ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – வளர்ச்சியும் விடுபட்ட அடையாளங்களும்

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

ஸ்ரீனி



நமது பொருளாதார,உலகமயமாக்க கொள்கைகளினால்
நாடு சுபிட்ச ஒளி வட்டத்திற்குள் வந்து விட்டது என்கிற சரக்கை அடுத்தடுத்து வந்த ஆளும் கட்சிகள் எல்லாமே கூவிக் கூவி பிரசாரம் செய்கின்றன.வீட்டு விலை உயர்ந்து வானம் தாண்டினாலும் நாளொரு வண்ணமாக வளரும் வாங்குவோர் கூட்டம்,புதிது புதிதாக தினந்தோறும் சந்தையில் நுழைக்கப்படும் வாகன ரகங்கள்,பக்க வாத்யமாக “உங்க லெவலுக்கு இதெல்லாம் கண்டிப்பா வேணுங்க”என்று மயக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் ஜமுக்காளத்தில் வடி கட்டாத பம்மாத்து விளம்பரங்கள். காசை அள்ளி வீசி செலவு செய்ய தயாரான ஜனத்திரள்.நாம் காணும் இவை அனைத்தும் உயர் மற்றும் உயர்-மத்திய வர்க்க நகரவாசிகளை குறிக்கிறது,குறி வைக்கிறது.இந்தியாவின் பெரு நகரங்களில் வாழும் இவர்களின் ஜனத் தொகை எத்தனை விழுக்காடு? இந்த நகரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தேசீய முன்னேறத்தை பிரதிபலிக்கின்றன என்கிற மாயை உருவாக்கப்பட்டு வருகிறது.

சாப்ட்வேர் ஏற்றுமதி,கட்டுமானத் துறை,20,000 புள்ளிகளை தாண்டிக் குதித்த சென்செக்ஸ் என்று நமது சமூகப் பொருளாதார மாற்றத்தால் விளைந்த வளர்ச்சியின் அடையாள ஈஸ்ட்மென் கலர் சித்திரங்கள்.இது ஒரு சிறு பக்கம்.மறு பக்கத்தில்,அது பெரிய பக்கம், இதே இந்தியாவில் மானில வாரியாக விவசாயிகளின் தற்கொலைகள் தினப்படி தொடர்கிறது.பட்டியலில் இப்போது நெசவாளர்களும் சேர்ந்து விட்டனர்.

அதாவது அரசு கூறும் பொருளாதார வளர்ச்சி,அதன் பலன்கள் நகரவாசிகளை,அதிலும் ஒரு குறிப்பிட்ட மிகச் சிறிய சத விகிதத்தினரை மட்டுமே போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதுதான் வருத்தமான நிஜம்.அரசே குறிப்பிடும் சராசரி நகர வாழ் இந்தியனின் மாத வருவாயில் இந்த பம்மாத்து விளம்பரங்களில் காட்டப்படும் ஜட்டிகளில் ஒரு நாலு ஜட்டி வாங்கலாம். கிராமங்களில் அதற்கும் வக்கில்லாத மாத வருவாய்.தினமும் கிராமங்களிலிருந்து இடம் பெயர்வோர் எண்ணிக்கையில் நல்ல முன்னேற்றம்.உண்மையான இந்தியா
நமது கிராமங்களில்தான் இருக்கிறது எனச் சொன்னவர்
கூட இன்றைய நிலையில் நகரத்துக்கு இடம் பெயர்ந்து இருப்பார் என்பது வேதனையான யதார்த்தம்.இடம் பெயர்ந்தவர்கள் எல்லோருக்கும் நகரத்தில் வேலையும்,கூலியும் கிடைப்பதில்லை.பிளை ஒவர்களின் அடியில் குடித்தனம் நடத்த,நகரத் தெருக்களில் பிச்சை எடுக்கிறார்கள்.

ஊடகங்களில் காட்டப்படும் இந்தியாவிற்கும், உண்மையான இந்தியாவிற்கும் அறுபதுக்கும் அதிகமான வித்தியாசங்கள் இருக்கின்றன.அம்மாவாசைக்கும் அப்துல்காதருக்கும் கூட சம்பந்தம் என்ன என்று சொல்லி விடலாம்,ஆனால் gdp உயர்ந்தது,inflation குறைந்தது என்ற கூவல்களுக்கும் நடை முறை விலைவாசிக்கும் என்ன சம்பந்தம் என்பது விளங்காத சிதம்பர(?!) ரகசியம்!

மெகா மால்களும்,மல்டிபெளெக்ஸ¤ம்,சென்செக்ஸ¤ம்,கோடிகளுக்கு ஏலம் போகும் கிரிக்கெட் வீரர்களும் நாடு முன்னேறிக் கொண்டிருப்பதன் அடையாளம் என்றால்
சமூகத்தில் அதிகமாகிக் கொண்டு வரும் பொருளாதார துருவ வித்தியாசங்கள் எந்த முன்னேற்றதிற்கு அடையாளம்?
புரியவில்லை!

அஞ்சலி:தமிழ் எழுத்து நடையில் trend setter என்றால் அது திரு.சுஜாதாவைத்தான் குறிக்கும்.இன்று எழுதும்,எழுத நினைக்கும் பலருக்கும் அவர் நடையின் பாதிப்பு உண்டு என்றால் மிகையாகாது. அவர் அரங்கன் அடி சேர்ந்தாலும் அவர் எழுத்து பல்லாண்டு பல்லாண்டு வாழும்.

ஸ்ரீனி


kmnsri@rediffmail.com

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி

ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

ஸ்ரீனி


தமிழகத்தில் சேது திட்டம் தமிழர்களுக்கான நெடுநாள் கனவு என்ற உணர்வையும், வடக்கில் மதவாத உணர்வையும் தூண்டி நமது ஓட்டு அரசியல் நடக்கிறது.ராமர் இருந்தாரா,அவர் எஞ்சீனீயரா,அவர் அருந்திய உணவு,மற்றும் பான வகைகள் என்ன என்று ஒரு புறம், ராமர் இங்கேதான் உட்கார்ந்தார்,இதுதான் அவர் நடந்த பாதை,இது அவர் போட்ட செருப்பு,இது அவரது அம்பு விழுந்த இடம் என்று மற்றோரு புறம்.கவைக்குதவாத உணர்வுகளைத் தூண்டும் வெட்டித்தனமான இப் பிராசரங்களினால், திட்டத்தின் முக்கியமான நோக்கங்களும்,அணமை மற்றும் தொலை நோக்கு சமூகப் பொருளாதார பலன்களும்,திட்ட மதிப்பீடுகளும், காற்றில் பறந்து விட்டன.கஹானி ராம்ஜிகி என்று மெகா ஷோதான் தெரிகிறது. வெட்டியும்,ஒட்டியும் ராமபிராபல்யம் முழங்குகிற முழக்கத்தில்,ஏதாவது உள்ளூர் அல்லது அயலூர் பல்கலை அவருக்கு விரைவில் முனைவர் பட்டம் கொடுக்க சாத்தியக்கூறுகள் தென்படுகிறது.இப்படியே போனால் எப்போது சேதுவை மேடுறுத்தி எந்த வீதியை சமைப்பது?

ராமர் பாலமும்,பாபர் மஸ்ஜித்தும் ஒப்பிடப்படுகின்றன.
அத்துடன் சோம்நாத்,மற்றும் ராமானுஜர் கால கர சேவைக்குள்ளான வழிபாட்டுத் தலங்களையும் சேர்த்து, பின்னர் நாவுக்கரசர்,ஞான சம்பந்தர் மடங்களை எதிர்த்து மார்வாடி,குஜராத்தி ஜெயின்களும் ஆர்ப்பாட்டம் செய்தால் நாடு
முன்னேறும்! இப்படியே நூறு,ஆயிரம் வருடங்கள் பின்னோக்கியே நம் வாதங்களை வைத்துக் கொண்டிருந்தால்,
“ஆக்கபூர்வமான” என்கிற பதம் நம்மிடையே அழிந்து விடும்.

வரலாறு கூறும் நமது விஞ்ஞான அறிவு,உலக அதியசங்களைத் தந்த கட்டுமானக்கலைகள், நிர்வாக, ராஜரீக முறை வழிகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பிரிட்டிஷார் தொடங்கி, இன்றைய அரசியல் வியாபாரிகள் வரை பலவிதமாக எழுதப்பட்டு விட்ட நமது சாதீய சரித்திரத்தை மட்டும் விடாமல் பேசிக் கொண்டிருக்கிறோம்.எதன் அடிப்படையில்,எந்த நம்பிக்கையில் நாம் அடித்துக் கொள்கிறோம் என்பது புரியவில்லை.

பாப்ரியை அரசியலாக்கி ஆட்சியையும் பிடித்தவர்களுடன் இரெண்டு திராவிடக் கட்சிகளும் ஆட்சியில் இடம் பெற்றனரே.என்ன கொள்கையில்?நாம ஆட்சியில் இருக்கும் போதே டெண்டர் விட்டு காசு பார்க்கணும்.ஆட்சியில் இல்லாத போது? ராமரையோ,பாபரையோ வைத்துக் கட்டை போட வேண்டும்.
இந்த temparamentதான் கோலோச்சுகிறது.சயின்ஸ்?அது எப்பவோ சமாதியாகி விட்டது.

ராமர்ன்னாலும் குண்டு!பாபர்ன்னாலும் குண்டு!எந்த குண்டு எப்போ வெடிக்குமோ என்கிற பயத்தில் வயிற்றுப் பிழைப்புக்கு தினசரி வாழ்வில் நசுக்கல்பட்டு பயணிக்கும் பாமரனுக்கு பாபராவது, ராமராவது.

ஸ்ரீனி


kmnsri@rediffmail.com

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி

ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – காந்தி கிரியும்,கருத்துச் சுதந்திரமும்

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

ஸ்ரீனி



இன்றைய வாழ்வின் நிலைகளில் நாம் தூக்கி எறிந்த மஹாத்மாவின் தியரி, காந்தி கிரியாக எவ்வாறு வேலை செய்யும்,ஜெயிக்கும் என்பதை மிகவும் யதார்த்தமாக கூறும் படம்,லாஹே ரஹோ முன்னாபாய்.படம் முடியும் போது தியேட்டரில் எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு எழுந்து நின்று கை தட்டியது நான் இதுவரை காணாத ஒன்று!

படத்தில் காட்டியது போல் நடக்குமா,பலிக்குமா பலிக்காதா என்பதைவிட ஒரு awareness create ஆனது நல்ல முயற்சி!ஓட்டுப் போட்டவர்கள் மீதும்,வரிப் பணத்தை விழுங்கும் அதிகார வர்க்கத்தின் மீதும் நம்மில் பொதுவாக அனைவருக்கும் நம்பிக்கை போய் விட்டதல்லாமல் வெறுப்பும் வந்து விட்டதை காந்தி கிரியின் வெற்றி உறுதி செய்கிறது!

மகாத்மாவின் பல கருத்துக்கள் இன்று நம்மிடையே செல்லுபடியாவதில்லை.அதை புரியச் சொல்வதற்கு அவை காந்தி கிரியாக மாறி வர வேண்டியுள்ளது.ஆனால் இந்தக் கருத்துச் சுதந்திரத்தை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு சில கோஷ்டிகள் ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது.அப்சலுக்கு தூக்கு தேவையா என்ற விவாதம் இன்னும் முடியவில்லை.சிலர் பகத்சிங் கூட தீவிரவாதிதான் என்கிறார்கள்!பகத்சிங் தீவிரவாதியோ,அப்சல் தேசீய வாதியோ,மும்பை குண்டு வெடிப்பிலும்,காஷ்மீரில் தினம் தினம் சாகும் நம் மக்களுக்கும் எந்த “வாதம்” நியாயம் கூற முடியும்.எத்தனையோ குழந்தைகள் அநாதையாகி விட்டன.சொந்த நாட்டிலேயே அகதிகளாகும் சோகம்!

அடுத்த நாளிலிருந்து வயிறு கழுவ திரும்பவும் அதே ரெயிலில் போய் வருபவருக்குத்தான் அந்த பயத்தின் வலி தெரியும்.மும்பாய் குண்டு வெடிப்பு மற்றும் சக மனித உணர்வுகள் பற்றி புதிய மாதவி திண்ணையில் எழுதியது, முக்கியமாக மும்பய்கர்களின் எண்ணத்தை பிரதிபலித்தது.

அங்கிள் சாமும்,விக்டோரியாவும் இன்றுதான் அடி படுகின்றன.எத்தனையோ ஆண்டுகளாக நம் நாடு இந்த “வாதங்களினால்”அடிபடுகிறது.அப்போதெல்லாம் எங்கே போனார்கள் இந்த உலக நாயகர்கள்?we condemn these killings என்று சம்பிரதாயஸ்டேட்மென்ட் விட்டவர்கள், தான் அடிபட்டவுடன் வெகுண்டு, வரும் விருந்தினர் பான்ட் அவிழ்த்துப் பார்க்கிறார்கள்!ஆனால் அவர் கடவுள் மாதிரி!அடிப்பவரும் அவரே! அழுபவரும் அவரே! அடி வாங்குவது மட்டும் வேறு ஒருவர்!!

வந்தே மாதரம் பாடுவதா,தீவிரவாதமா,அப்சல் தூக்கா,நர்மதா அணையா எதையும் நம் கருத்து சுதந்திரக் குரூப்
விடுவதில்லை!நர்மதா அணை என்றவுடன் ஒரு செய்தி:நம் கருத்துச் சுதந்திரக் கொடி கட்டி அவிழ்க்கு முன் சைனாவில் யாங்க்விட் அணையை கட்டி விட்டனர்!பல கிராமங்கள் மட்டுமல்ல,சில நகரங்களும் இந்த அணையினால் ஜல சமாதியாகி விட்டன!எத்தனை லட்சம்(கோடி?) மக்கள் இடம் பெயர்ந்தனர்,அவர்களுக்கு என்ன கொடுக்கப் பட்டது என்ற சரியான விவரம் தெரியவில்லை.சீன அரசில் விவரம் வெளி வரவும் வராது.ஆனால்,யாங்க்விட் நர்மதாவை விட மிக மிகப் பெரிய அணை!கருத்து கப்ஸாக்களையும் அரசியல் டிராமாக்களையும் தாண்டி நர்மதாவுக்கும் அங்கு இடம் பெயர்ந்த,பெயர வேண்டிய மக்களுக்கும் தீர்வு கிட்டுமா?

எது கருத்து?எது வரை சுதந்திரம் போன்றவை வெட்டிக் கேள்விகள். நம் க.சுதந்திரக் காவலர்களைப் பார்த்து கனவிலும் கேட்கக் கூடாத கேள்விகள்.கேட்டவர்களை ஊடகங்களில் புகுந்து வறுத்து எடுத்து விடுவார்கள்.அதனால்தானோ என்னவோ,இது போன்ற
புருடாக்கள்தான் இன்று ஊடகங்களில்,page 3யில் நன்கு கவனிக்கப்படுகின்றன!

சூப்பர் மேனுக்கு மவுசு ஜாஸ்தியா?(விரல்) சூப்புகிற மேனுக்கு மவுசு ஜாஸ்தியா?!!

ஸ்ரீனி


Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி

ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – தமிழ் வலைப்பூக்களின் பரிணாமம்

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

ஸ்ரீனி


பிளாக் எனப்படும் வலைப் பூ எழுதும் உந்துதல் உள்ளவருக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப் பட்டது.தமிழ் வலைப் பூக்கள் துவக்கத்தில் தொழிற் நுட்பக் காரணங்களில் தடுமாறினாலும்,மெல்ல மெல்ல மற்ற மொழியினர் வியக்கும் வண்ணம் வளர்ந்தது.படித்தவர்கள், இளைஞர்கள்,பெண்கள் என்று பல தரப்பிலும் பதிவர்கள் உண்டாயினர்.அச்சில் தன் எழுத்தைப் பார்க்க முடியாதவர்களுக்கு தங்கள் கருத்தைப் பகிரவும்,எழுத்தை மேம் படுத்தவும் இது நல்ல மேடையாக அமைந்தது.

நன்றாக வளரும் வேளையில் பிடித்தது சனி! சாதாரண ஆத்திக நாத்திக வாதங்கள் சாதிச் சண்டையில் கொழுந்து விட,இது எந்தஅளவிற்கு போய் விட்டது என்றால்,இன்று ஒரு பதிவர் எனக்கு அந்த நடிகரைப் பிடிக்கும் என்றால் அவரை நடிகரின் சாதியோடு இணைத்து ஏசும் அளவிற்கு!ஒரு குறுப்பிட்ட சாதியினரின் ஆதிக்கம் மதுரையில் அதிகமாம்.அதனால் எனக்கு மதுரை பிடிக்கும் என்றால் கூட ஏச்சு விழுகிறது!பாரதியார் பற்றி எழுதினால்,அதில் சாதி,தேசீயம் என்றால் அதில் சாதி,வால் மார்ட் பற்றிக் கூறினாலும் சாதி,திரை விமர்சனம் எழுதினால் கூட சாதி!எதைப் பற்றி கூறினாலும் அதில் சாதியை நுழைப்பதே தலையாயமாகி விட்டது.இன்று தமிழ் மணம் என்ற திரட்டியில் பாருங்கள்;வரும் பதிவுகளில் பாதிக்கு மேல் சாதி மதங்களைப் பற்றித்தான்.

இதில் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள் பெண் பதிவர்கள்தாம்.பல பெண்கள் தங்கள் எழுத்தா ர்வத்தை வெளிப்படுத்துவதற்கு வலைப் பூக்கள் ஒரு நல்ல வடிகாலாயின.ஆனால் என்ன சொல்வது?இன்று பல பெண்கள் வலையில் எழுதுவதில்லை.காரணம்,பின்னோட்டம் என்ற பெயரில் வரும் ஆபாசங்கள்தான் மூல காரணம்.என்னதான் கமென்ட் மாடரேஷன்களைப் போட்டாலும் இந்த ஆபாசங்கள் புகுந்து விடுகின்றன.அதிலும் மணமான பெண்கள் என்றால் பின்னோட்ட ஆபாசம் அதிகம்.

எதிர் கருத்துக்களை நாகரீகமாகவும் வெளியிட முடியும் என்று தெரியாதவர்களா இவர்கள்.இல்லை என் கருத்துக்கு எதிர் கருத்தே கூடாது என்பவர்களா?இதில் குரூப்பிசம் வேறு!அதாவது dictorship of idiots என்பார்களே அதுதான் நடக்கிறது. ஒருவருடய கருத்தை மற்றவர் மாற்ற இயலுமா? இயன்றாலும்அது தேவையா?இதனால் விரோத பாவங்கள் கூடுதலும்,கால விரயமும் தானே மிச்சம்.

மற்ற மொழிகளின் வலைப் பூக்களைப் பார்த்தால் போர்னோ மற்ற வகையறாக்கள் ஒரு 3 விழுக்காடு இருக்கும்.நம் மொழியினர் போல சாதிச் சாக்கடை நாறவில்லை!செம்மொழி அல்லவா!!

வலையில் எழுதும் முக்கால் வாசிப் பேர் நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள்,இந்தியாவிலும்,கடல் கடந்தும்.வயதில் இளையவர்கள்.படித்தவரிடம் நல்ல பண்பு இருக்கும் என்பது பொதுவான ஒரு நம்பிக்கை.இன்றைய பதிவுகளைப் பார்த்தால் நம்பிக்கை பொய்யோ எனப் படுகிறது.

ஸ்ரீனி


kmnsri@rediffmail.com

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி

ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

ஸ்ரீனி


சுகேது மேத்தா (authour of maximum city,which talks about mumbai and new york) அபிப்பராயப்படி,90களில் இருந்த அளவு “டான் கம்பெனிகள்” இன்று நம் இளைஞர்களை ஈர்ப்பதில்லை.இன்று இவர்களை ஈர்ப்பது தீவிரவாதம்.அதாவது கம்பெனியின் பெயர்,தொழில்,தலைமை மாறி விட்டது!எதுவாக இருந்தாலும் வேலையில்லாத இளைஞனுக்குத் தேவை பணம்.அது இன்று தீவிரவாத கம்பெனி மூலம் சுலபமாகக் கிடைக்கிறது என்கிறார்.அவர் கூற்றுப்படி இன்று ‘முக்கால்வாசி கம்பெனிகள்’ தீவிரவாதி தலைவர்களிடம்.பழைய தொழில் கம்பெனிகளின் நெட் வொர்க் ஆயுதம்,ஹவாலா சமாச்சாரங்களுக்கு சுலபமாக கை கொடுக்கிறது.

அமெரிக்கா செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு தாவூத்தை க்ளொபல் டெர்ரரிஸ்ட் என்று அறிவித்து,தாவூத்தின் வங்கிக் கணக்குகளையும் நிதிகளையும் முடக்குவதாகக் கூறியது.தாவூத்துக்கும் தாலிபானுக்கும்,அல்கொய்தாவுக்கும் மற்ற தீவிரவாத இயக்கங்களுக்கும் இடையே உள்ள ‘நிதிக் கூட்டணி’ உறவு பற்றி விளக்கிக் கூறிய அமெரிக்க அரசு,எவ்வாறு இந்த இயக்கங்கள் தாவூத் கம்பெனியின் நெட்வொர்க் மூலம் நிதி மற்றும் ஆயுத போக்குவரத்தை கையாள்கிறது என்பதையும் விளக்கியது.ஆக தாவூத்தை உலகளாவிய தீவிரவாதியாக அமெரிக்கா டிக்ளேர் செய்துள்ளதிலிருந்து தெரியலாம்,கம்பெனிகளின் வியாபார மாற்றம் பற்றி. அமெரிக்கா நினைத்தால் ‘பாக்’கில் பதுங்கியிருக்கும் 93 குண்டு வெடிப்பு கதாநாயகர்(களை) வெளிக் கொணர உதவ முடியாதா.சுகேதுவின் கூற்றுப்படி அந்த நாயகர்கள் வெளி வர முடியாது.வந்தால் கக்கி விடுவார்கள்.அது ‘பாக்’யையும் அதற்கு கைங்கர்ய சேவை செய்து வரும் நாட்டையும் சங்கடப்படுத்தி விடும்.ஆகையினால் அவர்கள் அங்கேயே “சமாப்தி” ஆவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்கிறார்.

புதிய கம்பெனிகளால் ஜிஹாத்தின் உண்மையான அர்த்தம் மறைக்கப்பட்டு அது தீவிரவாத சொல்லாக மாறி விட்டது.தீவிரவாதமோ நக்ஸல் இயக்கமோ அழிவது நமது இளைஞர்கள்.பொருளாதார ஏற்றத் தாழ்வுகளில் அடிபட்டு வேலையும் கிட்டாமல் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் இவர்களை புது பிராண்ட் கம்பெனிகள் உடனடியாக ஈர்க்கின்றன!

நம் நாட்டின் பொருளாதாரம் அவ்வளவு மோசமா என்ன?
வாங்கும் திறன் பன் மடங்கு கூடி விட்டது.அதன் அடையாளம் பெருகி விட்ட வாகனப் போக்குவரத்து.இன்று பன்னாட்டு வாகன தயாரிப்பாளர்கள் தங்களது உயர் விலை வாகனங்களுக்கு நம் நாட்டை குறி வைக்கிறர்கள்.FMCG,white goods எனப்படும் பொருட்களுக்கு அதிக வர்த்தகம் நம் நாட்டில்.இவற்றின் விளம்பர பட்ஜெட் தலை சுற்ற வைக்கிறது.நமது பொறியியலாளர்களின் திறமை எவருக்கும் குறைந்தது அல்ல. பொருளாதாரம்,தகவல் தொழில் நுட்பம்,பொறியியல் என்று நல்ல வளர்ச்சி.

வளர்ச்சியின் பலன் பரவலாக போய்ச் சேரவில்லை என்பதுதான் நிஜம்.சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வு என்பது மிகவும் ஆபத்தானது,நாட்டிற்கு.ஆனால் ஓட்டிற்கும்,அதிகார ஊழலுக்கும் அது மிகவும் அத்தியாவசியமானது.அதன் பலனாகத்தான் விவசாயத்தை தொழிலாகவும் இல்லாது சேவையிலும் சேர்க்காது எலிக் கறி சாப்பிட வைத்து விட்டோம்.உணவு கொடுக்கும் விவசாயத் துறையில் அரசியல் நுழைந்ததின் விளைவே தற்கொலைகள்!விவசாயத்துக்கு அரசு கொடுக்கும் மான்யங்கள்,கடன்கள்,அவற்றின் தள்ளுபடிகள் சாதாரண விவசாயிக்கு போய் சேருகிறதா என்பது சந்தேகம்.தற்கொலை ரேங்கில் டி.வி நடிகைகளுடன் விவசாயியும் போட்டி போடுவது,வெறும் சோகமல்ல,வெட்கக்கேடு!

ஆனால் பிரமிக்க வைப்பது நம் தெருவோர அரசியல் வாதிகளின் நிதி நிலைமை!அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளில் நாட்டின் பட்ஜெட்டே அடங்கி விடுகிறது! எங்கிருந்து எவரிடமிருந்து இவ்வளவு பணம் வருகிறது?
நமது அதிகார வர்க்கமோ கேட்கவே வேண்டாம்.அரசு ஊழியர் என்போர் மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்குபவர் public servants என்று யாராவது அசட்டுத்தனமாக நினைத்தால் அவர்களா பொறுப்பு!
கை நிறயக் காசு,பை நிறைய நோட்டு!’93 குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பு 13 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து கொண்டிருக்கிறது.குண்டு உள்ளே வர உதவிய நம் லஞ்ச லாவண்யங்களை கழுவில் ஏற்ற வேண்டாமா?

லஞ்சத்துக்கு அடுத்தபடி இட ஒதுக்கீடு பிரச்சினை இல்லாத
வளர்கின்ற தொழில் பிச்சையெடுப்பது!அங்கிங்கெனாதபடி எங்கும் பிரவாகமாய் பரவி,சாதி,மத,இன வயது பேதங்களை
கடந்து நாளும் வளரும் தொழில் இது.நாட்டின் பெரிய நகரங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது
அதிகம்.அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள்.நெஞ்சைக் கனக்க வைக்கும் விஷயம் இது.பேருந்தில்,ரெயிலில்,ரோட்டில்,கோவில் வாசலில் என்று பல இடங்களில் இந்தக் குழந்தைகளைக் காணும் போது பட்டென்று மனதில்
தைப்பது அவர்கள் எதிர்காலம்.ஆண் குழந்தை பத்து வருடம் கழித்து அதிர்ஷ்டம் இருந்தால் “தாதா”வாகி குரு திசையில் ‘டானா’கி விடுவான்!ஆனால் பெண் குழந்தை? இன்று கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பெண் குழந்தை பத்து வருடம் கழித்து நிற்கப் போகும் வாசல் எது?தெரிந்த உண்மை குத்தும் போது கண்ணீருடன் நம் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடாக நம்மீதே கோபம் வருகிறது.சுதந்திரத்தில் நாம் போட்ட பட்ஜெட், ஐந்தாண்டுத்
திட்டங்கள் எல்லாம் இவர்களின் அளவை ஏன் குறைக்கவில்லை?நாட்டின்எதிர்காலத்தை பாதிக்கப் போகும் பெரிய சமூக பொருளாதாரப் பிரச்சினை இது.கருத்து சுதந்திரக் கூப்பாடு போடும் கப்ஸாக்களும்,வின்யாச புகழ் அறிவு ஜீவிகளும் இது பற்றி ‘ம்’கூட சொல்லுவதில்லை.

எங்கு தவறினோம்?யார் காரணம்?சமூகத்தின் பேரில் நாம் காட்டும் பொறுப்பற்ற தன்மையே மிகப் பெரிய காரணம்.வீட்டைச் சுத்தம் செய்து தெருவில் குப்பை கொட்டுவதுதான்
நமது கலாச்சாரம்.இந்த குப்பையிலிருந்துதான் சிக்குன் குனியாவும்,தாவூத்களும் உருவாகுகிறார்கள்.ஒழுங்கீனம் என்பது பெருமையாகி விட்டது.விதிகளை மீறினால் ஹீரோ என்பது இலக்கணமாகி விட்டது!எல்லோரும் இன்னாட்டு மன்னரல்லவா!ஒழுங்கீனத்தை ஓஹோ என்று நடத்தும் அரசியல்வாதியும்,அதிகார வர்க்கமும் சமூகத்தின் ஒரு அங்கம்தானே.அவர்களிடம் வேறு என்ன எதிர் பார்ப்பது!சர்ச்சில் கூறியபோது மட்டும் கோபம் மட்டும் வந்தது!

உன்னைச் சுற்றியுள்ள மக்கள்தான் தேசம்;அவர்களுக்கு உதவுவதுதான் தேச சேவை என்பது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!இதில் ஜாதியேதுமதமேது!இதை உணருவதற்கு அறிவுஜீவிகள் தேவையில்லையே!

ஸ்ரீனி

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி

ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

ஸ்ரீனி


இஸ்ரேலிய,இஸ்லாமிய,யூத வின்யாசங்கள் திண்ணையில் அளவுக்கு அதிகமாக வருவதால் இந்தக் கட்டுரை.உலகளாவிய தீவிரவாதம் யூதர்களாலா அல்லது இஸ்லாமியர்களாலா என்று வேறு வாதப் பிரதிவாதங்கள்.நான் முன்பே சொன்னது போல இதில் நம்ப ஊர் சாதிகளையும் வறுத்து விடுகிறார்கள்.ஐரோப்பாவில் யூதர்களை ஹிட்லருக்கு முன்பே விரட்டுவது தொடங்கி விட்டது. ஸ்பெயின் யுத்தம் பிரசித்தி பெற்றது.இன்றும் ஐரோப்பாவில் யூத வெறுப்புணர்வு கண்கூடு.ஏன்?அங்கே இஸ்லாமியர் எத்தனை விழுக்காடு உள்ளனர்!

ஸ்விஸ்ஸில் எடுத்துக் கொண்டால்,அங்கே எத்தனை யூத வங்கிகள் உள்ளன.அங்கே நடப்பது இஸ்லாமியர் ஆட்சியா என்ன!ஸ்விஸ் வங்கிகளில் உள்ள நம் நாட்டு கருப்பை இங்கே கொண்டு வர முடிந்தால்,இன்னும் எட்டு-பத்து ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு பட்ஜெட் பற்றாக்குறை இருக்காது என்பது ஒரு செய்தியாக வந்தது.உண்மையா?

ஹிட்லர் ஜெர்மனியில் முன்பே பரவலாக இருந்த யூத வெறுப்பை ஊதி ஊதி உபயோகித்தார்! பாலஸ்தீனியர் யூதர்களை வெறுக்க ஒரு காரணம்,பாலஸ்தீன நிலங்களை ஏப்பம் விட்டு யூத நாடு உருவாகியதால்.சரி,மற்ற சகோதர வளைகுடா நாடுகள் ஏன் மௌனம்?எல்லா இஸ்லாமிய நாடுகளும் சேர்ந்து சவுண்ட் விடலாமே! இஸ்ரேலை ஓட்டலாமே!என்னய்யா பிரச்சினை?

சவுண்ட் விட்டால் வளைகுடாப் பிரபுக்களின் வர்த்தகம் படுத்து விடும்.பெரிய அண்ணன் கை முறுக்கு வேலையை காட்டி விடுவாரே!பெட்ரோ பணத்தை இங்கேயே செலவழிக்கவும் என்று சகல சல்லாப வசதிகளுடன் கில்லாடி அண்ணன் போர்டு போட்டல்லவா பிஸினஸ் செய்கிறார்!

சகோதரர்களுக்கு மறைமுக உதவி என்று கூறிக் கொள்ளலாம்.அப்படி எவ்வளவு உதவி செய்ய முடியும்.தெரிந்தால் ஆபத்து! அமெரிக்க ஆதரவு இல்லாவிட்டால் எல்லா இஸ்லாமிய நாடுகளும் தன்னைக் குதறி விடும் என்பது இஸ்ரேலுக்கும் தெரியும்.மூத்த அண்ணனின் பிரித்தாளும் ராஜ தந்திரம் தன் நாட்டுப் பொருளாதாரப் பற்றில் வந்தது. மெச்சத்தகுந்தது!

இயேசுவை சிலுவையில் அறைந்த யூதர்களுடன் இன்று so called கிரித்துவ நாடுகள் எல்லாமே நட்புடன்!ஆனால் இஸ்லாமோ எதிர்ப் பாசரையில்! யோசித்துப் பார்த்தால் புரியும் “அண்ணா”வின் சாதுர்யம்!ரெண்டு பக்கமும் லாவணி பாடுவதில் “அவர்” ரொம்பவே கெட்டி!

தாஜ் அவர்கள் எழுதியதைப் போல,மத அழுத்தம் மிக்கவர்கள் எல்லா மதத்திலும் உள்ளனர்.பிரச்சனையே இந்த அழுத்தங்கள்தான்.இதற்கு அரசியல் தூபங்களும் துணை.எப்படி குஜராத்தில் “அஹிம்சை”ஆடுகிறதோ,அதேபோல் நம்ப ஊரில் “லுங்கி கட்டாத”டயலாக் புண்யவான்கள்.சாதாரண பொதுஜனத்திற்கு யூத வின்யாசமும் தெரியாது,இஸ்லாமிய விரோதமும் கிடையாது.அவர்கள், “இங்கயும் தண்ணி மேலேர்ந்துதானே விழுது” என்ற நிலையில் உள்ள யதார்த்த வாதிகள்.பிழைப்பைத் தேடி நாளும் குண்டு வெடிக்குமோ என்ற பயத்தில் ஓடுபவருக்கு எந்த “இஸம்”களும்”த்துவா”க்களும் தெரியாது;தேவையும் இல்லை. வெறுப்பது நம் பக்கத்து நாட்டார் இந்த நாட்டிற்குள் மதத்தின் பெயரால் நடத்தும் அட்டூழியங்களை.ஏனெனில் விளைவுகளின் அடி அவர்கள் தலையில்,வயிற்றில் தானே விழுகிறது.

ஸ்ரீனி

kmnsri@rediffmail.com

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி