளப்படுத்துதல் இந்தியர்களுக்கு அதற்கான ஊக்கம் தருதல் ,பிரிட்டிஷ் ஆட்சிப்பகுதியில் வாழும் மக்களுக்கு அறிவியல் கல்வி புகட்டுதல் அதைமேம்படுத்துதல் முதலியவற்றுக்கு ஆளுனர் ஆண்டுதோறும் ஒரு லட்சரூபாய் செலவழிக்க அனுமதிக்கும் நாடாளுமன்ற விதியையும் ஒரு குறிப்பில் எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்தசட்டம் 1830 இல் சார்லசு டிரெவெலின் மெக்காலே ஆகிய ஆங்கில சமயவாதிகள் எல்லிசு மறைவிற்குப்பின் கீழ்த்திசையியலார்
மீது தொடுத்த கல்விப்போராட்டத்துக்கான களமாக அமைந்தது. பக்கம் 236
———————————————————————————————————————-
சிதம்பர பண்டாரம் ( சிதம்பர வாத்தியார் பண்டார சாதியைச்சேர்ந்தவர்) மானவ தர்ம சாசுதிரம் என்கிற நூலை த்தமிழில் மொழிபெயர்த்தவர். அதற்காக ஔராயிரம் வராகனைப்பரிசாக பெற்றவர்,,,,,,அவர் மொழிபெயர்த்தது மனுவின் நீதி நூல் அல்ல.
பக்கம் 246
———————————————————————————————————————-
பிராகிருதம் சமசுகிருதத்தின் பிறப்பிடம், பிராகிருதம் சமசுகிருதத்தில் இருந்தே பிறந்தது. ,,,, இன்றும் விவாதப்பொருளாகவே இருக்கிற இரு வேறு கருத்துக்கள்,,,,, பக்கம் 263
———————————————————————————————————————-
இந்தியா ஒருகோட்பாட்டைக்கொண்டிருந்தது. ஆனால் அது இறந்துவிட்டது. அதற்கான காரணம் கடந்த கால இந்தியச் சிந்தனையாளர்கள் இன்றும் பொருத்தமானவர்களே என்பதை ஆழ்ந்த கவனத்துடன் விளங்கிக்கொள்ளாமல் போனதுதான்.
,,,,,,,, அவர்கள் ,, வரலாற்று நாயகர்களாகவும் ,வணக்கத்துக்குரியவர்களாக மட்டுமே நின்றுவிட்டனர். பக்கம் 271


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும்- சைவாலயங்களில் சமசுகிருத மந்திரங்களே வேண்டும் (ஆ. சக்கரமூர்த்திப்பிள்ளை)

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

எஸ்ஸார்சி


சைவாலயங்களில் சமசுகிருத மந்திரங்களே வேண்டும்.
ஆ. சக்கரமூர்த்திப்பிள்ளை, வெளியீடு சைவ சித்தாந்த சபை, சங்கரநயினார்கோவில், ஆகசுடு 1954.
விலை சொல்லப்படவில்லை.

————————————————————————————————–
இக்காலத்தில் தமிழ் நாட்டின் ஆலயங்களில் தமிழிலே அர்ச்சனை வேண்டுமென்று ஒரு சிலரால் பிரசிங்கிக்கப்பட்டு வருகிறது,,,,,
அது நாத்திகத்துக்கே சாதகம் சைவ உலகுக்கு பாதகமே,,,,,,, – முன்னுரையில்.
———————————————————————————————————————-
தமிழ்ச்சைவருக்குத் தமிழ் தாய்மொழியானால் சமசுகிருதம் தந்தை மொழியே. தமிழ் தமிழகத்துக்குரியதாயின் அவ்வகம் உள்பட அகில
புவனங்களுக்குமே சமசுகிருதம் சமமாக உரியது. ,,,,,,,மொழி பிரக்ஞை வேறு நூற் பிரக்ஞை வேறு. அந்நூல் கருவியாதலும் அவற்றின்
ஆசிரியன்மாரது தரத்தளவே என்க. – பதிப்புரையில்.
———————————————————————————————————————-
தமிழர்ச்சனையைப்புகுத்தினால் பிராமணர் வாழ்வு மங்கும் என்ற எண்னத்தால் சைவாலயங்களில் தமிழர்ச்சனையை ப்புகுத்த ஆனையிட்டுள்லனர். மற்றபடி இவர்களுக்கு சைவமும் தெரியாது சாத்திரமும் புரியாது. .சைவ சமயம் பிராமணர்களுடையது
என்று எப்புத்திசாலி சொன்னான்? சமசுகிருதம் பிராமணர்களுக்கே சொந்தமென்று எவ்வாராய்ச்சியாளன் கண்டான்?
இரண்டாம் பதிப்புரையில்.
———————————————————————————————————————-

ஆரியரும் திராவிடரும் ,,,, இந்தியாவுக்கு ,,,,,,குறைந்தபட்சம் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்,,,,வந்தவர்கள். இமயமலையிலிருந்து
குமரிமுனை வரையில் பரவி,, ஒருவரோடொருவர் பிரிக்கமுடியாதபடி கலந்து,,,,,,சமயகோட்பாடுகளும் சமூக வழக்க பழக்கங்களும் கலைகளும் பண்பாடுகளும் பிரித்துக்காட்டமுடியாதபடி கலந்து போயிருக்கின்றன. – பக்கம்-1
———————————————————————————————————————-
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்கிறது திருமுறை. –பக்கம் 2
———————————————————————————————————————
தமிழ் ஒரு மொழி.. சைவம் ஒரு சமயம். மொழி வேறு சமயம் வேறு. பக்கம் 6
———————————————————————————————————————
தமிழ் மந்திர மென்ற மாத்திரத்தில்தெலுங்கு முதலிய பிற மொழிகளிலும் மந்திரந்தோன்றுவதற்கு இடங்கொடுக்கப்பட்டதாகும். அதனால் தமிழ் மந்திரம்,தெலுங்கு மந்திரம் ஹிந்தி மந்திரம் , குஜராத்தி மந்திரம், என மொழிப்பற்றிய வழக்குகளும் முளைக்கும். அது ஆரிய மந்திரம் திராவிட மந்திரம் நீ£க்ரோ மந்திரம் சீன மந்திரம் இலங்கை மந்திரம் என நிலம் பற்றிய வழக்குகளையும் பிறவற்றையும் தோன்றச்செய்யும்.
பக்கம் 10
———————————————————————————————————————-
சம்பந்தரை வணங்கி முக்தி பெற்றார் பலர். அப்படியே மாணிக்கவாசகரையும் வணங்கி முக்திபெறலாம்.. அவர் திருவாசகத்தை அருளினார்.
அதை ஆங்கிலத்தில் பெயர்த்தார் போப் என்பவர். இலண்டனில் ஒரு சிவாலயம் இருப்பதாககக்கொள்க.. அதில் அப்பெயர்ப்பைத்தானே
ஔத வேண்டும்.,,,,,, அங்கு போப் உருவம் வணங்கப்படலாமா? பக்கம் 12
———————————————————————————————————————
தமிழகத்தில் சைவாலயங்கள் முந்தித்தோன்றின. திருமுறைகள் பிந்தியவை.. அம்முந்திய காலத்தில் அவ்வாலயங்களில் எந்தத் தமிழ்
முறைகள் மந்திரங்களாக ஒதப்பட்டன ? பக்கம் 16
———————————————————————————————————————-
அத்தனை கோடிப்பேரும் பயபக்தியுடன் ஒதியும் மதித்தும் வருவது அரபு மொழிக் குரானே. உலகெங்கு முள்ள கத்தோலிக்கரும் பல மொழிகளுக்குரியர்தான்.. இலத்தீன்தானே அச்சமயத்துப் பாஷை பக்கம் 28
———————————————————————————————————————-
இராமன் வடநாட்டான். அவன் பிரதிட்டித்த சிவலிங்கமே இராமநாதர். நளனும் வடநாட்டானே அவன் திருநள்ளாற்றுச் சிவாலயத்தைக்கண்டான்,,,,,,,,,, விநாயகர் வடநாட்டுத்தெய்வமாம். அதனை மெய்யெனக்கொண்டால் அவரும் வடவரே.
,, கந்த புராணக் கந்தரும் வடநாட்டவராம். இராமன் முதலியோர் தமிழரல்லர். தமிழுமறியார். ஆயினுமென்?
அவரெல்லாம் சைவ சமயத்தினர். பக்கம் 36
———————————————————————————————————————-சமசுகிருதத்துக்கென ஒரு மாகாணமோ இனமோ குலமோ இல்லை. பக்க 38
———————————————————————————————————————-
இப்போது ஜன கண மன , ஜெண்டா ஊஞ்சா, என்பன தேசிய கீதங்கள். . அவையெல்லாந்தமிழுமல்ல. . அவற்றுக்குப் பொருள் தெரியாத தமிழர் பலராவர். அவர் அவற்றைத் தமிழிற் பெயர்த்தா முழங்கினர். பக்கம் 40
———————————————————————————————————————-சைவரே தமிழைக்கண்டார். தமிழரால் சைவத்தக்காண முடியாது. ,,,,,,,,,, பக்கம் 46
———————————————————————————————————————-
தமிழ் மந்திரங்களென்பது என்றுமில்லை. அவை நவீனரின் கற்பனையே.,,,,, . அவற்றை த் தமிழகச்சைவாலயங்களிலே ஒதவே கூடது.
அவ்வோதுகை சைவசமயத்துக்கு முற்றிலும் புறம்பானது.. அங்கு வேதாகமோக்த சமசுகிருத மந்திரங்களே ஒதத்தகுவன.,,,,,,,,,,,
சைவாலயங்கள் பரார்த்த பூசா நிலையங்கள். அங்குள்ள பூசைகளுக்கு விதி நூல் சிவாகமங்கள். அங்கு வழிபட வருபவர் எவரேனுமாகுக.
அவர் இவ்விதி நூலுக்கடங்கியே விரும்பவேண்டும். பக்கம் 48
———————————————————————————————————————-
மாகாண மொழிகள் எல்லாம் கூவல்கள். அவற்றுள் எதிலும் அச்சமயம் அடங்கிவிடாது. பக்கம் 53
———————————————————————————————————————-
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் பக்கம் 56
———————————————————————————————————————
சமசுகிருத வேதங்களின் சாரங்களை சைவ சமயாச்சாரியர்கள்,திருமூல நாயனார், முதலியவர்கள் தேவாரம், திருவாசகம்,திருமந்திரம் முதலியதிருமுறைகளாகத் தமிழில் எல்லோரும் உணர்ந்து உய்யும் வண்ணம் பாடினார்கள்.,,,, ஆயினும் அவர்கள் ஒரு கோயிலிலாவது பூசை நடந்த முறையை மாற்றவோ பரார்த்த பூஜையைத்தாங்கள் பாடிய பாசுரங்களால் செய்ய வேண்டுமென்றோ சொன்னவர்களுமல்ல, நினைத்தவர்களுமல்ல. பக்கம் 58
———————————————————————————————————————-

. . .

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

எஸ்ஸார்சி


சம்மந்தமில்லை என்றாலும்
தமிழ்நாடு-நேற்று இன்று நாளை
எடிடர்: என். முருகானந்தம். வெளீடு: நியூ ஜெர்சி தமிழ் சங்கம் யு எசு ஏ, முதற்பதிப்பு- 1997 விலை சொல்லப்படவில்லை.
————————————————————————————————————–
தாங்கள் விரும்பியாங்கு கட்டுரைகள் எழுதிப்பெறத்தக்க அறிஞர்கள் முகவரிப்பட்டியல் தயாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.
அன்புகூர்ந்து பொறுத்தாற்றிக்கொள்ளுங்கள்.
குன்றக்குடி அடிகளார் -புகுமுன் (1993ல்)
—————————————————————————————————————-
குனமும் குற்றமும் நாடுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பார்வை. இப்பார்வையினால் இந்தியாவும் தமிழகமும் வளர்ச்சி பெறவேண்டும்.
ந. முருகானந்தம் -முன்னுரயில்.
—————————————————————————————————————–
பஞ்சம் ஒரு புறமும் வெள்ளம் ஒரு புறமுமாக நாசம் விளைவித்த நிலை மாறியுள்ளதா? ஆறுகள் தேசிய ஒற்றுமையின் அடையாளச்சின்னங்களாக பாடப்பட்டு வருகின்றன. அரசியல் வாதிகளும் இதையே சொல்லி வருகிறார்கள்.
-ந.மு,வுடன் கோ.இராஜாராம்.
———————————————————————————————————————-
உலகின் செய்தி வலையோ விரிவடையாத காலம்.
கிராமம் சார்ந்தே தமிழ்க்குடும்பங்கள் வாழ்ந்திருந்தன. ஒரு தமிழ்க்குடும்பம் என்பது, தாத்தா, பாட்டி,அப்பா, அம்மா, அண்ணன்,தம்பி,
தங்கைகள், சித்தி, அத்தை, பெரியப்பா,சித்தப்பா,மாமா, மாமாவின் பெண்கள்,கல்யாணம் பண்ணிக்கொள்ளாத சித்தப்பா,பால்ய விவாகமாகி
கணவனை இழந்த தூரத்து அத்தை,பூனைகள், ஆடுகள், வளர்ப்பு அணில்,சிலவேளை மைனா, நாய்க்குட்டிகள்,பசுக்கள்,ன்னும் இரைதேடி
அடுப்படி வரைவரும் குருவிகள், எனத் தன்னளவில் பெரியது. -எசு.ராமகிருஷ்ணன்
———————————————————————————————————————
வள்ளலாரும் வள்லல்பச்சையப்ப முதலியாரும் ஒரு காலத்தில் குளித்து மகிழ்ந்த தூய கூவம் நதி சென்னைக்கு இன்று தீரா அவமானச்சின்னமாகி விட்டது. ,,,,,,,,,,,,,,,,, திருச்சி இராமகிருஷ்ணா தியேட்டர் பின்புறம் முக்கியச்சாலையொட்டி ஔடும் வாய்க்காலின்
பெயர் ‘மானம் கெட்ட வாய்க்கால்’ . ,,,,, அதிகாலையில் இந்த வாய்க்கால் ஔரம் காலைக்கடன்களை முடித்து விட்டு இதிலேயே
இப்பகுதி மக்கள் குளித்து வந்தனராம்,,,,,
சென்னை காமராஜபுரம் பகுதியில் தெருக்கூட்டும் துப்புரவுப்பணியை மேயர் இசுடாலினே தொடங்கி வைத்துப் பேசியபோது அவர் உள்ளக்கிடக்கையை அறிய முடிந்தது.
-. இ. ஜே. சுந்தர்.
——————————————————————————————————————-
வேதகாலத்து ஆரியச் சமுதாயத்தில் வருணாச்சிரம தர்மம் கடைபிடிக்கப்பட்டது. பிறப்பால் அல்ல.
-வீ£. செல்வராஜ்
——————————————————————————————————————-
பிரபலமாக இருப்பவரைத் தலைமைப்பண்புடையவர் என்று மக்கள் தவறாகக் கருதுகிறார்கள்.,,, மக்களுக்குப்புரியாத மொழியிலோ
அல்லது மக்களுக்கு விளங்காத சொற்களைச்சேர்த்து மடைதிறந்தாற்போல் பேசுபன் அறிவாளி என்று மக்கள் நினைக்கிறார்கள்.
-ச.முத்துக்குமரன்
———————————————————————————————————————-
அரபு, பாரசீக. இந்துசுதானி மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த ஆட்சிச்சொற்கள்.
இனாம், இருசால், கஜானா, பசலி, மராமத்து, ஜப்தி, ஜமாபந்தி, ஜாமீன், அமீனா, முனிசிப், பிர்க்கா, மசோதா,குமாசுதா, பந்தோபசுது,
பிராது,பஜார், செலான்,நமூனா,ரசுதா,ராஜினாமா,முசாபரி பங்களா,சிரசுதார்,டபேதார்,தாசில்தார்,கிசுதி, டேவணி போன்ற பல
ஆட்சிச்சொற்கள் இவை தமிழில் ஊடுருவி தமிழ்ப்பயன்பாட்டைக்குறைத்தன.
-வை.பழனிச்சாமி
———————————————————————————————————————-
ஔரத்து மக்களின் சிக்கல்கள் திரண்டு இலக்கியமாக வடிவம் எடுக்கும்போதுதான் உன்னத இலக்கியங்கள் பிறந்திருக்கின்றன. இந்த நோக்கில் தேசியம், என்ற அடிப்படையில் தமிழினமும்,சாதி என்ற அடிப்படையில் தலித்துக்களும்,பால் என்ற அடிப்படையில் பெண்ணும் ஔரத்து மக்களாகக் கருதத்தக்கவர்கள் ஆவர். எதிர்காலத் தமிழ் இலக்கியம் இவர்கள் கையில் தான் பேரொளி கொண்டு பெருநெறி பிடித்தொழுகப்போகிறது. – -பஞ்சாங்கம்.
———————————————————————————————————————-
தென்னக இசைக்கு என்று ஒரு பல்கலைக்கழகம் தோன்றுதல் வேண்டும். – வீ. ப. கா. சுந்தரம்
———————————————————————————————————————-
என்னதான் வியாபாரிகள் சினிமா தயாரிப்பைக்கட்டுப்படுத்தினாலும் கலைஞனால் அவற்றிலிருந்தெல்லாம் முடிந்த அளவு மீறமுடியும்.
பிரிட்டீஷ் ஆட்சியின் போது தணிக்கையில் மாட்டிக்கொள்ளாது சுதந்திர உணர்வைக் குறிப்பாலும் குறியீட்டாலும் உனர்த்த முடிந்த
சினிமாக்கலைஞர்களால் வியாபாரிகளையாசமாளிக்க முடியாது.
-ரெங்கராஜன்
—————————————————————————————————————- கல்கி, ராஜாஜி, நாமக்கல் கவிஞர், ம.பொ.சி ஜீவா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கே.டி.கே தங்கமணி இவர்கள் புகழ் உச்சியில் அதாவது மக்களிடையில் பிரபலமாக இருந்தவரை தமிழ் நாட்டில் காங்கிரசு தேசியம் தழைத்து வந்தது.
பா.கிருஷ்னன்
———————————————————————————————————————-தேவிகுளம் பீர்மேடு தாலுக்க்காக்களை கேரளம் அபகரித்துக்கொண்டதன் விளைவாகப் பெரியாறு அணை கேரளம் வசம் போயிற்று.
பெரியாறு நீர்ப்பிரச்சினை உருவாக்கப்பட்டு விட்டது. –-பழ. நெடுமாறன்.
———————————————————————————————————————
1989 ல் விளையாட்டாய் துவங்கிய -வர்ல்ட் வ்ய்டு வெப்- என்னும் உலகளாவிய கணிப்பொறி வலைப்பின்னல் இப்போது ஒரு மிகப்பெரிய
கலாச்சார மாற்றத்தைக்கொண்டுவரப்போகிறது.,,,,,,,,,,,,, தனிமையை இனிமை ஆக்கும் இந்தத் தந்திரங்களின் சமூக இயல் தாக்க்கத்தை
இப்போது யாரும் சிந்திக்க வில்லை. -சுஜாதா
———————————————————————————————————————
சமயம் மனிதனை உழைக்காமல் செல்வன் ஆக்க அல்ல. அவனை வாழ்வாங்கு வாழச்செய்து வாழும் நிலையை உயர்த்தத்தான்.
‘நடமாடக்கோயில் நம்பற்கு ஒன்றீயில்
படமாடக்கோயில் பகவற்கு அது ஆமே.’ -பொன்னம்பல அடிகளார்.


Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும் பௌத்த தத்துவ இயல்- ராகுல்சாங்கிருத்தியாயன்

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

எஸ்ஸார்சி



தமிழாக்கம்-.ஏ.ஜி. எத்திராஜுலு, ஆர். பார்த்தசாரதி, வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுசு பிரைவேட் லிமிடெட்
சென்னை-600098 முதல் பதிப்பு; 1985 விலை ரூ.20 பக்கம்-199


ஆயிரமாயிரம் ஆண்டுக்காலமாக வளர்ந்து வந்துள்ள அறிவியலை ஆதாரமாகக்கொண்டு வளர்ந்தது மார்க்சீயம்.
பொய்யும் திரிபும் கற்பனையும் உத்தேசமும் மார்க்சியத்துக்கு உடன்பால்ல. உண்மையும் வாய்மையும் அதன் உரைகல்.
பதிப்புரையில்


கடவுளை நம்புபவர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மதத்திற்காக போர்களும் கலவரங்களும் செய்து ரத்த ஆறு ஔடச்செய்து
வருகின்றனர். ஆனாலும் கடவுள் தோன்றி எந்தவிதச் சமாதானமும் ஏற்படுத்தவில்லை.
பக்கம்-5


பைபிளை கடவுள் அருளியதாகக்கருதியிராவிட்டால் இன்னும் எத்தனையோ விஞ்ஞானிகளின் இன்னுயிர்கள் பாத்காக்கப்பட்டிருக்கும்.
அரேபிய முசுலிம் படைவீரர்கள் எகிப்தின் மீது படைஎடுத்தபோது அலெக்சாண்டிரியா நகரிலிருந்த மாபெரும் நூல் நிலையத்தை
கண்மூடித்தனமாக தீயிட்டுக்கொளுத்தினர். அந்நூல் நிலையத்தில் பல நூற்றாண்டுகால கிரேக்க அறிஞர்களின் உழைப்பு
நூல்களாகக்குவிந்திருந்தது. குரானைக் கடவுள் அருளியதாகக்கருதியிராமல் இருந்திருந்தால், கிரேக்க தத்துவ மேதைகளின் எண்ணற்ற ஒப்பற்ற நூல்கள் அழிந்திருக்காது. பக்கம்-13


எந்த ஒரு நூலையும் கடவுள் படைத்ததாகக்கருதுவது, மனிதரிடையே சகிப்புத்தன்மையை அழித்துவிடுகிறது.
பக்கம்-13


எல்லா மத நூல்களுமே தத்தம் காலத்திய முரட்டுப்பிடிவாதங்களாலும் மூட நம்பிக்கைகளாலும் அறியாமைகளாலும் பிணைக்கப்பட்டுள்
ளன. பக்கம்-14


மகத ராச்சியத்தைச்சேர்ந்த சாரிபுத்திரர், மவுத் கல்யாயனர்,,மகாகாசியமர் மட்டுமல்ல மிகத்தொலைவிலிருந்த உஜ்ஜயின் நகர ராஜ புரோகிதரான மகா காத்யாயனர் போன்ற பிராமண அறிஞர்களும் புத்தரின் சீடர்கள் ஆனார்கள்.
பக்கம்-29


நாகசேனர் பஞ்சாபில் இமய மலைக்கருகில் உள்ள கஜங்கல் கிராமத்தில் சொனத்தர் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
பக்கம்-56


நாகேசனார் இந்திய கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாகவும் நாகரீகத்தின் கேந்திரமாகவும் விளங்கிய சியால்கோட்டில்
பிறந்தவர் என்பதும் இந்தியதத்துவ ஞானத்தோடு கிரேக்க தத்துவ ஞானத்தையும் அறிந்ததனாலேயே மினாண்டர் போன்ற தர்க்க விற்பன்னர்களைத்திருப்திப்படுத்த முடிந்தது என்பதும் இங்கே ஞாபகப்படுத்திக்கொள்லத்தக்கவையாகும்.
பக்கம்-65


நாகார்ஜுனர் (கி.. பி. 175) விதர்பாவில் ஒரு பிராமணக்குடும்பத்தில் பிறந்தார்.
நாகர்ஜுனரின் கருத்துப்படி சூனியவாதமென்றால் உலகமும் அதிலுள்ள ஜடப்பொருட்களும் உயிர்களும் எந்த ஒரு மாற்றமற்ற தத்துவம்
( ஆன்மா, பொருள் முதலியவை) இல்லாமல் சூனியமாகவே இருக்கின்றன. அதாவது உலகம் நிகழ்ச்சிகளின் திரட்டே தவிர , பொருட்களின் திரட்டு அல்ல. பக்கம்-71


அசங்கர் (கி. பி. 350) பெஷாவாரிலிருந்த ஒரு பிராமண க்குடும்பத்தில் பிறந்தவர்.
அழிவுடமை வாதம்: ஒரு பொருள் அழிகிறது.
அதற்கு பதில் வேறு பொருள் உற்பத்தியாகிறது. பொருட்களெல்லாம் ஒவ்வொரு வினாடியும் புதிய புதிய உருவத்தில் தோற்றமளித்துக்கொண்டே இருக்கின்றன. ஆகவே எந்தப்பொருளின் உருவமும் நிலையானதல்ல.
பக்கம்-77


திக்நாகர் ( கி. பி. 425 ) தமிழ் நாட்டில் காஞ்சீபுரம் அருகே சிம்மவக்கிர என்னும் கிராமத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
இயற்றிய நூல் பிரமாண சமுச்சய் இன்று திபேத்திய மொழியில் மட்டுமே கிடைக்கிறது.
பக்கம்-81


தர்மகீர்த்தி ( கி.பி. 600 ) வட தமிழ் நாட்டிலுள்ள சோழ மண்டலத்தைச்சேர்ந்த திருமலை என்னும் கிராமத்தில் ஒரு பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். ,,,,,,,தர்மகீர்த்தி நாளந்தா சென்று அங்கு அக்காலத்திய மாபெரும் விஞ்ஞான தத்துவ மேதையும் பல்கலைக்கழகத்தின்
முதல்வருமான தர்மபாலரின் சீடராகி பிட்சு சங்கத்தில் சேர்ந்துவிட்டார். பக்கம்-83


வேத நூல்களை பிரமாணமாக நம்புதல், ஒரு கடவுளை சிருஷ்டி கர்த்தாவாக ஒப்புக்கொள்ளுதல், புனித நீராடி மதத்தை பின்பற்றுவதாக
கருதுதல், சிறிய ஜாதி என்று வெறுப்பது பெரிய ஜாதி பெருமை அடித்துக்கொள்ளுதல், பாவங்களை கழுக்கொள்ள உண்ணாவிரதம்
போன்றவற்றை கைக்கொண்டு உடலை வருத்துதல் – இந்த ஐந்தும் மூளைகெட்ட மனிதர்களுடைய முட்டாள்தனத்தின் அடையாளங்களாகும். -தர்மக்கீர்த்தி பக்கம்-110


சங்கராச்சாரியார் தம் அறிவாற்றலாலும் வாதத்திறமையாலும் பொளத்தர்களை வாதில் வென்று பொளத்தத்தை அழித்தார் என்ற தவறான கருத்து சிலரிடம் உலவுகிறது.,,,,, இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் உள்ள பிராமணீய பெளத்த வரலாற்று ஆவணங்களை முழுமையாக புதைபொருள் ஆய்வுகளின் துணையுடன் ஆய்வோமானால் இக்கருத்தை நிராகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது.
பக்கம்-185


பெளத்த வீழ்ச்சி அடைவதற்கு முதற்பெருங்காரணம்-வஜ்ராயனம்,,,,,,,,,,,, இரண்டாவது காரணம் வடமேற்கிலிருந்து படைஎடுத்து வந்த துருக்கியர் கொடுத்த மரண அடி. பக்கம்-187


ஏன் சில மக்கள் குருடு செவிடு நோய் நொடி பலவீனம் அறிவீனமுடன்பிறக்கிறார்கள்.? ஏன் வேறு சிலர் புத்திசாலிகளாக உடல் நலத்துடன் கண்பார்வையுடன் பிறக்கிறார்கள்? இந்தவேற்றுமை ஏன்? இந்த வேற்றுமைகள் கடவுளால் படைக்கப்பட்டவை என்றால் அது அநீதி அல்லவா?


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும் – மாசுகோவில் தமிழன் – தரு. ராமச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ)

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

எஸ்ஸார்சி


சம்பந்தமில்லை என்றாலும்
மாசுகோவில் தமிழன் – தரு. ராமச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ)
தமிழாக்கம்- எசு. சங்கரன். வெளியீடு. சிற்பி நூலகம்,31 ஹாரிங்டன் ரோடு,சென்னை-30
முதர்பதிப்பு:1959 டிசம்பர், விலை:75 காசு


இரும்புத்திரைக்குப்பின்னே என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள க்கிடைத்த வாய்ப்பை நல்லமுறையில் பயன் படுத்திக்கொண்டு தாம் கண்டதை தகுந்த ஆதாரங்களுடன் தருகிறார் நண்பர் தரு. ராமச்சந்திரன். – பதிப்புரையில்


சர்வதேச இளைஞர்களின் இந்த மாபெரும் விழா 1957 ஜூலை மாதம் 28-ம் தேதி முதல் ஆகசுடு 11-ம் தேதி வரை பதினைந்து நாட்கள்நடைபெற்றது. வரலாற்றிலே இடம் பெறும் இந்த விழாவில் உலகின் ஐந்து கண்டங்களிலுமுள்ள 132 நாடுகளிருந்து 32000 பேர்களுக்கு மேல். கலந்து கொண்டனர். ,,,,,,,,,,,உலக மக்களின் தொடர்பே இல்லாமல் துண்டிக்கப்பட்டு 40 வருட காலமாக தனியே அடைத்துவைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு உண்மையிலேயே இது ஒரு மகத்தான வாய்ப்புத்தான். பக்கம்-9


இரண்டாவது உலகப்போரில் சோவியத் ரஷியா 70 லட்சம் ஆண்களைப் பலிகொடுக்க வேண்டியதாயிற்று. அதன் காரணமாக இன்று ரஷிய சமூகத்தில் ஆண்கள் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தொகையில் ஏறக்றைய 55 முதல் 60 சதவிகிதம் வரை பெண்களாக இருக்கிறார்கள். பக்கம்-12


பார்லிமென்டரி ஜனநாயகம் குறித்து நான் பேசிக்கொண்டிருந்தபோது கேரளாவில் கம்யூனிச்ட் ஆட்சி நடைபெருவது பற்றிக்குறிப்பிட்டேன்..
நான் சொன்னவற்றை அவர்கள் நம்பவில்லை என்பதை அவர்கள் கண்கள் புலப்படுத்தின. திடுக்கிட்டேன், திகைத்து நின்றேன்!
அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் எந்த கட்சியானாலும் ஜனநாயக ஆட்சிமுறையில் மக்கள் ஔட்டுக்களைப்பெற்று ஆட்சிக்கு வரமுடியும் என்று அவர்களுக்கு விளக்கிக்கூறினேன். அவர்கள் இதை நம்பும்படிச்செய்ய நான் அதிகம் சிரமப்பட வேண்டியதாயிற்று. தங்களுக்கு இது தெரியாதென சிலர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டனர். பக்கம்-15


மக்கள் ஜனநாயகத்தைப்பற்றிப் புரிந்துகொண்டவர்கள் அவர்களின் தேர்தல் முறையினை நன்றாக அறிவார்கள். பொதுத்தேர்தல், சர்வஜன வாக்கு ரகசிய ஔட்டுமுறை, போன்ற சொற்கள் தவறாகப்பயன்படுத்தப்படுகின்றன. நடைமுறையில் இந்த சொற்கள் அதன் பொருளை இழந்துவிட்டன. சொற்களுக்குரிய பொருள்களைக்கூட கம்யூனிச்ட் கட்சியும் சர்க்காரும் பறித்துவிடுகின்றன.
பக்கம்-18.சோவியத் ரஷ்யாவைப்பற்றிய பல பொய்களுள் மிகப் பெரிய பொய் அந்த ஐக்கியத்திலுள்ள அங்க நாடுகள் பரிபூரண சுதந்திர நாடுகள் என்று கூறப்படுவதுதான். பக்கம்-19


இது போன்ற விழாக்களை சோவியத் ரஷ்யா ஆண்டு விடாது பத்தாண்டுகள் நடத்தி வருமானால் இறுதியில் என்ன நடக்கும் என்பதைநம்மால் கூற முடியாது? பக்கம்-24


ஏட்டளவில் அரசியல் அமைப்பு உரிமைகளை வழங்கி விட்டு நடைமுறையில் அதை மறுக்கும் முறை அதிக நாட்கள் நீடிக்க முடியாது.
இவை இரண்டிற்கும் என்றாவது ஒரு நாள் மோதல் ஏற்பட்டேதான் ஆக வேண்டும். அதற்கான அறிகுறிகள் பல காணக்கிடைக்கின்றன.
பக்கம்- 31


தெருவில் ஐசுக்ரீம் விற்பவன் கூட அரசாங்கத்தைச்சேர்ந்தவன். பக்கம்-39


காரல் மார்க்சே தான் ஒரு மார்க்சீயவாதி அல்ல என்று கூறியிருப்பதை க்கூட நான் அவர்களுக்கு எடுத்துக்கூறினேன்..
பக்கம்-42


தனிமனிதனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை எதிர்ப்பவர் மார்க்ச். தனக்கு இதன் பேரிலுள்ள வெறுப்பையும் புலப்படுத்தச்செய்தார்.
அவர் ஒரு நாத்திகர். பிரிட்டனில் நாத்திகர்கள் மாநாடு ஒன்றை சார்லசு பிராட்லா என்ற ஒரு நாத்திகர் கூட்டினார்.. மார்க்சை அந்த மாநாட்டிலே கலந்துகொள்ளுமாறு அழைத்தார். .மார்க்சு அதில் கலந்துகொள்ள மறுத்ததோடு சார்லசு பிராட்லாவை ’நாத்திக மத குரு’
என்று கிண்டல் செய்தார். பக்கம்-48


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும் – மதுரை மாவட்ட சுதந்திர வரலாறு ( ந. சோமயாஜுலு )

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

எஸ்ஸார்சி



. வெளியீடு மதுரை ஜில்லா வீரர் சங்கம்
ஆண்டு 1980. அச்சகம்: மீலாத் பிரிண்டர்சு. பிற : குறிப்புகள் இல்லை பக்கங்கள்->304


டாக்டர். செண்பகராமன் பிள்ளை ( 1891-1934)
‘எட்டு வீட்டு பிள்ளைமார்’ என்ற சிறப்புப்பெற்ற தமிழ்க்குடியில் பிறந்தவர். புரட்சித்தடத்தில் இந்தத்தமிழ் வீரர் வங்க வீரர் சுபாச்சந்திர போசுக்கு உண்மையிலேயே வழிகாட்டியாக விளங்கியிருக்கிறார்.
தமது ராணுவத்திட்டத்திற்கு ‘இந்தியன் நேஷனல் வாலன்டியர்சு’ என்னும் இந்திய தேசிய தொண்டர்படையை அமைத்தவர்.
ஜெய் ஹிந்த் என்ற தேசிய முழக்கத்தை முதன் முதலில் முழங்கிய தமிழ் வீரர்.
முதல் உலக மகாயுத்தத்தின் போது சென்னைக்கடற்கரையில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திர்கு எதிராக குன்டு வீசிய ‘எம்டன்’
என்னும் ஜெர்மானியக்கப்பலின் தலைமை இஞ்சினீயர் டாக்டர் செண்பகராமன் பிள்ளை.
ஹிட்லரை மன்னிப்புக்கேட்கவைத்த வீரத்தமிழன். பக்கம்-299


அமெரிக்காவில் இந்தியப்புரட்சிக்கு ப்புதிய வலுவான திருப்பத்தை அளித்தவர் 1911 முதல் ஹர் தயாள் மாதூர் என்பவரே.
கத்தர் கட்சிக்கு அமெரிக்காவில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கிளைகளை ஏற்படுத்தினர். வெளிநாடுகளில் குடியேறிய சீக்கியர்களே இக்கட்சியின்முதுகெலும்பு.
டிசம்பர் 9 1905-ல் ‘காயலிக் அமெரிக்கன்’ ‘ இந்தியா அன் அயர்லான்ட் வர்கிங் டுகெதர்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டது.
டால்சுடாயின் ‘ லேட்டெர் டு எ ஹின்டு’ என்ற பகிரங்க கடிதம் வெளி வர தாரகநாத் தாசு அவர்களே காரணம்.
கத்தர் புரட்சி இயக்கத்தினர் 1914-ல் கோமகட்டமாரு என்ற கப்பலை வாங்கி அதில் நிறைய ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு கல்கத்தா துறைமுகம் வந்துசேர்ந்தபோது வேட்டையாடப்பட்டனர். கப்பல் முற்றுகை இடப்பட்டு அதன் மீது பீரங்கிப்பிரயோகம் நடைபெற்றது இதில் பதினாறு பேர் மரணம் அடைந்தனர்.பலர் கைது செய்யப்பட்டு முப்பது ஆன்டுகளுக்குமேல் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பக்கம்-300


பரிபூரண சுதந்திரம் சோஷலிசம் குடியரசு ஆகிய முப்பெரும் தத்துவங்களை இந்திய அரசியல் சிந்தனையில் ஒருங்கிணைத்து அளித்தது பகத்சிங்கின் குழு. விடுதலை அந்நிய ஆதிக்கத்திடமிருந்து மட்டுமல்ல உள்நாட்டு ஆதிக்கத்தினிடமிருந்தும்தான் எனப் பிரகடனப்படுத்தி சுரண்டலற்ற சோஷலிச சமுதாய அமைப்பிர்காகப்போராடியவர்கள் பகத் சிங் குழுவினர். புரட்சி இயக்கத்தின் சிந்தனையில் மதவழிப்பட்ட சிந்தனையை அகற்றியது பகத் சிங் குழு. பக்கம்-282


காங்கிரசு தோன்றுவதற்கு ஹ்யூம் காரணமானதுபோல் முசுலிம் லீக் தோன்றுவதற்கும் தியோடர்பெக் என்னும் ஆங்கிலேயர் காரணமாவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தியோடர்பெக் என்பவர் சையது அஹமதுகான் நிறுவிய முசுலிம் கல்லூரியின் முதல்வராகவும், சையது அகமதுகானின் ஆலோசகராகவும் இருந்தார்.
1888 ல் ‘பயோனியர்’ என்னும் பத்திரிகையில் காங்கிரசிற்கு எதிராக முசுலிம்கள் ஒன்றுதிரளவேண்டும் எனத்தொடர்ந்து எழுதிவந்தார்.
1886-1887 ல் அகமது கான் முசுலிம் கல்வி மாநாடுகள் என்ற பெயரில் காங்கிரசு எதிர்ப்பை நடத்தத்தொடங்கினார்.
பக்கம்-182


முசுலிம் பிரிவினை வாதத்திற்கு திட்டவட்டமான உருவம் கொடுத்து வன்முறைக்கிளர்ச்சிகளுக்கு ஊக்கமளித்து பாகிசுதானைக் கண்ட முகமதலி ஜின்னா 1920 வரையில் சிறந்த தேசியவாதிகத்தான் இருந்தவர், கவிஞர் இக்பாலின் தூண்டுதல் ஜின்னாவின் மனமாற்றத்திற்கு ஒரு காரணமாகும்.
முசுலிம் பிரிவினை வாதத்தை எதிர்த்ததில் டியோ பான்ட்(Deoband) இசுலாம் தத்துவ சிந்தனைக்கூடத்திற்கு முக்கிய இடம் உண்டு முசுலிம்களின் தனித்தாயக கோரிக்கைக்கு டியோ பான்ட் சிந்தனையளர்கள் எதிர்ப்புத்தெரிவித்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில்
காங்கிரசிற்கு முழு ஆதரவு அளித்தனர். பக்கம்-182


சென்னை காங்கிரசில் (1887) ஒலித்த முதல் தமிழ்க்குரலுக்கு உரிய திரு. டி. ம மூக்கன் ஆசாரி தஞ்சை முனிசிபல் சபையின்
உறுப்பினர். பக்கம்-180


வங்காளம் 1772 –ல் ஒருபுறம் கிழக்கிந்தியக்கம்பெனியின் படுபாதகமான சுரண்டலாலும் மறுபுறம் சக்தியற்ற மொகலாய நவாபுகளின்
ஆட்சி சீரழிவாலும் ஆழித்துரும்பென அல்லலுற்றது. இந்தச் சூழ்நிலையில் இசுலாமிய மதபோதகர்கள் போர்வாள் ஏந்தி இந்துமதத் துறவிகளைத்தாக்கிப் பலரைக்கொன்று குவித்தனர்.
அப்பொழுது பெயரளவில் மொகலாயச்சக்கரவர்த்தியாய் இருந்தவரிடம் மதுசூதன சரசுவதி என்னும் இந்து சமயத்தலைவர் முறையிட்டும் பயனில்லை. சொல் தோற்றவிடத்தில் வாளுக்கு வழி பிறந்தது. மதுசூதன சரசுவதி க்ஷத்திரிய இனத்தவர்களை துறவிகளாக ஏற்று இந்து சமயத்தைக்காக்க இசுலாமிய மத போதகர்களை நேரடியாகத் தாக்கச்செய்தார்.
இந்து துறவிகளின் இந்த எழுச்சி’ சந்நியாசிகள் கலகமாக வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது.
1773-ல் வங்காளத்தின் கீழ்ப்பாகத்தில் நடைபெற்ற சந்நியாசிகளின் கலகத்தையே 1882- ல் எழுதிய ஆனந்தமடம் நாவலுக்கு கருவாகக்கொண்டார் பங்கிம் சந்திரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த மடம் படைத்த வீரத்துறவிகளுள் ஒருவரான பவாநந்தர் இசைத்ததே வந்தே மாதரம்.
பக்கம்- 144


1857 புரட்சியை ஒரு மாபெரும் தேசிய விடுதலைப்போராக சித்தரித்து விநாயக தாமோதர சாவர்க்கார் 1909 ல் எரிமலை என்னும் பெயரில் மராத்திய மொழியில் எழுதினார்.. .. இவரது கையெழுத்துப்பிரதிகள் இந்தியாவிற்கு வந்தும் வெளியிடும் துணிச்சல் எந்தப்பதிப்பகத்தாருக்கும் ஏற்படவில்லை. ,,, ,,38 ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருந்ததிலுருந்து இந்நூல் எந்த அளவு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அச்சுறுத்தியது என்பது தெளிவாகிறது. பக்கம்-100


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும் – சல்மான் ருஷ்டி யின் – தி மூர்‘ சு லாசுட் சை ( The moor s’ last sigh)

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

எஸ்ஸார்சி



ஆங்கில மூலம் வெளியீடு: வின்டேஜ் ஜோனதன் கேப் லிமிடெட், லன்டன் -1995 விலை- சொல்லப்படவில்லை.
—————————————————————
NO one not even the supreme Government, knows every thing about the administration of the Empire. Year by year England sends out fresh drafts for the first fighting line, which is officially called the Indian Civil Service.
Page -39
பேரரசு நிர்வாகம் பற்றி யாருக்கும் எதுவும் ஏன் உச்சமட்ட அரசுக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு இந்தியன் சிவில் சர்வீசு என்று பெயரிப்பட்ட முதல் அரசாங்கப்படைக்கே இங்கிலாந்து புதுப்புது வரைவு ஆணைகளை அனுப்பிவைத்தது.

———————————————————————————————————————————–
Common man in India has always bowed his knee to the counsels of his betters-of persons of education and breeding.! .
Page-50

கல்வியிலும் சரியாக வளர்த்தெடுக்கப்பட்ட முறையிலும் தன்னிலும் மிக்கார்களை க்கண்டு சாதாரண இந்தியக்குடிமகன் எப்போதும் மண்டியிட்டவனே.
———————————————————————————————————————————–
In the city we are for secular India but the village is for Ram .And they say Ishwar and Allah is your name but they don’t mean it, they mean only Ram himself, king of Raghu clan, purifier of sinners along with Sita.. In the end
I am afraid the villagers will march on the cities and people like us will have to lock our doors and there will come a Baatering Ram.
Page-56
பெருநகரங்களில்தான் மதசார்பில்லா இந்தியா, கிராமங்களில் கடவுளாக ராமன் மட்டுமே. ஈசுவரன் அல்லது அல்லா இரண்டும் ஒன்றன் பெயர் என்று சொல்லுவார்கள்.
ஆனால் ராமன் என்று மட்டுமே கிராமத்துமக்கள் அர்த்தம் பெறுவார்கள். அந்த ரகு குலத்தவன் சீதா பிராட்டியோடு நம் பாவங்களை போக்குபவன். இறுதியில் கிராமத்து ,மக்கள் பெரு நகரங்கள் நோக்கி அணிதிரண்டு வரலாம் என்று எனக்கு அச்சமேற்படுகிறது. நாமும் கதவு தாளிட்டுக்கொள்வோம். அங்கே ஒரு ராமன் நம்மை உதைப்பவனாயும் வரலாம்.

———————————————————————————————————————————-
,,,,, ornament is but the guiled shore,
To most dangerous sea ; the beauteous scarf
Veiling an Indian beauty ; in aword
The seeming truth which cunning times put on,,,,,
Page- 114

ஆக்ரோஷக்கடலுக்கு அணிகலன்
திரையிட்டுக்கொள்ளும் கரையே
அழகான பரிவட்டம்
இந்திய பொய்யழகின் மீது.
ஒரு சொல்லில் சொன்னால்
மாயத்தின் மீது கால க்கயமை
திரை இட்டிருக்கிறது.

————————————————————————————————————————————
Once a year my mother Aurora Zogoiby liked to dance higher than gods. Once a year the gods came to Chowpatty Beach to bathe in the filthy sea; fat bellied idols by the thousand, papier mache effigies of the elephant headed Ganesha or Ganapti Bppa, swarming towards the water astride papie mache rats –for Indian rats as we know carry gods as well as plagues.
ஒரு வருடம் என் தாய் ஆரோரா சொகாபயி கடவுளையும் தாண்டி நடனமிட்டாள். ஆண்டுக்கு ஒரு முறை கடவுள்கள் சொபாதி கடற்கரைக்கு
அழுக்குக்கடலில் குளிக்க வருகின்றனர். ஆனைமுகத்து தொந்திக்காரராய் ஆயிரமாயிரம் காகித உருவங்கள். அந்தக் கணேசர்தான். குழந்தைக்கணேசர் தத்தக்கா புத்தக்கா நடையில் . பொம்மை உருவ எலிகள் எத்தனை எத்தனை கூட்டம். பாருங்கள் இந்த இந்திய எலிகள் கடவுளோடு பிளேக் நோயையும் அல்லவா சுமக்கின்றன.
Page -123
————————————————————————————————————————————
Soon after that the Mountbattens arrived in India, and Nehru and Edwina fell in love. Is it too much to suppose that Aurora s plan speaking in the matter of the great naval strike turned Panditji away from her and towards the Last Viceroy s possibly less disputatious mame ?.
Page-134

மவுண்பேட்டன் பாரதம் வந்தபிறகு நேருவும் எட்வினும் காதலில் விழுந்தார்கள். பண்டிட்ஜியை எட்வினிடமிருந்து பிரித்துவைத்து அதேநேரம் கடைசி வைசிராயின் பிரச்சினை குறைவான சீமாட்டி மீது அவரையும் மையல் கொள்ளவைத்த அந்தக் கப்பற்படை மாயுத்தம் பற்றி எல்லாம் ஆரோரா பேசுவதாய் த்திட்டம் வைத்திருப்பது கொஞ்சம் அதிகப்படிதானே.

————————————————————————————————————————————
Motherness -–excuse me if I underline the point – is a big Idea in India may be our biggest; the land as mother the mother as land as the firm ground beneath our feet.
Page-137

தாய்மை மன்னியுங்கள் இது இங்கே முக்கியமானதுவே. இந்தியாவில் இது பெரிய சமாச்சாரம் ஆகப்பெரியது. ஆமாம் மண்ணே தாய். நம் காலின் கீழ் கெட்டிபட்டுக்கிடக்கும் அந்தத் மண்ணே தாய்..

————————————————————————————————————————————
In this interpretation and here clowning Vasco attempted to convey a scholarly gravitas , Mother India is the dark side of the Radha Krishna story with the subsidiary theme of forbidden love added on.
Page-138

வேடமிட்ட வாச்கோ தனக்கு எட்டிய ஞானத்திரவியத்தை சொல்லிவிட முயற்சிக்கிறான்.
இந்தியத்தாய் சமாச்சாரம் வேறென்ன அந்த ராதை கிருஷ்ண க்கதையின் கருத்துப்போன மறுபக்கமே. அனுமதிக்கப்படாத காதலின் விரிந்த துணைத்தடம்.
——————————————————————————————————————————–
Panditji sold you that stuff like a cheap watch salesman and you bought one and now you wonder why it doesn t work. Bloody congress party full of bleddy fake Rolex sales man.
Page-166.

விலைகுறைந்த கடிகாரத்தை வீதியில் கூவி விற்கும் வியாபாரியாய் நேரு. நீ ஒரு கடியாரம் வாங்கினாய். அது ஏன் வேலை செய்யவில்லை என உனக்கு ஆச்சரியம். ரத்தக் கறைபடிந்த காங்கிரசுக்கட்சி. அதனில் போலி ரோலக்சு கடியார வியாபாரிகள் திணித்துக்கொண்டு அல்லவா கிடக்கிறார்கள்.
————————————————————————————————————————————

And the absurd efforts of Camoens da Gama to train a troupe of South Indian Lenins…………. page-178
‘Let her die’ said Aurora obdurately ’’Better a corpse than a nun’.
Page-210

தென்னிந்திய லெனின்கள். அவர்களை உருவாக்குவதில் கேமன் டி காமாவின் பித்த முயற்சிகள்.
‘அவள் சாகலாம்’. ஆரோரா அடித்துச்சொல்கிறாள்’ ‘நேர்ந்துவிடப்பட்ட கன்னியாச்த்ரியை விட ஒரு சவம் எவ்வளவோ மேல்’ என்கிறாள்
————————————————————————————————————————————‘Indra Gandhi’ she said ,’has lost the right to call her awoman’
Page-213

‘ இந்திராகாந்தி தன்னை ஒரு பெண் என அழைத்துக்கொள்ள தகுதி இழந்தவ’ர். என்று அவள் தான் சொன்னாள்.
———————————————————————————————————————————–
After emergeancy people started seeing through different eyes. Before the Emergeancy we were Indians. After it we were Christian Jews.
Page -235
நெருக்கடி நிலைக்கு ப்பிறகு மக்கள் வித்தியாசமாக ப்பார்க்கத்தொடங்கினார்கள். நெருக்கடி நிலைக்கு முன் நாம் இந்தியர்கள். பிறகோ நாம் கிறித்துவ யூதர்களாய் மாறிப்போனோம்..
————————————————————————————————————————————
It had actually been a Muslim worshipper at the old Babri mosque WHO HAD FIRST CLAIMED TO SEE A VISION OF lord RAM and so started the ball rolling . what could be a finer image of religious tolerance and plurality than that ? After the vision Muslim and Hindus shared the contested site without fuss.
Page -363
முதன்முதலில் ஒரு முசுலிம் தான் பழைய பாப்ரி மசூதியில் வணங்கும் போது கடவுள் ராமரை க்கண்டதாகத்தெரிவித்தார். எத்தனை ஆழமான மத சகிப்புத்தன்மை என்னே அன்றைய .பன்முகத்தன்மையின் ஆளுமை. அந்த தரிசனத்திற்குப்பின் ஔசை யில்லாமல் இந்துக்களும் இசுலாமியர்களும் கோவில் இடம் யாருக்கு என்று சண்டையிட்டுக் கொண்டார்கள்.

———————————————————————————————————————————–
Not even an Indian was safe not if he was the wrong sort of Indian, any way -wearing the wrong sort of head dress, speaking the wrong language, dancing the wrong dances, worshipping wrong gods traveling in the wrong company.
Page- 414

தலையில் அணிவது தவறானதாகி, தவறான மொழி ப்பேசிக்கொண்டு, தப்புத்தப்பாய் நடனமாடி, தவறானக்கடவுளரை வணங்கி, மோசமான கூட்டாளி வைத்து இப்படி இப்படி எல்லாம் தவறான மனிதனாகி இன்று எந்த ஒரு இந்தியனும் பாதுகாப்பாக இருக்க இயலுமா என்றால் இயலாது.
———————————————————————————————————————————–


Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

எஸ்ஸார்சி.


ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் எழுதியது.. வெளியீடு திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் .154 டிடிகே சாலை.சென்னை-18 முதற்பதிப்பு 1940. விலை சொல்லபடவில்லை. பக்கம் ந~ ந~ ச
———————————————————————————————————————-
தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளாக ப்பல தமிழ்ப்பகைவர் பலவாறு தமிழைக்கெடுத்தும் மறைத்தும் வைத்திருப்பதனால் அவற்றை எடுத்துச்சொல்வது இந்நூல் முடிபுக்கும் இன்றியமையாததாயிருக்கிறது.- முகவுரையில்
——————————————————————————————————————-
கருத்த பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக்கூடாது என்பது பழமொழி. பார்ப்பனருக்குரிய நிறம் வெள்ளை என்பதும் வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பு என்பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக்குறிக்கும் என்பதும் இதன் கருத்து -பக்கம் 3
———————————————————————————————————————-
ஆரியப்பிராமணர் தமிழப்பார்ப்பாரின் தொழிலை மேற்கொண்டபின் தாமும் அவ்வாறு அழைக்கப்பட்டு வருதல் இயல்பானதே. அல்லாவிடின் வடமொழிப்பற்றுள்ள பிராமணருக்குப் பார்ப்பார் என்னும் தனித்தமிழ்ப்பெயர் வழங்கிவரக்காரணமில்லை.
-பக்கம் 20
———————————————————————————————————————
பார்ப்பார் தமிழ்நாட்டிலிருந்தமைபற்றித் தொல்காப்பியத்திற் கூறப்பட்டனரேயன்றி அவர் தமிழரே என்னும் கருத்துபற்றி அன்று. இதுபோது தமிழ்நாட்டுக் குலங்களைக்குறிப்பின் ஐரோப்பியரும் சட்டைக்காரரும் குறிக்கப்படுவரன்றோ? அங்கனமே தொல்காப்பியர் காலப்பார்ப்பனருமென்க. – பக்கம்-37
———————————————————————————————————————
தமிழகத்தில் உள்ள பார்ப்பனர் தொன்றுதொட்டு இரு சாரர் ஆவர். அவருள் ஒரு சாரார் தமிழை வளர்த்தோர் அவர் அகத்தியர் தொல்காப்பியர் முதலானோர். மற்றொரு சாரார் தமிழைக்கெடுத்தோர். பக்கம்-39
——————————————————————————————————————–
விரலாற் சுட்டி எண்ணக்கூடிய சிறு கூட்டமொரு மாபெரும் நாட்டையும் வலக்காரத்தால் கைப்பற்றலாம் என்பதற்கு தமிழ் நாட்டுப் பார்ப்பனீயத்தைப்போன்ற எடுத்துக்காட்டு இவ்வுலகிலேயே இல்லை. –பக்கம்-41
———————————————————————————————————————–செங்குட்டுவ கனக விசயப்போர் பதினெண் னாழிகையும்
பாரதப்போர் பதினெண்நாளும்
இராமவிராவணப்போர் பதினெண் மாதமும்
தேவாசுரப்போர் பதினெண் ஆண்டும்
ஆரிய தமிழ்ப்போரோ பதினெண் நூற்றாண்டாக நடந்து வருகிறது.. பக்கம்-59
——————————————————————————————————————-
ஜெர்மனியில் ஹிட்லர் யூதரைத்துரத்துவது கொடிதே. ஆனால் அவ்யூதரை காப்பதற்குரிய வழிகளைத்தேடாமல் யூதரும் ஜெர்மானியரே என்று சொல்லின் எங்கனம் பொருந்தும் ? பக்கம்-64
———————————————————————————————————————-
அநுமன் மகேந்திரமலையையினின்று கடலைத்தாண்டி இலங்கைக்குச்சென்றதாக இராமாயணம் கூறுகின்றது
தாமிரபரணி நதியைத்தாண்டுங்கள்.. அதைவிட்டு அப்பாற் சென்றால் பாண்டி நாட்டின் கதவினைக்காண்பீர்கள். அதன் பின் தென்சமுத்திரத்தையடைந்து நிச்சயம் பண்ணுங்கள். ,,,,,,,, என்று சுக்கிரீவன் அங்கதனுக்குச்சொன்னதாக வால்மீகி முனிவர் கிஷ்கிந்தா காண்டத்திற் கூறியிருப்பதினின்று,,,,
பக்கம்-39 /2
———————————————————————————————————————-
அநுமன் குமரி ( மகேந்திர ) மலையினின்று கடல் தாண்டினானென்றும் வானர வயவர் குட( மேற்குத்தொடர்ச்சி ) மலை வழியாகத் தெற்கே சென்றார் என்றும் கற்களைக்குவித்தே அணைக்கட்டினார் என்றும் இராமர் அகத்தியரிடமிருந்து வில் பெற்றனர் என்றும் இராமயணம் கூறுவதாலும் பக்கம்-46/2

அநுமன் குமரி ( மகேந்திர ) மலையினின்று கடல் தாண்டியதும் இராமர் வானரப்படைத்துணையால் அணைக்கட்டியதுமான இடம் இப்போது இந்துமாக்கடலில் உள்ளது.. இப்போது இராமர் அணைக்கட்டு என்று வழங்குமிடம் பிற்காலத்தில் பரிந்தையாலும், எரிமலைக் கொதிப்பாலும் புயலாலும் இயற்கையாய் அமைந்த கல்லணை ஆகும்
பக்கம்-46/2
———————————————————————————————————————-

பால் வேறு ,குலம் வேறு. அந்தணர், அரசர்,வணிகர்,வேளாளர் என்பன பால்கள்.,,, பிள்ளை,முதலியார்,மறவர் இடையர் என்பன குலங்கள்.
பார்ப்பார் என்பது ஒரு குலம். பார்ப்பாரைக்குறிக்கும்போதெல்லாம் பார்ப்பார் என்ற குலப்பெயர் குறித்தே கூறுவர்.
அந்தணர், ஐயர், அறிபர், தாபதரென்னும் பெயர்களெல்லாம் முனிவரைக்குறிக்கும். – பக்கம்-96/2
———————————————————————————————————————
தமிழம்-த்ரமிள ம்-த்ரமிட ம்-த்ரவிட ம்-த்ராவிடம் பக்கம்-194/2
——————————————————————————————————————–
அனுமான் கடல் தாண்டும்போது நாகரைக்கண்டானென்றும் ,மைந்நாகமலையில் தங்கினார் என்றும், வீமன் துரியோத்னனால் கங்கையில் அமிழ்த்தப்பட்டபின் நாகநாடு சென்றானென்றும் சூரவாதித்த சோழன் கிழக்கேசென்று நாகன்னிகையை மனந்தானென்றும் கூறியிருத்தல் காண்க.
இன்றும் நாகர்கோவில், நாகப்பட்டினம், நாகூர், நாகபுரம், சின்னநாகபுரம் முதலிய இடங்கள் இந்தியாவின் கீழ்க்கரையில் அல்லது கீழ்ப்பாகத்திலேயே இருத்தல் காண்க பக்கம்-229/2
———————————————————————————————————————-
தன்நாடான இங்கும் தமிழுக்கு இடமில்லை என்றால் வேறு எங்கு அது செல்லும்? -922/2
———————————————————————————————————————–

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

எஸ்ஸார்சி


வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுசு பிரைவேட் லிமிடெட்
சென்னை -98 முதற்பதிப்பு-1988 விலை ரூ: 50 -மொழி பெயர்ப்பாளர் மாஜினி
எங்கள் நாட்டுக்கும் உலகுக்கும் புதிய சிந்தனை- மிகையில் கொர்பச்சேவ்
‘ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று 1917 ஆம் வருட மகத்தான அக்டோபர் சோஷலிச ப்புரட்சியைப்பற்றி புதுமைக்கவி பாரதி
பாடினான் .உலகைக்குலுக்கி புது யுகம் படைத்த அந்த மகோன்னதப்புரட்சிக்குப்பிறகு இப்போது சோவித் யூனியனில் மற்றொரு மாபெரும்
புரட்சி நடைபெற்று வருகிறது.. அது தான் பெரிசுத்ரோய்க்கா அதாவது மறு சீரமைப்பு..
அக்டோபர் புரட்சியைப்போன்றே பெரிசுத்ரோய்க்காவும் உலகுக்கு வழிகாட்டும் விடிவெள்ளியாகத் திகழும் என்று மனிதகுலம் எல்லையற்ற
ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறது. – -பதிப்புரையில்
நாம் அனைவரும் பூமி என்ற ஒரேகப்பலில் பயணம் செய்யும் பயணிகளாவோம். அந்தக்கப்பல் உடைந்து நொறுங்குவதை நாம் ஒருக்காலும் அனுமதிக்கக்கூடாது.
எமது அணுகுமுறைதான் ஒரே சரியான அணுகுமுறை என்று நாங்கள் கருதவில்லை. எல்லா நிலைமைகளுக்கும் எல்லாப்பிரச்சினைகளுக்கும் பொருந்தக்கூடிய சர்வாம்சத்தீர்வுகள் ஏதும் எம்மிடம் இல்லை..
வாசகர்களுக்கு- பகுதியில்
———————————————————————————————————————-
எங்கள் ராக்கெட்கள் ஹால்லியின் வால் நட்சத்திரத்தை ஆராய்கின்றன. அதிசயக்கத்தக்க துல்லியத்தோடு வெள்ளிக்கோளுக்குப் பறந்து செல்கின்றன.,,,,,,,,,,,,,
பல சோவியத் வீட்டு உபயோக சாதனங்கள் மோசமான தரம் கொண்டவையாக இருப்பதைப்பார்க்கிறோம்.
உண்மையான அல்லது கற்பனையான வெற்றிகள் பற்றிய பிரசாரம் மேலோங்கி வந்தது.. புகழாரம் சூட்டுவதும் இச்சகம் பேசுவதும்
ஊக்குவிப்பட்டன.
– பக்கம் -20
———————————————————————————————————————
ஆடம்பர ஆர்ப்பாட்டமான பிரசாரத்தின் மூலமும் நடவடிக்கைகள் மூலமும் மத்திய அளவிலும் ஸதல அளவிலும் எண்ணற்ற ஆண்டு விழாக்கள் கொண்டாடுவதன் மூலம் இவற்றை எல்லாம் முடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
-பக்கம் 22
——————————————————————————————————————–
எமது நாட்டின் ஆன்மீக வாழ்க்கையில் எப்போதுமே ஒரு மகத்தான பங்காற்றி வந்துள்ள இலக்கியம் அநீதியின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் அதிகார துஷ்ப்பிரயோகத்தையும் ஈவு இரக்கமின்றிச்சாடி வந்திருப்பதிலும் வியப்பேதுமில்லை.
பக்கம்-26
———————————————————————————————————————-
லெனின் முன்வைத்த ஒரு சிறந்த சூத்திரத்தை நான் நீண்டகாலமாகவே ஆதரித்து வந்திருக்கிறேன் சோஷலிசம் என்பது வெகு ஜனங்களின் ஒரு ஜீவனுள்ள படைப்பாக்கம் என்பதே அந்த சூத்திரமாகும். ஆணை இடுபவர்கள் அவற்றை நிறைவேற்றுபவர்கள் என்று சமுதாயம் இரு பிரிவுகளாகப்பிரிக்கப்படுகின்றது. அத்தகையதல்ல சோஷலிச சமுதாயம்.
-பக்கம்-..33
——————————————————————————————————————-
நாங்கள் சோஷலிசப்பாதையிலிருந்து விலகிச்செல்வோம் என்று நம்புபவர்கள் பெருத்த ஏமாற்றத்தையே அடைவார்கள்.
– பக்கம்-45
——————————————————————————————————————–
சமூக விஞ்ஞானிகள் ஒன்றிணைந்த எதையும் இன்னும் எமக்கு வழங்கவில்லை. சோஷலிசத்தின் அரசியல் பொருளாதாரம் காலத்திற்கொவ்வாத கண்ணோட்டங்களில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இனியும் அது வாழ்க்கையின் தருக்கவியலுக்கு இசைந்ததாக இல்லை.
தத்துவமும் சமூகவியலும்கூட நடைமுறையின் தேவைகளுக்குப்பின்தங்கி இருக்கின்றன. வரலாற்று விஞ்ஞானம் பெருமளவுக்குத் திருத்தி எழுதப்பட வேண்டும்.
பக்கம்-67

எமது சமுதாயத்துக்கு புதிய சாயம் பூசும் வேலையோ அதன் புண்களுக்குக்கட்டு கட்டும் வேல அல்ல..மாறாக சமுதாயம் பூரணமாக புனர்ஜென்மமெடுப்பதை ப்,புத்துயிர் பெறுவதையே அது குறிக்கிறது.,,,,,,,,,,,,,,,,நாங்கள் சோவியத் ஆட்சியை மாற்றப்போவதில்லை. அதன் அடிப்படைக்கோட்பாடுகளையும் கை விடப்போவதில்லை..
– பக்கம்-75
———————————————————————————————————————-
பல ஆண்டுகளில் இப்போதுதான் முதல் தடவையாகக்கட்சி மற்றும் அரசாங்க த்தலைமையில் சிபின்சு எனும் புதிரான கல் உருவச்சிலைகளுக்குப்பதிலாக மனித முகங்களை கொண்டவர்களைப்பார்க்கிறோம். இதுவே மாபெரும் சாதனையாகும்.
-பக்கம்-99
———————————————————————————————————————-தொழிலாளர் சட்டங்கள் சம்பந்தப்பட்ட சகல பிரச்சனைகளிலும் அவற்றை அமல்படுத்துவதிலும் உழைப்பாளி மக்களினு ரிமைகளைப்பாதுகாப்பதிலும் தொழிற்சங்கங்களின் முடிவே இறுதியானது. ,,,,,,,
சோஷலிச அமைப்பில் உழப்பாளி மக்களுக்கு எத்தகைய பாதுகாப்பும் தேவையில்லை என்று நினைப்பது தவறாகும்.
– பக்கம்-173
———————————————————————————————————————-
தேசிய இனப்பிரச்சனைக்குத்தீர்வு காண்பதில் ரஷ்ய தேசம் ஒரு தலை சிறந்த பங்கை ஆற்றிற்று.
பக்கம்-181
——————————————————————————————————————–
உலகப்பொருளாதாரத்தில் தோன்றும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்ட சகல இயக்க நிகழ்வுகளையும் ஆராய்வதற்கு எழுபது மார்க்சுகள் கூடப்போதாது என்று லெனின் கூறினார். – பக்கம்-237
———————————————————————————————————————-
கம்யூனிசத்தின் பகைவர்கள் என்ன நினைத்தபோதிலும் மனிதனது நலன்களுக்காகவும் அவனது சுதந்திரத்திற்காகவும் அவனது மெய்யான உரிமைகளையும் புவி இயல் நீதியையும் பாதுகாப்பதற்காகவுமே கயூனிசம் தோன்றி வாழ்ந்து வருகிறது.
– பக்கம் 241
———————————————————————————————————————
கூட்டுத்தேட்டத்தின் மூலமும் முயற்சியின் மூலமும் தான் உண்மை கண்டுபிடிக்கப்படுகிறது.. பக்கம் 259
——————————————————————————————————————–
வெடிக்கத்தயாராக இருக்கும் ஆபத்தான பிரச்சினைகளை க்கிடப்பில் போடமுடியாது – பக்கம் 274
———————————————————————————————————————-
நாம் அனைவரும் மாணவர்கள். வாழ்க்கையும் காலமும் தான் நமது ஆசிரியர். – -முடிவுரையில்.
———————————————————————————————————————-

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

எஸ்ஸார்சி


சம்பந்தமில்லை என்றாலும்
தமிழர் தலைவர் -ஆசிரியர் சாமி சிதம்பரனார்
வெளியீடு. பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் 50, ஈ வெ கி சம்பத் சாலை
பெரியார் திடல் ,வெப்பெரி சென்னை 600007. முதற்பதிப்பு 1939. நன்கொடை ரூ.65. பக்கங்கள் 272.
—————-
சீரார் ஈ.வெ.ரா அவர்களுக்கும், எனக்கும் உள்ள அக நகும் நட்பு. யார் என்ன சொன்னபோதிலும் என்றும் குறையாது.
-சி.. இராஜகோபாலாச்சாரியர். கவர்னர் ஜெனரல். தில்லி -22-11-48 – பக்கம்-199
——————————————————————–
தமக்கென வாழாது பிறர்க்கே வாழ வேண்டுமென்பது,பண்டைத்தமிழரின் உயரிய கருத்தாகும். இச்ச்£ரிய கருத்தை தம் வாழ்நாட்களில்
கொண்டு, அதன்படி எல்லியும், காலையும் தூய தொண்டாற்றி மக்கள் அனைவரும் மாயவலையில் சிக்காவண்ணம் அறிவு கொளுத்தி
பிறப்பொக்கும் என்னும் தூய மொழியை இம்மாநிலத்தில் நிலைநாட்டிய பேரறிஞருள் நம் ஈ.வெ.ராமசாமி அவர்கள் முதல்வர் என்றால் ,வேறு கூறவேண்டுமோ?
-காஞ்சி.. பரவசுத்து இராஜகோபாலாச்சாரியார் பி.. ஏ. – பக்கம்-235
தேர்இல்லை,திருவிழாஇல்லை தெய்வம் இல்லை என்றார் நாயக்கர்.சுவாமியை குப்புறப்போட்டு வேட்டி துவைக்கலாம் என்றார். இவரைக்காட்டிலும் பழுத்த நாச்திகன் வேறு எவருமே இருக்க முடியாது. ,,,,,,,, மனசாட்சிக்கும்,தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை நாச்திகன் என்று அழைக்கும் அன்பர்கள் நாச்திகம் யாது என்றே தெரிந்துகொள்ளவில்லை என்றே சொல்வேன். அநீதியை எதிர்க்கத்திறமையும்,தைரியமும் அற்ற ஏழைகளாய்ச்சொரணையற்றுக்கிடந்த தமிழர்களினுள்ளத்தைக்கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம் நாயக்கரைப்பெரிதும் சேர்ந்ததாகும் அவர் இயற்கையின் புதல்வர்.! மண்ணை மணந்த மணாளர்! மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு நாயக்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம்,,,, தமிழ்நாட்டின் வருங்கால பெருமைக்கு நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை; தூதுவன்; வருங்கால வாழ்வின் அமைப்பு.
–வ.ரா-( காந்தி-இதழில்-1933) பக்கம்-238

தமிழ்நாட்டில், இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்கமுடியுமென்று தயங்காமல் கூறுவேன்.,,,,, அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை.
– கல்கி- ( ஆனந்தவிகடன்-1931) பக்கம்-240
இன்னமும் சொல்லுகிறேன். நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக்குறுக்கே இருந்திருந்தாலும் இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும், இந்தப்பாவிகள் மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும் அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும் பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல.
– பக்கம்- 14
———————————————————————————————————————-
ஆனால் எப்போது உங்கள் மனசாட்சியும் பகுத்தறிவும் இடங்கொடுத்து நீங்கள் கழகத்தில் சேர்ந்துவிட்டீர்களோ அப்போதிலிருந்து
உங்கள் பகுத்தறிவையும் மனசாட்சியையும் ஒரு புறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு கழக்கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றவேன்டியதுதான் முறை..
-பக்கம்-16
——————————————————————————————————————
செத்துப்போன ஜெனரல் டயர் துரையை விடக்கொடுமையானவர்கள் நம் நாட்டில் உயிரோடு இருந்துகொண்டு பிள்ளைக்குட்டிகள் பெற்றுக்கொண்டு சுகமாய் வாழ்கிறார்கள்.,,,,,,,தெருக்களிலே போகக்கூடாது கிட்டத்திலே வரக்கூடாது என்கிறார்களே? இதைப்பற்றி
யாருக்கும் உறைக்கிறதா? இதனால் நமக்கு அவமானமாய் இருக்கிறதே என்று படுகிறதா? எந்தப்பத்திரிகையாவது இம்மாதிரி நடவடிக்கைகளைப்படுபாவி ‘டயர்த்தன்மை’ என்று எழுதுகிறதா?
-பக்கம்-171
பெண்கள் விடுதலைக்குப்பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் ஏமாற்றுவதற்குச்செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.
,,,எங்காவது பார்ப்பனரால் பார்ப்பனரல்லாதார்க்குச்சமத்துவம் கிடைக்குமா?,,,,,,,,பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லது பெண்களுக்கு விடுதளை இல்லை.
-பக்கம்-172
தமிழர்களைத்தட்டி எழுப்பித்தமிழர்களுக்காகப்போராடும் ஈ, வெ.ரா. ஔர் தமிழர் அல்லர். அவர் ஒரு கன்னடியர்.
-பக்கம்-188

பார்ப்பன நஞ்சு எவ்வளவு கொடிது, எத்தகைய கொல்லும் சக்தியை த்தன்னகத்தேகொண்டது என்பதை விளக்குவதுதான் அவரது.,,,,,,,,
——————————————————————————————————————— பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடேயாகும். ஆதலால் நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால் ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான்,,,,,,,,,பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத்தின்னாது. அதுபோலவாக்கும் நம் பார்ப்பனத்தன்மை.
-பக்கம்-197.
———————————————————————————————————————-

10/04/065 ல் கம்ப ராமாயணத்திற்குத் தீ 1 நாடெங்கும் பெரியார் அவர்களின் அறிக்கைப்படி திராவிடர் கழககத்தினரால் கம்பராமாயனத்திற்கு தீ இடப்பட்டு ’விடுதலை.’ அலுவலகத்துக்குச் சாம்பல் அனுப்பி வைக்கப்பட்டது.
-பக்கம்-264
23,24-1-71 ல் சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு 24/01/71 ல் ஞாலம் புகழ் சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம்.
அய்யா ஊர்வலம் வந்தார். ஊர்வலத்தில் இந்துமதக்கடவுளின் யோக்கியதைகளை அம்பலப்படுத்தும் சித்திரங்கள் டிரக்குகளில் இடம் பெற்றன. இராமனுக்கு ச் செருப்படி வீழ்ந்த்தும் இறுதியில் இராமனுக்குத்தீ மூட்டப்பட்டதும் இந்த மாநாட்டில்தான். ஒருவன் மனைவி மற்றவனை விரரும்புவது என்பதைக் குற்றமாக்கக்கூடாது’ என்ற சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இந்தமாநாட்டில்தான். இவைகளை வைத்துக்கொண்டு பார்ப்பனர்களும் அவர்களது பாதம் தாங்கிகளும் தி மு க வுக்கு எதிராகத்தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்கள்.
-பக்கம்-268
———————————————————————————————————————-

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி