பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 8
K.ரவி ஸ்ரீநிவாஸ்
காட்கில்,குஹா சாதிய அமைப்பு இந்து மதம் தனக்கு எதிரான குழுக்களை, இங்கு குழுக்கள் என்பது பல்வகை உற்பத்தி நிலையில் உள்ள, சூழலை பல வகையில் பயன்படுத்தும் குழுக்கள் என்ற அர்த்ததில் உள்வாங்க சாதிய அமைப்பினைப் பயன்படுத்திக் கொண்டது, அதன் மூலம் காடுகளில் வாழும் குழுக்களும், நிலையான் விவசாயத்தில் ஈடுபடும் குழுக்களும் தத்தமமுக்குரிய பகுதிகளில் மூலவளங்களை பயன்படுத்தி வர முடிந்தது.ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் சாதியஅமைப்பு முழுமையான இனஅழிப்பாக இல்லாததால் வேடுவர்,சேகரிப்போர் தங்கள் இருத்தலை உறுதி செய்து கொள்ள முடிந்தது. மேலும் ஒரு சில பகுதிகள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டதால் மூல வளங்கள் பகிர்வு என்பது பெரும் சண்டைகளுக்கு காரணமாக இல்லை. இங்கு சாதி என்பது சூழல், மூலவளங்கள் பகிர்வு ஆகியவை குறித்த ஒரு ஒழுங்கமைப்பாகவும் காட்டப்படுகிறது. இந்த விளக்கம் எளிதாகத தோன்றினாலும் இது சாதிய எற்றத்தாழ்வினை விளக்க போதுமானதாக இல்லை. உதாரணமாக விவசாயம் செய்வோர் சாதிய அமைப்பில் அறிவுசார் தொழில் செய்தோரை விட கீழான நிலையிலே இருந்தனர்.அதே சமயம் அதிகாரத்தினை கைப்பற்றியோர் தங்களை சத்திரியர் என்று அறிவித்துக் கொண்டு அதற்கான ‘வரலாறு ‘ களை ஆதாரமாகக் காட்டியதும் நடந்துள்ளது. மேலும் இந்து மதம் அரசு ஆதரவுடன சைன,பெளத்த மதங்களை எதிர்த்து அழிக்க முனைந்தது. உள்வாங்கல் என்பதை விட எதிர்த்து ஒழிப்பதே முக்கியமான உத்தியாக கையாளப்பட்டுள்ளது. எனவே உள்வாங்கல் என்பதே ஒரு வன்முறை உத்திதான். காட்கில்,குஹா மட்டுமே இப்படி வாதிட்டார்கள் என்று கருத வேண்டாம். 2001/2002 ? ல் EPW ல் ஒரு கட்டுரை – சாதியையும், சூழலையும் தொடர்பு படுத்தி ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.
ஆனால் இந்தியாவில் காலனியாட்சி பலம் பெறும் வகையில் சாதிய அடிப்படையிலான சமூக அமைப்பிலும், அதில் நிலவிய மூலவளப்பகிர்வு முறையிலும் பெரிய மாற்றங்கள் இல்லை.முகலாயரின் நீண்ட கால ஆட்சியாலும் இது பாதிக்கப்படவில்லை. எனவே அரசுகள் மாறினாலும் சமூக அமைப்பின் அடித்தளம் அப்படியே நீடித்து என்றே சொல்லலாம். ஆனால் காலனியாதிக்கம் இந்தியாவில் நிலைகொண்ட போது ஐரோப்பாவில் தொழிற்புரட்சியின் தாக்கங்கள் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தத துவங்கின. முன் எப்போதும் இல்லாத வகையில் மூல வளங்களை பயன்படுத்த முடிந்த்து, நீண்ட தொலைவிற்கு மூலப்பொருட்கள், உற்பத்திப்பொருட்களை எடுத்துச் செல்வது சாத்தியமானது. ஐரோப்பாவில் தனிஉடமை முறை வலுப்பெற்றது. பொதுவில் இருந்த நிலங்கள், வளங்கள் நிலச்சுவான்தார்,அரசு வசமாயிற்று(ENCLOSURE OF THE COMMONS). சந்தையே முக்கியமான உறவுமுறையாக மாறியது. தொழிற் புரட்சிக்கு தேவையான தொழிலாளி வர்க்கம் இப்படிபட்ட ஒரு சமூக மாறுதல் மூலமே உருவாக்கப்பட்டது. எனவே காடுகள் ஆவிகள்/வணக்ததிற்குரிய சக்திகள் வசிக்கும் பகுதிகளாக கருதப்பட்ட நிலை மாறி மூல வளங்களுக்கான பகுதிகளாக காணப்பட்டன, மூலவளங்களின் உபயோகம்/பயன்படுத்தல் மீதான தடைகள், குறிப்பாக பண்பாட்டு ரீதியான கட்டுப்பாடுகள் வலுவிழந்தன. இதன் விளைவாக வணிக உபயோகமே முக்கியத்துவம் பெற்றது, சமூகங்களின் தற்சார்பு தேவைகளை மையமாகக் கொண்ட உற்பத்தி முறைகள், உறவுகள் பலமிழந்தன. ஐரோப்பாவில் நடந்த இம்மாற்றங்களின் தொடர்ச்சியாக இந்தியாவிலும் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
காலனியத்தின் சூழல்தாக்கங்கள் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகள் குறித்தும் காட்கில்,குஹா குறிப்பிடுகின்றனர். காலனியம் என்பது வெறும் பண்பாட்டு அழிவினை மட்டும் நிகழ்த்தவில்லை.உலக அளவில் சூழலில் பெறும் மாறுதல்களைக் கொண்டுவந்தது. அடிமை வணிகம், உலகளாவிய சந்தை,கடல்வணிகம் குறித்த போர்கள், என பல வழிகளில் காலனியாதிக்கம் தன்னை விரிவுபடுத்திக்கொண்டது. அதன் காலடிக்சுவடுகள் பதிந்த இடங்களில் சூழ்ல் அழிவும் தொடர்ந்தது. அதன் தாக்கதினை அமெரிக்காவில் துவங்கி, நீலகிரிமலைப்பகுதிகள் வரை பல பகுதிகளில் காணலாம். எனவே சூழல் வரலாறு என்பதை பிற வரலாற்று சான்றுகளுடன் சேர்த்து படித்தால் மனித வரலாறும்,இயற்கையின் வரலாறும் பிண்ணிப்பிணைந்துள்ளதை காணமுடியும். மனிதனின் துயரமும்,இயற்கையின் துயரமும் இணைந்தே காணப்பட வேண்டும்.
1492 ல் கொலம்பஸ் அமெரிக்காவை ‘கண்டுபிடித்தார் ‘. அதன்பின் ஐநூறு ஆண்டுகளாகிய பின்னும் காலனியத்தின் தாக்கங்கள் இன்னும் தொடர்கின்றன. 1992 நிகழில் எழுதிய கட்டுரைகளில் அமெரிக்காவில்(வட,தென்) காலனியாதிக்கத்தின் சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்து எழுதியிருக்கிறேன். காலனியாதிக்கம் உலகெங்கும் ஒரே மாதிரியான விளைவினையே ஏற்படுத்தியுள்ளது. அதனை உலாகாளாவிய மூலவளச்சுரண்டல் முறை எனலாம். GLOBAL ENCLOSURE OF COMMONS என்பது இன்னும் பொருத்தமான பெயர். உலகெங்கும் ஒரே சூழல் பயன்படுத்தும்/சுரண்டும் முறையினை உருவாக்கிய காலனியாத்திக்கத்தின் தேவைகளுக்காக இந்தியக் காடுகள் மாற்றப்படுவதே இந்தியாவில் சூழல் மீதான அதன் முதல் போர்.
(தொடரும்)
ravisrinivas@rediffmail.com
- பேதங்களின் பேதமை
- கடிதங்கள்
- புகையில் எரியும் இராமன்கள்..
- புதிய வானம்
- அல்லி-மல்லி அலசல் (2)
- பிறை நிலவுகள்.
- முக்காலி
- பிச்சேரிச் சட்டை
- தமிழ்
- பத்துக் கட்டளைகள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பனிரெண்டு
- இரண்டு கவிதைகள்
- சொல்லடி…என் தோழி!!
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -3 – மனித உரிமைப் போரில் மரித்த வீரர்: ஷகீல் பட்டான்
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -2
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -1
- வாரபலன் (பலதும் பத்தும்) ஜூன் 21, 2003
- குறிப்புகள் சில 26ஜுன் 2003 (மார்க் போஸ்ட்ர், இணையம்-ஹாரி பாட்டரும் அறிவியலும்)
- சிங்கராஜன்
- விடியும்! (நாவல் – 2)
- உன்னை நினைத்து………
- உரிமையும் பருவமும் (கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 66)
- அரசியல் பாடும் குடும்ப விளக்கு !(ஹே ராம் – கவிஞர் புதியமாதவியின் கவிதைகள் தொகுப்பு- முன்னுரை)
- மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்
- ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி நிலையத்தில் ஸோடியத் தீ வெடி விபத்து! [Sodium Fire in Japan ‘s Monju Fast Breeder Power Reactor]
- வெள்ளி மலையும் குமரிக் கடலும்!
- பழைய கோப்பை, புதிய கள்
- என்னவளுக்கு
- இரண்டு கவிதைகள்
- பரிச்சியம்
- எழுதப்படாத பதில் கடிதம் -யூமா.வாசுகியின் இரவுகளின் நிழற்படம் கவிதைகள் குறித்து
- எங்கேயோ கேட்ட கடி
- எது சரி ?
- நான்கு கவிதைகள்
- படைப்பு
- தியாகம்
- மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 8
- தண்ணீர்க் கொலை
- வடக்குமுகம் ( நாடகம் )
- தினகப்ஸா வழங்கும் செய்திகள் : வாசிப்பது பரிமளா சிறியசாமி
- அதிர்ச்சி (குறுநாவல்)