கடிதங்கள்
ஆகஸ்ட் 21, 2003
21.08.03
அன்புள்ள ஆசிரியருக்கு,
முத்துராஜா எனது கடிதங்களில் உள்ள ‘முரண் ‘ களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜெயகாந்தன் பற்றிப் பிறர் கூறியுள்ள கருத்துக்களை மேற்கோள் காட்டுவதைத் தவிர்த்துவிட்டேன் என்று கூறியதன் பின்னணி வேறு; எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகளைச் சுட்டிக்காட்டியதன் பின்னணி வேறு. முதல் வாக்கியம் ஜெயகாந்தன் குறித்த என் கட்டுரை பற்றியது. என் விமர்சனக் கட்டுரையில் யாரையும் துணைக்கழைக்க நான் விரும்பவில்லை என்று சொன்னேன். இரண்டாவது வாக்கியம் என் கட்டுரை மீதான சிவகுமாரின் எதிர்வினைக்கு நான் எழுதிய பதிலில் இடம் பெற்றது. சிவகுமார், என் கருத்துக்ளை விமர்சித்து எதிர்வினையாற்றியிருந்தார். அவருக்கு பதில் எழுதும்போது எனக்கு வந்த சில எதிர்வினைகளை நான் சுட்டிக்காட்டினேன். கட்டுரை என்பது வேறு; எதிர்வினை என்பது வேறு; எதிர்வினைக்கான எதிர்வினை என்பது முற்றிலும் வேறு. என் விமர்சனத்திற்குள் பிறரது கருத்துக்களைத் துணைக்கழைக்க விரும்பாததற்கும் எதிர்வினை மீதான விவாதத்தில் வேறு சில எதிர்வினைகளைப் பதிவுசெய்வதும் இயல்பானவை; பரஸ்பர முரண் அற்றவை.
எனக்கு வந்த எதிர்வினைகளை ஆதாரமாகக்கொண்டு என் வாதத்தை நான் கட்டமைக்கவில்லை என்பதால் அவற்றை ‘ஆதாரபூர்வமாக ‘ முன்வைக்காமல் கோடிகாட்டிவிட்டுச் சென்றேன். திண்ணை ஆசிரியர் கோரினால் யார், எப்போது, என்ன சொன்னார் என்பது போன்ற தகவல்களைத் துல்லியமாகவும் விவரமாகவும் தர இயலும்.
நரேஷுக்கு ஒரு வார்த்தை: நேற்று சு.ராவைப் பாராட்டிவிட்டு இன்று விமர்சிக்கிறாயே என்ற ரீதியில் ஜெயமோகனை நான் கேட்கவில்லை. உறவில் நெருக்கமும் விலசலும் சகஷம் என்றும் அதற்காகப் பதற்றமடையாமல் நெருக்கம்/விலகல் சார்ந்த காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும்தான் நான் கூறினேன். நரேஷ் என் கடிதத்தை இன்னொரு முறை படித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
– அரவிந்தன்
வரதட்சிணையையும் உரிமைச்சொத்தையும் வித்தியாசம் காட்டி திரு ஜெயபாரதன் சொல்லியிருக்கிறார். எனது கேள்வி, வரதட்சிணைக்கும் உரிமைச்சொத்துக்கும் இன்று சட்டப்படி வித்தியாசம் இருக்கிறதா ? திருமணத்தின் போது கொடுக்கும் ஒரு குந்துமணி தங்கத்தைக்கூட வைத்துக்கொண்டு பெண் வீட்டார் போலீசுக்குப் போய், வரதட்சிணை கேட்கிறார் என்று புகார் செய்யமுடியும். அப்படி ஒரு திகிலோடு ஏன் மாப்பிள்ளை வீட்டார் திருமணம் செய்யவேண்டும் ? முன்பே பேசிவைத்திருப்பதால்தானே ? அதனை சட்டப்படி ஆக்குங்கள் என்கிறேன். என்ன தவறு ?
வரதட்சிணை பிரச்னையில் பெண் வீட்டாரின் பிரச்னையும் இருக்கிறது என்று எழுதினால் உடனே நான் மாப்பிள்ளை வீட்டுக்காரனாக ஆகிவிடுவேனா ? அல்லது பெண் குழந்தைகள் இல்லாத அரக்கப் பரம்பரை ஆகிவிடுவேனா ? என்ன பேச்சு இது ?
ஆணுக்கு முதல் தேவை பெண்ணன்று. பெண்ணின் சொத்து என்று சொன்னால் என்ன பொருள் ? எல்லா ஆண்களுக்கும் இது பொருந்துமா ?
இவ்வாறு வரதட்சிணையை சட்டப்பூர்வமாக ஆக்கினால் பெண்களுக்கு திருமணமே ஆகாது என்று கூறுகிறார் ஜெயபாரதன். எனக்கு இன்னொரு சகோதரியிடமிருந்து வந்த கடிதம் கூட இதையே கூறியது. கற்பனை செய்து பாருங்கள். தமிழ்நாட்டின் 90 சதவீத ஆண்கள், மனைவியே வேண்டாம் என்று இருந்துவிடுவார்களா ? நான் பிறந்த வீட்டுக்கு ஓடிவிடுவேன் என்று பயமுறுத்தி பிறந்த வீட்டுக்குப் பணம் கறக்கும் பெண்களைக் கூட எனக்குத் தெரியும். இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு ஆண்களின் தேவையை விட, ஆண்களுக்குப் பெண்களின் தேவை அதிகம். ஆகவே அப்படியெல்லாம் பெண்கள் திருமணம் ஆகாமல் நிற்கமாட்டார்கள். அஞ்சத்தேவையில்லை.
நிரந்தர பிற்போக்குவாதி, சமூக அஞ்ஞானி
– சின்னக்கருப்பன்.
- பைத்தியம்
- காமராசர் கலந்து கொண்ட போராட்டங்கள்
- கடிதங்கள்
- இந்திவாலா மட்டும்தான் இந்தியனா ?
- குறிப்புகள் சில ஆகஸ்ட் 21 2003 – ஈரான்:மதவாதிகளும் தாரளவாதிகளும்-ஜான் ஸ்டின்பெய்க்: ஒரு வித்தியாசமான கோணத்தில்- உயர்கல்வியும் உச
- விடியும்! நாவல் – (10)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபது
- குப்பைகள்
- ஏன் ?
- பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும்போது ஏன் அமெரிக்கா அதனைக் கண்டுகொள்ளவில்லை ?
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- வினிதா வாழ்க! போலிஸ் அராஜகம் ஒழிக!!
- பெயர் தெரியாத கவிதை! ?
- ஒரு விரல்
- இபின்னிப் பின்னே எறிந்தாள்!
- இயற்கையே இன்பம்
- தேடுகிறேன்…
- நீ வருவாயென…
- துவாக்குடிக்கு போகும் பஸ்ஸில்
- ‘நானும் ‘ மற்றும் ‘தானும் ‘
- வைரமுத்துக்களின் வானம்
- ராமர் காட்டும் ராமராஜ்யம்
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Astronomer, Giovanni Cassini (1625-1712)]
- வாரபலன் – புதுக்கவிதை, எம்.எஸ் திருப்புணித்துற, ஓவிய மரபு இன்னபிற ஆகஸ்ட் 16, 2003
- தமிழ்ச் சினிமா- சில குறிப்புகள்
- காபூல் திராட்சை
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- தேடியதும் கிடைத்ததும் கரிச்சான் குஞ்சுவின் ‘நுாறுகள் ‘ (எனக்குப் பிடித்தக் கதைகள் – 73)
- உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து
- ஓவியம் புரிதல்(பார்க்க,ரசிக்க)
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- பயாஸ்கோப்பும் ஃபிலிமும்
- பாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 4
- மரம்
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- சிகரட்டில் புகை
- உலக சுகாதார தினம்
- நட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.
- ஆயிரம் தீவுகள்
- அகதி
- அறியும்
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- கடத்தப்பட்ட நகரங்கள்
- என் இனிய சிநேகிதனே !
- சாமி- பெரிய சாமி