பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -3 – மனித உரிமைப் போரில் மரித்த வீரர்: ஷகீல் பட்டான்
முதாஹிர் காஸ்மி அல்மன்சூர்
நிலப்பிரபுத்துவச் சுவர்களைத் தகர்க்க முயன்ற ஒரு போராளி தானே அதற்குப் பலியானார். இந்தப் பலியினால், நிலப்பிரபுத்துவச் சுவர்கள் தகருமா என்பது இனித்தான் தெரியும்.
செப்டம்பர் 24-ல், கராச்சி மருத்துவமனையில் ஷகீல் பட்டான் மரணமுற்றார். மிகவும் துணிச்சலான, அச்சமில்லாத மனித உரிமைச் செயலாளி அவர். சிந்தியில் இருந்த ஹரி மக்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர் அவர். கொத்தடிமையாய் வாழ்க்கையைக் கழித்து தம்முடைய மனித அடையாளங்களைத் தொலைத்துவிட்ட பாவப்பட்ட மக்கள் இவர்கள். கிராமப்புற பாகிஸ்தானில் கொத்தடிமை முகாம்களில் சிந்து மானிலத்தின் உட்புறத்தில் வசிக்கும் கொத்தடிமைகளை விடுவிக்க வேண்டி இவர் போராடினார். ஆகஸ்ட் 10-ம் தேதி மர்மமான முறையில் ஒரு சாலை விபத்தில் கயமுற்ற இவர், கழுத்துக்குக் கீழ் உணர்வற்றுப் போனார். முதுகுத்தண்டு பாதிப்பு இதன் காரணம். இந்த விபத்து பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. பல சிந்தி நிலச் சுவான்தாரர்களுக்கு ஷகீல் பட்டான் சங்டம் விளைவித்தவர். எல்லா கொத்தடிமைகளையும் அடையாளம் கண்டு விடுவிக்க அவர் முனைந்தார். விபத்தின் பின்னணியில் சதித் திட்டம் இருப்பதாக மற்ற மனித உரிமைப் போராளிகள் ஐயம் கொள்கின்றனர்.
1996-ல் சிந்து பகுதியில் சங்கார் மாவட்டத்தில் மிகச் செல்வாக்குள்ள ஒருவரான முரீத் கான் மாரி என்பவரின் கொத்தடிமை முகாமை ஷகீல் பட்டான் கண்டுபிடித்தார். ாப்போது பேநசீர் புட்டோ தான் பிரதமர். பாகிஸ்தானின் அரசு நியமித்த மனித உரிமைக் கமிஷனின் ஆய்வுகளின் ஒரு பகுதியாக இந்த முகாம் இவரால் கண்டுபிடிக்கப் பட்டது. மாவட்ட அதிகாரிகளுக்குத் தெரிந்தே இப்படி ஒரு முகாம் நடத்தப் படுவது நாடு முழுதும் பத்திரிகைகளில் வெளியானது. உலக முழுதும் பத்திரிகைகள் இதை வெளியிட்டன.
பாகிஸ்தான் மனித உரிமைக் கமிஷன் இணைப்பாளராகப் பணி புரிந்த ஷகீல் பட்டான் , ஐரோப்பிய கிருஸ்துவ மிஷன் என்ற அமைப்புடன் இணைந்து இந்த முகாம்களை வெளிக் கொணரப் பாடுபட்டார். 200 இந்து உழைப்பாளிகள் – பெண்கள், குழந்தைகள் உட்பட – விடுதலை செய்யப் பட்டனர். இந்த முகாமின் சொந்தக் காரர் முரீத் கான் மாரி. இந்த கொத்தடிமைகள் விடுதலை செய்யப்பட்டது பேநசீரால் மிக பெரிதாக விளம்பரம் செய்யப் பட்டது. ஆனால் இந்தக் கொடுமைக்குக் காரணமான நிலச்சுவான்தாருக்கு எந்த தண்டனையும் இல்லை. பேநசீர் புட்டோவும் கூட ஒருபெருநிலச் சுவான்தார் தான்.
முரீத் கான் மாரி இந்த அடிமைகளைத் தன் பொறுப்பில் தனிச்சிறையில் வைத்திருந்தான். எந்த சம்பளமும் இல்லாமல் இந்த இந்து அடிமைகள் பெரும் வயல் வெளிகளில் வேலை செய்ய நிர்ப்பந்தம் செய்யப் பட்டார்கள். சிறு அளவில் கடன் கொடுத்து இந்த அடிமைகளை தம்முடைய நிலத்தில் வேலை செய்யுமாறு நிலச்சுவான்தார்கள் கட்டாயப் படுத்தினார்கள். இது வழக்கமாய்இ இந்த பிரதேசங்களில் நடைபெறுவதாகும். நிலத்தின் அருகில் குடிசைகளில், சிறிது உணவளித்து இவர்களை அடைத்து விடுவார்கள். மிகுந்த கண்காணிப்பும் உண்டு.
ஷகீல் பட்டானால் இந்த அநீதியைச் சகிக்க முடியவில்லை. இந்த நிலச் சுவான் தார்களுக்கு பெரும் சவாலாய் இருந்தது அவர் பணி. சில கிருஸ்துவ பணியாளர்களுட இணைந்து இவர்களை அடிமைகளை விடுவிப்பதில் முனைந்து நின்றார். 200 பேருக்கு மேல் விடுதலை செய்யப் பட்டார்கள். இந்த நிலப்பிரபு முரீத் கான், சிந்து பகுதியின் விவசாய மக்களுக்கு ஆன்மீக குருவான பீர் பகானாவிற்கும் நெருக்கமானவன்.
1996-ல் மனித உரிமைப் போராளிகள் விடுவிக்கப் பட்ட அடிமைகளுடன் விடுதலைக் காற்றைச் சுவாசிக்கச் செய்த ஷகீல் பட்டானை முரீத் கான் வெறுப்புடன் நோக்கினான். பழகிய மிருகங்கள் போல் இருந்த மனித அடிமைகள் கைவிட்டுப் போவது ஆத்திரத்தை அளித்திருக்க வேண்டும். அபோதே ஷகீல் பட்டானைத் தீர்த்துக் கட்ட முடிவாகியிருக்க வேண்டும்.
ஆகஸ்ட 10-ல் உமர்கோட் என்ற இடத்தின் அருஇகில் ஷகீல் பட்டான் விபத்தில் சிக்கினார். முகலாய அரசர் அக்பர் பிறந்த இடம் இது. இதற்கு முன்பே செப்டம்பர் 1996-ல், முரீத் கான் அடிமை வியாபாரி என்ன செய்தார் தெரியுமா ? விடுவிக்கப் பட்ட அடிமைகள் தங்கியிருந்த மால்தி நகரின் சர்ச்சிற்குச் சென்று 87 பேரைக் கடத்திச் சென்று விட்டான். 100 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய படையுடன் முரீத் கான் வந்தான். 200 மைல்கள் தாண்டி வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, சர்ச்சில் இருந்த பாதிரியார் ஒருவரைத் தாக்கிவிட்டு, 87 பேரை இழுத்துக் கொண்டு போய்விட்டான். இந்த நிகழ்ச்சியால் பாகிஸ்தான் அதிர்ந்தது. உலகமும் அதிர்ந்தது. சில நாட்கள் கழித்து போலிஸ் 85 பேரை விடுவித்தது. மீணுட்ம் அடிமைகள் சுதந்திரம் பெற்றனர். இரண்டு பேரை விடுவிக்க முடியவில்லை. அவர்கள் காணாமல் போய் விட்டார்கள். அந்த இருவரும் இந்த 85 பேருக்குத் தலைமை ஏற்று போராடி இருக்கிறார்கள்.. தாம் கால்நடைகளைப் போல் நடத்தப் படமாட்டோம் என்று சொன்ன இருவரும் காணவில்லை. இன்னமும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
முரீத் கான் தான் சட்டத்திற்குப் புறம்பாக நடப்பதாய் நினைக்கவில்லை. அடிமைகள் விதியே என்று சகித்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களை விடுவித்தது தான் ஷகீல் பட்டான் செய்த மாபெரும் குற்றம் – நிலப்பிரபுத்துவத்தின் சட்டதிட்டங்களுக்கு எதிரான குற்றம். அந்தக் குற்றத்திற்குத் தான் இந்த தண்டனை.
அடிமைகளைக் காப்பாற்றினாலும், ஷகீல் பட்டான் அகால மரணம் அடைந்திருக்கிறார். மனிதப் பண்பாட்டின் தொட்டில் என்று சொல்லப்படும் பிரதேசம் இது. நிலப்பிரபு முரீத் கான் இன்னமும் சுதந்திரமாகத் திரிகிறான். ஏன் ?
Amnesty International
- பேதங்களின் பேதமை
- கடிதங்கள்
- புகையில் எரியும் இராமன்கள்..
- புதிய வானம்
- அல்லி-மல்லி அலசல் (2)
- பிறை நிலவுகள்.
- முக்காலி
- பிச்சேரிச் சட்டை
- தமிழ்
- பத்துக் கட்டளைகள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பனிரெண்டு
- இரண்டு கவிதைகள்
- சொல்லடி…என் தோழி!!
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -3 – மனித உரிமைப் போரில் மரித்த வீரர்: ஷகீல் பட்டான்
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -2
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -1
- வாரபலன் (பலதும் பத்தும்) ஜூன் 21, 2003
- குறிப்புகள் சில 26ஜுன் 2003 (மார்க் போஸ்ட்ர், இணையம்-ஹாரி பாட்டரும் அறிவியலும்)
- சிங்கராஜன்
- விடியும்! (நாவல் – 2)
- உன்னை நினைத்து………
- உரிமையும் பருவமும் (கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 66)
- அரசியல் பாடும் குடும்ப விளக்கு !(ஹே ராம் – கவிஞர் புதியமாதவியின் கவிதைகள் தொகுப்பு- முன்னுரை)
- மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்
- ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி நிலையத்தில் ஸோடியத் தீ வெடி விபத்து! [Sodium Fire in Japan ‘s Monju Fast Breeder Power Reactor]
- வெள்ளி மலையும் குமரிக் கடலும்!
- பழைய கோப்பை, புதிய கள்
- என்னவளுக்கு
- இரண்டு கவிதைகள்
- பரிச்சியம்
- எழுதப்படாத பதில் கடிதம் -யூமா.வாசுகியின் இரவுகளின் நிழற்படம் கவிதைகள் குறித்து
- எங்கேயோ கேட்ட கடி
- எது சரி ?
- நான்கு கவிதைகள்
- படைப்பு
- தியாகம்
- மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 8
- தண்ணீர்க் கொலை
- வடக்குமுகம் ( நாடகம் )
- தினகப்ஸா வழங்கும் செய்திகள் : வாசிப்பது பரிமளா சிறியசாமி
- அதிர்ச்சி (குறுநாவல்)