மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

ஜெயமோகன்


மதிய உணவுக்கு முன்பு அரங்கில் பங்குபெற்றவர்களில் நடக்கும் ஆரோக்கிய நிலையில் நிலையில் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அருகே இருந்த ஃபெர்ன் ஹில் குன்றுக்கு நடந்து சென்றோம். வெங்கட் சாமிநாதன் , தேவகாந்தன் , அபிலாஷ் ஆகியோ வரவில்லை . ஃபெர்ன் ஹில் வனத்துறையால் சீர்திருத்தப்பட்ட காடு . அங்கு ஒரு பார்வைக் கோபுரம் உண்டு. அதில் ஏறிப்பார்த்தால் ஊட்டியின் முழுத்தோற்றத்தையும் பார்க்க முடியும். காடு வழியாக நடந்தபடி இலக்கியம் பேசுவதென்பது ஊட்டி கூட்டங்களின் சிறப்பம்சமாக எப்போதுமே இருந்து வந்துள்ளது . மாலைதான் திரும்பி வந்தோம். ஏழு மணிக்கு அடுத்த அமர்வு .குளிர் நன்றாக ஏறிவிட்டிருந்தது .

நான்காம் அமர்வில் ஜெயமோகன் கட்டுரையை சுருக்கமாக முன்வைத்தார் . நீளமான கட்டுரை ஏற்கனவே பிரதி செய்யப்பட்டு அனைவருக்கும் அனுப்பப்பட்டிருந்தது . ஜெயமோகன் தன் கட்டுரைமீதான விவாதத்துக்கு உதவியாக மு தளைய சிங்கத்தின் சில மேற்கோள்களையும் தொகுத்து வாசித்தார்.அவற்றின் பிரதிகளும் வினியோகிக்கப்பட்டன. ஜெயமோகன் கட்டுரை மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது . முதற்பகுதி மு தளையசிங்கத்தை வாசிப்பதில் உள்ள வாசகத்தடைகள் , மு தளையசிங்க த்தின் சொந்தத் தடைகள் மற்றும் அவர் அணுகுமுறையின் அடிப்படைப்பிரச்சினைகள் ஆகியவை குறித்து பேசியது . இரண்டாம் பகுதி அவர் என்ன சொல்கிறார் என்பதை தொகுத்துச் சொன்னது . மூன்றாம் பகுதி அவரது இன்றைய முக்கியத்துவம் என்ன என்பது பற்றி விவாதித்தது .

ஜெயமோகன் கட்டுரையில் முதல்பகுதியில் அ] மு .தளையசிங்கம் தெளிவாக சிந்திக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டு முக்கியமான முதல் நிலை சிந்தனையாளர்கள் படைப்பிலக்கிய ஆக்கத்துக்கு சமான மான மனநிலையில் படிமங்கள் மூலம் சிந்திக்கிறார்கள் , ஆகவே அவர்களில் பெரும்பாலோரிடம் தருக்க ரீதியான தெளிவை எதிர்பார்க்க முடியாது என்றார் ஆ] மு தளையசிங்கம் தன் ஆய்வு உபகரணமாக இந்திய சிந்தனைமரபின் கருதுகோள்கள் சிலவற்றை பயன்படுத்தியது ஆழமான சிக்கல்களை உருவாக்கியது , இந்திய சிந்தனை மரபின் உபகரணங்கள் எவ்வாறு நவீன சிந்தனைத்தளத்தில் பயன்படுத்த முடியாதவையாக பின்தங்கியுள்ளன என விளக்கினார் .இ ] மு தளையசிங்கத்தின் கற்பனைகள் உட்டோப்பியக் கற்பனைகள் அல்ல. உட்டோப்பிய கற்பனை என்பது லெளகீகமான தருக்க அடிப்படையும் உள்ளது என்றும் மு தளையசிங்க முன்வைப்பது ஒரு மெய்யியல் கற்பனையே என்றும் விளக்கினார். மெய்யியல் ஊகங்களுக்குயுள்ள முக்கியத்துவம் நமது அடிப்படைக் கருத்துக்களை அவற்றின் தளத்துக்கு கொண்டு சென்று அவற்றின் உண்மையான மதிப்பென்ன என்று காணலாம் என்பதே என்றார் . உ] மு தளையசிங்க ஒரு தரிசனிகர் என்று வகுத்த ஜெயமோகன் தரிசனிகரில் எப்போதுமே ஒரு வகையான பிளவுண்ட தன்மை உள்ளது ,இது மனப்பிளவுக்கு அருகே இருப்பது , முக்கியமான தரிசன நூல்கள் பல மனப்பிளவு ஆக்கங்களும் கூட என்றார் . மெய்யுள் அப்படிப்பட்ட மனப்பிளவு ஆக்கமே என்றார் .

இரண்டாம் பகுதியில் ஜெயமோகன் மு தளையசிங்க என்ன சொல்கிறார் என கூறுகையில் அ] மு தளையசிங்கம் ஒரு முற்போக்காளராக இருந்து அடுத்த கட்டத்தை நோக்கிநகர்ந்தவர் .இதற்குக் காரணம் அவரது மெய்யியல் தேடலே என்றார் . மற்ற மார்க்ஸியர் விலகி நவீனத்துவம் நோகி சென்றபோது மு தளையசிங்க நவீனத்துவத்தையும் தாண்டி வெளியே சென்றதற்கு காரணம் அவரது ஆன்மீகமே என்றார் ஆ] மு தளையசிங்கம் தன் காலகட்டத்தில் மற்ற சிந்தனையாளர்களை பாதித்த பரிணாம சித்தாந்தம் மற்றும் மனமுழுமை குறித்த சிந்தனைகளின் அடிப்படையில் மானுட குலத்தின் அடுத்த கட்டத்தைப்பற்றிய ஊகங்களை உருவாக்கினார் . அதன் விளைவே பேர்மனம் என்ற அவரது ஊகம். அம்மனம் உருவாகும் சமூக அமைப்புக்கு அவர் பூரண அத்வைதநிலை என பெயரிட்டார். இ] மு தளையசிங்கத்தின் பார்வையில் இலக்கியம் இன்று மேல்மட்ட வாழ்க்கையை சித்தரித்து அதன் உச்ச நிலையில் ஆழத்தை குறிப்புணர்த்துவதாகவே உள்ளது . அனைவரும் ஆழமான மனவெளிப்பாட்டை அடையும் காலகட்டத்தில் இவ்விலக்கியங்கள் மதிப்பிழந்துபோய்விடும் .அன்று ஆழமே சகஜ நிலையாக உள்ள இலக்கியம் உருவாகும் அதை அவர் பூரண இலக்கியம் என்கிறார் .

மு தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன என ஜெயமோகன் கூறும்போது நான்கு விஷயங்களை சுட்டிக்காட்டினார் அ] மேலான சிந்தனையாளர்களில் அவர்கள் முக்கியப்படுத்தும் விஷயத்தை தவிர்த்து சிறு சிறு வரிகள் கூட ஆழமான சிந்தனைக்கு நம்மை இட்டு செல்லும். அம்மாதிரி வரிகளை மு தளையசிங்க த்தின் கட்டுரைகளில் காணலாம் என்றார் .உதார்ணமாக இலக்கியம் அசல் பரவசத்தை உருவாக்குவதில்லை , பிறஅனுபவங்கள் மூலம் பெற்ற பரவசத்தை ஞாபகப்படுத்தவே செய்கிறது என அவர் சொன்னதை சுட்டிக்காட்டுகிறார் . ஆ] மு தளையசிங்கம் தன் சிந்தனைகளில் தன் காலகட்டத்தின் மிக முக்கியமான பிரச்சினைகளை அடையாளம் கண்டார் . அவை ஒன்று , எதிர்முனைகள் மூலம் இயங்கும் தத்துவத்தரப்புகள் சமரசம் மூலம் அசைவற்று போய் ஒரு உறைவு நிலை உருவாகும் என்பது .இரண்டு , மெய்யியலையும் அறிவியலையும் இணைக்கவேண்டிய அவசியத்தை , முழுமையான சிந்தனை தேவை என்பதை வலியுறுத்தினார் என்பது .இ] மு தளையசிங்கம் தன் சிந்தனைகள் மூலம் மார்க்ஸிய மெய்யியலின் போதாமையை உணர்ந்து அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதைப்பற்றி யோசித்தார். தனிமனித விடுமையையும் உள்ளிட்ட ஒரு மார்க்ஸியத்தை அவர் உருவகித்தார் எனலாம் . ஈ] மு தளையசிங்கம் ஒரு விளிம்புநிலை சிந்தனையாளர் .அவர் சிந்தனைகளின் கடைசி சாத்தியத்தின் விளிம்பில் நகர்பவர்.ஆகவே நாம் பேசும் ஒவ்வொன்று ம் அதன் எல்லையில் எவ்வாறாக அர்த்தப்படுகின்றன என்று பார்க்க வரால் முடிந்தது .அவரது முக்கியத்துவம் இதுவே என்றார் ஜெயமோகன்

****

எம் யுவன் – இங்கு ஜெயமோகன் முன்வைத்த கட்டுரையில் பொதுவாக இருந்த நோக்கு இது என்று எனக்கு தோன்றியது , ஜெயமோகன் மு தளைய சிங்கத்தின் சிந்தனை முடிவுகளை அனைத்தையும் ஏறத்தாழ நிராகரிக்கிறார் .அவரது ஆய்வு உபகரணங்களை முழுக்க ஐயப்படுகிறார். அவரை முன்னால் சென்றவர் ,ஆனால் வழிதவறியவர் என்று ஜெயமோகன் மதிப்பிடுகிறாரோ என்று படூகிறது . ஆக அவர் ஏற்பது தளையசிங்கம் தன் காலகட்டத்து அடிப்படைப்பிரச்சினைகளை அடையாளம் கண்டார் , அவற்றை தன்னுடைய சொந்த சிந்தனைகளை அடிப்படையாக வைத்து ஆராய முயன்றார் என்பதை மட்டுமே . அதாவது அவரது ஈடுபாட்டை , தீவிரத்தை மட்டுமே ஏற்கிறார் என்று படுகிறது .

ஜெயமோகன்- நான் மு தளையசிங்கத்தை ஏற்பது அவரது அசல்தன்மைக்காக .இது சாதாரணமான விஷயமல்ல. என் கட்டுரையிலேயே இதை சொல்லியிருக்கிறேன் .சிந்தனையாளர்களில் அசல் சிந்தனையாளர்கள் மிக மிக குறைவு . சிந்தனையில் முடிவுகள் தீர்வுகள் எல்லாம் பெரிய அளவில் முக்கியமானவையல்ல. அவை எப்படியானாலும் ஒரு கால கட்டத்துக்கு பிறகு காலவதியாகும் . மு தளையசிங்கம் ஒரு வகையில் இருத்தலிய சிந்தனையாளர்களின் சமகாலத்தவர் .அவர்களில் எத்தனைபேரின் சிந்தனை முடிவுகள் இன்று மீதமுள்ளன ? நான் கல்லூரியிலே படிக்கும் நாட்களில் சிந்தனையாளர் என்றால் அது சார்த்ர் தான். இன்று நமக்கே பல கட்டுரைகளை படிக்கும்போது சாதாரணமாக இருக்கிறது .ஆக சிந்தனையாளன் உருவாக்குவது ஒரு கோணத்தை மட்டுமே . அதை மு தளையசிங்கத்தின் எழுத்துக்களில் காணலாம். இன்று நாம் அசலாக சிந்திக்க ஆரம்பித்தால் என்ன பிரச்சினை வரும் என்பதை அவரது தோல்விகள் உணர்த்துகின்றன.அவ்வகையில் அவரது அத்தனை முயற்சிகளும் முக்கியமானவையே .

எம் யுவன் – இந்திய சிந்தனைமரபின் உருவகங்களை ஒரு படிமமாக ஏன் பயன்படுத்தக்கூடாது ?எத்தனையோ பழங்குடிப் படிமங்களை நாம் இப்போது பயன்படுத்துகிறோமல்லவா ?

ஜெயமோகன்- அது சாத்தியம்தான். ஆனால் இந்தியசிந்தனைமரபின் படிமங்கள் மிகவும் பயன்படுத்தப்பட்டவை. அவற்றின் அர்த்தங்கள் எல்லாமே அச்சொற்களின் பின்னணியில் நின்றுகொண்டிருக்கின்றன. அவற்றை புதிதாக பயன்படுத்த முடியாது . அந்தபிரச்சினைதான் மோகனரங்கனால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டது .

எம் யுவன்- ஆனால் ஒன்று உண்டு ஜெயமோகன் , சிந்தனைகள் அப்படி அந்தரத்திலே உருவாகிவிடாது .எந்த புதிய சிந்தனையும் அதன் ஆழத்தில் புராதனமான ஒரு சிந்தனையில் வேரைக் கொண்டிருக்கும் .அவை படிமங்களாக மாறி நமக்கு கிடைக்கலாம்.அச்சிந்தனைகளை வேரிலிருந்துஅறுத்துக் கொள்வது சாத்தியமல்ல.அதுமட்டுமல்ல அப்படி செய்யும்ப்போது சிந்தனைகள் மற்றவ்ர்களுக்கு சென்று சேர்வதும் தடைபட்டே போகும் .மு தளையசிங்கம் அ ப்படி செய்திரூக வேண்டுமென நாம் எப்படி சொல்ல முடியும் ?

ஜெயமோகன் -அது உண்மைதான்.இன்மை என்பது பொருள் போலவே ஒரு வகை இருப்புதான் என்ற புராதன தரிசனம்[நியாயம் ] எப்படி தனக்கு தூண்டுதலாக ஆனது என்று சந்திரசேகர் ஒரு இடத்தில் சொல்லியிருந்தார் . சிந்தனையில் அம்மாதிரி மரபார்ந்த உருவகங்களை நாம் பயன்படுத்துவதை நம்மால் தடுக்க முடியாது .ஆனால் விவாதங்களில் அவற்றுக்கு இன்று புறவய மதிப்பு குறைவு என்பதே என் தரப்பு .

எம் யுவன்- எந்த புறவய மதிப்பும் விவாதத்தில் விரிவாக பயன்படுத்துவதன் மூலமே உருவாகிவரமுடியும்.

க.மோகனரங்கன்- இங்கே ஜெயமோகன் பேசும் போது எல்லா அறிவியக்கங்களுக்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்பு அல்லது ஒத்திசைவு தேவை என்பதை சொன்னார் . மு தளையசிங்க த்தின் சிந்தனைகளில் அத்தகைய ஒருங்கிணைவுக்கான ஒரு தேடல் இருப்பதாக . என்ன பிரச்சினை என்றால் இம்மாதிரி ஒருங்கிணைப்புக்காக பேசுபவர்கள் எல்லாருமே தங்கள் துறையை அந்த ஒருங்கிணைவுக்கான அடிப்படைத்தளமாக கருதுவார்கள் என்பதே . அதன் விளைவாக மேலும் ஒரு கொள்கை தான் உருவாகும். உண்மையான ஒருங்கிணைவை எந்த தளாத்தில் நடத்துவது என்பதுதான் பிரச்சினை .அதற்கு தளைய சிங்கம் என்ன சொல்கிறார் என்பதுதான் கேள்வி.

ஜெயமோகன்- அதை நான் முழுமையாக ஏற்கிறேன். கடந்த காலத்தில் அப்படி பேசியவர்களில் மொழியியலாளர்கள் முக்கியமானவர்கள்.எல்லா சிந்தனைகளையும் மொழியியலின் அடிப்படையில் விளக்க முயன்றார்கள் .அறிவியல் சூத்திரத்தையும் , வரலாற்றுக் கொள்கையையும் ,நாவலையும் எல்லாமே உரைத்தல் [narration] என்ற பொது அடிப்படையில் விளக்கி விடமுடியும் என்றார்கள்.விளைவாக narratology என்ற புதுதுறை பிறந்ததே மிச்சம்.இப்போது நரம்பியலாளர் மானுட அறிதல்களை எல்லாம் விளக்கிவிடக்கூடிய ஒரு பொது சித்தாந்தத்துக்காக உழைப்பதாக கேள்விப்படுகிறேன் .

நாஞ்சில்நாடன் – மு தளையசிங்கம் எல்லாவற்றையும் ஆன்மீகத்தில் கொண்டுவந்து முடிப்பதாக அல்லவா படுகிறது ?

ஜெயமோகன்-ஆன்மீகம் என்ற வார்த்தையைவிட மெய்யியல் என்ற வார்த்தை மிக பொருத்தமானது. அறிகிறோம் என்றால் ஏன் எதன் பொருட்டு என்பது மிக முக்கியமானதாக ஆகிறது. அந்த நோக்கமே அவ்வறிதலின் பெரும்பாலான அடிப்படைகளை தீர்மானிக்கிறது . அந்நோக்கத்தை அறிந்துகொள்ள , மதிப்பிட மெய்யியலே முக்கியமானது .

க.மோகனரங்கன்-இங்கே சொல்லப்பட்ட மு தளையசிங்கத்தின் மேற்கோள்களில் ‘ ‘இவ்வுலகத்தை மறுத்து மறுவுலத்தையும் முத்தியையும் அழுத்திய பழைய முறை சமயப் போக்கில் விஞ்ஞானம் எப்படி அதிருப்திப்பட்டதோ அவ்வாறே இன்றைய சமய ஞானமும் மனிதனின் அக ஆழத்தையும் அதன் பிரபஞ்ச விரிவுகளையும் மறுக்கும் விஞ்ஞானத்தில் அதிருப்திப்படுகிறது ‘ என்று வருகிறது .

ஜெயமோகன்- நான் மு தளையசிங்கத்தை நியாயப்படுத்த அல்லது விளக்க முயலவில்லை . அவரை நீங்களே வாசித்து மதிப்பிடுவதே முறை . ஆனால் மு தளையசிங்க அறிவியல் இனிமேலும் புறவயத்தருக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இருக்க முடியாது என்று சொல்கிறார் என்று படுகிறது . அறிவியலின் அடிப்படைகளை தீர்மானிக்கும் அற அம்சங்கள் குறித்தும் ,தத்துவ அடிப்படைகளை குறித்தும் பேசவேண்டியிருக்கிறது . கார்ல் பாப்பரின் The logic of scientific discoveries என்ற பிரபலமான நூலில் Philosophism in Science என்பது குறித்து நிறைய பேசப்படுகிறது .ஒட்டுமொத்தமாக அதை புரிந்துகொள்ளலாமேயொழிய அதை துல்லியமாக நம்மைப்போன்ற எளிய வாசகர்களால் புரிந்துகொள்ள முடியாது . ஆனால் இந்த வினா இப்போது முக்கியமானதாக உள்ளது என்றுதான் படுகிறது .

க.மோகனரங்கன் -சி பி ஸ்நோ போன்றவர்கள் அறிவியல்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் தேவை குறித்து பேசினார்கள் .இந்த இதழ் சொல் புதிதில் கூட நீலகண்டன் அரவிந்தன் அதைப்பற்றி எழுதியிருக்கிறார் . [அறிவியலின் மெய்யியல் அடிப்படைகள் ]

ஜெயமோகன்- அதே இதழில் வேறு கோணத்தில் சிந்திப்பவரான வரலாற்றாசிரியர் குமரிமைந்தன் வரலாற்றாய்விலும் மெய்யிலலே முதன்மையானது என்கிறார் .

எம் யுவன்- ஆனால் சி பி ஸ்னோ அடிப்படையில் ஓர் அறிவியல்புனைகதையாளர்தானே ?

ஜெயமோகன் – இந்த இடத்தில் நான் முக்கியமாக ஒன்றை சொல்ல வேண்டும். நவீன அறிவியல் பெருமளவுக்கு உயர் தொழில் நுட்பம் சார்ந்ததாக ஆகிவிட்டதனால் தத்துவார்த்தமாக அறிவியலைப்பற்றி சிந்திக்கும் சந்தர்ப்பம் பெரும்பாலான அறிவியலாளர்களுக்கு இல்லாமலாகி விட்டது என்று படுகிறது .இந்த இடத்தில் அறிவியல் புனைகதையாளர்கள் பெரும்பணி ஆற்றுகிறார்கள் . அவர்கள் தங்கள் கற்பனையை விருப்பப்படி நீட்ட முடிகிறது.அறிவியலின் விளிம்பு நிலைகளில் அவர்கள் சாதாரணமாக சஞ்சரிக்கிறார்கள் . தமிழ் இலக்கியவாதிகள் பொதுவாக அறிவியல் கதைகளை பொழுதுபோக்குக் கதைகள் என்றே எண்ணி வருகிறார்கள் . அவை காலம் , வெளி போன்றவற்றை புரட்டிப்போட்டு மானுட வாழ்க்கையின் சாராம்சங்களைப்பற்றிய பல புதிய கேள்விகளை உருவாக்கியுள்ளன என்பதை நாம் காணலாம்.

எம் யுவன் – அறிவியல் புனைவுகள் என்னை அதிகம் கவர்ந்தது இல்லை . அறிவியல் நூல்கள் சாதாரண மொழியில் எழுதப்பட்டால் அவையே எனக்கு மேலும் ஆர்வமூட்டுகின்றன. உதாரணமா ரோஜர் பென் ரோஸின் நூல்கள் …

சுவாமி வினய சைதன்யா – இங்கே அறிவியல் மெய்யியல் ஆகியவற்றிற்கு இடையேயான இணவு குறித்து பேசப்பட்டது . மு தளையசிங்கம் மு தளைய சிங்கம்960 களில் நடராஜ குரு இவ்விஷயம் குறித்து அதிகமாக பேசியுள்ளார் .அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு wisdom -The absolute is adorabe என்ற நூலாகவும் வெளிவந்துள்ளது .

ஜெயமோகன் – ஆமாம் .இந்த விவாதத்தில் நடராஜ குருவின் கருத்துக்களையும் கணக்கில் கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன் . ஒரு கட்டுரை ‘ ‘ அறிவியலை பாட முடியுமா ? ‘ ‘ சொல் புதிதில் ஏற்கனவே மொழிபெயர்க்கபட்டிருந்தது . குரு தன் நூலில் இவ்வாறு சொல்கிறார் .

‘ ‘மெய்ஞானமே இறுதியான உண்மையாக இருக்க முடியும்.மனம் உரிய முறையில் குவிக்கப்பட்டு செலுத்தப்பட்டால் மட்டுமே அது நிகழ முடியும். இவ்வாறு குவித்து திருப்புதலுக்கு முறைமையியல் [methodology]அறிவியங்கியல்[epistemology ] விழுமியவியல் [axiology]ஆகியவை அதில் முறைப்படி அமைந்திருக்கவேண்டும். பிரபஞ்சவியல் இயற்பியல் மீமெய்யியல் ஒழுக்கவியல் அழகியல் அனைத்துமே அதன் எல்லைக்குள் வருபவையே.அதை நடைமுறைப்படுத்திப்பார்க்கும்போது உயர்மட்ட ஆய்வுகளான சமூகவியல் பொருளியல் , அரசியல் போன்ற பல துறைகளும் அதன் எல்லைக்குள் வரமுடியும். அகவயப் பார்வையின் தேடல்விளக்கை தவிர்த்தாலுகூட தொலைநோக்கியின் மூலமோ நுண்நோக்கியின் மூலமோ வெளிப்படும் உலகங்கள் கூட அதன் எல்லைகளை அல்லது சாத்தியங்களை வெளிப்படுத்தலாம். ஞானம் என்பது நம்பிக்கைநோக்கு அவநம்பிக்கை நோக்கு சுதந்திரவாதம் பழைமைவ ‘தம் சம்பிரதாயப்போக்கு புதுமைவிருப்பம் தியான நோக்கு செயலூக்க நோக்கு மேற்கத்திய அணுகுமுறை கீழைஅணுகுமுறை போன்ற தனிநபர் சார்ந்த அணூகுமுறைகளால் பிரிக்கப்படக்கூடியதாக இருக்காது .ஞானத்தேடலுடைவனை பொறுத்தவரை பின்னோக்கியபார்வை ,எதிர்காலக்கனவு ,ஆய்வு நோக்கு, அல்லது அகவயமான முழுமைநோக்கு போன்றவைய்ல்லாமே ஒருமையத்தில் ஒன்றாகின்றன. ஞானம் முழுமையடையும்போது இலக்கும் வழிமுறைகளும் இயல்பாகவே சமநிலையை அடைகின்றன. சுயதிருப்தியும் மகிழ்ச்சியும்பொதுநல நோக்கும் ஒரே சமயம் கைகூடுகின்றன.. ‘ [நடராஜ குரு -wisdom ]

வினய சைதன்யா – ஒரு வகையில் நடராஜ குருவின் ஆசிரியர் ஹென்றி பெக்ஸனின் தத்துவ ஆய்வின் மையமும் இதுதான் . ஞானம் அறிவு என்ற இரண்டுக்கும் இடையேயான உறவென்ன என்ற கேள்வி .பயன்படாத ஒன்று அறிவாக இருக்க முடியும். நம்மை மேம்படுத்தாத ஒன்று அறிவாக இருக்கமுடியும். அது ஒருபோதும் ஞானமாக இருக்கமுடியாது . அறிவு பிளவுபட்டதாக , முரண்பாடுகள் கொண்டதாக இருக்கமுடியும் .அறிவுக்கு கால இட எல்லைகள் உண்டு. அறிவு எல்லைக்குட்பட்டது .எல்லைக்குட்பட்ட எதுவுமே அவ்வெல்லைக்கும் அப்பால் பொய்தான் .எப்போதுமே எல்லைகளுக்கு அப்பால்தான் இடம் அதிகம் .எல்லையை மீறித்தான் எதிர்காலமே வளரமுடியும். துரதிர்ஷ்டவசமாக பெர்க்ஸனுக்கு பிறகு மேற்கத்திய சிந்தனையில் இந்த தேடல் குறைந்து விட்டது . அறிவியல் போக்குகளுக்கு தருக்க அடிப்படைகளை உருவாக்கித்தருபவர்களாக இன்றைய தத்துவவாதிகள் மாறிவருகின்றார்கள்

ஜெயமோகன் – நடராஜ குரு இப்படி சொல்கிறார் . ‘ ‘அறிவியல் தத்துவம் ஆகிய இரு தளங்களிலும் ஞானம் இப்போது அதீதமான துறைப் பாகுபாடுகளுக்கு உள்ளாகியுளது .குறிப்பாக மேற்கில். ஆகவே விஞ்ஞானங்களை ஒருங்கிணைக்கவும் தொகுத்துக் கொள்ளவும் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது . ஆனால் இம்மாதிரி ஒரு தரப்பை முன்வைக்கும் ரஸ்ஸலை போன்றவர்கள்கூட ‘நிரூபண தர்க்க ‘ முறையின் எல்லையைத்தாண்ட முடியவில்லை. நீல்ஸ்போர் ஷ்ரோடிஞ்சர் போன்றவர்கள் ஒருங்கிணைந்த அறிவியலில் அனைத்தையும் தொகுக்க முயல்கின்றார்கள் .. ‘ [நடராஜ குரு -wisdom ]

எம் யுவன்- இந்தக் கோணத்தில் பார்த்தால் மேதைகளான அறிவியலாளர்களிடம் கூட இருக்கும் குறுகலான பார்வை வியப்பை தருகிறது.அவர்களுக்கு தங்கள் தரப்பை அனைத்துக்கும் மையம் என்று பார்க்கும் பலவீனத்திலிருந்து தப்பவே முடியவில்லை .

ஜெயமோகன்-இதை ஒட்டி நீல்ஸ்போரின் ஒரு மேற்கோளையும் எடுத்தேன். ‘அறிவியல் என்பது மானுடப்புரிதலை விரிவுபடுத்துவதற்கானதன் யத்தனத்தை வைத்துப் பார்க்கும்ப்போது அடிப்படையில் ஓர் ஒருமை [unity ‘ ஆகும் . …அனைத்துக்கும் மேலாக அது பகுப்பாய்வு[analysis] தொகுப்பாய்வு [synthesis ] ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்குகிறது . ‘ ‘

மோகனரங்கன்- இலக்கியத்தை இதில் தளையசிங்கம் எப்படி பார்க்கிறார் என்பதுதான் முக்கியமானது .அவரைப்பொறுத்தவரை இலக்கியம் முக்கியமற்ற ஒரு துறை மட்டுமே. அவர் உண்மை என்பதற்கே முக்கியத்துவம் அளிக்கிறார். உண்மையானது சமயத்தாலும் தத்துவத்தாலும் அறிவியலாலுமே முக்கியமாக அறியப்படக் கூடியது என்று அவர் கருதுகிறார் .அவ்வுண்மைகளை பேசக்கூடிய தகுதிகளையும் கருவிகளையும் இலக்கியம் அடைய வேண்டும் என்று அவர் கருதுகிறார் .மெய்யுள் கூட அதற்கான முயற்சிதான் என்றுதான் எனக்கு எண்ணம் ஏற்படுகிறது .

வேதசகாய குமார் – எனது மனப்பதிவும் அதுதான்.இன்னும் சொல்லப்போனால் தத்துவத்தையும் அறிவியலையும் விவாதிக்கக்கூடிய ஒரு மொழிவடிவத்தைத்தான் அவர் உத்தேசித்தார் என்று பட்டது …

ஜெயமோகன் – உண்மை என்பதை அழுத்தம் தந்து பேசமுற்படும்போது அவர் குரலில் இலக்கியத்திற்கான இடம் குறைந்துவிடுகிறது என்பது உண்மைதான் . ஆனால் அவரது பார்வையில் இலக்கியம் ஒரு முக்கியமான மெய்யறிமுறையாக இருந்துகொண்டே இருந்தது என்பதுதான் உண்மை. திரும்பத்திரும்ப அவர் இலக்கியம் பற்றித்தானே பேசுகிறார் ? முற்றாக தத்துவம் பக்கம் அவர் நகர்ந்ததேயில்€லையே ? அவர் மற்ற அனைத்தைப்பற்றியும் பேசும்போதுகூட அவற்றை இலக்கிய நோக்கில்தான் சொல்கிறார் என்றுதான் நான் சொல்வேன் .

அருண்மொழி நங்கை- நான் கவனித்தபோது தளைய சிங்கம் அவரது ஆரம்பகால படைப்புகளில் இலக்கியத்தின் உத்தி வடிவம் மொழி போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பேசியிருப்பதாக பட்டது .அந்நிலையில் அவருக்கு இலக்கிய ஆக்கத்தின் பின்னால் உள்ள மனநிலைகள் ,சமூக பின்னணி , தனிப்பட்ட ஆளுமைப்ப்பிரச்சினைகள் எல்லாமே முக்கியமாக பட்டிருக்கின்றன . பிற்பாடு இலக்கியத்தின் ஆதாரமாக உள்ள மெய்யியல் பிரச்சினைகளை மட்டும் கவனம் செலுத்துகிறார் . அவரது பார்வையில் இலக்கிய பரவச விடுதலையை தருவதாக ஆகிவிடுகிறது .பரவசம் மட்டுமல்ல விடுதலை என்று அவர் சொல்வதை நான் முக்கியமானதாக கருதுகிறேன் . தளையசிங்கம் தன் படைப்புகளில் ஒருபோதும் கலை அளிக்கும் விடுதலை போலியானது மனமயக்கமானது என்று சொல்லவில்லை அல்லவா ? அவர் உள்ளுணர்வையே முக்கியமானதக கருதுகிறார் .

அபிலாஷ் – இலக்கியப்படைப்பின் ஆக்கத்தில் உள்ளுணர்வு என்று கூறப்படுவனவற்றுக்கு உள்ள இடம் எது ? எலாருமே உள்ளுணர்வத்தான் இலக்கிய ஆக்கத்துக்கு அடிப்படையாக கொள்கிறர்களா ?

எம் யுவன் -எல்லா ஆக்கங்கள்க்கும் அடிப்படை உள்ளுணர்வுதான். எதையுமே யோசித்து திட்டமிட்டு செய்துவிடமுடியாது .அறிவியல் கண்டுபிடிப்புகள் பொறியியல் வடிவங்கள் எல்லாமே ஆழ்மனத்தின் வெளிப்பாடுகள் தான்.நாம் செய்யக்கூடுவதெல்லாமே நமது கருவிகளை தயாராக வைத்த்ருபதுமட்டும்தான்.

ஜெயமோகன்- எனது கணிசமான கதைகளை நான் கனவில் இருந்து எடுத்திருக்கிறேன். கனவு எங்கிருந்து வருகிறது அங்கிருந்தே படைப்பும் வருகிறது ….

அபிலாஷ்- தூண்டுதல் எங்கிருந்தும் வரலாம் .ஆனால் படைப்பில் திட்டமிடலும் செலாக்கமும்தான் முதல்டம் வகிக்கின்ற என்று எனக்கு படுகிறது…

எம் யுவன் – என கவிதை ஒன்றை நான் வரி வரியாக கனவில் கண்டேன்.பழைய மீட்சி இதழ் ஒன்றின் அட்டையில் அச்சாகியிருந்தது . ஹிடாச்சி என்று பெயரில். அது நான் அலுவலகம் போகும் வழியில் உள்ள ஒரு விளம்பர போர்டில் இருப்பது . அக்கவிதையை அப்படியே நான் எழுதி பிரசுரிதேன்.

மோகனரங்கன் – தளையசிங்கம் கட்டுரையில் தரிசனமனநிலை பிளவுண்ட ஆளுமையையும் மனப்பிளவு பிரதிகளையும் உருவாக்குகிறது என்று சொல்லியிருந்தார் . ஆனால் பெரும் தரிசனப்படைப்புகளில் ஒரு ஒருமை கைகூடியிருப்பதாக படுகிறதே…

ஜெயமோகன் – அதை ஒரு நிபந்தனையாக ஆக்கமுடியாது என்றுதான் சொன்னேன். பெரும் தரிசனிகர் மனநோயின் விளிம்பில் நிற்கிறார்கள் . ராமகிருஷ்ண பரம ஹம்சரை அமெரிக்க அழைத்துசென்றால் மனசிகிழ்ச்சைக்கு அனுப்பிவிடுவார்கள்…

தேவதேவன் – அதை மனநோய் என்று சொல்லிவிட முடியாது . சாதாரணமனநிலையில் சாதாரண காரியங்களையே சொல்ல முடியும். மனப்பிளவு ஏற்படுகிறதென்றால் அதற்குக் காரணம் சொல்லப்படும் விஷயம் அடிப்படையில் பிளவுண்டிருப்பதுதான் . சொல்லப்படும் விஷயத்திலிருந்து சொல்பவனை விலக்க முடியாது.இரண்டும் ஒன்றுதான்.

ஜெயமோகன்-இங்கு விவாதத்துக்காக ஏ என் வைட்ஹெட்டின் ஒரு மேற்கோளை கொண்டுவந்தேன். ‘ ‘ மானுட அனுபவங்களை நாம் சில முக்கிய தலைப்புகளின் கீழ் தொகுத்து வைத்திருக்கிறோம். இவற்றை அறிவதற்கு நாம் இவை சார்ந்த ஆதாரங்களாஇ அனுபவத்தின் எல்லா தருணங்களுக்கும் விரித்துபார்க்கவேண்டும். எதுவுமே விடப்படக்கூடாது .குடித்திருக்கும்போது ,நிதானத்தில் இருக்கும்போது,தூங்கும்போது,விழித்திருக்கும்போது, சடைவாக இருக்கும்போது, உற்சகமாக

இரு க்கும்போது ,சுயநினைவுடன் இருக்கும்போது சுயமிழந்த மயக்க நிலையில் அறிவார்ந்த நிலையில் திடமான பெளதிக அடிப்படையில் மதநம்பிக்கையில் அவநம்பிக்கையில் பதற்றநிலையில் அலட்சிய நிலையில் எதிர்பார்ப்புநிலையில் மகிழ்ச்சியில் துக்கத்தில் மனைருளில் சகஜநிலையில் ,மனப்பிறழ்வுநிலையில்…… ‘ ‘

எம் யுவன் -ஆம் மனப்பிறழ்வு நிலையில் ஒவ்வொன்றும் எவ்வாறாக இருக்கின்றன என்பது முக்கியமானதுதான். இந்த அம்சத்தை நரம்பியல் தவிர வெறு எந்த அறிவுத்துறாஇயுமே கணக்கில் கொண்டதில்லை . இலக்கியம் அதை கணக்கில் கொள்கிறது .மேலான படைப்புகள் எல்லாமே ஒரு கண்ணை அங்கேயும் வைத்துத்தான் பேசுகின்றன.

ஜெயமோகன்- ஆபிரகாம் மாஸ்லோவின் ஒரு மேற்கோளையும் எடுத்து வந்தேன். ‘ ‘ படைப்பூக்கம் கொண்ட நபர் தன் இறந்தகாலத்தின் அடிமையாக இருப்பதில்லை. தன் நிகழ்கால சூழலுக்கு கட்டுப்பட்டவராக தன் பேசுதளத்தில் இயங்க விதிக்கப்பட்டவராகவும் இல்லை.தன் நரம்பு இயக்கங்களுக்கு தன் மொழிக்கும்கூட கட்டுப்பட்டவரல்ல …

உயர்மட்ட படைப்பூக்கம் கொண்டவர்கள் புரிநிதுகொள்ள முடியாதபடி தனிமையானவர்கள் . ஆகவே அவர்களைமனநிலைபிசகுள்ளவர்கள் என்று புரிந்துகொள்வது அபத்தமானது. ‘ ‘ அந்தோனி ஸ்டொர் எழுதிய Solitude என்ற நூலில் இருந்து எடுத்த மேற்கோள் இது .இந்தநூலே படைப்புமனநிலையின் அசாதாரண தளங்களைப்பற்றிய முக்கியமான ஆய்வுதான்.

வெங்கட் சாமிநாதன் – ஜெயமோகன் இக்கட்டுரையில் விளிம்புநிலையைப்பற்றி ஏராளமாக சொல்கிறார் .அது எனக்கு அர்த்தமாகவில்லை .எந்தவகையான கனவையும் அப்படிசொல்லி இப்போதுநாம் நியாயப்படுத்திவிடமுடியுமா என்ன ?

ஜெயமோகன்- அப்படியல்ல , முக்கியமானவிஷயம் தளையசிங்கம் இக்காலகட்டத்தின் அடிப்படைப்பிரச்சினைகளை அடையாளம்கண்டார் என்பதே .அதை விரிவாகவே பேசியிருக்கிறோம். உதாரணமாக ‘ பொருள்முதல்வாதம் மூன்றுதளங்களில் அதன் எல்லையை உணர்கிறது. ஜடம் – உயிர் உறவில் , உடல் -மனம் உறவில்,தீர்மானவாதம் – தெரிவு உறவில் [Determinism – choice ] வில் டுரண்ட் [தத்துவத்தின் கதை] . தளையசிங்கத்தின் சிந்தனைகள் இம்மூன்று புள்ளிகளில் சென்று மோதுவதை தொடர்ந்து காணலாம் .அதன்பிறகே அவரது ஊகங்கள் உருவாகின்றன.அவற்றின் திசை எதுவாக இருந்தாலும் இலக்கு இப்புள்ளிகளே என்பதை காணலாம். பெரும் சிந்தனையாளர்களில் கூட மிக விசித்திரமான மனத்தாவல்களை காணமுடிகிறது .உதாரணமாக பெர்க்சனின் இந்த மேற்கோள் தளையசிங்கத்துக்கு மிக பக்கத்தில் வருகிறது . -மன்னிக்கவும் இதை என்னால் சரியாக மொழிபெயற்க முடியவில்லை .

The animal takes its stand on the plant , man bestrides animality and the whole of humanity in space and time is one immense army galloping beside and before and behind each of us in an overwhelming charge able to beat down every resistance and clear the most formidable obstacles perhaps even death [ Henri Bergson Creative evolution]

எம் யுவன் – விளிம்புநிலை என்பது இதுவரை என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டிருகின்றனவோ அதற்கு அப்பால் சென்று புதிய கேள்விகளை கேட்பதில்தான் உள்ளதே ஒழிய பதில்களில் அல்ல. அறிவியல் ஆய்வின் அடிப்படைகளை உருவாக்கும் ஊகங்களின் இடத்தில் தான் அவற்றுக்கு முக்கியத்துவம் .

வெங்கட் சாமிநாதன் – தளையசிங்கம் சொல்லும் பூரணமனநிலை என்பதற்கு என்ன அறிவியல் முக்கியத்துவம் இருக்கமுடியும் ?

ஜெயமோகன்- இப்போது உளவியல் என்ன சொல்கிறது ? தேவை மற்றும் சமூகத்தின் அழுத்தம் காரணமாக மனத்தின் பெரும்பகுதி அடக்கப்பட்டு ஆழ்மனமாக ஆகிறது . தளையசிங்கம் சொல்லும் பூரண சமூகத்தில் மனம் முற்றாக அடக்கப்படவே இல்லையென்றால் ஆழ்மனம் அல்லது நனவிலி என்பதற்கு என் ன அர்த்தம் ? இந்தக் கோணம்தான் அச்சிந்தனையை புதிய எல்லைகளுக்கு கொண்டுசெல்கிறது …

வினயசைதன்யா- தளையசிங்கத்தில் நீட்சேயின் சிந்தனைகள் அதிகம் தெரிகின்றன .எல்லா தரிசனிகர்களிலும் அவர்களைப்பற்றிய ஒரு மிகையான தொனி காணப்படுகிறது .இவரிலும் உள்ளது

ஜெயமோகன்- நான் இதை சுட்டவே நீட்சேயின் சில மேற்கோளை எடுத்துவந்தேன் . ‘இவ்வாறு பேசினார் ஜரதுஷ்ட்ரா ‘ வில் இப்படி எழுதுகிறார்]

‘ ‘

எல்லா கடவுள்களும் இறந்துவிட்டனர் .இனி நாமே வாழும் அதிமானுடர்களாவோம்

*

மாமனிதர்களாவது எப்படி என நான்கற்றுத்தருகிறேன். மனிதநிலை என்பது தாண்டிசெல்லவேண்டிய ஒன்று. அப்படி தாண்டிச்செல்ல நீ என்ன செய்தாய் ?

*

மனிதன் தன் இலக்கை தீர்மானிக்கவெண்டிய நேரம் வந்துவிட்டது. தன் விந்துவை உச்ச கட்ட நம்பிக்கையில் அவன் விதைத்துவிடவேண்டியுள்ளது

*

சொல்லுங்கள் சகோதரரே இலக்கை இழந்த மானுடம் மானுடத்தையே இழந்துவிட்ட ஒன்றல்லவா ?

*

இன்றைய தனியர்களே , இன்று விலகி நிற்பவர்களே ஒரு நாள் நீங்களும் மக்கள் திரளாக ஆவீர்கள். உங்களிலிருந்து உங்களை தேர்வு செய்வீர்கள்.தேர்வுசெய்யப்பட்ட மக்கள் எழுவார்கள், அவர்களிலிருந்து அதிமானுடர்கள்

[ நீட்சே ‘இவ்வாறு பேசினார் ஜரதுஷ்ட்ரர் ‘தமிழினி வெளியீடாக வெளிவரவிருக்கும் செந்தூரம் ஜெகதீஷின் மொழிபெயர்ப்பில் இருந்து ]

எம் யுவன் – இத்தகைய கனவுகளுக்கு இலக்கியமுக்கியத்துவம் உள்ள அளவுக்கு தத்துவ முக்கியத்துவம் உண்டா என எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது .

ஜெயமோகன் -அந்த வேறுபாட்டை அப்படி துல்லியமாக வகுத்துவிட முடியாது .

வினயசைதன்யா- இந்தக்கனவு அடிப்படையில் மேற்கத்திய தன்மை உடையது . the man என்ற கருத்து முதலில் அங்கு முளைத்தது .அதன் இன்றியமையாத தொடர்ச்சி தான் super man அல்லது அதிமனிதன் . இக்கருத்தை எப்படி அரவிந்தர் ஏற்றுக் கொண்டார் என்பது வியப்புக்கு உரியதுதான் .

ஜெயமோகன் – அதை அவர் பெர்க்சனில் இருந்து பெற்றிருக்கவேண்டும்

வினயசைதன்யா- பெர்க்சனின் மாணவராக இருந்தாலும் நடராஜ குரு அச்சிந்தனையை எற்கவில்லை

அருண்மொழிநங்கை – நான் அதைப்பற்றி சொல்ல விரும்பினேன்.தளைய சிங்கத்தின் பார்வை பெண்களை பொறுத்தவரை கீழைநாட்டு பார்வை அல்ல .அவரது கதைகளை வைத்து இதை சொல்கிறேன். கீழை மரபில் ஆண் பெண் என்பது சிவ சக்தி என்று சமமான வலிமைகளாக உருவகிக்கப்படுகிறது . அவர்கள் இணைவு லீலை என்று விளையாட்டாக உருவகிக்கப்படுகிறது . ஆனால் மேலைமரபில் பெண் செயலற்ற சக்தி அதாவது Inertia .ஆண்தான் தூண்டும் சக்தி அல்லது படைப்பு சக்தி . தளையசிங்கம் கதைகளில் எல்லாமே பெண்கள் செயல்ற்ற சக்திகளாகவே வருகின்றனர். அவரது பார்வை மேற்கத்திய் ஆண்மைய அணுகுமுறைதான் .

ஜெயமோகன் – தளையசிங்கம் தன் நோக்கில் ஒரு அழுத்தமான பிராந்தியத்தை உருவாக்கிக்காட்டுகிறார் . அது தீவிரமான கேள்விகளும் அரைகுறையான பதில்களும் பலவிதமானதடுமாற்றங்களும் கொண்டது .ஆனால் அக்கேள்விகள் நமக்கு மிக முக்கியமானவை . மேலும் மேலும் அவற்றின் தீவிரம் ஏறியபடியே வருகிறது .

மேலும் சற்றுநேரம் வேடிக்கையாக பேசி சிரித்து பின்பு கூட்டத்தை நிறைவு செய்தோம்

மறுநாள் காலையில் வெளியே இறுதி அரங்கு . பொதுவாக கூட்டம் குறித்த மனப்பதிவுகளை குறிப்பிடுவதாகவே இருந்தது .தேவகாந்தன் இக்கூட்டம் தனக்கு மிக்க மனமகிழ்ச்சியை அளிப்பதாக சொன்னார் . ஈழ இலக்கியத்திலும் புலம்பெயர்ந்த இலக்கியத்திலும் ஆழமான ஒரு வித கைடைவெளி இருப்பதாக சொன்னார் . முற்போக்கு தத்துவம் தன் வரலாற்றுக் கடமையை செய்துவிட்டு பின்னகர்ந்துவிட்டது . அமைப்பியல் போன்ற கருத்துக்கள் வேரோடவும் இல்லை . ஆக இப்போது ஒரு தத்துவமின்மை அங்குள்ளது .அந்த இடைவெளியை தளையசிங்கம் குறித்த விவாதங்கள் நிரப்பக்க்கூடும் . இரண்டாவதாக ஈழ தேசிய இலக்கியம் என்றால் அது எப்படி இருக்கவேண்டும் என்ற ஒரு குழப்பம் இன்று உள்ளது . சர்வதேச இலக்கியம் தமிழக இலக்கியம் ஆகியவற்றில் இருந்து வேறாக அது கொள்ள வேண்டிய தனியடையாளம் என்ன என்ற தேடல் உருவாக வேண்டும். தேசிய இலக்கியம் என்ற குரலை எழுப்பிய முன்னோடிகளில் ஒருவரான மு தளையசிங்கம் குறித்த விவாதம் அந்த தேடலுக்கு ஊக்கம் கூட்டக்கூடும் என்றார் தேவகாந்தன்

தேவதேவன் இலக்கியத்தின் ஆழமான இடம் அதன் மெய்யியலிலேயே உள்ளது என்று மு தளையசிங்கம் உணர்த்துகிறார் , ஆனால் அப்பயணத்தின் அபாயங்களுக்கும் அவரே உதாரணம்.அவரைப்பற்றிய விவாதம் அதிகம் பேசப்படாத இவ்விஷயத்தை மேலும் தெளிவுபடுத்திக் கொள்ள உதவக்கூடியதாகும் என்றார் .

மதியத்துடன் அரங்குகளை முடித்துக் கொண்டோம் . பிரியும்போது ஏற்படும் வழக்கமான சோர்வும் நிறைவுணர்வும் ஒரே சமயம் வந்து அழுத்தின.

====

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

ஜெயமோகன்


மதிய உணவுக்கு முன்பு அரங்கில் பங்குபெற்றவர்களில் நடக்கும் ஆரோக்கிய நிலையில் நிலையில் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அருகே இருந்த ஃபெர்ன் ஹில் குன்றுக்கு நடந்து சென்றோம். வெங்கட் சாமிநாதன் , தேவகாந்தன் , அபிலாஷ் ஆகியோ வரவில்லை . ஃபெர்ன் ஹில் வனத்துறையால் சீர்திருத்தப்பட்ட காடு . அங்கு ஒரு பார்வைக் கோபுரம் உண்டு. அதில் ஏறிப்பார்த்தால் ஊட்டியின் முழுத்தோற்றத்தையும் பார்க்க முடியும். காடு வழியாக நடந்தபடி இலக்கியம் பேசுவதென்பது ஊட்டி கூட்டங்களின் சிறப்பம்சமாக எப்போதுமே இருந்து வந்துள்ளது . மாலைதான் திரும்பி வந்தோம். ஏழு மணிக்கு அடுத்த அமர்வு .குளிர் நன்றாக ஏறிவிட்டிருந்தது .

நான்காம் அமர்வில் ஜெயமோகன் கட்டுரையை சுருக்கமாக முன்வைத்தார் . நீளமான கட்டுரை ஏற்கனவே பிரதி செய்யப்பட்டு அனைவருக்கும் அனுப்பப்பட்டிருந்தது . ஜெயமோகன் தன் கட்டுரைமீதான விவாதத்துக்கு உதவியாக மு தளைய சிங்கத்தின் சில மேற்கோள்களையும் தொகுத்து வாசித்தார்.அவற்றின் பிரதிகளும் வினியோகிக்கப்பட்டன. ஜெயமோகன் கட்டுரை மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது . முதற்பகுதி மு தளையசிங்கத்தை வாசிப்பதில் உள்ள வாசகத்தடைகள் , மு தளையசிங்க த்தின் சொந்தத் தடைகள் மற்றும் அவர் அணுகுமுறையின் அடிப்படைப்பிரச்சினைகள் ஆகியவை குறித்து பேசியது . இரண்டாம் பகுதி அவர் என்ன சொல்கிறார் என்பதை தொகுத்துச் சொன்னது . மூன்றாம் பகுதி அவரது இன்றைய முக்கியத்துவம் என்ன என்பது பற்றி விவாதித்தது .

ஜெயமோகன் கட்டுரையில் முதல்பகுதியில் அ] மு .தளையசிங்கம் தெளிவாக சிந்திக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டு முக்கியமான முதல் நிலை சிந்தனையாளர்கள் படைப்பிலக்கிய ஆக்கத்துக்கு சமான மான மனநிலையில் படிமங்கள் மூலம் சிந்திக்கிறார்கள் , ஆகவே அவர்களில் பெரும்பாலோரிடம் தருக்க ரீதியான தெளிவை எதிர்பார்க்க முடியாது என்றார் ஆ] மு தளையசிங்கம் தன் ஆய்வு உபகரணமாக இந்திய சிந்தனைமரபின் கருதுகோள்கள் சிலவற்றை பயன்படுத்தியது ஆழமான சிக்கல்களை உருவாக்கியது , இந்திய சிந்தனை மரபின் உபகரணங்கள் எவ்வாறு நவீன சிந்தனைத்தளத்தில் பயன்படுத்த முடியாதவையாக பின்தங்கியுள்ளன என விளக்கினார் .இ ] மு தளையசிங்கத்தின் கற்பனைகள் உட்டோப்பியக் கற்பனைகள் அல்ல. உட்டோப்பிய கற்பனை என்பது லெளகீகமான தருக்க அடிப்படையும் உள்ளது என்றும் மு தளையசிங்க முன்வைப்பது ஒரு மெய்யியல் கற்பனையே என்றும் விளக்கினார். மெய்யியல் ஊகங்களுக்குயுள்ள முக்கியத்துவம் நமது அடிப்படைக் கருத்துக்களை அவற்றின் தளத்துக்கு கொண்டு சென்று அவற்றின் உண்மையான மதிப்பென்ன என்று காணலாம் என்பதே என்றார் . உ] மு தளையசிங்க ஒரு தரிசனிகர் என்று வகுத்த ஜெயமோகன் தரிசனிகரில் எப்போதுமே ஒரு வகையான பிளவுண்ட தன்மை உள்ளது ,இது மனப்பிளவுக்கு அருகே இருப்பது , முக்கியமான தரிசன நூல்கள் பல மனப்பிளவு ஆக்கங்களும் கூட என்றார் . மெய்யுள் அப்படிப்பட்ட மனப்பிளவு ஆக்கமே என்றார் .

இரண்டாம் பகுதியில் ஜெயமோகன் மு தளையசிங்க என்ன சொல்கிறார் என கூறுகையில் அ] மு தளையசிங்கம் ஒரு முற்போக்காளராக இருந்து அடுத்த கட்டத்தை நோக்கிநகர்ந்தவர் .இதற்குக் காரணம் அவரது மெய்யியல் தேடலே என்றார் . மற்ற மார்க்ஸியர் விலகி நவீனத்துவம் நோகி சென்றபோது மு தளையசிங்க நவீனத்துவத்தையும் தாண்டி வெளியே சென்றதற்கு காரணம் அவரது ஆன்மீகமே என்றார் ஆ] மு தளையசிங்கம் தன் காலகட்டத்தில் மற்ற சிந்தனையாளர்களை பாதித்த பரிணாம சித்தாந்தம் மற்றும் மனமுழுமை குறித்த சிந்தனைகளின் அடிப்படையில் மானுட குலத்தின் அடுத்த கட்டத்தைப்பற்றிய ஊகங்களை உருவாக்கினார் . அதன் விளைவே பேர்மனம் என்ற அவரது ஊகம். அம்மனம் உருவாகும் சமூக அமைப்புக்கு அவர் பூரண அத்வைதநிலை என பெயரிட்டார். இ] மு தளையசிங்கத்தின் பார்வையில் இலக்கியம் இன்று மேல்மட்ட வாழ்க்கையை சித்தரித்து அதன் உச்ச நிலையில் ஆழத்தை குறிப்புணர்த்துவதாகவே உள்ளது . அனைவரும் ஆழமான மனவெளிப்பாட்டை அடையும் காலகட்டத்தில் இவ்விலக்கியங்கள் மதிப்பிழந்துபோய்விடும் .அன்று ஆழமே சகஜ நிலையாக உள்ள இலக்கியம் உருவாகும் அதை அவர் பூரண இலக்கியம் என்கிறார் .

மு தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன என ஜெயமோகன் கூறும்போது நான்கு விஷயங்களை சுட்டிக்காட்டினார் அ] மேலான சிந்தனையாளர்களில் அவர்கள் முக்கியப்படுத்தும் விஷயத்தை தவிர்த்து சிறு சிறு வரிகள் கூட ஆழமான சிந்தனைக்கு நம்மை இட்டு செல்லும். அம்மாதிரி வரிகளை மு தளையசிங்க த்தின் கட்டுரைகளில் காணலாம் என்றார் .உதார்ணமாக இலக்கியம் அசல் பரவசத்தை உருவாக்குவதில்லை , பிறஅனுபவங்கள் மூலம் பெற்ற பரவசத்தை ஞாபகப்படுத்தவே செய்கிறது என அவர் சொன்னதை சுட்டிக்காட்டுகிறார் . ஆ] மு தளையசிங்கம் தன் சிந்தனைகளில் தன் காலகட்டத்தின் மிக முக்கியமான பிரச்சினைகளை அடையாளம் கண்டார் . அவை ஒன்று , எதிர்முனைகள் மூலம் இயங்கும் தத்துவத்தரப்புகள் சமரசம் மூலம் அசைவற்று போய் ஒரு உறைவு நிலை உருவாகும் என்பது .இரண்டு , மெய்யியலையும் அறிவியலையும் இணைக்கவேண்டிய அவசியத்தை , முழுமையான சிந்தனை தேவை என்பதை வலியுறுத்தினார் என்பது .இ] மு தளையசிங்கம் தன் சிந்தனைகள் மூலம் மார்க்ஸிய மெய்யியலின் போதாமையை உணர்ந்து அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதைப்பற்றி யோசித்தார். தனிமனித விடுமையையும் உள்ளிட்ட ஒரு மார்க்ஸியத்தை அவர் உருவகித்தார் எனலாம் . ஈ] மு தளையசிங்கம் ஒரு விளிம்புநிலை சிந்தனையாளர் .அவர் சிந்தனைகளின் கடைசி சாத்தியத்தின் விளிம்பில் நகர்பவர்.ஆகவே நாம் பேசும் ஒவ்வொன்று ம் அதன் எல்லையில் எவ்வாறாக அர்த்தப்படுகின்றன என்று பார்க்க வரால் முடிந்தது .அவரது முக்கியத்துவம் இதுவே என்றார் ஜெயமோகன்

****

எம் யுவன் – இங்கு ஜெயமோகன் முன்வைத்த கட்டுரையில் பொதுவாக இருந்த நோக்கு இது என்று எனக்கு தோன்றியது , ஜெயமோகன் மு தளைய சிங்கத்தின் சிந்தனை முடிவுகளை அனைத்தையும் ஏறத்தாழ நிராகரிக்கிறார் .அவரது ஆய்வு உபகரணங்களை முழுக்க ஐயப்படுகிறார். அவரை முன்னால் சென்றவர் ,ஆனால் வழிதவறியவர் என்று ஜெயமோகன் மதிப்பிடுகிறாரோ என்று படூகிறது . ஆக அவர் ஏற்பது தளையசிங்கம் தன் காலகட்டத்து அடிப்படைப்பிரச்சினைகளை அடையாளம் கண்டார் , அவற்றை தன்னுடைய சொந்த சிந்தனைகளை அடிப்படையாக வைத்து ஆராய முயன்றார் என்பதை மட்டுமே . அதாவது அவரது ஈடுபாட்டை , தீவிரத்தை மட்டுமே ஏற்கிறார் என்று படுகிறது .

ஜெயமோகன்- நான் மு தளையசிங்கத்தை ஏற்பது அவரது அசல்தன்மைக்காக .இது சாதாரணமான விஷயமல்ல. என் கட்டுரையிலேயே இதை சொல்லியிருக்கிறேன் .சிந்தனையாளர்களில் அசல் சிந்தனையாளர்கள் மிக மிக குறைவு . சிந்தனையில் முடிவுகள் தீர்வுகள் எல்லாம் பெரிய அளவில் முக்கியமானவையல்ல. அவை எப்படியானாலும் ஒரு கால கட்டத்துக்கு பிறகு காலவதியாகும் . மு தளையசிங்கம் ஒரு வகையில் இருத்தலிய சிந்தனையாளர்களின் சமகாலத்தவர் .அவர்களில் எத்தனைபேரின் சிந்தனை முடிவுகள் இன்று மீதமுள்ளன ? நான் கல்லூரியிலே படிக்கும் நாட்களில் சிந்தனையாளர் என்றால் அது சார்த்ர் தான். இன்று நமக்கே பல கட்டுரைகளை படிக்கும்போது சாதாரணமாக இருக்கிறது .ஆக சிந்தனையாளன் உருவாக்குவது ஒரு கோணத்தை மட்டுமே . அதை மு தளையசிங்கத்தின் எழுத்துக்களில் காணலாம். இன்று நாம் அசலாக சிந்திக்க ஆரம்பித்தால் என்ன பிரச்சினை வரும் என்பதை அவரது தோல்விகள் உணர்த்துகின்றன.அவ்வகையில் அவரது அத்தனை முயற்சிகளும் முக்கியமானவையே .

எம் யுவன் – இந்திய சிந்தனைமரபின் உருவகங்களை ஒரு படிமமாக ஏன் பயன்படுத்தக்கூடாது ?எத்தனையோ பழங்குடிப் படிமங்களை நாம் இப்போது பயன்படுத்துகிறோமல்லவா ?

ஜெயமோகன்- அது சாத்தியம்தான். ஆனால் இந்தியசிந்தனைமரபின் படிமங்கள் மிகவும் பயன்படுத்தப்பட்டவை. அவற்றின் அர்த்தங்கள் எல்லாமே அச்சொற்களின் பின்னணியில் நின்றுகொண்டிருக்கின்றன. அவற்றை புதிதாக பயன்படுத்த முடியாது . அந்தபிரச்சினைதான் மோகனரங்கனால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டது .

எம் யுவன்- ஆனால் ஒன்று உண்டு ஜெயமோகன் , சிந்தனைகள் அப்படி அந்தரத்திலே உருவாகிவிடாது .எந்த புதிய சிந்தனையும் அதன் ஆழத்தில் புராதனமான ஒரு சிந்தனையில் வேரைக் கொண்டிருக்கும் .அவை படிமங்களாக மாறி நமக்கு கிடைக்கலாம்.அச்சிந்தனைகளை வேரிலிருந்துஅறுத்துக் கொள்வது சாத்தியமல்ல.அதுமட்டுமல்ல அப்படி செய்யும்ப்போது சிந்தனைகள் மற்றவ்ர்களுக்கு சென்று சேர்வதும் தடைபட்டே போகும் .மு தளையசிங்கம் அ ப்படி செய்திரூக வேண்டுமென நாம் எப்படி சொல்ல முடியும் ?

ஜெயமோகன் -அது உண்மைதான்.இன்மை என்பது பொருள் போலவே ஒரு வகை இருப்புதான் என்ற புராதன தரிசனம்[நியாயம் ] எப்படி தனக்கு தூண்டுதலாக ஆனது என்று சந்திரசேகர் ஒரு இடத்தில் சொல்லியிருந்தார் . சிந்தனையில் அம்மாதிரி மரபார்ந்த உருவகங்களை நாம் பயன்படுத்துவதை நம்மால் தடுக்க முடியாது .ஆனால் விவாதங்களில் அவற்றுக்கு இன்று புறவய மதிப்பு குறைவு என்பதே என் தரப்பு .

எம் யுவன்- எந்த புறவய மதிப்பும் விவாதத்தில் விரிவாக பயன்படுத்துவதன் மூலமே உருவாகிவரமுடியும்.

க.மோகனரங்கன்- இங்கே ஜெயமோகன் பேசும் போது எல்லா அறிவியக்கங்களுக்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்பு அல்லது ஒத்திசைவு தேவை என்பதை சொன்னார் . மு தளையசிங்க த்தின் சிந்தனைகளில் அத்தகைய ஒருங்கிணைவுக்கான ஒரு தேடல் இருப்பதாக . என்ன பிரச்சினை என்றால் இம்மாதிரி ஒருங்கிணைப்புக்காக பேசுபவர்கள் எல்லாருமே தங்கள் துறையை அந்த ஒருங்கிணைவுக்கான அடிப்படைத்தளமாக கருதுவார்கள் என்பதே . அதன் விளைவாக மேலும் ஒரு கொள்கை தான் உருவாகும். உண்மையான ஒருங்கிணைவை எந்த தளாத்தில் நடத்துவது என்பதுதான் பிரச்சினை .அதற்கு தளைய சிங்கம் என்ன சொல்கிறார் என்பதுதான் கேள்வி.

ஜெயமோகன்- அதை நான் முழுமையாக ஏற்கிறேன். கடந்த காலத்தில் அப்படி பேசியவர்களில் மொழியியலாளர்கள் முக்கியமானவர்கள்.எல்லா சிந்தனைகளையும் மொழியியலின் அடிப்படையில் விளக்க முயன்றார்கள் .அறிவியல் சூத்திரத்தையும் , வரலாற்றுக் கொள்கையையும் ,நாவலையும் எல்லாமே உரைத்தல் [narration] என்ற பொது அடிப்படையில் விளக்கி விடமுடியும் என்றார்கள்.விளைவாக narratology என்ற புதுதுறை பிறந்ததே மிச்சம்.இப்போது நரம்பியலாளர் மானுட அறிதல்களை எல்லாம் விளக்கிவிடக்கூடிய ஒரு பொது சித்தாந்தத்துக்காக உழைப்பதாக கேள்விப்படுகிறேன் .

நாஞ்சில்நாடன் – மு தளையசிங்கம் எல்லாவற்றையும் ஆன்மீகத்தில் கொண்டுவந்து முடிப்பதாக அல்லவா படுகிறது ?

ஜெயமோகன்-ஆன்மீகம் என்ற வார்த்தையைவிட மெய்யியல் என்ற வார்த்தை மிக பொருத்தமானது. அறிகிறோம் என்றால் ஏன் எதன் பொருட்டு என்பது மிக முக்கியமானதாக ஆகிறது. அந்த நோக்கமே அவ்வறிதலின் பெரும்பாலான அடிப்படைகளை தீர்மானிக்கிறது . அந்நோக்கத்தை அறிந்துகொள்ள , மதிப்பிட மெய்யியலே முக்கியமானது .

க.மோகனரங்கன்-இங்கே சொல்லப்பட்ட மு தளையசிங்கத்தின் மேற்கோள்களில் ‘ ‘இவ்வுலகத்தை மறுத்து மறுவுலத்தையும் முத்தியையும் அழுத்திய பழைய முறை சமயப் போக்கில் விஞ்ஞானம் எப்படி அதிருப்திப்பட்டதோ அவ்வாறே இன்றைய சமய ஞானமும் மனிதனின் அக ஆழத்தையும் அதன் பிரபஞ்ச விரிவுகளையும் மறுக்கும் விஞ்ஞானத்தில் அதிருப்திப்படுகிறது ‘ என்று வருகிறது .

ஜெயமோகன்- நான் மு தளையசிங்கத்தை நியாயப்படுத்த அல்லது விளக்க முயலவில்லை . அவரை நீங்களே வாசித்து மதிப்பிடுவதே முறை . ஆனால் மு தளையசிங்க அறிவியல் இனிமேலும் புறவயத்தருக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இருக்க முடியாது என்று சொல்கிறார் என்று படுகிறது . அறிவியலின் அடிப்படைகளை தீர்மானிக்கும் அற அம்சங்கள் குறித்தும் ,தத்துவ அடிப்படைகளை குறித்தும் பேசவேண்டியிருக்கிறது . கார்ல் பாப்பரின் The logic of scientific discoveries என்ற பிரபலமான நூலில் Philosophism in Science என்பது குறித்து நிறைய பேசப்படுகிறது .ஒட்டுமொத்தமாக அதை புரிந்துகொள்ளலாமேயொழிய அதை துல்லியமாக நம்மைப்போன்ற எளிய வாசகர்களால் புரிந்துகொள்ள முடியாது . ஆனால் இந்த வினா இப்போது முக்கியமானதாக உள்ளது என்றுதான் படுகிறது .

க.மோகனரங்கன் -சி பி ஸ்நோ போன்றவர்கள் அறிவியல்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் தேவை குறித்து பேசினார்கள் .இந்த இதழ் சொல் புதிதில் கூட நீலகண்டன் அரவிந்தன் அதைப்பற்றி எழுதியிருக்கிறார் . [அறிவியலின் மெய்யியல் அடிப்படைகள் ]

ஜெயமோகன்- அதே இதழில் வேறு கோணத்தில் சிந்திப்பவரான வரலாற்றாசிரியர் குமரிமைந்தன் வரலாற்றாய்விலும் மெய்யிலலே முதன்மையானது என்கிறார் .

எம் யுவன்- ஆனால் சி பி ஸ்னோ அடிப்படையில் ஓர் அறிவியல்புனைகதையாளர்தானே ?

ஜெயமோகன் – இந்த இடத்தில் நான் முக்கியமாக ஒன்றை சொல்ல வேண்டும். நவீன அறிவியல் பெருமளவுக்கு உயர் தொழில் நுட்பம் சார்ந்ததாக ஆகிவிட்டதனால் தத்துவார்த்தமாக அறிவியலைப்பற்றி சிந்திக்கும் சந்தர்ப்பம் பெரும்பாலான அறிவியலாளர்களுக்கு இல்லாமலாகி விட்டது என்று படுகிறது .இந்த இடத்தில் அறிவியல் புனைகதையாளர்கள் பெரும்பணி ஆற்றுகிறார்கள் . அவர்கள் தங்கள் கற்பனையை விருப்பப்படி நீட்ட முடிகிறது.அறிவியலின் விளிம்பு நிலைகளில் அவர்கள் சாதாரணமாக சஞ்சரிக்கிறார்கள் . தமிழ் இலக்கியவாதிகள் பொதுவாக அறிவியல் கதைகளை பொழுதுபோக்குக் கதைகள் என்றே எண்ணி வருகிறார்கள் . அவை காலம் , வெளி போன்றவற்றை புரட்டிப்போட்டு மானுட வாழ்க்கையின் சாராம்சங்களைப்பற்றிய பல புதிய கேள்விகளை உருவாக்கியுள்ளன என்பதை நாம் காணலாம்.

எம் யுவன் – அறிவியல் புனைவுகள் என்னை அதிகம் கவர்ந்தது இல்லை . அறிவியல் நூல்கள் சாதாரண மொழியில் எழுதப்பட்டால் அவையே எனக்கு மேலும் ஆர்வமூட்டுகின்றன. உதாரணமா ரோஜர் பென் ரோஸின் நூல்கள் …

சுவாமி வினய சைதன்யா – இங்கே அறிவியல் மெய்யியல் ஆகியவற்றிற்கு இடையேயான இணவு குறித்து பேசப்பட்டது . மு தளையசிங்கம் மு தளைய சிங்கம்960 களில் நடராஜ குரு இவ்விஷயம் குறித்து அதிகமாக பேசியுள்ளார் .அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு wisdom -The absolute is adorabe என்ற நூலாகவும் வெளிவந்துள்ளது .

ஜெயமோகன் – ஆமாம் .இந்த விவாதத்தில் நடராஜ குருவின் கருத்துக்களையும் கணக்கில் கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன் . ஒரு கட்டுரை ‘ ‘ அறிவியலை பாட முடியுமா ? ‘ ‘ சொல் புதிதில் ஏற்கனவே மொழிபெயர்க்கபட்டிருந்தது . குரு தன் நூலில் இவ்வாறு சொல்கிறார் .

‘ ‘மெய்ஞானமே இறுதியான உண்மையாக இருக்க முடியும்.மனம் உரிய முறையில் குவிக்கப்பட்டு செலுத்தப்பட்டால் மட்டுமே அது நிகழ முடியும். இவ்வாறு குவித்து திருப்புதலுக்கு முறைமையியல் [methodology]அறிவியங்கியல்[epistemology ] விழுமியவியல் [axiology]ஆகியவை அதில் முறைப்படி அமைந்திருக்கவேண்டும். பிரபஞ்சவியல் இயற்பியல் மீமெய்யியல் ஒழுக்கவியல் அழகியல் அனைத்துமே அதன் எல்லைக்குள் வருபவையே.அதை நடைமுறைப்படுத்திப்பார்க்கும்போது உயர்மட்ட ஆய்வுகளான சமூகவியல் பொருளியல் , அரசியல் போன்ற பல துறைகளும் அதன் எல்லைக்குள் வரமுடியும். அகவயப் பார்வையின் தேடல்விளக்கை தவிர்த்தாலுகூட தொலைநோக்கியின் மூலமோ நுண்நோக்கியின் மூலமோ வெளிப்படும் உலகங்கள் கூட அதன் எல்லைகளை அல்லது சாத்தியங்களை வெளிப்படுத்தலாம். ஞானம் என்பது நம்பிக்கைநோக்கு அவநம்பிக்கை நோக்கு சுதந்திரவாதம் பழைமைவ ‘தம் சம்பிரதாயப்போக்கு புதுமைவிருப்பம் தியான நோக்கு செயலூக்க நோக்கு மேற்கத்திய அணுகுமுறை கீழைஅணுகுமுறை போன்ற தனிநபர் சார்ந்த அணூகுமுறைகளால் பிரிக்கப்படக்கூடியதாக இருக்காது .ஞானத்தேடலுடைவனை பொறுத்தவரை பின்னோக்கியபார்வை ,எதிர்காலக்கனவு ,ஆய்வு நோக்கு, அல்லது அகவயமான முழுமைநோக்கு போன்றவைய்ல்லாமே ஒருமையத்தில் ஒன்றாகின்றன. ஞானம் முழுமையடையும்போது இலக்கும் வழிமுறைகளும் இயல்பாகவே சமநிலையை அடைகின்றன. சுயதிருப்தியும் மகிழ்ச்சியும்பொதுநல நோக்கும் ஒரே சமயம் கைகூடுகின்றன.. ‘ [நடராஜ குரு -wisdom ]

வினய சைதன்யா – ஒரு வகையில் நடராஜ குருவின் ஆசிரியர் ஹென்றி பெக்ஸனின் தத்துவ ஆய்வின் மையமும் இதுதான் . ஞானம் அறிவு என்ற இரண்டுக்கும் இடையேயான உறவென்ன என்ற கேள்வி .பயன்படாத ஒன்று அறிவாக இருக்க முடியும். நம்மை மேம்படுத்தாத ஒன்று அறிவாக இருக்கமுடியும். அது ஒருபோதும் ஞானமாக இருக்கமுடியாது . அறிவு பிளவுபட்டதாக , முரண்பாடுகள் கொண்டதாக இருக்கமுடியும் .அறிவுக்கு கால இட எல்லைகள் உண்டு. அறிவு எல்லைக்குட்பட்டது .எல்லைக்குட்பட்ட எதுவுமே அவ்வெல்லைக்கும் அப்பால் பொய்தான் .எப்போதுமே எல்லைகளுக்கு அப்பால்தான் இடம் அதிகம் .எல்லையை மீறித்தான் எதிர்காலமே வளரமுடியும். துரதிர்ஷ்டவசமாக பெர்க்ஸனுக்கு பிறகு மேற்கத்திய சிந்தனையில் இந்த தேடல் குறைந்து விட்டது . அறிவியல் போக்குகளுக்கு தருக்க அடிப்படைகளை உருவாக்கித்தருபவர்களாக இன்றைய தத்துவவாதிகள் மாறிவருகின்றார்கள்

ஜெயமோகன் – நடராஜ குரு இப்படி சொல்கிறார் . ‘ ‘அறிவியல் தத்துவம் ஆகிய இரு தளங்களிலும் ஞானம் இப்போது அதீதமான துறைப் பாகுபாடுகளுக்கு உள்ளாகியுளது .குறிப்பாக மேற்கில். ஆகவே விஞ்ஞானங்களை ஒருங்கிணைக்கவும் தொகுத்துக் கொள்ளவும் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது . ஆனால் இம்மாதிரி ஒரு தரப்பை முன்வைக்கும் ரஸ்ஸலை போன்றவர்கள்கூட ‘நிரூபண தர்க்க ‘ முறையின் எல்லையைத்தாண்ட முடியவில்லை. நீல்ஸ்போர் ஷ்ரோடிஞ்சர் போன்றவர்கள் ஒருங்கிணைந்த அறிவியலில் அனைத்தையும் தொகுக்க முயல்கின்றார்கள் .. ‘ [நடராஜ குரு -wisdom ]

எம் யுவன்- இந்தக் கோணத்தில் பார்த்தால் மேதைகளான அறிவியலாளர்களிடம் கூட இருக்கும் குறுகலான பார்வை வியப்பை தருகிறது.அவர்களுக்கு தங்கள் தரப்பை அனைத்துக்கும் மையம் என்று பார்க்கும் பலவீனத்திலிருந்து தப்பவே முடியவில்லை .

ஜெயமோகன்-இதை ஒட்டி நீல்ஸ்போரின் ஒரு மேற்கோளையும் எடுத்தேன். ‘அறிவியல் என்பது மானுடப்புரிதலை விரிவுபடுத்துவதற்கானதன் யத்தனத்தை வைத்துப் பார்க்கும்ப்போது அடிப்படையில் ஓர் ஒருமை [unity ‘ ஆகும் . …அனைத்துக்கும் மேலாக அது பகுப்பாய்வு[analysis] தொகுப்பாய்வு [synthesis ] ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்குகிறது . ‘ ‘

மோகனரங்கன்- இலக்கியத்தை இதில் தளையசிங்கம் எப்படி பார்க்கிறார் என்பதுதான் முக்கியமானது .அவரைப்பொறுத்தவரை இலக்கியம் முக்கியமற்ற ஒரு துறை மட்டுமே. அவர் உண்மை என்பதற்கே முக்கியத்துவம் அளிக்கிறார். உண்மையானது சமயத்தாலும் தத்துவத்தாலும் அறிவியலாலுமே முக்கியமாக அறியப்படக் கூடியது என்று அவர் கருதுகிறார் .அவ்வுண்மைகளை பேசக்கூடிய தகுதிகளையும் கருவிகளையும் இலக்கியம் அடைய வேண்டும் என்று அவர் கருதுகிறார் .மெய்யுள் கூட அதற்கான முயற்சிதான் என்றுதான் எனக்கு எண்ணம் ஏற்படுகிறது .

வேதசகாய குமார் – எனது மனப்பதிவும் அதுதான்.இன்னும் சொல்லப்போனால் தத்துவத்தையும் அறிவியலையும் விவாதிக்கக்கூடிய ஒரு மொழிவடிவத்தைத்தான் அவர் உத்தேசித்தார் என்று பட்டது …

ஜெயமோகன் – உண்மை என்பதை அழுத்தம் தந்து பேசமுற்படும்போது அவர் குரலில் இலக்கியத்திற்கான இடம் குறைந்துவிடுகிறது என்பது உண்மைதான் . ஆனால் அவரது பார்வையில் இலக்கியம் ஒரு முக்கியமான மெய்யறிமுறையாக இருந்துகொண்டே இருந்தது என்பதுதான் உண்மை. திரும்பத்திரும்ப அவர் இலக்கியம் பற்றித்தானே பேசுகிறார் ? முற்றாக தத்துவம் பக்கம் அவர் நகர்ந்ததேயில்€லையே ? அவர் மற்ற அனைத்தைப்பற்றியும் பேசும்போதுகூட அவற்றை இலக்கிய நோக்கில்தான் சொல்கிறார் என்றுதான் நான் சொல்வேன் .

அருண்மொழி நங்கை- நான் கவனித்தபோது தளைய சிங்கம் அவரது ஆரம்பகால படைப்புகளில் இலக்கியத்தின் உத்தி வடிவம் மொழி போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பேசியிருப்பதாக பட்டது .அந்நிலையில் அவருக்கு இலக்கிய ஆக்கத்தின் பின்னால் உள்ள மனநிலைகள் ,சமூக பின்னணி , தனிப்பட்ட ஆளுமைப்ப்பிரச்சினைகள் எல்லாமே முக்கியமாக பட்டிருக்கின்றன . பிற்பாடு இலக்கியத்தின் ஆதாரமாக உள்ள மெய்யியல் பிரச்சினைகளை மட்டும் கவனம் செலுத்துகிறார் . அவரது பார்வையில் இலக்கிய பரவச விடுதலையை தருவதாக ஆகிவிடுகிறது .பரவசம் மட்டுமல்ல விடுதலை என்று அவர் சொல்வதை நான் முக்கியமானதாக கருதுகிறேன் . தளையசிங்கம் தன் படைப்புகளில் ஒருபோதும் கலை அளிக்கும் விடுதலை போலியானது மனமயக்கமானது என்று சொல்லவில்லை அல்லவா ? அவர் உள்ளுணர்வையே முக்கியமானதக கருதுகிறார் .

அபிலாஷ் – இலக்கியப்படைப்பின் ஆக்கத்தில் உள்ளுணர்வு என்று கூறப்படுவனவற்றுக்கு உள்ள இடம் எது ? எலாருமே உள்ளுணர்வத்தான் இலக்கிய ஆக்கத்துக்கு அடிப்படையாக கொள்கிறர்களா ?

எம் யுவன் -எல்லா ஆக்கங்கள்க்கும் அடிப்படை உள்ளுணர்வுதான். எதையுமே யோசித்து திட்டமிட்டு செய்துவிடமுடியாது .அறிவியல் கண்டுபிடிப்புகள் பொறியியல் வடிவங்கள் எல்லாமே ஆழ்மனத்தின் வெளிப்பாடுகள் தான்.நாம் செய்யக்கூடுவதெல்லாமே நமது கருவிகளை தயாராக வைத்த்ருபதுமட்டும்தான்.

ஜெயமோகன்- எனது கணிசமான கதைகளை நான் கனவில் இருந்து எடுத்திருக்கிறேன். கனவு எங்கிருந்து வருகிறது அங்கிருந்தே படைப்பும் வருகிறது ….

அபிலாஷ்- தூண்டுதல் எங்கிருந்தும் வரலாம் .ஆனால் படைப்பில் திட்டமிடலும் செலாக்கமும்தான் முதல்டம் வகிக்கின்ற என்று எனக்கு படுகிறது…

எம் யுவன் – என கவிதை ஒன்றை நான் வரி வரியாக கனவில் கண்டேன்.பழைய மீட்சி இதழ் ஒன்றின் அட்டையில் அச்சாகியிருந்தது . ஹிடாச்சி என்று பெயரில். அது நான் அலுவலகம் போகும் வழியில் உள்ள ஒரு விளம்பர போர்டில் இருப்பது . அக்கவிதையை அப்படியே நான் எழுதி பிரசுரிதேன்.

மோகனரங்கன் – தளையசிங்கம் கட்டுரையில் தரிசனமனநிலை பிளவுண்ட ஆளுமையையும் மனப்பிளவு பிரதிகளையும் உருவாக்குகிறது என்று சொல்லியிருந்தார் . ஆனால் பெரும் தரிசனப்படைப்புகளில் ஒரு ஒருமை கைகூடியிருப்பதாக படுகிறதே…

ஜெயமோகன் – அதை ஒரு நிபந்தனையாக ஆக்கமுடியாது என்றுதான் சொன்னேன். பெரும் தரிசனிகர் மனநோயின் விளிம்பில் நிற்கிறார்கள் . ராமகிருஷ்ண பரம ஹம்சரை அமெரிக்க அழைத்துசென்றால் மனசிகிழ்ச்சைக்கு அனுப்பிவிடுவார்கள்…

தேவதேவன் – அதை மனநோய் என்று சொல்லிவிட முடியாது . சாதாரணமனநிலையில் சாதாரண காரியங்களையே சொல்ல முடியும். மனப்பிளவு ஏற்படுகிறதென்றால் அதற்குக் காரணம் சொல்லப்படும் விஷயம் அடிப்படையில் பிளவுண்டிருப்பதுதான் . சொல்லப்படும் விஷயத்திலிருந்து சொல்பவனை விலக்க முடியாது.இரண்டும் ஒன்றுதான்.

ஜெயமோகன்-இங்கு விவாதத்துக்காக ஏ என் வைட்ஹெட்டின் ஒரு மேற்கோளை கொண்டுவந்தேன். ‘ ‘ மானுட அனுபவங்களை நாம் சில முக்கிய தலைப்புகளின் கீழ் தொகுத்து வைத்திருக்கிறோம். இவற்றை அறிவதற்கு நாம் இவை சார்ந்த ஆதாரங்களாஇ அனுபவத்தின் எல்லா தருணங்களுக்கும் விரித்துபார்க்கவேண்டும். எதுவுமே விடப்படக்கூடாது .குடித்திருக்கும்போது ,நிதானத்தில் இருக்கும்போது,தூங்கும்போது,விழித்திருக்கும்போது, சடைவாக இருக்கும்போது, உற்சகமாக

இரு க்கும்போது ,சுயநினைவுடன் இருக்கும்போது சுயமிழந்த மயக்க நிலையில் அறிவார்ந்த நிலையில் திடமான பெளதிக அடிப்படையில் மதநம்பிக்கையில் அவநம்பிக்கையில் பதற்றநிலையில் அலட்சிய நிலையில் எதிர்பார்ப்புநிலையில் மகிழ்ச்சியில் துக்கத்தில் மனைருளில் சகஜநிலையில் ,மனப்பிறழ்வுநிலையில்…… ‘ ‘

எம் யுவன் -ஆம் மனப்பிறழ்வு நிலையில் ஒவ்வொன்றும் எவ்வாறாக இருக்கின்றன என்பது முக்கியமானதுதான். இந்த அம்சத்தை நரம்பியல் தவிர வெறு எந்த அறிவுத்துறாஇயுமே கணக்கில் கொண்டதில்லை . இலக்கியம் அதை கணக்கில் கொள்கிறது .மேலான படைப்புகள் எல்லாமே ஒரு கண்ணை அங்கேயும் வைத்துத்தான் பேசுகின்றன.

ஜெயமோகன்- ஆபிரகாம் மாஸ்லோவின் ஒரு மேற்கோளையும் எடுத்து வந்தேன். ‘ ‘ படைப்பூக்கம் கொண்ட நபர் தன் இறந்தகாலத்தின் அடிமையாக இருப்பதில்லை. தன் நிகழ்கால சூழலுக்கு கட்டுப்பட்டவராக தன் பேசுதளத்தில் இயங்க விதிக்கப்பட்டவராகவும் இல்லை.தன் நரம்பு இயக்கங்களுக்கு தன் மொழிக்கும்கூட கட்டுப்பட்டவரல்ல …

உயர்மட்ட படைப்பூக்கம் கொண்டவர்கள் புரிநிதுகொள்ள முடியாதபடி தனிமையானவர்கள் . ஆகவே அவர்களைமனநிலைபிசகுள்ளவர்கள் என்று புரிந்துகொள்வது அபத்தமானது. ‘ ‘ அந்தோனி ஸ்டொர் எழுதிய Solitude என்ற நூலில் இருந்து எடுத்த மேற்கோள் இது .இந்தநூலே படைப்புமனநிலையின் அசாதாரண தளங்களைப்பற்றிய முக்கியமான ஆய்வுதான்.

வெங்கட் சாமிநாதன் – ஜெயமோகன் இக்கட்டுரையில் விளிம்புநிலையைப்பற்றி ஏராளமாக சொல்கிறார் .அது எனக்கு அர்த்தமாகவில்லை .எந்தவகையான கனவையும் அப்படிசொல்லி இப்போதுநாம் நியாயப்படுத்திவிடமுடியுமா என்ன ?

ஜெயமோகன்- அப்படியல்ல , முக்கியமானவிஷயம் தளையசிங்கம் இக்காலகட்டத்தின் அடிப்படைப்பிரச்சினைகளை அடையாளம்கண்டார் என்பதே .அதை விரிவாகவே பேசியிருக்கிறோம். உதாரணமாக ‘ பொருள்முதல்வாதம் மூன்றுதளங்களில் அதன் எல்லையை உணர்கிறது. ஜடம் – உயிர் உறவில் , உடல் -மனம் உறவில்,தீர்மானவாதம் – தெரிவு உறவில் [Determinism – choice ] வில் டுரண்ட் [தத்துவத்தின் கதை] . தளையசிங்கத்தின் சிந்தனைகள் இம்மூன்று புள்ளிகளில் சென்று மோதுவதை தொடர்ந்து காணலாம் .அதன்பிறகே அவரது ஊகங்கள் உருவாகின்றன.அவற்றின் திசை எதுவாக இருந்தாலும் இலக்கு இப்புள்ளிகளே என்பதை காணலாம். பெரும் சிந்தனையாளர்களில் கூட மிக விசித்திரமான மனத்தாவல்களை காணமுடிகிறது .உதாரணமாக பெர்க்சனின் இந்த மேற்கோள் தளையசிங்கத்துக்கு மிக பக்கத்தில் வருகிறது . -மன்னிக்கவும் இதை என்னால் சரியாக மொழிபெயற்க முடியவில்லை .

The animal takes its stand on the plant , man bestrides animality and the whole of humanity in space and time is one immense army galloping beside and before and behind each of us in an overwhelming charge able to beat down every resistance and clear the most formidable obstacles perhaps even death [ Henri Bergson Creative evolution]

எம் யுவன் – விளிம்புநிலை என்பது இதுவரை என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டிருகின்றனவோ அதற்கு அப்பால் சென்று புதிய கேள்விகளை கேட்பதில்தான் உள்ளதே ஒழிய பதில்களில் அல்ல. அறிவியல் ஆய்வின் அடிப்படைகளை உருவாக்கும் ஊகங்களின் இடத்தில் தான் அவற்றுக்கு முக்கியத்துவம் .

வெங்கட் சாமிநாதன் – தளையசிங்கம் சொல்லும் பூரணமனநிலை என்பதற்கு என்ன அறிவியல் முக்கியத்துவம் இருக்கமுடியும் ?

ஜெயமோகன்- இப்போது உளவியல் என்ன சொல்கிறது ? தேவை மற்றும் சமூகத்தின் அழுத்தம் காரணமாக மனத்தின் பெரும்பகுதி அடக்கப்பட்டு ஆழ்மனமாக ஆகிறது . தளையசிங்கம் சொல்லும் பூரண சமூகத்தில் மனம் முற்றாக அடக்கப்படவே இல்லையென்றால் ஆழ்மனம் அல்லது நனவிலி என்பதற்கு என் ன அர்த்தம் ? இந்தக் கோணம்தான் அச்சிந்தனையை புதிய எல்லைகளுக்கு கொண்டுசெல்கிறது …

வினயசைதன்யா- தளையசிங்கத்தில் நீட்சேயின் சிந்தனைகள் அதிகம் தெரிகின்றன .எல்லா தரிசனிகர்களிலும் அவர்களைப்பற்றிய ஒரு மிகையான தொனி காணப்படுகிறது .இவரிலும் உள்ளது

ஜெயமோகன்- நான் இதை சுட்டவே நீட்சேயின் சில மேற்கோளை எடுத்துவந்தேன் . ‘இவ்வாறு பேசினார் ஜரதுஷ்ட்ரா ‘ வில் இப்படி எழுதுகிறார்]

‘ ‘

எல்லா கடவுள்களும் இறந்துவிட்டனர் .இனி நாமே வாழும் அதிமானுடர்களாவோம்

*

மாமனிதர்களாவது எப்படி என நான்கற்றுத்தருகிறேன். மனிதநிலை என்பது தாண்டிசெல்லவேண்டிய ஒன்று. அப்படி தாண்டிச்செல்ல நீ என்ன செய்தாய் ?

*

மனிதன் தன் இலக்கை தீர்மானிக்கவெண்டிய நேரம் வந்துவிட்டது. தன் விந்துவை உச்ச கட்ட நம்பிக்கையில் அவன் விதைத்துவிடவேண்டியுள்ளது

*

சொல்லுங்கள் சகோதரரே இலக்கை இழந்த மானுடம் மானுடத்தையே இழந்துவிட்ட ஒன்றல்லவா ?

*

இன்றைய தனியர்களே , இன்று விலகி நிற்பவர்களே ஒரு நாள் நீங்களும் மக்கள் திரளாக ஆவீர்கள். உங்களிலிருந்து உங்களை தேர்வு செய்வீர்கள்.தேர்வுசெய்யப்பட்ட மக்கள் எழுவார்கள், அவர்களிலிருந்து அதிமானுடர்கள்

[ நீட்சே ‘இவ்வாறு பேசினார் ஜரதுஷ்ட்ரர் ‘தமிழினி வெளியீடாக வெளிவரவிருக்கும் செந்தூரம் ஜெகதீஷின் மொழிபெயர்ப்பில் இருந்து ]

எம் யுவன் – இத்தகைய கனவுகளுக்கு இலக்கியமுக்கியத்துவம் உள்ள அளவுக்கு தத்துவ முக்கியத்துவம் உண்டா என எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது .

ஜெயமோகன் -அந்த வேறுபாட்டை அப்படி துல்லியமாக வகுத்துவிட முடியாது .

வினயசைதன்யா- இந்தக்கனவு அடிப்படையில் மேற்கத்திய தன்மை உடையது . the man என்ற கருத்து முதலில் அங்கு முளைத்தது .அதன் இன்றியமையாத தொடர்ச்சி தான் super man அல்லது அதிமனிதன் . இக்கருத்தை எப்படி அரவிந்தர் ஏற்றுக் கொண்டார் என்பது வியப்புக்கு உரியதுதான் .

ஜெயமோகன் – அதை அவர் பெர்க்சனில் இருந்து பெற்றிருக்கவேண்டும்

வினயசைதன்யா- பெர்க்சனின் மாணவராக இருந்தாலும் நடராஜ குரு அச்சிந்தனையை எற்கவில்லை

அருண்மொழிநங்கை – நான் அதைப்பற்றி சொல்ல விரும்பினேன்.தளைய சிங்கத்தின் பார்வை பெண்களை பொறுத்தவரை கீழைநாட்டு பார்வை அல்ல .அவரது கதைகளை வைத்து இதை சொல்கிறேன். கீழை மரபில் ஆண் பெண் என்பது சிவ சக்தி என்று சமமான வலிமைகளாக உருவகிக்கப்படுகிறது . அவர்கள் இணைவு லீலை என்று விளையாட்டாக உருவகிக்கப்படுகிறது . ஆனால் மேலைமரபில் பெண் செயலற்ற சக்தி அதாவது Inertia .ஆண்தான் தூண்டும் சக்தி அல்லது படைப்பு சக்தி . தளையசிங்கம் கதைகளில் எல்லாமே பெண்கள் செயல்ற்ற சக்திகளாகவே வருகின்றனர். அவரது பார்வை மேற்கத்திய் ஆண்மைய அணுகுமுறைதான் .

ஜெயமோகன் – தளையசிங்கம் தன் நோக்கில் ஒரு அழுத்தமான பிராந்தியத்தை உருவாக்கிக்காட்டுகிறார் . அது தீவிரமான கேள்விகளும் அரைகுறையான பதில்களும் பலவிதமானதடுமாற்றங்களும் கொண்டது .ஆனால் அக்கேள்விகள் நமக்கு மிக முக்கியமானவை . மேலும் மேலும் அவற்றின் தீவிரம் ஏறியபடியே வருகிறது .

மேலும் சற்றுநேரம் வேடிக்கையாக பேசி சிரித்து பின்பு கூட்டத்தை நிறைவு செய்தோம்

மறுநாள் காலையில் வெளியே இறுதி அரங்கு . பொதுவாக கூட்டம் குறித்த மனப்பதிவுகளை குறிப்பிடுவதாகவே இருந்தது .தேவகாந்தன் இக்கூட்டம் தனக்கு மிக்க மனமகிழ்ச்சியை அளிப்பதாக சொன்னார் . ஈழ இலக்கியத்திலும் புலம்பெயர்ந்த இலக்கியத்திலும் ஆழமான ஒரு வித கைடைவெளி இருப்பதாக சொன்னார் . முற்போக்கு தத்துவம் தன் வரலாற்றுக் கடமையை செய்துவிட்டு பின்னகர்ந்துவிட்டது . அமைப்பியல் போன்ற கருத்துக்கள் வேரோடவும் இல்லை . ஆக இப்போது ஒரு தத்துவமின்மை அங்குள்ளது .அந்த இடைவெளியை தளையசிங்கம் குறித்த விவாதங்கள் நிரப்பக்க்கூடும் . இரண்டாவதாக ஈழ தேசிய இலக்கியம் என்றால் அது எப்படி இருக்கவேண்டும் என்ற ஒரு குழப்பம் இன்று உள்ளது . சர்வதேச இலக்கியம் தமிழக இலக்கியம் ஆகியவற்றில் இருந்து வேறாக அது கொள்ள வேண்டிய தனியடையாளம் என்ன என்ற தேடல் உருவாக வேண்டும். தேசிய இலக்கியம் என்ற குரலை எழுப்பிய முன்னோடிகளில் ஒருவரான மு தளையசிங்கம் குறித்த விவாதம் அந்த தேடலுக்கு ஊக்கம் கூட்டக்கூடும் என்றார் தேவகாந்தன்

தேவதேவன் இலக்கியத்தின் ஆழமான இடம் அதன் மெய்யியலிலேயே உள்ளது என்று மு தளையசிங்கம் உணர்த்துகிறார் , ஆனால் அப்பயணத்தின் அபாயங்களுக்கும் அவரே உதாரணம்.அவரைப்பற்றிய விவாதம் அதிகம் பேசப்படாத இவ்விஷயத்தை மேலும் தெளிவுபடுத்திக் கொள்ள உதவக்கூடியதாகும் என்றார் .

மதியத்துடன் அரங்குகளை முடித்துக் கொண்டோம் . பிரியும்போது ஏற்படும் வழக்கமான சோர்வும் நிறைவுணர்வும் ஒரே சமயம் வந்து அழுத்தின.

====

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

ஜெயமோகன்


ஊட்டியில் காலையில் எழுவதென்பது எப்போதுமே சிரமமானது . குளிருக்குப் பழக்கமில்லாத வியர்வையூர் வாசிகளுக்கு மிக மிகச் சிரமமானது . இரவெல்லாம் உடலில் இருந்து ஊறிய இளம் வெம்மை அப்போதுதான் கம்பிளிக்குள் தேங்கி சுகமாக உடலைத் தழுவியிருக்கும் . ஆனால் அனைவரையும் எழுப்பி காலை நடைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. காலையில் எழச் சிரமப்படுபவர்கள் கூட எழுப்பாவிட்டால் கோபித்துக் கொள்வதுண்டு .ஊட்டியின் அழகே காலையின் மூடுபனிக்குள் ஊடுருவி எழும் வெயில் மெல்ல பொன் மஞ்சள் நிறமாக மாறுவதுதான் . காலையில் எழுந்து பல்துலக்க வரும்போது மூத்தவர்கள் எல்லார்மே எழுந்து விட்டிருப்பதைக் கண்டேன். நாஞ்சில்நாடன் வெங்கட் சாமிநாதனுடன் அந்த வேளையிலும் இலக்கியம்தான் பேசிகொண்டிருந்தார் .

குருகுலத்தில் பால்வர தாமதமாகும் ஆகவே காலையில் பால் இல்லாத கருப்பு டா தான் .குளிருக்கு அது மிக சுவையாகவே இருக்கும் .மேலும் ஊடி டாக்கு பச்சை வாசனையும் இருக்கும். கூட்டமாக காலைநடை கிளம்பினோம். வெயில் தெளிவான மஞ்சள் நிற அருவிகள்போல மரங்களிலின் ஊடே விழுந்துகொண்டிருந்தது .கிட்டத்தட்ட இரண்டரைமணிநேரம் நடந்தோம். இதய நோய்க்கு சிகிழ்ச்சையில் இருந்தபோதும்கூட நாஞ்சில்நாடனும் நடந்தார் . வழியில் நின்று ஒரு டாக்கடையிலிருந்து டாகுடித்தபடி பேசிக் கொண்டிருந்தோம் .ஒன்பதரை மணிக்கு திரும்பிவந்தோம் .எம் யுவன் வந்திருந்தார் .அபிலாஷும் அவர் நண்பரும் வந்தனர் . பத்துமணிக்கு முதல் அமர்வை துவங்கினோம்.

முதலில் எம். வேதசகாயகுமார் பேசினார் . அவரது கட்டுரையின் சாரமான கருத்து தளைய சிங்கம் ஒரு இலக்கியக்கலைஞனாக எவ்வாறு உருவாகி மெல்ல மெல்ல தத்துவவாதியாக மாறினார் என்பதன் சித்தரிப்புதான் . தளைய சிங்கம் வெளியேயிருந்து வந்த சித்தாந்தங்களில் நம்பிக்கை கொள்ளவில்லை . தன் சுயமான தேடலின் அடிப்படையிலான சிந்தனைப்பயணத்தையே மேற்கொண்டிருந்தார் .அவ்வகையில் தமிழில் பாரதிக்கு அடுத்தபடியாக சொல்லப்படவேண்டிய முக்கியமான சிந்தனையாளர் அவரே . பாரதிக்கு சிந்தனையில் கைகூடாத வெற்றி தளையசிங்கத்துக்குக் கைகூடியது என்றார் வேதசகாயகுமார் .

முற்போக்கு முகாம் மீதான தளையசிங்கத்தின் விமரிசனம் அது கலையை எளிமைப்படுத்தியது ,குழு அரசியலை விமரிசனமாக முன்வைத்தது ஆகியவை சம்பந்தமானதே . அத்துடன் முற்போக்கு முகாமில் இருந்த படைப்பாளிகள் உழைப்பாளிகள் அல்ல , உயர்மட்டத்தினரே என்பதும் தளையசிங்கத்தின் விமரிசனமாக இருந்தது . ஆனால் அடிப்படையில் தளையசிங்கம் மார்க்ஸியத்தின் இலட்சியக்கனவுக்கு எதிரானவர் அல்ல . இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான சிந்தனையாக அவர் மார்க்ஸியத்தையே காண்கிறார் . அத்துடன் மார்க்ஸியத்தின் போதாமைகளைப் பற்றிய பிரக்ஞை கொண்டு அவற்றை ஈடு செய்வதற்கான சுயசிந்தனைகளில் அவர் ஈடுபடுகிறார் . வர்க்கப்போராட்டம் மூலம் பொருளியல் விடுதலை அடைந்தால் மட்டும்போதாது தனிநபரின் மனவிடுதலையும் தேவை என்பது அவரது முதல்கட்ட மாற்றுக்கருத்த ‘க இருந்தது. அத்துடன் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்ற பிரிவினைகள் தத்துவ மட்டத்தில் காலாவதியாகிவிட்டன என்ற புரிதலும் அவருக்கு உருவாகியது .

‘ஏழாண்டு இலக்கியவளர்ச்சி ‘ -யில் தளையசிங்கம் இலக்கிய அரசியலை அடிப்படையாகக் கொண்டு ஈழச் சூழலில் செயல்படும் மாறுபட்ட கருத்தியல் போக்குகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு இடையேயான அதிகார ஓட்டங்களை சித்தரித்துக் காட்டுகிறார் .அவ்வதிகாரப் போக்குகள் எப்படி தனி மனிதர்களின் வழியாகச் செயல்பட்டன என்பதை விளக்குகிறார் .சிலமாற்றங்களுடன் அப்போக்குகள் தமிழகத்திலும் இருந்ததனாலும் அவற்றை மதிப்பிடுவதில் தளையசிங்கம் காட்டிய அபூர்வமான கூர்மையும் சமரசமற்ற தீவிரமும் காரணமாகவும்தான் பலவருடங்கள் கழித்து தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அந்நூல் தமிழ்ல் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது ,இன்றும் விவாதிக்கப்படுகிறது . அந்நூலில் ஒரு முக்கிய இலக்கிய விமரிசகராக தன்னை அடையாளம் காட்டும் தளையசிங்கம் எஸ் பொன்னுத்துரையை ஒரு ஆற்றல் மிக்க எழுத்தாளராக அடையாளம் காட்டி அவருடைய மொழிமோகத்தை கண்டித்து முன்னிறுத்துகிறார் . அடுத்த கட்டத்துக்கு ஈழ எழுத்தை எடுத்துச் செல்லும் முதன்மைப் படைப்பாளியாக தன்னையும் குறிப்பிடுகிறார் .

ஆனால் போர்ப்பறையில் தளையசிங்கத்தின் இலக்கு மாறுபடுகிறது . தத்துவ தேடல் முதன்மைப்படுகிறது. அப்போக்கு மெய்யுளில் உச்ச நிலையை அடைகிறது. இதன் விளைவாக அவர் முன்வைத்த அளெளகோல்கள் மாறுபடுகின்றன. கருத்தியல் செயல்பாட்டுக்கு முன்பு தரமறுத்த முக்கியத்துவத்தை இப்போது தளைய சிங்கம் அளிக்கிறார் . கைலாசபதியைக்கூட அங்கீகரிக்கிறார் .ஆனால் எஸ் .பொன்னுத்துரையை முற்றாக நிராகரித்து விடுகிறார் .தத்துவ தேடலை முதன்மைப்படுத்தி அவர் உருவகித்த மெய்யுள் வடிவரீதியான முக்கியத்துவம் உடையதேயானாலும் கலையாக வெற்றிபெறவில்லை . பாரதியின் ஞான ரதம் போல ஒரு தொடர்ச்சியில்லாத வடிவமாக அது நின்றுவிட்டது . தளைய சிங்கம் தன் அடிப்படை சிந்தனைகளுக்காக தமிழில் இன்றுள்ள முக்கியத்துவத்தை பெறுகிறார் .அத்துடன் ஈழ இலக்கியத்தில் ஒரு மரபை தோற்றுவித்த பெருமையும் அவருக்கு உண்டு . அவரது ஆரம்பகால சிறுகதைகளுக்காக அவருக்கு தமிழ் படைப்பிலக்கிய வரலாற்றிலும் முக்கிய இடம் உண்டு :வேதசகாய குமாரின் கருத்துக்கள் இவை .

ஜெயமோகன்: முதலில் ஓர் அடிப்படை விஷயத்தை விவாதிக்க வேண்டுமென விரும்புகிறேன். தளையசிங்கத்தின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி முக்கியமாக ஒரு இலக்கிய அரசியல் [Polemics ] நூல் . உலகம் முழுக்கவே இலக்கிய சூழலில் புதிய கருத்துக்கள் உருவாவதற்கு இலக்கிய அரசியல் பெரும் பங்கு ஆற்றியுள்ளது என நாம் அறிவோம் .சமீபத்தில்தான் பிளேக் கின் இலக்கிய அரசியல் கட்டுரைகள் சிலவற்றை படித்தேன் . அவற்றில் தனிப்பட்ட கோபதாபங்கள் ஏராளமாக உள்ளன என்றாலும் அறிவார்ந்த வேகம் பல புதிய எல்லைகளை சென்று தொட்டு மீள்கிறது. பின் நவீனச் சூழலுக்கு இலக்கிய அரசியல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது . தமிழில் பல பிரபலமான இலக்கிய அரசியல் விவாதங்கள் உள்ளன . பாரதி மகா கவியா இல்லையா விவாதம் [ கண்ணன் என் கவி -சிட்டி கு ப ராஜகோபாலன்] புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் நடந்த தழுவல் குறித்த விவாதம் [ ரசமட்டம் கட்டுரைகள் ] க .நா .சுவுக்கும் கைலாசபதிக்கும் நடந்த விவாதம் , வெங்கட் சாமிநாதனுக்கும் கைலாசபதி குழுவுக்கும் நடந்த விவாதம் [ மார்க்ஸின் கல்லறையில் இருந்து ஒரு குரல் வெ. சாமிநாதன் ] ஜெயகாந்தன் படைப்புகளை தினமணி சுருக்கியது சம்பந்தமாக வெங்கட் சாமிநாதன் எழுத எழுந்த விவாதம் [அழ வேண்டாம் வாயை மூடிக் கொண்டிருந்தால் போதும் – அசோகமித்திரன் ] பிரமிள் வெ.சாமிநாதன் இருவருக்கும் இடையே நடந்த விவாதங்கள் [விமரினாஸ்ரமம் ] போன்றவை முக்கியமான்வவை . இந்த விவாதங்கள் எந்த அளவுக்கு தமிழ் இலக்கிய உலகுக்கு பயன்பட்டுள்ளன ? இவ்ற்றின் முக்கியத்துவம் என்ன ? தளையசிங்கத்தின் இந்த நூல் அளவுக்கு தரமான இலக்கிய அரசியல் நம்மிடையே ஏன் இல்லை ?

எம் யுவன் : இதைப்பற்றி எனக்கு சில சொல்ல இருக்கிறது ஜெயமோகன். சமீப காலமாக ஒரு சாரார் இந்த இலக்கிய விவாதங்களை வெறும் குழுச்சண்டைகளாகவும் குழாயடிச்சண்டைகளாகவும் சித்தரித்துக் காட்ட முயன்று வருகிறார்கள் . இலக்கியவாதிகளுக்கு இடையே ஒற்றுமை தேவை என்று உபதேசம் செய்பவர்களும் பெருகி வருகிறார்கள் . இலக்கியத்தின் அடிப்படைகளையும் இலக்கியம் இயங்கும் விதத்தையும் சற்றும் அறியாமல் மேலோட்டமாக செய்யப்படும் ஒரு விமரிசனம் இது என்பது என் கருத்து . நான் தனிப்பட்ட முறையில் எந்த விவாதத்திலும் கலந்துகொள்ள மாட்டேன் . அது என் இயல்பல்ல .ஆனால் தமிழில் நடந்த இந்த விவாதங்கள் மிக முக்கியமானவை என்று கருக்துகிறேன். நாம் கருத்துக்களின் முரண்பாட்டியக்கத்தில் [ Dialectics ] நம்பிக்கை கொண்டிருந்தால் இவ்விவாதங்களே கருத்துச்சூழலை முன்னெடுத்துச் செல்பவை என்பதைக் காணமுடியும் .இவற்றை தவிர்த்துவிட்டு எவரும் நமது கருத்துச்சூழலைப்பற்றி எதுவும் பேசிவிடமுடியாது என்று தெரியும் . நீ சொன்ன விவாதங்கள் வழியாகத்தான் இங்கு இலக்கியத்துக்கும் கலைகளுக்கும் இடையேயான உறவு , இலக்கியத்தின் சமூகப்பொறுப்பு பற்றிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டு தெளிவு உருவாகியுள்ளது . இன்றைக்கு நாம் இந்த அளவுக்கு பேசுகிறோம் என்றால் அந்த விவாதங்களின் இரு தரப்பையும் நாம் கவனித்து வளர்ந்தோம் என்பதுதான் காரணம்…

நாஞ்சில் நாடன் : அது தான் என் கருத்தும் .என்னைபொறுத்தவரை நானும் எந்த விவாதத்திலும் இறங்க விரும்பாதவன்ன்தான் .ஆனால் விவாதங்களை கவனித்துத்தான் என் சிந்தனைகளை விரிவாக்கிக் கொண்டேன் .

மோகனரங்கன்: புதிய கருத்துக்கள் மொழிபெயர்ப்பு மூலமேகூட வந்து சேரும் . ஆனால் விவாதங்கள்தான் நமக்கு சிந்திக்க கற்றுத்தருகின்றன . விவாதங்களின் எல்லாதரப்பையும் நாம் கவனிக்கும் போது நமக்கு ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராயும் பயிற்சி கிடைக்கிறது . தொடக்க காலத்திலாவது இலக்கிய விவாதங்களை கவனிக்காத ஒரு வாசகனுக்கு இலக்கியம் பற்றி சிந்திக்கவே முடியாது …

வேதசகாய குமார் : நாங்கள் [நானும் ராஜமார்த்தாண்டனும் ] கொல்லிப்பாவை இதழ் நடத்தியபோது அதில் தான் வெங்கட் சாமிநாதனும் பிரமிளும் தொடர்ந்து விவாதித்தார்கள் .அப்போது பலர் இது குறித்து என்னிடம் கேட்டதுண்டு .பதில் சொல்லி சொல்லி நாங்கள் களைத்துப் போய்விடுவோம். விவாதத்தின் எல்லைகளை ஆசிரியர்கள் வகுக்கவும் முடியாது .

ஜெயமோகன்: விவாதங்கள் பற்றிய என் கருத்தும் இதுதான் .இதை நான் ஏற்கனவே குமுதம் உட்பட உள்ள இதழ்களில் சொல்லியும் இருக்கிறேன். உண்மையில் வைணவ உரை மரபிலும் சைவ சித்தாந்த மரபிலும் நடந்த விவாதங்கள் அளவுக்கு அதி தீவிரமான கருத்துப் போராட்டங்கள் இன்னமும் நவீன இலக்கியச் சூழலில் நடைபெறவில்லை . நவீன இலக்கியத்தில் பேணப்பட்ட குறைந்தபட்ச நாகரீகம் கூட மேற்குறிப்பிட்ட தத்துவ /மத விவாதங்களில் பேணப்படவும் இல்லை .ஆகவே விவாதங்களைப்பற்றி சிலர் இப்போது சொல்லும் அப்பாவித்தனமான கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை . ஆனால் நமது விவாதங்களில் உள்ள தரம் பற்றி நாம் விவாதிக்கத்தான் வேண்டும் . நமது விவாதங்கள் பெரும்பாலும் அடிப்படையான தத்துவபிரச்சினைகளுக்குள் போவதில்லை . அதாவது தரப்பை எத்தனை மூர்க்கமாக முன்வைத்தாலும் அத்ன் அடிப்படை சக்தியாக சித்தாந்தம் இருந்தபடியே இருக்கவேண்டும் . அப்படி இருந்தால்தான் விவாதம் மூலம் ஒரு பொதுத்தளம் உருவாகி வரமுடியும்….

சூத்ரதாரி: அதைப்போல கருத்துக்களில் நேர்மையும் முக்கியமல்லவா ? வெறுமே விவாதத்துக்காக விவாதம் , இடத்துக்கு ஏற்ப மாறும் கருத்து என்றெல்லாம் விவாதம் நடக்கும் போது அதில் என்ன பயன் ?

எம் யுவன் : தமிழ் விவாதங்களில் கண்டிப்பாக அப்படிப்பட்ட ஆழமான தளங்கள் வெளிப்பட்டபடித்தான் இருக்கின்றன. உதாரணமாக நாட்டார் கலைகளில் உள்ள தன்னைமறந்த கலைவேகம் நவீனகலையில் தேவை என்று வெங்கட் சாமிநாதன் எழுதினார் . நாட்டார் கலைகளை அப்படியே ஒரு நவீனமனம் ரசிக்க முடியாது அதன் சாராம்சமான பகுதிகளை மறு ஆக்கம் செய்யத்தான் முடியும் என்று பிரமிள் பதில் சொன்னார் …. இதை கவனிக்கும் ஒருவர் மூன்றாவது தரப்பு ஒன்றுக்கு போகவும் இடம் இருக்கிறது …….

ஜெயமோகன்: அப்படிப்பட்ட முக்கியமான பலதளங்களை நம் விவாதங்கள் அவ்வப்போது வெளிப்படுத்தியுள்ளன என்பது உண்மைதான் . ஆனால் பொதுவாக தனிப்பட்ட தாக்குதல்கள் வசைகள் ஏராளமாக காணக்கிடைக்கின்றன. எதிரியின் கருத்தை திரிப்பது , அதன் பின்னணித்தளத்தை தவறான அர்த்தம் வரும்படி திருகுவது போன்ற விஷயங்களை பிரமிள் தயகமேயில்லாமல் செய்துள்ளார் . வெங்கட் சாமிநாதனும் கடுமையான தனிப்பட்ட சொல்லாட்சிகளைமுன்வைக்க தயங்கியவரல்ல . இதெல்லாம் விவாதத்தின் பொதுவான தளத்தை பெரிதும் குறைத்து விட்டன. இன்னொன்று சில விஷயங்களில் தனிப்பட்ட கோபங்கள் தவிர வேறு இலக்கிய ரீதியான பிரச்சினையே இல்லமலும் இருந்ததுண்டு .இலக்கிய பிரச்சினையில் தொடங்கினாலும் கூட தனிப்பட்ட பிரச்சினைகளில் போய் முடிந்துள்ளந சில விவாதங்கள் ….

வெங்கட் சாமிநாதன் : என் தரப்பை சொல்லிவிடுகிறேன் . நான் இலக்கிய விவாதங்களில் எப்போதுமே என் மனசாட்சிப்படி நேர்மையாகத்தான் நடந்துவந்திருக்கிறேன் . நான் எழுதிய எந்த விஷயத்தைப்பற்றியும் எனக்கு இப்போது எந்தவித மனக்குறையும் உறுத்தலும் இல்லை . எனக்கு இலக்கிய ஆக்கத்தில் ஒரு தர அளவுகோல் உண்டு .அதை பாரபட்சமின்றி பிரயோகித்திருக்கிறேன் . அப்படி இல்லை , தெரிந்தவர் வேண்டியவர் என்றெல்லாம் பாரபட்சம் காட்டினேன் என்று எவரும் சொல்ல முடியாது . அந்த நேர்மை எனக்கு இருப்பதால் அதெ நேர்மையை மற்றவர்களிடமிருந்தும் எதிர்பார்க்க எனக்கு உரிமை உண்டு . நான் கடுமையான விமரிசனங்களை முன்வைத்திருக்கிறேன் என்றால் அது இரண்டு விஷயங்களுக்காகத்தான் . ஒன்று , தகுதியே இல்லாத ஒரு நபர் தனிப்பட்ட தொடர்பு ,அரசியல்ச் சார்பு போன்ற காரணங்களுக்க ‘க தூக்கி பிடிக்கப்படும்போது .இரண்டு , இலக்கிய உலகின் போலித்தனங்களைக்கண்டு . நேரடியான வேகத்துடன் இருப்பது போலித்தனமாக இருப்பதை விட மேலானதுதான். கண்டிக்க வேண்டிய விஷயங்கள் என நான் கருதியவற்றை முடிந்தவரை தீவிரமாக கண்டிப்பதுதான் எனது பாணி எனக்கு இலக்கியத்திருந்து எந்த தனிப்பட்ட லாபமும் கிடைக்கவில்லை …

ஆர் பி ராஜநாயகம்: சதங்கையில் முருகேசபாண்டியன் ஒரு விஷயம் எழுதியிருக்கிறார் . எண்பதுகளில் அவர் வீட்டுக்கு வந்து பேசிகொண்டிருந்த சமயவேல் சட்டென்று குரலைத்தாழ்த்தி ‘ ‘ உறுதியான ஆதாரம் கிடைச்சுட்டது .நான் இப்ப கோவில்பட்டியிலேருந்து வாறேன்,வெங்கட் சாமிநாதன் சி ஐ ஏ உளவாளிதான் ‘ ‘ என்றாராம். அந்த பிரச்சாரம் அப்பொது மிக பலமாக இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டது

ஜெயமோகன்: இடதுசாரிகள் அவதூறுக்கு அஞ்ச மாட்டார்கள். அவர்களுடைய தலைவர்கள் வெளியேறியபோதுகூட அவதூறு மூலம் தான் ஒழித்துக் கட்டினார்கள்

வேதசகாயகுமார் : வெங்கட் சாமிநாதன் தன்னை எற்று கொண்டவர்கள் சிறப்பாக எழுதாத போது கடுமையாக விமரிசித்திருக்கிறார் . மாற்றுத்தரப்பை சேர்ந்தவர்கள் நன்றாக எழுதியதாக தோன்றியபோது பாராட்டவும் செய்திருக்கிறார் …அதைப்பற்றிநான் சொல் புதிதில் எழுதிய கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்…..

ஜெயமோகன்: இலக்கிய விவாதங்களை அழகியல் சித்தாந்த விவாதங்களாக மாற்ற தமிழில் ஓரளவேனும் சிட்டி

– குபரா விற்குத்தான் முடிந்துள்ளது . தளையசிங்கத்தின் ஏழாண்டு இலக்கியவளர்ச்சி இன்றும் முக்கியமாக கவனிக்கபடுகிறதுஎன்றால் அதற்கு காரணம் இலக்கிய அரசியல் சார்ந்த விவாதம் ஆழமாக சென்று சித்தாந்த தளத்தினை தொடுவதுதான்…

வேதசகாயகுமார்: தளையசிங்கத்தின் பார்வையில் ஒரு முக்கியமான அம்சம் உள்ளது .ஆரம்பத்தில் அவர் இலக்கிய அரசியல் கோணத்தில் எழுதியபோது கைலாசபதி ஒரு முக்கியமான ஆளுமையாக , முதன்மையான எதிர்தரப்பாக அவர் முன் இருக்கிறார் .ஆனால் அந்த தளத்தில் இருந்து விலகி அவர் தத்துவ விவாத தளத்துக்குள் போகப்போக கைலாசபதி காணாமல் போய்விடுகிறார். அதாவது கைலாசபதியை தளையசிங்கம் இலக்கிய அரசியல் ரீதியாக மட்டுமெ பொருட்படுத்தினார் ……

ஜெயமோகன்:ஆனால் தளைய சிங்கத்தின் பார்வையில் எப்போதுமே இலக்கிய அரசியல் இருந்தபடித்தானே உள்ளது மெய்யுளிலும் கூட இலக்கிய அரசியல் உள்ளது, சற்று மாற்றப்பட்ட வடிவில்….

வேதசகாய குமார் : தளையசிங்கம் மெய்யுளில் இலக்கியஅரசியலின் வடிவத்தை கையாள்கிறார், அவ்வளவுதான்

ஜெயமோகன்: தளைய சிங்கம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் தனிநபர் சார்ந்த தாக்குதல்களை நிறைய செய்கிறார். இது சரிதானா ?

வெங்கட் சாமிநாதன்: படைப்பாளி எழுதும் போது தன்னுடைய அந்தரங்க ஆளுமையைத்தான் முன்வைக்கிறார் . அதை த்தான் சமூகம் பார்க்கிறது. நாம் படைப்புமூலம் அவனது மனத்துக்குத்தான் போய் சேர்கிறோம் .அது முக்கியமானது அதை அறிய அவனது அந்தரங்கம் முக்கியமானதேயாகும் .ஆதற்காக அவனது அந்தரங்க விஷயங்களை எல்லாம் தோண்டியெடுக்க வேண்டுமென சொல்லவரவில்லை . அதை மேற்கே நிறைய செய்கிறார்கள். ஆனால் அவன் தன் படைப்பில் வெளிப்படுத்தும் ஆளுமை ,அதன் தார்மீகம் சார்ந்த அவனது சுயவாழ்க்கையை கணக்கில் கொண்டுதான் பேச வேண்டும் .

ஜெயமோகன்: உதாரணமாக ஞானி திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோயிலில் தன் அறுபதாம் வயது நிறைவுக்கு பூஜை நடத்தினார் என்று பரவலாக சொல்லப்பட்டது . அ மார்க்ஸ் இதை வைத்தே ஞானியை நிராகரித்து விடுகிறார் ஒரு கட்டுரையில் .இது எந்தளவுக்கு சரியானது ?

சூத்ரதாரி : அது அவரது குடும்ப விஷயம் . அதை விவாதமாக்குவது சரியல்ல..

ஜெயமோகன்: என் தரப்பை சொல்லிவிடுகிறேன். எழுத்துக்கு பின்னால் உள்ள நோக்கமும் அதை ஆக்கும் ஆளுமையும் மிக முக்கியமானது , அதில் இருந்து எழுத்தாளனை பிரித்து விட முடியாது என்றே நான் எண்ணுகிறேன் . ஞானி நடத்திய சடங்கு தவறு என்பதற்கோ கண்டிப்பதற்கோ நமக்கு உரிமை இல்லை . அதேபோல அந்த ஒரு விஷயத்தை வைத்து அவரை பொய்யர் என்றோ வேடதாரி என்றோ நிராகரிப்பதும் சரியல்ல . ஆனால் ஞானி கடவுள் ஏன் இன்னும் இறக்கவில்லை என்று நூல் எழுதியவர் . அவரை அறிய இச்சம்பவம் மிக முக்கியமானதே . கைலாசபதியைப்ப்ற்றி தளையசிங்கம் தரும் தனிப்பட்ட தகவல்கள் அவரது கருத்துநிலைகளை அறிய மிக முக்கியமானவைதான் . கைலாசபதியை ஈழ உயர்வட்ட உயர்சாதி மனிதர் என்றும் அரசு ஆதரவு இதழுக்கு உறவு பலத்தால் ஆசிரியரானவர் என்றும் பிரசுரசாதன வசதியை தன் குழுவை வளர்க்க பயன் படுத்தியவர் என்றும் தளைய சிங்கம் சொல்கிறார் . இதை நாம் தவிர்க்கமுடியாது . இங்கு அறிமுகமான கைலாசபதி ஒடுக்கப்பட்ட வற்கத்தின் புரட்சியின் ஆசான். சொந்தமாக ஒரு தட்டச்சு பொறி வைத்திருந்ததற்காக நாடோடியான க நா சுவை முதலாளி என்று சொன்னவர் .

நாஞ்சில்நாடன்: இந்த விஷயம் பற்றி எனக்கு சற்று தெரியும் . ஞானியை தெரிந்தவன் என்ற முறையில் அவர் மத உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவர் என்பதை நான் உறுதியாகவே சொல்ல முடியும்..

தாமரை ஆறுமுகம்: ஞானி கோயிலில் சாமி கும்பிட்டார் , ஆகவே அவர் மதவாதி , பழமையாளர் என்றெல்லாம் முத்திரை குத்தும் போக்கு அவதுற்று மட்டும்தான்.

நாஞ்சில்நாடன் : ஞானியின் மனைவியின் ஆசை அது .அதை அவர் மறுக்க முடியாது .விழி இழந்தபிறகு அவர் அவர்களையே சார்ந்து இருக்கிறார் . அவர்கள் வற்புறுத்தும் போது அதை அவரால் மீறமுடியவில்லை என்று சொன்னார் .

ஜெயமோகன்: அதை தவறென்று சொல்லவில்லை . ஈ எம் எஸ் மனைவி குருவாயூருக்கு சாமி கும்பிட சென்றபோது வாசலில் பகிரங்கமாக காத்திருந்தார் . அந்த பகிரங்கம் தேவை .இங்கு இந்த உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் முத்திரை குத்தி ஒழித்துக்கட்ட சிறுமைப்படுத்த முய்ற்சி செய்வார்கள் என்பது உண்மைதான் . ஆனாலும்கூட பகிரங்கமாக இருக்கும் தார்மீக பொறுப்பு அவருக்கு உண்டு . அப்படி இல்லாதபோதுதான் அது இலக்கிய அரசியல் விஷயமாக ஆகிறது ….

வேதசகாயகுமார்: இன்னொரு விஷயம் இப்படி பிறரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள் அவர்களை இதே விமரிசனத்துக்கு ஆளாக்கினால் எப்படி இருக்கும் என்பது . அவர்களை எதிர்ப்பவர்களுக்கு அதில் ஆர்வமில்லை என்பதே அவர்களுடைய பலம்

ஜெயமோகன்: திண்ணை இணைய விவாதத்திலே வ ந கிரிதரன் என்ற புலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளர் தளையசிங்கம் பற்றி சொல்லும்போது அவர் ஏழாண்டு இலக்கியவளர்ச்சியில் எஸ் பொன்னுத்துரை போன்றவர்களை சாதி சொல்லி தாக்குகிறார் என்று குற்றம் சாட்டினார் .

வேதசகாயமுமார் : சாதியை கணக்கில் கொள்வதில் என்ன தவறு ? உண்மையான மார்க்ஸிய விமரிசனம் அதைத்தானே செய்யவேண்டும் ? மனிதன் அவனது சமூக சூழல் பிறப்புசூழல் ஆகியவற்றிலிருந்து வேறானவனல்ல. அவனது ஆளுமையை அவற்றையும் சேர்த்து கணிப்பது ம்க அவசியமான ஒன்றுதான் .நம் சூழலைவைத்து பார்த்தால் பொதுவாக பிராமண எழுத்தாளர்களைப்பற்றி மட்டுமே அப்படி செய்திருக்கிறோம். மற்றவர்களைப்பற்றி பேசுவதேயில்லை.அவர்கள் அதை விரும்புவதில்லை என்பதுதான் காரணம். நமது விமரிசனத்தில் இடக்கரடக்கல்கள் அதிகம். பிரச்சினை வராமல் எழுதுவோம்.தளையசிங்கத்துக்கு பயமே இல்லை .ஆகவே அவருக்கு தயக்கமும் இல்லை.

ஜெயமோகன்: கிரிதரனின் மனக்குறை என்னவென்றால் படைப்பை கணக்கில் கொள்ளாமல் சாதியை மட்டுமே கணக்கில் கொள்கிறார் என்பதே…

வேதசகாயகுமார் : ஏழாண்டு இலக்கியவளார்ச்சி இ;லக்கியபிரதிகளைப்பற்றிய விமரிசனமல்ல. அது பொதுவாக இலக்கியக் கருத்தியல் போக்குகளைப்பற்றிய அலசல். இதில் ஒவ்வொரு எழுத்தாளாரைப்பற்றி பேசும்போதும் த்ளைய சிங்கம் முதலில் அவர்கள் படைப்புகளைப்பற்றித்தான் பேசுகிறார் என்பதைக் கவனிக்கலாம். பொன்னுத்துரையின் ஆக்கங்கள் பற்றி மிக விரிவாகவே தளையசிங்கம் பேசுகிறார் .பிறகு அன்றைய பொதுப்போகுகளைப்பற்றி பேசும்போது அதில் அங்குள்ள சமூக அமைப்பும் சூழல் எந்த பங்காற்றுகிறது , எழுத்தாளார்களின் தனிப்பட்ட ஆளுமை எப்படி அதன் மூலம் வடிவமைக்கப்படுகிறது என்றெல்லாம் பேசுகிறார் . அங்குதான் சாதி பற்றிய பேச்சுவருகிறது .

ஜெயமோகன்: தளையசிங்கத்தில் உயர்சாதிமனப்பான்மையை குற்றம் சாட்டுகிறார் கிரிதரன். வியப்பு என்னவென்றால் அவருக்கு தளையசிங்கம் தலித் மக்களுக்ககாக போராடி உயிர் துறந்தவர் என்ற விஷயமே கூட தெரியவில்லை .

வேதசகாய குமார் : வருத்தம் தரக்கூடிய விஷயம்தான் ,ஆனால் அப்படித்தான் எப்போதுமே நிலைமை இருக்கிறது .தளையசிங்கம் தலித் மக்களை பற்றி என்ன சொல்கிறார் ? ஒரு தலித் அறிவுஜீவி அடிப்படையில் அறிவார்ந்த ஆணவமும் , அதிகார இச்சையும் உடையவராக இருக்கவேண்டும் என்கிறார் .இல்லையேல் அவரது வளர்ப்பு சூழல் காரணமாக தாழ்வுணர்சியும் அதன் வெளிப்பாடான அங்கதமும் கசப்பும் நிரம்பிஅயவராக எதிர்மறைப்போக்கு உடையவராக ஆகிவிடுவார் என்கிறார் . அது உயர்சாதி மனப்பான்மையா என்ன ?

தேவகாந்தன்: தளையசிங்கம் தலித்துக்களுக்காக போராடி அடிபட்டபோது முற்போக்கு அமைப்புகள் அவரை உதாசீனம் தான் செய்தன.

ஜெயமோகன்: மல்லிகை ஆசிரியரான டொமினிக் ஜீவா பற்றி முதளையசிங்கம் இப்படி சொன்னதாக என் கெ மகாலிங்க ம் என்னிடம் சொன்னார் . அவர் தலித்தாக இருந்தபோதிலும் தளையசிங்கம் போராடிய செய்தியையோ அடிப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த செய்தியையோ தன் இதழில் போடவில்லை.கைலாசபதி மீதான பயம்தான் காரணம். ‘ ‘ எழுத்தாளர் வீட்டு பெட்டைய வயசுக்கு வந்தா செய்தி போடுறவனுக்கு இது செய்தியெண்டு தோணவில்லை . நான் செத்தால் அவனுக்கு என் படம் கூட கொடுக்கக் கூடாது ‘ ‘ என்று தளையசிங்கம் சொன்னாராம்.

மோகனரங்கன் : தளையசிங்கம் ஒரு இடத்தில் சொல்கிறார், புதுமைப்பித்தனும் மெளனியும் மார்க்ஸியத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் மேலும் நன்றாக எழுதியிருக்கலாம் என்று. ஆனால் தமிழில் மார்க்ஸியத்தை மறுப்பவர்களே நல்லபடைப்பாளிகளாக இருந்துள்ளார்கள். இதைப்பற்றி வேதசகாய குமார் என்ன எண்ணுகிறார் ?

வேதசகாய குமார் அதைப்பற்றி நான் எனது கட்டுரையின் முதல் பகுதியிலேயே சொல்லியிருக்கிறேன். படைப்பாளிக்கு தேவை சிந்தனை. அது அவனுக்குள் இருந்து அவனது தேடலின் விளைவாக உருவாகிவரக்கூடியது. ஆனால் நமது சிந்தனையாளர்களிடம் உள்ளது தத்துவ ஈடுபாடு.அது அவர்களுக்கு வெளியே உள்ள ஏதாவது ஒரு தத்துவம் மீதான ஈர்ப்போ விசுவாசமோ தான்.

மோகனரங்கன்: தளையசிங்கம் இங்கு தத்துவபிடிப்பு பற்றித்தானே சொல்கிறார் ?

அன்பு வசந்த குமார்: கூர்ந்துபார்த்தால் ஒன்று தெரியும் தளைய சிங்கம் மார்க்ஸியத்தின் இலட்சியவாத அம்சத்தை பற்றித்தான் அதிக கவனம் தந்து பேசுகிறார். அதன் முரணியக்கஇயங்கியல் இந்த காலகட்டத்துக்கு மட்டும் உரியது அடுத்த கட்டத்தில் மதிப்பிழக்கக் கூடியது என்கிறார் .ஆகவே மெளனியும் புதுமைப்பித்தனும் கட்சி உறுப்பினர் ஆக இருக்கவேண்டும் என்றோ ,அல்லது மார்க்ஸிய அரசியல் செயல்திட்டத்தின் படி படைப்புகளை ஆக்கியிருக்கவேண்டுமென்றோ அவர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை . அவர்களில் இருந்த எதிர்மறையான , இருண்மையான நோக்கினை மார்க்ஸிய இலட்சியவாதம் பெரிதும் குறைத்து மேலும் உத்வேகமும் தீவிரமும் கொண்ட படைப்புகளை எழுதச்செய்திருக்கும் என்று அவர் கூறுகிறார் என்று கொள்ளலாம்….

ஜெயமோகன்: தளையசிங்கம் சொன்னது ஒரு வகையில் சரி என்றே நானும் எண்ணுகிறேன் . மார்க்ஸியம் வரலாற்றுப்பார்வையை அளிக்கிறது .அதை எதிர்த்து சிந்தித்தால்கூட நாம் நேர் எதிர்மறையான வரலாற்றுப்பார்வையை சென்றடைவோம். மெளனிக்கும் புதுமைப்பித்தனுக்கும் வரலாற்றுப்பார்வை ஏதுமில்லை என்று நாம் அறிவோம்.மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும்ன்பதில்லை ,ஓரளவாவது பயின்றிருக்கவேண்டியது அவசியம்…அதையே தளையசிங்கம் சொல்கிறார் என்று படுகிறது….

நாஞ்சில்நாடன்: என்னை பொறுத்தவரை எந்த விதமான தத்துவ பயிற்சியும் கலைக்கு எதிராகவே இருக்க முடியும் . இசைப்பாடகன் இசையிலக்கணத்தை அதிகமாகத் தெரிந்துகொண்டால் பிறகு பாட்டு சுவையாக இருக்காது என்பார்கள் .தத்துவத்தில் ஆர்வம் ஏற்படும்தோறும் எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுபிடிப்பது , எல்லாவற்றையும் தொகுத்துக் கொள்வது என்றெல்லாம் ஆர்வம் ஏற்பட்டுவிடும் .தளையசிங்கத்துக்கு நேர்ந்ததும் இதுவே .அவர் தத்துவவாதியாக ஆகும்போது கலையின் நுட்பங்கள் எல்லாம் போய்விடுகின்றன, வெறும் தர்க்கங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன..

சூத்ரதாரி: வேத சகாய குமார் சிந்தனை வேறு தத்துவம் வேறு என்கிறார் . கலைஞனுக்கு சிந்தனையும் இருக்கக் கூடாதா ?

நாஞ்சில்நாடன்: எனக்கு அப்படி இரண்டு இருப்பதாக படவில்லை . தன் சொந்த சிந்தனையாக இருந்தாலும் சரி ஏற்றுக் கொண்ட தரப்பாக இருந்தாலும் சரி கலைஞன் எதற்காகவும் வாதாடக்கூடாது .

தேவதேவன்: எல்லா தத்துவங்களும் சாராம்சமான மெய்த் தரிசனங்கள் குறிப்பிட்ட காலத்துடன் உறவு கொண்டு வெளியாகும்போது உருவாகக் கூடியவை மட்டும் தான் . உண்மைக்கு காலம் கிடையாது ,இடம் கிடையாது . ஆனால் தத்துவத்துக்கு இதெல்லாம் உண்டு .ஆகவேதான் தத்துவம் காலாவதியாகிறது .உண்மை ஒரு போதுமே காலாவதியாவது இல்லை . தத்துவ வாதி தர்க்கம் மூலம் கண்டு சொல்ல முற்படும் அதே உண்மையைத்தான் கலைஞனும் கலைமூலம் சொல்ல முற்படுகிறான் . அவனால் தத்துவவாதியை விட நுட்பமாக மேலும் செல்ல முடியும் .இலக்கியமும் கலையும் அவற்றின் உன்னத நிலையில் காலத்தை கடந்து செல்ல முடியும் . அதனால்தான் நேற்றைய தத்துவங்களெல்லாம் இன்று பழையவையாக ஆகிவிட்டபோது இலக்கியப்படைப்புகள் மட்டும் நூதனமாகவே நின்று கொண்டிருக்கின்றன… தளையசிங்கம் உண்மையின் தரிசனத்தை கண்டடைந்தவர் , அந்தரங்கமாக அதை உணர்ந்தவர். அதை அவர் தத்துவ ரீதியாக முன்வைக்கும்போது அன்றைய சிந்தனைகளுடனும் அரசியல் சமூக சூழலுடனும் தொடர்பு படுத்தித்தான் முன்வைக்க முடிகிறது . ஆகவே அது கால இடத்துக்கு கட்டுப்பட்டதாக உள்ளது .அவர் அதை கலைமூலம் முன்வைத்திருந்தால் அதன் நித்திய மதிப்பு அதிகமாக் இருந்திருக்கும் . அப்படி முன்வைக்க முடியாமல் போனதே தளையசிங்கத்தின் தோல்வி.

ஜெயமோகன்: கலைப்படைப்பு அப்படி நேரடியாக உண்மையை வெளிப்படுத்தும் ஒரு வடிவமாக இருக்கமுடியாது. உண்மையின் தரிசனம் ஒரு மின்னல் போல அபூர்வமான ஒரு கணமாகத்தான் இருக்கும் .அதை அப்படியே வெளிப்படுத்தும் பொறுப்பு மட்டுமே கலைக்கு இல்லை . கலை அதை வாழ்க்கையின் எல்லாதருணக்களுடனும் இணைக்க வேண்டியுள்ளது .அப்போதுதான் அதற்கு புறவயமான மதிப்பு ஏற்படும் . கலைப்படைப்பின் வடிவம் எப்படி புறவயமாக பயிந்று அடையப்படுகிறதோ அப்படித்தான் கலைப்படைப்பின் தருக்க பூர்வமான கட்டுக் கோப்பும் . ப்டைப்புக்கு தொகுப்புத்தன்மையை அளிப்பது அதுதான் .அதற்கு தத்துவ அடிப்படை கண்டிப்பாக தேவை .

எம் . யுவன்: நாம் இங்கே வார்த்தைகளைப்போட்டு குழப்பிக் கொள்கிறோம் .தத்துவ நம்பிக்கை வேறு .தத்துவதேடல் வெறு. கலைப்படைப்புக்கு தத்துவ தேடல் கண்டிப்பாக இன்றியமையாதது. எப்போது வாழ்க்கையை இலக்கியம் மொழிவழியாக சந்தித்து தொகுத்துக் கொள்ள முயல்கிறதோ அப்போதே வேறு வழியேஇல்லாமல் இலக்கியத்தில் தத்துவம் வந்தாகிவிட்டது .அதை தவிர்க்கவே முடியாது .தத்துவம் தேவையில்லை , தங்களுக்கு ஆர்வமில்லை என்று சொல்பவர்களிடம் கூட தத்துவம் இருக்கும் . அது அவர்கள் மரபாக பெற்று இயல்பாக கொண்டிருக்கும் தத்துவ நம்பிக்கையாக இருக்கும் . அதை அவர்கள் வாழ்க்கையைப்பற்றிய இயல்பான உண்மைகளாகவும் , அனுபவஞானமாகவும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவற்றை அவர்கள் ஐயப்பட ஆரம்பித்தார்கள் என்றால் தத்துவத்தேடல் ஆரம்பித்துவிடும் . அது இலக்கிய ப்படைப்புக்கு ஆதாரமாக உள்ளதேடல் …

வேதட்சகாயகுமார்: ஏறத்தாழ நான் சொன்னதும் இதைத்தான் . தத்துவ நம்பிக்கையில் சிந்தனைக்கு இடமில்லை . தத்துவ தேடல் சிந்தனையின் தீராத ஓட்டம். .தளையசிங்கம் தத்துவ நம்பிக்கை உடையவரல்ல . தத்துவத்தை தாண்டிச்செல்லும் தேடல் உடையவர் அவர்.

வெங்கட் சாமிநாதன்: எனக்கு அதில் சந்தேகம் தான் இருக்கிறது. தளையசிங்கம் முன்னகர்ந்துகொண்டே இருந்தார் என்பதிலோ அவருடைய தேடல் முக்கியமான ஒன்று என்பதிலோ எனக்கு சந்தேகமேதுமில்லை. ஆனால் அவருக்கு மார்க்ஸியத்திலிருந்து கிடைத்த பொன்னுலகம் என்ற கருத்து மீது ஒரு மிதமிஞ்சிய ஈர்ப்ப்பு ,அதை நான் Obsession என்று சொல்லதயங்கமாட்டேன் ,இருந்தது . அந்த நம்பிக்கை அவரை தொடர்ந்து கடைசிவரை இயக்கியது .எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் பொன்னுலகைப்பற்றிய செய்தியை சொன்ன தீர்க்கதரிசி என்ற இடத்தை தளையசிங்கம் மிகவும் விரும்பினார் , அதற்காக அதை அவர் மீண்டும் மீண்டும் சொன்னார் என்றுதான்.தளையசிங்கத்தின் எல்லா கருத்துக்களையும் இந்த புதுயுகம் என்ற கருத்து திரித்துவிட்டது. உதாரணமாக ஏற்கனவெ சொன்னோமே மெளனி புதுமைப்பித்தனைவிட ஜெயகாந்தனை அவர் முக்கியமாக காண்கிறார் என்று அதற்கு காரணமும் இதுதான் .கலைக்கும் பிரச்சாரத்துக்கும் இடையேயான வித்தியாசத்தைக்கூட காணமுடியாதவராக அது அவரை மாற்றி விட்டது .இது துரதிர்ஷ்டவசமானது என்றே சொல்வேன்.

தேவதேவன்: அப்படிப்பார்த்தால் எல்லா தத்துவ ஆசிரியர்களும் ஏதேனும் ஒரு தரிசனத்தையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.

மோகனரங்கன்: வேதசகாயகுமார் பேசும்போது எதிர்காலத்தில் நாவல் வளரும் சிறுகதை தளரும் என்று கைலாசபதி சொல்லியிருப்பதைப்பற்றி சொன்னார் . அது எந்த அளவுக்கு முக்கியமான் கருத்து ?

வேதசகாயமுமார் : சிறுகதையை பார்க்கிலும் நாவல் தத்துவ சித்தாந்த விவாதத்துக்கு ஏற்ற வடிவம் . ஆகவே அது வளரும் என கைலாசபதி சொல்லியிருக்கலாம்.ஆனால் இரு வடிவங்களும் மாற்றம் பெற்று வள்ர்ந்தபடித்தான் இருக்கின்றன. தளையசிங்கத்தை பொறுத்தவரை இன்றுள்ள எல்லா கலைவடிவங்களும் தளரும். புத்தம் புதிய வடிவங்கள் உருவாகிவரும் . அதைத்தான் அவர் மெய்யுளில் எழுதிக்காட்ட முயன்றார் . அவரைப்பொறுத்தவரை கற்பனை மூலம் மாற்று யதார்த்த சித்திரங்களைமுன்வைக்கும் வடிவங்கள் இல்லாமலாகி மெய்தரிசனத்தின் அனுபூதி நிலையில் நின்றபடி உண்மையை தருக்கமாகவும் கவிதையாகவும் சொல்லும் வடிவமே இனி வரக்கூடியது.

சூத்ரதாரி :மெய்யுளை அந்த உதாரணமாக கூற முடியுமா ?

வேதசகாயகுமார் :மெய்யுள் நம் மனதை கவரும் படி இல்லை . அதற்கு தொடர்ச்சியும் உருவாகவில்லை. ஒரு புது சாத்தியததை ஊகிப்பது வேறு எழுதிக்காட்டுவது வேறு…

ஜெயமோகன் : ஆனால் எனக்கு மிக முக்கியமாக ஒன்று படுகிறது .இப்போது தமிழில் நகுலன் ,பிரேம் போன்றவர்கள் ஒரு வடிவத்தை எழுதிக்காட்டியுள்ளார்கள் .[ நினைவுப்பாதை ,வாக்குமூலம் -நகுலன் ;எரிக்கப்பட்ட பிரதிகளும் புதைக்கப்பட்ட மனிதர்களும் , சொல் என்றொரு சொல்- பிரேம் ] அதை பிரேம் Meta epic என்கிறார் . அதன் வடிவம் ஆச்சரியமூட்டுமளவுக்கு மெய்யுளின் இலக்கணங்களை ஒத்திருக்கிறது .அதை நாம் புறக்கணிக்க முடியாது . ஒன்று அது மெய்யுளைப்போலவே விவாத வடிவில் உள்ளது .அதாவது அவை பிளவுண்ட அல்லது சிதறுண்ட ஆளுமையின் பிரதிகள் . இரண்டாவது அவற்றில் அறிவார்ந்த தருக்கம் கவிதை வரலாறு போன்றவற்றுக்கு இடையேயான எல்லைச் சுவர் தகர்ந்துள்ளது . இதைப்பற்றி பிறகு விரிவாக பேசலாம் . என் கட்டுரையில் கூட எழுதியுள்ளேன். ஆகவே மெய்யுளின் வடிவம் தொடர்ச்சியற்றுப்போன ஒன்றல்ல என்று சொல்லலாம்.

அன்பு வசந்தகுமார்: தளையசிங்கம் கூறும் பிரபஞ்ச யதார்த்தம் ஒரு தத்துவத்தரப்பாக படவில்லை .மிக அகவயமான ஒரு ஆன்மீக கருத்தாகவெ படுகிறது.

வேதசகாயமுமார்: பிரபஞ்சம் தழுவிய ஒரு யதார்த்தம் என்ற அர்த்தத்தில் அப்படி சொல்கிறார் தளையசிங்கம்.மார்க்சியம் பேசும் யதார்த்தம் அப்படிப்பட்டது அல்ல. அது வற்கம் தழுவியது மட்டுமே.

அன்பு வசந்த குமார்: எந்த யதார்த்தமாக இருந்தாலும் மனித அறிதலுக்குள் சிக்கும்போது அது மனிதயதார்த்தம்தான்.

சூத்ரதாரி: மு .தளையசிங்கம் கலை என்பது பரவச விடுதலையை அளிப்பது என்கிறார் அப்படியானால் அவர் கலையின் அனுபவத்தையே முன்வைக்கிறார் என்று சொல்லலாமா ?

அருண்மொழிநங்கை : தளையசிங்கத்தின் மெய்யுளில் அவர் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பே மேலான கலை தரும் பரவசத்துக்கு சமமான பரவசத்தை அளிப்பதாக சொல்கிறார் . அப்படியானால் அவர் சொல்வது கலை தன் வெளிப்பாட் டு முறை மூலம் நமக்கு அளிக்கும் பரவசநிலையை அல்ல . அக்கலை வடிவத்தின் மூலம் நம் மனத்தில் உருவாக்கும் மெய்மையைத்தான். அதேமெய்மையை அறிவியலும் அளிக்கலாம் ,செய்தியும் அளிக்கலாம் . தளையசிங்கத்தின் கருத்தை நாம் உருவம் உள்ளடக்கம் என்ற மரபான பிரிவினைக்குள் அடக்க முயலக்கூடாது .

வேதசகாயகுமார் : இந்த எண்ணத்தை தமிழில் திட்டமிட்டு சுந்தர ராமசாமி உருவாக்கினார் . தளையசிங்கம் ஜெயகாந்தனைப்பற்றி சொல்லிய கருத்துக்கு விரிவான பின்னணி உண்டு என்று கண்டோம்.ஆனால் ஜெயகாந்தன் தன் கதைகளில் சொன்ன கருத்துக்களை ஒட்டித்தான் தளையசிங்கம் இந்த முடிவுக்கு வந்தார் என்றும் , ஆகவே அவர் மார்க்ஸியர்களைப்போல உள்ளடக்கவாதி என்றும் தன் கட்டுரையில் அவர் காட்டிவிட்டார்.தமிழ் நாட்டில் அவரது கட்டுரை வழியாகவே தளைய சிங்கம் அறிமுகம் பெற்றார் என்னும்போது அக்கருத்து ஆழமாக பதிந்துவிட்டது .

மோகனரங்கன்: அந்தக்காலத்தில் உருவமா உள்ளடக்கமா என்ற வாதம் அப்படி ஆழமாக வேரூன்றியிருந்தது .

வேதசகாய குமார்: ஆனால் தளையசிங்கம் தன் ஏழாண்டு இலக்கியவளர்ச்சியில் பெரும்பாலான கருத்துக்களை வடிவ அடிப்படையிலும் மொழி அடிப்படையிலும் தானே முன்வத்துள்ளார் .அதை எப்படி மறுக்க முடியும் ?

அருண்மொழி நங்கை :தளையசிங்கத்தின் கருத்தில் சொன்னால் ஒரு படைப்பு மெய்மையை நம் மனத்தில் எழுப்புவதற்கு வடிவமும் உள்ளடக்கமும் ஒரே போல பங்காற்றுகின்றன என்று கொள்ளமுடியும் .

வேதசகாயகுமார்: வடிவ ரீதியான விமரிசனமே படைப்பின் சாராம்சத்தைமேலும் நெருங்க உதவுவது என்று முதளையசிங்கம் கருதுவதாகக் கூட சொல்லலாம். உதாரணமாக மெளனியை பிரமிள் அக்கதைகளின் உள்ளடக்கமான ஆன்மீக [Mystic] மனநிலையை ஆராய்ச்சி செய்து அவற்றுக்கு புதியவாசிப்பை அளிப்பதன் மூலம் விளக்கினார் . க நா சு அவற்றின் மொழி மற்றும் கூறுமுறையை மட்டுமே கருத்தில் கொண்டார் .தளையசிங்கம் க நா சுவே மெளனியை சிறப்பாக புரிந்து கொண்டு விமரிசிக்கிறார் என்கிறார் .இந்தக்கருத்து மிக முக்கியமான ஒன்று…

சூத்ரதாரி : ஆமாம் . இங்கே மெளனியை மிகச்சிறப்பாக விமரிசித்தவர் பிரமிள் தான் என்ற கருத்து நிலவுகிறது …

மோகனரங்கன்:ஜெய காந்தனின் விழுதுகள் போன்ற ஒரு கதை மெளனி எழுதிய எல்லா கதைகளைவிடவும் மேலானது என்று தளையசிங்கம் சொல்லியிருக்கிறாரே

வேதசகாயகுமார்: தளையசிங்கத்தை பொறுத்தவரை அந்தக்கருத்து உண்மையானதுதான். அவருக்கு இலக்கியப்படைப்பில் சாராம்சமாக திரண்டுவரும் மெய்யின் தரிசனம் முக்கியமானது. மெளனியிலும் புதுமைப்பித்தனிலும் அந்தமெய்யனுபவம் குறித்த ஒரு தத்தளிப்புதான் இருக்கிறது .

வெங்கட் சாமிநாதன்: புதுமைப்பித்தைன் பல கதைகளில் ஆழ்மானமெய்யனுபவம் உள்ளது . ஜெயகாந்தனில் இருப்பது அத்தகைய அனுபவமல்ல , அவ்வனுபவம் பற்றிய ஒரு கருத்து [idea] மட்டும்தான் . அதை தளையசிங்கம் அனுபவத்தின் தீவிரத்தைவிட மேலானதாக பார்ப்பது ஏற்கனவே நான் சொன்னதுபோல அவரது மிதமிஞ்சிய புதுயுக ஈர்ப்பு காரணமாகத்தான் .

நாஞ்சில்நாடன்: எனது கருத்தும் அதுதான் .புதுமைப்பித்தன் கதைகளை ஜெயகாந்தன் கதைகளுடன் ஒப்பிடுவது அபத்தம் .ஜெயகாந்தன் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட இடத்துக்கே போய் சேர்கிறார் .

எம் யுவன்: வெ சா சொன்ன கருத்தையே நானும் சொல்ல விரும்புகிறேன். உண்மையான மெய்யனுபவம் ஜெயகாந்தனின் இக்கதை யில் உள்ளது போல இத்தனை திட்டவட்டமானதாக முடிவுற்றதாக இருக்காது. அதற்கு புதிய புதிய தளங்கள் உருவானபடியே இருக்கும் .அது நம் மனத்தில் வளர்ந்தபடியே இருக்கும். இன்னொன்றும் சொல்லவேண்டும் , விவேகம் அல்லது wisdom ஒரு போதும் மெய்யனுபவமல்ல. அதை நாம் பிரித்துபார்த்தாகவேண்டும். விவேகம் அனுபவமுதிர்ச்சியில் இருந்தோ, அல்லது மரபில் இருந்தோ வரமுடியும்.நாட்டுப்புற கலைகள் கதைகளில் அது உண்டு. மெய்யனுபவத்தில் ஒரு புதுமை, வியப்பினையும் பிரமிப்பினையும் ஊட்டும் ஒரு அம்சம், எப்போதுமே இருந்தபடியே இருக்கிறது.. ஜெயகாந்தனின் கதையில் மரபான விவேகம் மட்டும்தான் இருக்கிறது . அது நல்ல கதைதான் , மகத்தான கதைஅல்ல .

வேதசகாய குமார்:தளையசிங்கத்தின் பார்வையில் கலைப்படைப்புக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவும் முக்கியமானது.மெளனிகதைகளை அவர் அப்படிகுறைத்துமதிப்பிட்டதற்கு அதுதான் காரணம் என்று சொல்லலாம்.

அன்பு வசந்தகுமார்: அவர் என்ன சொல்கிறார் ? கதைகள் சமூக மனத்தை நோகி பேச முயலவேண்டும் என்றா ? மார்க்ஸியர் கூட இப்போது அப்படி சொல்லமாட்டார்கள்.

வேதசகாயகுமார்: அவரை பொறுத்தவரை கலையின் ஆக்கம் மெய்யை தேடுதலும் கண்டடைதலும் வெளிப்படுத்தலும்தான். அக்கலைப்படைப்பினை சமூகம் ஏற்பதில் மூன்று நிலைகளை அவர் சொல்கிறார் . ஒன்று அது சமூகத்தை செயல்படத்தூண்ட வேண்டும் . இரண்டு அது சமூகத்தில் ஏற்கனவே இருந்துவரும் முற்போக்கான செயல்பாடுகளுடன் ஒத்துழைக்கவேண்டும். மூன்று அது சமூகத்தின் எதிர்மறையான போக்குகளை எதிர்க்கவேண்டும் .அதாவது தளைய சிங்கத்தை பொறுத்தவரை ஒரு இலக்கியபடைப்பு சமுக்கத்தின் வளார்ச்சிக்க்க்கு எந்தபங்காற்றுகிறது என்பதே அதை அளக்க அளவுகோல் . அப்படி பங்காற்றாத படைப்பு எத்தனை அழகுகள் கொண்டிருந்தாலும் அவரால் ஏற்க முடியாது . சமூகப் பயனற்ற கலை என்பதை அவரால் ஒப்பவே முடியவில்லை ….

எம் யுவன் : கலையின் பயன் மதிப்பு அல்லது சமூக மதிப்பு என்ன என்று உடனடியாக எவரும் மதிப்பீடு செய்துவிட முடியாது. கலை அறிகிறது வெளிப்படுத்துகிறது.அதன் பயன் அதுதான் .அதன் பணியே அதன் பயன் என்று சொல்லலாம்.அதைபயன் படுத்துவதும் சரி தவறாக பயன்படுத்துவதும் சரி சமூகத்தின் விருப்பம் மனநிலை சார்ந்த விஷயங்கள் மட்டுமே.

மோகனரங்கன்: அதைவிட கலையின் சமூக பயனை யார் தீர்மானிப்பது , எந்த அளவுகோல் என்பதுதான் பிரச்சினை. முற்போக்கு ,நல்ல போக்கு என்பதையேல்லாம் தீர்மானிக்க அளவுகோல் என்ன ? பழ்ழைய மார்க்ஸியர்கள் சோவியத் ரஷ்யாவை எதிர்த்து எழுதிய எல்லா எழுத்தாளார்களையுமே முற்போக்குக்கு எதிரானவர்கள் என்றுதான் சொன்னார்கள் .கொல்லவும் செய்தார்கள். இப்படி ஒரு அளவுகோலை வைத்தால் இலக்கிய படைப்புக்குமேலே வேறு ஒரு அதிகாரத்தை வைப்பதுபோலத்தான் ஆகும்.அது இலக்கியத்தையே அழித்த்விடும் .தத்துவம் கூட இலக்கியத்த்க்கு உதவிதான் செய்யமுடியுமே யொழிய வழி நடத்தமுடியாது…

வேதசகாய குமார்: தத்துவம் அரசியல் போன்றவற்றுக்கும் இலக்கியத்துக்கும் இடையே இப்படி ஒரு பிரச்சினை எபோதுமே உள்ளது . எல்லையை எப்படி யார் வகுப்பது என்ற பிரச்சினை ,..

மதிய உண்வுக்கான நேரம் நெருங்கியபடியால் காலை அமர்வு முடிக்கப்பட்டது .மாலை ஆறுமணிக்கு அமர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டது .

[மாலை அமர்வு பற்றிய குறிப்புகள் தொடரும் ]

==

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

ஜெயமோகன்


ஊட்டியில் காலையில் எழுவதென்பது எப்போதுமே சிரமமானது . குளிருக்குப் பழக்கமில்லாத வியர்வையூர் வாசிகளுக்கு மிக மிகச் சிரமமானது . இரவெல்லாம் உடலில் இருந்து ஊறிய இளம் வெம்மை அப்போதுதான் கம்பிளிக்குள் தேங்கி சுகமாக உடலைத் தழுவியிருக்கும் . ஆனால் அனைவரையும் எழுப்பி காலை நடைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. காலையில் எழச் சிரமப்படுபவர்கள் கூட எழுப்பாவிட்டால் கோபித்துக் கொள்வதுண்டு .ஊட்டியின் அழகே காலையின் மூடுபனிக்குள் ஊடுருவி எழும் வெயில் மெல்ல பொன் மஞ்சள் நிறமாக மாறுவதுதான் . காலையில் எழுந்து பல்துலக்க வரும்போது மூத்தவர்கள் எல்லார்மே எழுந்து விட்டிருப்பதைக் கண்டேன். நாஞ்சில்நாடன் வெங்கட் சாமிநாதனுடன் அந்த வேளையிலும் இலக்கியம்தான் பேசிகொண்டிருந்தார் .

குருகுலத்தில் பால்வர தாமதமாகும் ஆகவே காலையில் பால் இல்லாத கருப்பு டா தான் .குளிருக்கு அது மிக சுவையாகவே இருக்கும் .மேலும் ஊடி டாக்கு பச்சை வாசனையும் இருக்கும். கூட்டமாக காலைநடை கிளம்பினோம். வெயில் தெளிவான மஞ்சள் நிற அருவிகள்போல மரங்களிலின் ஊடே விழுந்துகொண்டிருந்தது .கிட்டத்தட்ட இரண்டரைமணிநேரம் நடந்தோம். இதய நோய்க்கு சிகிழ்ச்சையில் இருந்தபோதும்கூட நாஞ்சில்நாடனும் நடந்தார் . வழியில் நின்று ஒரு டாக்கடையிலிருந்து டாகுடித்தபடி பேசிக் கொண்டிருந்தோம் .ஒன்பதரை மணிக்கு திரும்பிவந்தோம் .எம் யுவன் வந்திருந்தார் .அபிலாஷும் அவர் நண்பரும் வந்தனர் . பத்துமணிக்கு முதல் அமர்வை துவங்கினோம்.

முதலில் எம். வேதசகாயகுமார் பேசினார் . அவரது கட்டுரையின் சாரமான கருத்து தளைய சிங்கம் ஒரு இலக்கியக்கலைஞனாக எவ்வாறு உருவாகி மெல்ல மெல்ல தத்துவவாதியாக மாறினார் என்பதன் சித்தரிப்புதான் . தளைய சிங்கம் வெளியேயிருந்து வந்த சித்தாந்தங்களில் நம்பிக்கை கொள்ளவில்லை . தன் சுயமான தேடலின் அடிப்படையிலான சிந்தனைப்பயணத்தையே மேற்கொண்டிருந்தார் .அவ்வகையில் தமிழில் பாரதிக்கு அடுத்தபடியாக சொல்லப்படவேண்டிய முக்கியமான சிந்தனையாளர் அவரே . பாரதிக்கு சிந்தனையில் கைகூடாத வெற்றி தளையசிங்கத்துக்குக் கைகூடியது என்றார் வேதசகாயகுமார் .

முற்போக்கு முகாம் மீதான தளையசிங்கத்தின் விமரிசனம் அது கலையை எளிமைப்படுத்தியது ,குழு அரசியலை விமரிசனமாக முன்வைத்தது ஆகியவை சம்பந்தமானதே . அத்துடன் முற்போக்கு முகாமில் இருந்த படைப்பாளிகள் உழைப்பாளிகள் அல்ல , உயர்மட்டத்தினரே என்பதும் தளையசிங்கத்தின் விமரிசனமாக இருந்தது . ஆனால் அடிப்படையில் தளையசிங்கம் மார்க்ஸியத்தின் இலட்சியக்கனவுக்கு எதிரானவர் அல்ல . இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான சிந்தனையாக அவர் மார்க்ஸியத்தையே காண்கிறார் . அத்துடன் மார்க்ஸியத்தின் போதாமைகளைப் பற்றிய பிரக்ஞை கொண்டு அவற்றை ஈடு செய்வதற்கான சுயசிந்தனைகளில் அவர் ஈடுபடுகிறார் . வர்க்கப்போராட்டம் மூலம் பொருளியல் விடுதலை அடைந்தால் மட்டும்போதாது தனிநபரின் மனவிடுதலையும் தேவை என்பது அவரது முதல்கட்ட மாற்றுக்கருத்த ‘க இருந்தது. அத்துடன் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்ற பிரிவினைகள் தத்துவ மட்டத்தில் காலாவதியாகிவிட்டன என்ற புரிதலும் அவருக்கு உருவாகியது .

‘ஏழாண்டு இலக்கியவளர்ச்சி ‘ -யில் தளையசிங்கம் இலக்கிய அரசியலை அடிப்படையாகக் கொண்டு ஈழச் சூழலில் செயல்படும் மாறுபட்ட கருத்தியல் போக்குகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு இடையேயான அதிகார ஓட்டங்களை சித்தரித்துக் காட்டுகிறார் .அவ்வதிகாரப் போக்குகள் எப்படி தனி மனிதர்களின் வழியாகச் செயல்பட்டன என்பதை விளக்குகிறார் .சிலமாற்றங்களுடன் அப்போக்குகள் தமிழகத்திலும் இருந்ததனாலும் அவற்றை மதிப்பிடுவதில் தளையசிங்கம் காட்டிய அபூர்வமான கூர்மையும் சமரசமற்ற தீவிரமும் காரணமாகவும்தான் பலவருடங்கள் கழித்து தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அந்நூல் தமிழ்ல் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது ,இன்றும் விவாதிக்கப்படுகிறது . அந்நூலில் ஒரு முக்கிய இலக்கிய விமரிசகராக தன்னை அடையாளம் காட்டும் தளையசிங்கம் எஸ் பொன்னுத்துரையை ஒரு ஆற்றல் மிக்க எழுத்தாளராக அடையாளம் காட்டி அவருடைய மொழிமோகத்தை கண்டித்து முன்னிறுத்துகிறார் . அடுத்த கட்டத்துக்கு ஈழ எழுத்தை எடுத்துச் செல்லும் முதன்மைப் படைப்பாளியாக தன்னையும் குறிப்பிடுகிறார் .

ஆனால் போர்ப்பறையில் தளையசிங்கத்தின் இலக்கு மாறுபடுகிறது . தத்துவ தேடல் முதன்மைப்படுகிறது. அப்போக்கு மெய்யுளில் உச்ச நிலையை அடைகிறது. இதன் விளைவாக அவர் முன்வைத்த அளெளகோல்கள் மாறுபடுகின்றன. கருத்தியல் செயல்பாட்டுக்கு முன்பு தரமறுத்த முக்கியத்துவத்தை இப்போது தளைய சிங்கம் அளிக்கிறார் . கைலாசபதியைக்கூட அங்கீகரிக்கிறார் .ஆனால் எஸ் .பொன்னுத்துரையை முற்றாக நிராகரித்து விடுகிறார் .தத்துவ தேடலை முதன்மைப்படுத்தி அவர் உருவகித்த மெய்யுள் வடிவரீதியான முக்கியத்துவம் உடையதேயானாலும் கலையாக வெற்றிபெறவில்லை . பாரதியின் ஞான ரதம் போல ஒரு தொடர்ச்சியில்லாத வடிவமாக அது நின்றுவிட்டது . தளைய சிங்கம் தன் அடிப்படை சிந்தனைகளுக்காக தமிழில் இன்றுள்ள முக்கியத்துவத்தை பெறுகிறார் .அத்துடன் ஈழ இலக்கியத்தில் ஒரு மரபை தோற்றுவித்த பெருமையும் அவருக்கு உண்டு . அவரது ஆரம்பகால சிறுகதைகளுக்காக அவருக்கு தமிழ் படைப்பிலக்கிய வரலாற்றிலும் முக்கிய இடம் உண்டு :வேதசகாய குமாரின் கருத்துக்கள் இவை .

ஜெயமோகன்: முதலில் ஓர் அடிப்படை விஷயத்தை விவாதிக்க வேண்டுமென விரும்புகிறேன். தளையசிங்கத்தின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி முக்கியமாக ஒரு இலக்கிய அரசியல் [Polemics ] நூல் . உலகம் முழுக்கவே இலக்கிய சூழலில் புதிய கருத்துக்கள் உருவாவதற்கு இலக்கிய அரசியல் பெரும் பங்கு ஆற்றியுள்ளது என நாம் அறிவோம் .சமீபத்தில்தான் பிளேக் கின் இலக்கிய அரசியல் கட்டுரைகள் சிலவற்றை படித்தேன் . அவற்றில் தனிப்பட்ட கோபதாபங்கள் ஏராளமாக உள்ளன என்றாலும் அறிவார்ந்த வேகம் பல புதிய எல்லைகளை சென்று தொட்டு மீள்கிறது. பின் நவீனச் சூழலுக்கு இலக்கிய அரசியல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது . தமிழில் பல பிரபலமான இலக்கிய அரசியல் விவாதங்கள் உள்ளன . பாரதி மகா கவியா இல்லையா விவாதம் [ கண்ணன் என் கவி -சிட்டி கு ப ராஜகோபாலன்] புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் நடந்த தழுவல் குறித்த விவாதம் [ ரசமட்டம் கட்டுரைகள் ] க .நா .சுவுக்கும் கைலாசபதிக்கும் நடந்த விவாதம் , வெங்கட் சாமிநாதனுக்கும் கைலாசபதி குழுவுக்கும் நடந்த விவாதம் [ மார்க்ஸின் கல்லறையில் இருந்து ஒரு குரல் வெ. சாமிநாதன் ] ஜெயகாந்தன் படைப்புகளை தினமணி சுருக்கியது சம்பந்தமாக வெங்கட் சாமிநாதன் எழுத எழுந்த விவாதம் [அழ வேண்டாம் வாயை மூடிக் கொண்டிருந்தால் போதும் – அசோகமித்திரன் ] பிரமிள் வெ.சாமிநாதன் இருவருக்கும் இடையே நடந்த விவாதங்கள் [விமரினாஸ்ரமம் ] போன்றவை முக்கியமான்வவை . இந்த விவாதங்கள் எந்த அளவுக்கு தமிழ் இலக்கிய உலகுக்கு பயன்பட்டுள்ளன ? இவ்ற்றின் முக்கியத்துவம் என்ன ? தளையசிங்கத்தின் இந்த நூல் அளவுக்கு தரமான இலக்கிய அரசியல் நம்மிடையே ஏன் இல்லை ?

எம் யுவன் : இதைப்பற்றி எனக்கு சில சொல்ல இருக்கிறது ஜெயமோகன். சமீப காலமாக ஒரு சாரார் இந்த இலக்கிய விவாதங்களை வெறும் குழுச்சண்டைகளாகவும் குழாயடிச்சண்டைகளாகவும் சித்தரித்துக் காட்ட முயன்று வருகிறார்கள் . இலக்கியவாதிகளுக்கு இடையே ஒற்றுமை தேவை என்று உபதேசம் செய்பவர்களும் பெருகி வருகிறார்கள் . இலக்கியத்தின் அடிப்படைகளையும் இலக்கியம் இயங்கும் விதத்தையும் சற்றும் அறியாமல் மேலோட்டமாக செய்யப்படும் ஒரு விமரிசனம் இது என்பது என் கருத்து . நான் தனிப்பட்ட முறையில் எந்த விவாதத்திலும் கலந்துகொள்ள மாட்டேன் . அது என் இயல்பல்ல .ஆனால் தமிழில் நடந்த இந்த விவாதங்கள் மிக முக்கியமானவை என்று கருக்துகிறேன். நாம் கருத்துக்களின் முரண்பாட்டியக்கத்தில் [ Dialectics ] நம்பிக்கை கொண்டிருந்தால் இவ்விவாதங்களே கருத்துச்சூழலை முன்னெடுத்துச் செல்பவை என்பதைக் காணமுடியும் .இவற்றை தவிர்த்துவிட்டு எவரும் நமது கருத்துச்சூழலைப்பற்றி எதுவும் பேசிவிடமுடியாது என்று தெரியும் . நீ சொன்ன விவாதங்கள் வழியாகத்தான் இங்கு இலக்கியத்துக்கும் கலைகளுக்கும் இடையேயான உறவு , இலக்கியத்தின் சமூகப்பொறுப்பு பற்றிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டு தெளிவு உருவாகியுள்ளது . இன்றைக்கு நாம் இந்த அளவுக்கு பேசுகிறோம் என்றால் அந்த விவாதங்களின் இரு தரப்பையும் நாம் கவனித்து வளர்ந்தோம் என்பதுதான் காரணம்…

நாஞ்சில் நாடன் : அது தான் என் கருத்தும் .என்னைபொறுத்தவரை நானும் எந்த விவாதத்திலும் இறங்க விரும்பாதவன்ன்தான் .ஆனால் விவாதங்களை கவனித்துத்தான் என் சிந்தனைகளை விரிவாக்கிக் கொண்டேன் .

மோகனரங்கன்: புதிய கருத்துக்கள் மொழிபெயர்ப்பு மூலமேகூட வந்து சேரும் . ஆனால் விவாதங்கள்தான் நமக்கு சிந்திக்க கற்றுத்தருகின்றன . விவாதங்களின் எல்லாதரப்பையும் நாம் கவனிக்கும் போது நமக்கு ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராயும் பயிற்சி கிடைக்கிறது . தொடக்க காலத்திலாவது இலக்கிய விவாதங்களை கவனிக்காத ஒரு வாசகனுக்கு இலக்கியம் பற்றி சிந்திக்கவே முடியாது …

வேதசகாய குமார் : நாங்கள் [நானும் ராஜமார்த்தாண்டனும் ] கொல்லிப்பாவை இதழ் நடத்தியபோது அதில் தான் வெங்கட் சாமிநாதனும் பிரமிளும் தொடர்ந்து விவாதித்தார்கள் .அப்போது பலர் இது குறித்து என்னிடம் கேட்டதுண்டு .பதில் சொல்லி சொல்லி நாங்கள் களைத்துப் போய்விடுவோம். விவாதத்தின் எல்லைகளை ஆசிரியர்கள் வகுக்கவும் முடியாது .

ஜெயமோகன்: விவாதங்கள் பற்றிய என் கருத்தும் இதுதான் .இதை நான் ஏற்கனவே குமுதம் உட்பட உள்ள இதழ்களில் சொல்லியும் இருக்கிறேன். உண்மையில் வைணவ உரை மரபிலும் சைவ சித்தாந்த மரபிலும் நடந்த விவாதங்கள் அளவுக்கு அதி தீவிரமான கருத்துப் போராட்டங்கள் இன்னமும் நவீன இலக்கியச் சூழலில் நடைபெறவில்லை . நவீன இலக்கியத்தில் பேணப்பட்ட குறைந்தபட்ச நாகரீகம் கூட மேற்குறிப்பிட்ட தத்துவ /மத விவாதங்களில் பேணப்படவும் இல்லை .ஆகவே விவாதங்களைப்பற்றி சிலர் இப்போது சொல்லும் அப்பாவித்தனமான கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை . ஆனால் நமது விவாதங்களில் உள்ள தரம் பற்றி நாம் விவாதிக்கத்தான் வேண்டும் . நமது விவாதங்கள் பெரும்பாலும் அடிப்படையான தத்துவபிரச்சினைகளுக்குள் போவதில்லை . அதாவது தரப்பை எத்தனை மூர்க்கமாக முன்வைத்தாலும் அத்ன் அடிப்படை சக்தியாக சித்தாந்தம் இருந்தபடியே இருக்கவேண்டும் . அப்படி இருந்தால்தான் விவாதம் மூலம் ஒரு பொதுத்தளம் உருவாகி வரமுடியும்….

சூத்ரதாரி: அதைப்போல கருத்துக்களில் நேர்மையும் முக்கியமல்லவா ? வெறுமே விவாதத்துக்காக விவாதம் , இடத்துக்கு ஏற்ப மாறும் கருத்து என்றெல்லாம் விவாதம் நடக்கும் போது அதில் என்ன பயன் ?

எம் யுவன் : தமிழ் விவாதங்களில் கண்டிப்பாக அப்படிப்பட்ட ஆழமான தளங்கள் வெளிப்பட்டபடித்தான் இருக்கின்றன. உதாரணமாக நாட்டார் கலைகளில் உள்ள தன்னைமறந்த கலைவேகம் நவீனகலையில் தேவை என்று வெங்கட் சாமிநாதன் எழுதினார் . நாட்டார் கலைகளை அப்படியே ஒரு நவீனமனம் ரசிக்க முடியாது அதன் சாராம்சமான பகுதிகளை மறு ஆக்கம் செய்யத்தான் முடியும் என்று பிரமிள் பதில் சொன்னார் …. இதை கவனிக்கும் ஒருவர் மூன்றாவது தரப்பு ஒன்றுக்கு போகவும் இடம் இருக்கிறது …….

ஜெயமோகன்: அப்படிப்பட்ட முக்கியமான பலதளங்களை நம் விவாதங்கள் அவ்வப்போது வெளிப்படுத்தியுள்ளன என்பது உண்மைதான் . ஆனால் பொதுவாக தனிப்பட்ட தாக்குதல்கள் வசைகள் ஏராளமாக காணக்கிடைக்கின்றன. எதிரியின் கருத்தை திரிப்பது , அதன் பின்னணித்தளத்தை தவறான அர்த்தம் வரும்படி திருகுவது போன்ற விஷயங்களை பிரமிள் தயகமேயில்லாமல் செய்துள்ளார் . வெங்கட் சாமிநாதனும் கடுமையான தனிப்பட்ட சொல்லாட்சிகளைமுன்வைக்க தயங்கியவரல்ல . இதெல்லாம் விவாதத்தின் பொதுவான தளத்தை பெரிதும் குறைத்து விட்டன. இன்னொன்று சில விஷயங்களில் தனிப்பட்ட கோபங்கள் தவிர வேறு இலக்கிய ரீதியான பிரச்சினையே இல்லமலும் இருந்ததுண்டு .இலக்கிய பிரச்சினையில் தொடங்கினாலும் கூட தனிப்பட்ட பிரச்சினைகளில் போய் முடிந்துள்ளந சில விவாதங்கள் ….

வெங்கட் சாமிநாதன் : என் தரப்பை சொல்லிவிடுகிறேன் . நான் இலக்கிய விவாதங்களில் எப்போதுமே என் மனசாட்சிப்படி நேர்மையாகத்தான் நடந்துவந்திருக்கிறேன் . நான் எழுதிய எந்த விஷயத்தைப்பற்றியும் எனக்கு இப்போது எந்தவித மனக்குறையும் உறுத்தலும் இல்லை . எனக்கு இலக்கிய ஆக்கத்தில் ஒரு தர அளவுகோல் உண்டு .அதை பாரபட்சமின்றி பிரயோகித்திருக்கிறேன் . அப்படி இல்லை , தெரிந்தவர் வேண்டியவர் என்றெல்லாம் பாரபட்சம் காட்டினேன் என்று எவரும் சொல்ல முடியாது . அந்த நேர்மை எனக்கு இருப்பதால் அதெ நேர்மையை மற்றவர்களிடமிருந்தும் எதிர்பார்க்க எனக்கு உரிமை உண்டு . நான் கடுமையான விமரிசனங்களை முன்வைத்திருக்கிறேன் என்றால் அது இரண்டு விஷயங்களுக்காகத்தான் . ஒன்று , தகுதியே இல்லாத ஒரு நபர் தனிப்பட்ட தொடர்பு ,அரசியல்ச் சார்பு போன்ற காரணங்களுக்க ‘க தூக்கி பிடிக்கப்படும்போது .இரண்டு , இலக்கிய உலகின் போலித்தனங்களைக்கண்டு . நேரடியான வேகத்துடன் இருப்பது போலித்தனமாக இருப்பதை விட மேலானதுதான். கண்டிக்க வேண்டிய விஷயங்கள் என நான் கருதியவற்றை முடிந்தவரை தீவிரமாக கண்டிப்பதுதான் எனது பாணி எனக்கு இலக்கியத்திருந்து எந்த தனிப்பட்ட லாபமும் கிடைக்கவில்லை …

ஆர் பி ராஜநாயகம்: சதங்கையில் முருகேசபாண்டியன் ஒரு விஷயம் எழுதியிருக்கிறார் . எண்பதுகளில் அவர் வீட்டுக்கு வந்து பேசிகொண்டிருந்த சமயவேல் சட்டென்று குரலைத்தாழ்த்தி ‘ ‘ உறுதியான ஆதாரம் கிடைச்சுட்டது .நான் இப்ப கோவில்பட்டியிலேருந்து வாறேன்,வெங்கட் சாமிநாதன் சி ஐ ஏ உளவாளிதான் ‘ ‘ என்றாராம். அந்த பிரச்சாரம் அப்பொது மிக பலமாக இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டது

ஜெயமோகன்: இடதுசாரிகள் அவதூறுக்கு அஞ்ச மாட்டார்கள். அவர்களுடைய தலைவர்கள் வெளியேறியபோதுகூட அவதூறு மூலம் தான் ஒழித்துக் கட்டினார்கள்

வேதசகாயகுமார் : வெங்கட் சாமிநாதன் தன்னை எற்று கொண்டவர்கள் சிறப்பாக எழுதாத போது கடுமையாக விமரிசித்திருக்கிறார் . மாற்றுத்தரப்பை சேர்ந்தவர்கள் நன்றாக எழுதியதாக தோன்றியபோது பாராட்டவும் செய்திருக்கிறார் …அதைப்பற்றிநான் சொல் புதிதில் எழுதிய கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்…..

ஜெயமோகன்: இலக்கிய விவாதங்களை அழகியல் சித்தாந்த விவாதங்களாக மாற்ற தமிழில் ஓரளவேனும் சிட்டி

– குபரா விற்குத்தான் முடிந்துள்ளது . தளையசிங்கத்தின் ஏழாண்டு இலக்கியவளர்ச்சி இன்றும் முக்கியமாக கவனிக்கபடுகிறதுஎன்றால் அதற்கு காரணம் இலக்கிய அரசியல் சார்ந்த விவாதம் ஆழமாக சென்று சித்தாந்த தளத்தினை தொடுவதுதான்…

வேதசகாயகுமார்: தளையசிங்கத்தின் பார்வையில் ஒரு முக்கியமான அம்சம் உள்ளது .ஆரம்பத்தில் அவர் இலக்கிய அரசியல் கோணத்தில் எழுதியபோது கைலாசபதி ஒரு முக்கியமான ஆளுமையாக , முதன்மையான எதிர்தரப்பாக அவர் முன் இருக்கிறார் .ஆனால் அந்த தளத்தில் இருந்து விலகி அவர் தத்துவ விவாத தளத்துக்குள் போகப்போக கைலாசபதி காணாமல் போய்விடுகிறார். அதாவது கைலாசபதியை தளையசிங்கம் இலக்கிய அரசியல் ரீதியாக மட்டுமெ பொருட்படுத்தினார் ……

ஜெயமோகன்:ஆனால் தளைய சிங்கத்தின் பார்வையில் எப்போதுமே இலக்கிய அரசியல் இருந்தபடித்தானே உள்ளது மெய்யுளிலும் கூட இலக்கிய அரசியல் உள்ளது, சற்று மாற்றப்பட்ட வடிவில்….

வேதசகாய குமார் : தளையசிங்கம் மெய்யுளில் இலக்கியஅரசியலின் வடிவத்தை கையாள்கிறார், அவ்வளவுதான்

ஜெயமோகன்: தளைய சிங்கம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் தனிநபர் சார்ந்த தாக்குதல்களை நிறைய செய்கிறார். இது சரிதானா ?

வெங்கட் சாமிநாதன்: படைப்பாளி எழுதும் போது தன்னுடைய அந்தரங்க ஆளுமையைத்தான் முன்வைக்கிறார் . அதை த்தான் சமூகம் பார்க்கிறது. நாம் படைப்புமூலம் அவனது மனத்துக்குத்தான் போய் சேர்கிறோம் .அது முக்கியமானது அதை அறிய அவனது அந்தரங்கம் முக்கியமானதேயாகும் .ஆதற்காக அவனது அந்தரங்க விஷயங்களை எல்லாம் தோண்டியெடுக்க வேண்டுமென சொல்லவரவில்லை . அதை மேற்கே நிறைய செய்கிறார்கள். ஆனால் அவன் தன் படைப்பில் வெளிப்படுத்தும் ஆளுமை ,அதன் தார்மீகம் சார்ந்த அவனது சுயவாழ்க்கையை கணக்கில் கொண்டுதான் பேச வேண்டும் .

ஜெயமோகன்: உதாரணமாக ஞானி திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோயிலில் தன் அறுபதாம் வயது நிறைவுக்கு பூஜை நடத்தினார் என்று பரவலாக சொல்லப்பட்டது . அ மார்க்ஸ் இதை வைத்தே ஞானியை நிராகரித்து விடுகிறார் ஒரு கட்டுரையில் .இது எந்தளவுக்கு சரியானது ?

சூத்ரதாரி : அது அவரது குடும்ப விஷயம் . அதை விவாதமாக்குவது சரியல்ல..

ஜெயமோகன்: என் தரப்பை சொல்லிவிடுகிறேன். எழுத்துக்கு பின்னால் உள்ள நோக்கமும் அதை ஆக்கும் ஆளுமையும் மிக முக்கியமானது , அதில் இருந்து எழுத்தாளனை பிரித்து விட முடியாது என்றே நான் எண்ணுகிறேன் . ஞானி நடத்திய சடங்கு தவறு என்பதற்கோ கண்டிப்பதற்கோ நமக்கு உரிமை இல்லை . அதேபோல அந்த ஒரு விஷயத்தை வைத்து அவரை பொய்யர் என்றோ வேடதாரி என்றோ நிராகரிப்பதும் சரியல்ல . ஆனால் ஞானி கடவுள் ஏன் இன்னும் இறக்கவில்லை என்று நூல் எழுதியவர் . அவரை அறிய இச்சம்பவம் மிக முக்கியமானதே . கைலாசபதியைப்ப்ற்றி தளையசிங்கம் தரும் தனிப்பட்ட தகவல்கள் அவரது கருத்துநிலைகளை அறிய மிக முக்கியமானவைதான் . கைலாசபதியை ஈழ உயர்வட்ட உயர்சாதி மனிதர் என்றும் அரசு ஆதரவு இதழுக்கு உறவு பலத்தால் ஆசிரியரானவர் என்றும் பிரசுரசாதன வசதியை தன் குழுவை வளர்க்க பயன் படுத்தியவர் என்றும் தளைய சிங்கம் சொல்கிறார் . இதை நாம் தவிர்க்கமுடியாது . இங்கு அறிமுகமான கைலாசபதி ஒடுக்கப்பட்ட வற்கத்தின் புரட்சியின் ஆசான். சொந்தமாக ஒரு தட்டச்சு பொறி வைத்திருந்ததற்காக நாடோடியான க நா சுவை முதலாளி என்று சொன்னவர் .

நாஞ்சில்நாடன்: இந்த விஷயம் பற்றி எனக்கு சற்று தெரியும் . ஞானியை தெரிந்தவன் என்ற முறையில் அவர் மத உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவர் என்பதை நான் உறுதியாகவே சொல்ல முடியும்..

தாமரை ஆறுமுகம்: ஞானி கோயிலில் சாமி கும்பிட்டார் , ஆகவே அவர் மதவாதி , பழமையாளர் என்றெல்லாம் முத்திரை குத்தும் போக்கு அவதுற்று மட்டும்தான்.

நாஞ்சில்நாடன் : ஞானியின் மனைவியின் ஆசை அது .அதை அவர் மறுக்க முடியாது .விழி இழந்தபிறகு அவர் அவர்களையே சார்ந்து இருக்கிறார் . அவர்கள் வற்புறுத்தும் போது அதை அவரால் மீறமுடியவில்லை என்று சொன்னார் .

ஜெயமோகன்: அதை தவறென்று சொல்லவில்லை . ஈ எம் எஸ் மனைவி குருவாயூருக்கு சாமி கும்பிட சென்றபோது வாசலில் பகிரங்கமாக காத்திருந்தார் . அந்த பகிரங்கம் தேவை .இங்கு இந்த உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் முத்திரை குத்தி ஒழித்துக்கட்ட சிறுமைப்படுத்த முய்ற்சி செய்வார்கள் என்பது உண்மைதான் . ஆனாலும்கூட பகிரங்கமாக இருக்கும் தார்மீக பொறுப்பு அவருக்கு உண்டு . அப்படி இல்லாதபோதுதான் அது இலக்கிய அரசியல் விஷயமாக ஆகிறது ….

வேதசகாயகுமார்: இன்னொரு விஷயம் இப்படி பிறரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள் அவர்களை இதே விமரிசனத்துக்கு ஆளாக்கினால் எப்படி இருக்கும் என்பது . அவர்களை எதிர்ப்பவர்களுக்கு அதில் ஆர்வமில்லை என்பதே அவர்களுடைய பலம்

ஜெயமோகன்: திண்ணை இணைய விவாதத்திலே வ ந கிரிதரன் என்ற புலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளர் தளையசிங்கம் பற்றி சொல்லும்போது அவர் ஏழாண்டு இலக்கியவளர்ச்சியில் எஸ் பொன்னுத்துரை போன்றவர்களை சாதி சொல்லி தாக்குகிறார் என்று குற்றம் சாட்டினார் .

வேதசகாயமுமார் : சாதியை கணக்கில் கொள்வதில் என்ன தவறு ? உண்மையான மார்க்ஸிய விமரிசனம் அதைத்தானே செய்யவேண்டும் ? மனிதன் அவனது சமூக சூழல் பிறப்புசூழல் ஆகியவற்றிலிருந்து வேறானவனல்ல. அவனது ஆளுமையை அவற்றையும் சேர்த்து கணிப்பது ம்க அவசியமான ஒன்றுதான் .நம் சூழலைவைத்து பார்த்தால் பொதுவாக பிராமண எழுத்தாளர்களைப்பற்றி மட்டுமே அப்படி செய்திருக்கிறோம். மற்றவர்களைப்பற்றி பேசுவதேயில்லை.அவர்கள் அதை விரும்புவதில்லை என்பதுதான் காரணம். நமது விமரிசனத்தில் இடக்கரடக்கல்கள் அதிகம். பிரச்சினை வராமல் எழுதுவோம்.தளையசிங்கத்துக்கு பயமே இல்லை .ஆகவே அவருக்கு தயக்கமும் இல்லை.

ஜெயமோகன்: கிரிதரனின் மனக்குறை என்னவென்றால் படைப்பை கணக்கில் கொள்ளாமல் சாதியை மட்டுமே கணக்கில் கொள்கிறார் என்பதே…

வேதசகாயகுமார் : ஏழாண்டு இலக்கியவளார்ச்சி இ;லக்கியபிரதிகளைப்பற்றிய விமரிசனமல்ல. அது பொதுவாக இலக்கியக் கருத்தியல் போக்குகளைப்பற்றிய அலசல். இதில் ஒவ்வொரு எழுத்தாளாரைப்பற்றி பேசும்போதும் த்ளைய சிங்கம் முதலில் அவர்கள் படைப்புகளைப்பற்றித்தான் பேசுகிறார் என்பதைக் கவனிக்கலாம். பொன்னுத்துரையின் ஆக்கங்கள் பற்றி மிக விரிவாகவே தளையசிங்கம் பேசுகிறார் .பிறகு அன்றைய பொதுப்போகுகளைப்பற்றி பேசும்போது அதில் அங்குள்ள சமூக அமைப்பும் சூழல் எந்த பங்காற்றுகிறது , எழுத்தாளார்களின் தனிப்பட்ட ஆளுமை எப்படி அதன் மூலம் வடிவமைக்கப்படுகிறது என்றெல்லாம் பேசுகிறார் . அங்குதான் சாதி பற்றிய பேச்சுவருகிறது .

ஜெயமோகன்: தளையசிங்கத்தில் உயர்சாதிமனப்பான்மையை குற்றம் சாட்டுகிறார் கிரிதரன். வியப்பு என்னவென்றால் அவருக்கு தளையசிங்கம் தலித் மக்களுக்ககாக போராடி உயிர் துறந்தவர் என்ற விஷயமே கூட தெரியவில்லை .

வேதசகாய குமார் : வருத்தம் தரக்கூடிய விஷயம்தான் ,ஆனால் அப்படித்தான் எப்போதுமே நிலைமை இருக்கிறது .தளையசிங்கம் தலித் மக்களை பற்றி என்ன சொல்கிறார் ? ஒரு தலித் அறிவுஜீவி அடிப்படையில் அறிவார்ந்த ஆணவமும் , அதிகார இச்சையும் உடையவராக இருக்கவேண்டும் என்கிறார் .இல்லையேல் அவரது வளர்ப்பு சூழல் காரணமாக தாழ்வுணர்சியும் அதன் வெளிப்பாடான அங்கதமும் கசப்பும் நிரம்பிஅயவராக எதிர்மறைப்போக்கு உடையவராக ஆகிவிடுவார் என்கிறார் . அது உயர்சாதி மனப்பான்மையா என்ன ?

தேவகாந்தன்: தளையசிங்கம் தலித்துக்களுக்காக போராடி அடிபட்டபோது முற்போக்கு அமைப்புகள் அவரை உதாசீனம் தான் செய்தன.

ஜெயமோகன்: மல்லிகை ஆசிரியரான டொமினிக் ஜீவா பற்றி முதளையசிங்கம் இப்படி சொன்னதாக என் கெ மகாலிங்க ம் என்னிடம் சொன்னார் . அவர் தலித்தாக இருந்தபோதிலும் தளையசிங்கம் போராடிய செய்தியையோ அடிப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த செய்தியையோ தன் இதழில் போடவில்லை.கைலாசபதி மீதான பயம்தான் காரணம். ‘ ‘ எழுத்தாளர் வீட்டு பெட்டைய வயசுக்கு வந்தா செய்தி போடுறவனுக்கு இது செய்தியெண்டு தோணவில்லை . நான் செத்தால் அவனுக்கு என் படம் கூட கொடுக்கக் கூடாது ‘ ‘ என்று தளையசிங்கம் சொன்னாராம்.

மோகனரங்கன் : தளையசிங்கம் ஒரு இடத்தில் சொல்கிறார், புதுமைப்பித்தனும் மெளனியும் மார்க்ஸியத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் மேலும் நன்றாக எழுதியிருக்கலாம் என்று. ஆனால் தமிழில் மார்க்ஸியத்தை மறுப்பவர்களே நல்லபடைப்பாளிகளாக இருந்துள்ளார்கள். இதைப்பற்றி வேதசகாய குமார் என்ன எண்ணுகிறார் ?

வேதசகாய குமார் அதைப்பற்றி நான் எனது கட்டுரையின் முதல் பகுதியிலேயே சொல்லியிருக்கிறேன். படைப்பாளிக்கு தேவை சிந்தனை. அது அவனுக்குள் இருந்து அவனது தேடலின் விளைவாக உருவாகிவரக்கூடியது. ஆனால் நமது சிந்தனையாளர்களிடம் உள்ளது தத்துவ ஈடுபாடு.அது அவர்களுக்கு வெளியே உள்ள ஏதாவது ஒரு தத்துவம் மீதான ஈர்ப்போ விசுவாசமோ தான்.

மோகனரங்கன்: தளையசிங்கம் இங்கு தத்துவபிடிப்பு பற்றித்தானே சொல்கிறார் ?

அன்பு வசந்த குமார்: கூர்ந்துபார்த்தால் ஒன்று தெரியும் தளைய சிங்கம் மார்க்ஸியத்தின் இலட்சியவாத அம்சத்தை பற்றித்தான் அதிக கவனம் தந்து பேசுகிறார். அதன் முரணியக்கஇயங்கியல் இந்த காலகட்டத்துக்கு மட்டும் உரியது அடுத்த கட்டத்தில் மதிப்பிழக்கக் கூடியது என்கிறார் .ஆகவே மெளனியும் புதுமைப்பித்தனும் கட்சி உறுப்பினர் ஆக இருக்கவேண்டும் என்றோ ,அல்லது மார்க்ஸிய அரசியல் செயல்திட்டத்தின் படி படைப்புகளை ஆக்கியிருக்கவேண்டுமென்றோ அவர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை . அவர்களில் இருந்த எதிர்மறையான , இருண்மையான நோக்கினை மார்க்ஸிய இலட்சியவாதம் பெரிதும் குறைத்து மேலும் உத்வேகமும் தீவிரமும் கொண்ட படைப்புகளை எழுதச்செய்திருக்கும் என்று அவர் கூறுகிறார் என்று கொள்ளலாம்….

ஜெயமோகன்: தளையசிங்கம் சொன்னது ஒரு வகையில் சரி என்றே நானும் எண்ணுகிறேன் . மார்க்ஸியம் வரலாற்றுப்பார்வையை அளிக்கிறது .அதை எதிர்த்து சிந்தித்தால்கூட நாம் நேர் எதிர்மறையான வரலாற்றுப்பார்வையை சென்றடைவோம். மெளனிக்கும் புதுமைப்பித்தனுக்கும் வரலாற்றுப்பார்வை ஏதுமில்லை என்று நாம் அறிவோம்.மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும்ன்பதில்லை ,ஓரளவாவது பயின்றிருக்கவேண்டியது அவசியம்…அதையே தளையசிங்கம் சொல்கிறார் என்று படுகிறது….

நாஞ்சில்நாடன்: என்னை பொறுத்தவரை எந்த விதமான தத்துவ பயிற்சியும் கலைக்கு எதிராகவே இருக்க முடியும் . இசைப்பாடகன் இசையிலக்கணத்தை அதிகமாகத் தெரிந்துகொண்டால் பிறகு பாட்டு சுவையாக இருக்காது என்பார்கள் .தத்துவத்தில் ஆர்வம் ஏற்படும்தோறும் எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுபிடிப்பது , எல்லாவற்றையும் தொகுத்துக் கொள்வது என்றெல்லாம் ஆர்வம் ஏற்பட்டுவிடும் .தளையசிங்கத்துக்கு நேர்ந்ததும் இதுவே .அவர் தத்துவவாதியாக ஆகும்போது கலையின் நுட்பங்கள் எல்லாம் போய்விடுகின்றன, வெறும் தர்க்கங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன..

சூத்ரதாரி: வேத சகாய குமார் சிந்தனை வேறு தத்துவம் வேறு என்கிறார் . கலைஞனுக்கு சிந்தனையும் இருக்கக் கூடாதா ?

நாஞ்சில்நாடன்: எனக்கு அப்படி இரண்டு இருப்பதாக படவில்லை . தன் சொந்த சிந்தனையாக இருந்தாலும் சரி ஏற்றுக் கொண்ட தரப்பாக இருந்தாலும் சரி கலைஞன் எதற்காகவும் வாதாடக்கூடாது .

தேவதேவன்: எல்லா தத்துவங்களும் சாராம்சமான மெய்த் தரிசனங்கள் குறிப்பிட்ட காலத்துடன் உறவு கொண்டு வெளியாகும்போது உருவாகக் கூடியவை மட்டும் தான் . உண்மைக்கு காலம் கிடையாது ,இடம் கிடையாது . ஆனால் தத்துவத்துக்கு இதெல்லாம் உண்டு .ஆகவேதான் தத்துவம் காலாவதியாகிறது .உண்மை ஒரு போதுமே காலாவதியாவது இல்லை . தத்துவ வாதி தர்க்கம் மூலம் கண்டு சொல்ல முற்படும் அதே உண்மையைத்தான் கலைஞனும் கலைமூலம் சொல்ல முற்படுகிறான் . அவனால் தத்துவவாதியை விட நுட்பமாக மேலும் செல்ல முடியும் .இலக்கியமும் கலையும் அவற்றின் உன்னத நிலையில் காலத்தை கடந்து செல்ல முடியும் . அதனால்தான் நேற்றைய தத்துவங்களெல்லாம் இன்று பழையவையாக ஆகிவிட்டபோது இலக்கியப்படைப்புகள் மட்டும் நூதனமாகவே நின்று கொண்டிருக்கின்றன… தளையசிங்கம் உண்மையின் தரிசனத்தை கண்டடைந்தவர் , அந்தரங்கமாக அதை உணர்ந்தவர். அதை அவர் தத்துவ ரீதியாக முன்வைக்கும்போது அன்றைய சிந்தனைகளுடனும் அரசியல் சமூக சூழலுடனும் தொடர்பு படுத்தித்தான் முன்வைக்க முடிகிறது . ஆகவே அது கால இடத்துக்கு கட்டுப்பட்டதாக உள்ளது .அவர் அதை கலைமூலம் முன்வைத்திருந்தால் அதன் நித்திய மதிப்பு அதிகமாக் இருந்திருக்கும் . அப்படி முன்வைக்க முடியாமல் போனதே தளையசிங்கத்தின் தோல்வி.

ஜெயமோகன்: கலைப்படைப்பு அப்படி நேரடியாக உண்மையை வெளிப்படுத்தும் ஒரு வடிவமாக இருக்கமுடியாது. உண்மையின் தரிசனம் ஒரு மின்னல் போல அபூர்வமான ஒரு கணமாகத்தான் இருக்கும் .அதை அப்படியே வெளிப்படுத்தும் பொறுப்பு மட்டுமே கலைக்கு இல்லை . கலை அதை வாழ்க்கையின் எல்லாதருணக்களுடனும் இணைக்க வேண்டியுள்ளது .அப்போதுதான் அதற்கு புறவயமான மதிப்பு ஏற்படும் . கலைப்படைப்பின் வடிவம் எப்படி புறவயமாக பயிந்று அடையப்படுகிறதோ அப்படித்தான் கலைப்படைப்பின் தருக்க பூர்வமான கட்டுக் கோப்பும் . ப்டைப்புக்கு தொகுப்புத்தன்மையை அளிப்பது அதுதான் .அதற்கு தத்துவ அடிப்படை கண்டிப்பாக தேவை .

எம் . யுவன்: நாம் இங்கே வார்த்தைகளைப்போட்டு குழப்பிக் கொள்கிறோம் .தத்துவ நம்பிக்கை வேறு .தத்துவதேடல் வெறு. கலைப்படைப்புக்கு தத்துவ தேடல் கண்டிப்பாக இன்றியமையாதது. எப்போது வாழ்க்கையை இலக்கியம் மொழிவழியாக சந்தித்து தொகுத்துக் கொள்ள முயல்கிறதோ அப்போதே வேறு வழியேஇல்லாமல் இலக்கியத்தில் தத்துவம் வந்தாகிவிட்டது .அதை தவிர்க்கவே முடியாது .தத்துவம் தேவையில்லை , தங்களுக்கு ஆர்வமில்லை என்று சொல்பவர்களிடம் கூட தத்துவம் இருக்கும் . அது அவர்கள் மரபாக பெற்று இயல்பாக கொண்டிருக்கும் தத்துவ நம்பிக்கையாக இருக்கும் . அதை அவர்கள் வாழ்க்கையைப்பற்றிய இயல்பான உண்மைகளாகவும் , அனுபவஞானமாகவும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவற்றை அவர்கள் ஐயப்பட ஆரம்பித்தார்கள் என்றால் தத்துவத்தேடல் ஆரம்பித்துவிடும் . அது இலக்கிய ப்படைப்புக்கு ஆதாரமாக உள்ளதேடல் …

வேதட்சகாயகுமார்: ஏறத்தாழ நான் சொன்னதும் இதைத்தான் . தத்துவ நம்பிக்கையில் சிந்தனைக்கு இடமில்லை . தத்துவ தேடல் சிந்தனையின் தீராத ஓட்டம். .தளையசிங்கம் தத்துவ நம்பிக்கை உடையவரல்ல . தத்துவத்தை தாண்டிச்செல்லும் தேடல் உடையவர் அவர்.

வெங்கட் சாமிநாதன்: எனக்கு அதில் சந்தேகம் தான் இருக்கிறது. தளையசிங்கம் முன்னகர்ந்துகொண்டே இருந்தார் என்பதிலோ அவருடைய தேடல் முக்கியமான ஒன்று என்பதிலோ எனக்கு சந்தேகமேதுமில்லை. ஆனால் அவருக்கு மார்க்ஸியத்திலிருந்து கிடைத்த பொன்னுலகம் என்ற கருத்து மீது ஒரு மிதமிஞ்சிய ஈர்ப்ப்பு ,அதை நான் Obsession என்று சொல்லதயங்கமாட்டேன் ,இருந்தது . அந்த நம்பிக்கை அவரை தொடர்ந்து கடைசிவரை இயக்கியது .எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் பொன்னுலகைப்பற்றிய செய்தியை சொன்ன தீர்க்கதரிசி என்ற இடத்தை தளையசிங்கம் மிகவும் விரும்பினார் , அதற்காக அதை அவர் மீண்டும் மீண்டும் சொன்னார் என்றுதான்.தளையசிங்கத்தின் எல்லா கருத்துக்களையும் இந்த புதுயுகம் என்ற கருத்து திரித்துவிட்டது. உதாரணமாக ஏற்கனவெ சொன்னோமே மெளனி புதுமைப்பித்தனைவிட ஜெயகாந்தனை அவர் முக்கியமாக காண்கிறார் என்று அதற்கு காரணமும் இதுதான் .கலைக்கும் பிரச்சாரத்துக்கும் இடையேயான வித்தியாசத்தைக்கூட காணமுடியாதவராக அது அவரை மாற்றி விட்டது .இது துரதிர்ஷ்டவசமானது என்றே சொல்வேன்.

தேவதேவன்: அப்படிப்பார்த்தால் எல்லா தத்துவ ஆசிரியர்களும் ஏதேனும் ஒரு தரிசனத்தையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.

மோகனரங்கன்: வேதசகாயகுமார் பேசும்போது எதிர்காலத்தில் நாவல் வளரும் சிறுகதை தளரும் என்று கைலாசபதி சொல்லியிருப்பதைப்பற்றி சொன்னார் . அது எந்த அளவுக்கு முக்கியமான் கருத்து ?

வேதசகாயமுமார் : சிறுகதையை பார்க்கிலும் நாவல் தத்துவ சித்தாந்த விவாதத்துக்கு ஏற்ற வடிவம் . ஆகவே அது வளரும் என கைலாசபதி சொல்லியிருக்கலாம்.ஆனால் இரு வடிவங்களும் மாற்றம் பெற்று வள்ர்ந்தபடித்தான் இருக்கின்றன. தளையசிங்கத்தை பொறுத்தவரை இன்றுள்ள எல்லா கலைவடிவங்களும் தளரும். புத்தம் புதிய வடிவங்கள் உருவாகிவரும் . அதைத்தான் அவர் மெய்யுளில் எழுதிக்காட்ட முயன்றார் . அவரைப்பொறுத்தவரை கற்பனை மூலம் மாற்று யதார்த்த சித்திரங்களைமுன்வைக்கும் வடிவங்கள் இல்லாமலாகி மெய்தரிசனத்தின் அனுபூதி நிலையில் நின்றபடி உண்மையை தருக்கமாகவும் கவிதையாகவும் சொல்லும் வடிவமே இனி வரக்கூடியது.

சூத்ரதாரி :மெய்யுளை அந்த உதாரணமாக கூற முடியுமா ?

வேதசகாயகுமார் :மெய்யுள் நம் மனதை கவரும் படி இல்லை . அதற்கு தொடர்ச்சியும் உருவாகவில்லை. ஒரு புது சாத்தியததை ஊகிப்பது வேறு எழுதிக்காட்டுவது வேறு…

ஜெயமோகன் : ஆனால் எனக்கு மிக முக்கியமாக ஒன்று படுகிறது .இப்போது தமிழில் நகுலன் ,பிரேம் போன்றவர்கள் ஒரு வடிவத்தை எழுதிக்காட்டியுள்ளார்கள் .[ நினைவுப்பாதை ,வாக்குமூலம் -நகுலன் ;எரிக்கப்பட்ட பிரதிகளும் புதைக்கப்பட்ட மனிதர்களும் , சொல் என்றொரு சொல்- பிரேம் ] அதை பிரேம் Meta epic என்கிறார் . அதன் வடிவம் ஆச்சரியமூட்டுமளவுக்கு மெய்யுளின் இலக்கணங்களை ஒத்திருக்கிறது .அதை நாம் புறக்கணிக்க முடியாது . ஒன்று அது மெய்யுளைப்போலவே விவாத வடிவில் உள்ளது .அதாவது அவை பிளவுண்ட அல்லது சிதறுண்ட ஆளுமையின் பிரதிகள் . இரண்டாவது அவற்றில் அறிவார்ந்த தருக்கம் கவிதை வரலாறு போன்றவற்றுக்கு இடையேயான எல்லைச் சுவர் தகர்ந்துள்ளது . இதைப்பற்றி பிறகு விரிவாக பேசலாம் . என் கட்டுரையில் கூட எழுதியுள்ளேன். ஆகவே மெய்யுளின் வடிவம் தொடர்ச்சியற்றுப்போன ஒன்றல்ல என்று சொல்லலாம்.

அன்பு வசந்தகுமார்: தளையசிங்கம் கூறும் பிரபஞ்ச யதார்த்தம் ஒரு தத்துவத்தரப்பாக படவில்லை .மிக அகவயமான ஒரு ஆன்மீக கருத்தாகவெ படுகிறது.

வேதசகாயமுமார்: பிரபஞ்சம் தழுவிய ஒரு யதார்த்தம் என்ற அர்த்தத்தில் அப்படி சொல்கிறார் தளையசிங்கம்.மார்க்சியம் பேசும் யதார்த்தம் அப்படிப்பட்டது அல்ல. அது வற்கம் தழுவியது மட்டுமே.

அன்பு வசந்த குமார்: எந்த யதார்த்தமாக இருந்தாலும் மனித அறிதலுக்குள் சிக்கும்போது அது மனிதயதார்த்தம்தான்.

சூத்ரதாரி: மு .தளையசிங்கம் கலை என்பது பரவச விடுதலையை அளிப்பது என்கிறார் அப்படியானால் அவர் கலையின் அனுபவத்தையே முன்வைக்கிறார் என்று சொல்லலாமா ?

அருண்மொழிநங்கை : தளையசிங்கத்தின் மெய்யுளில் அவர் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பே மேலான கலை தரும் பரவசத்துக்கு சமமான பரவசத்தை அளிப்பதாக சொல்கிறார் . அப்படியானால் அவர் சொல்வது கலை தன் வெளிப்பாட் டு முறை மூலம் நமக்கு அளிக்கும் பரவசநிலையை அல்ல . அக்கலை வடிவத்தின் மூலம் நம் மனத்தில் உருவாக்கும் மெய்மையைத்தான். அதேமெய்மையை அறிவியலும் அளிக்கலாம் ,செய்தியும் அளிக்கலாம் . தளையசிங்கத்தின் கருத்தை நாம் உருவம் உள்ளடக்கம் என்ற மரபான பிரிவினைக்குள் அடக்க முயலக்கூடாது .

வேதசகாயகுமார் : இந்த எண்ணத்தை தமிழில் திட்டமிட்டு சுந்தர ராமசாமி உருவாக்கினார் . தளையசிங்கம் ஜெயகாந்தனைப்பற்றி சொல்லிய கருத்துக்கு விரிவான பின்னணி உண்டு என்று கண்டோம்.ஆனால் ஜெயகாந்தன் தன் கதைகளில் சொன்ன கருத்துக்களை ஒட்டித்தான் தளையசிங்கம் இந்த முடிவுக்கு வந்தார் என்றும் , ஆகவே அவர் மார்க்ஸியர்களைப்போல உள்ளடக்கவாதி என்றும் தன் கட்டுரையில் அவர் காட்டிவிட்டார்.தமிழ் நாட்டில் அவரது கட்டுரை வழியாகவே தளைய சிங்கம் அறிமுகம் பெற்றார் என்னும்போது அக்கருத்து ஆழமாக பதிந்துவிட்டது .

மோகனரங்கன்: அந்தக்காலத்தில் உருவமா உள்ளடக்கமா என்ற வாதம் அப்படி ஆழமாக வேரூன்றியிருந்தது .

வேதசகாய குமார்: ஆனால் தளையசிங்கம் தன் ஏழாண்டு இலக்கியவளர்ச்சியில் பெரும்பாலான கருத்துக்களை வடிவ அடிப்படையிலும் மொழி அடிப்படையிலும் தானே முன்வத்துள்ளார் .அதை எப்படி மறுக்க முடியும் ?

அருண்மொழி நங்கை :தளையசிங்கத்தின் கருத்தில் சொன்னால் ஒரு படைப்பு மெய்மையை நம் மனத்தில் எழுப்புவதற்கு வடிவமும் உள்ளடக்கமும் ஒரே போல பங்காற்றுகின்றன என்று கொள்ளமுடியும் .

வேதசகாயகுமார்: வடிவ ரீதியான விமரிசனமே படைப்பின் சாராம்சத்தைமேலும் நெருங்க உதவுவது என்று முதளையசிங்கம் கருதுவதாகக் கூட சொல்லலாம். உதாரணமாக மெளனியை பிரமிள் அக்கதைகளின் உள்ளடக்கமான ஆன்மீக [Mystic] மனநிலையை ஆராய்ச்சி செய்து அவற்றுக்கு புதியவாசிப்பை அளிப்பதன் மூலம் விளக்கினார் . க நா சு அவற்றின் மொழி மற்றும் கூறுமுறையை மட்டுமே கருத்தில் கொண்டார் .தளையசிங்கம் க நா சுவே மெளனியை சிறப்பாக புரிந்து கொண்டு விமரிசிக்கிறார் என்கிறார் .இந்தக்கருத்து மிக முக்கியமான ஒன்று…

சூத்ரதாரி : ஆமாம் . இங்கே மெளனியை மிகச்சிறப்பாக விமரிசித்தவர் பிரமிள் தான் என்ற கருத்து நிலவுகிறது …

மோகனரங்கன்:ஜெய காந்தனின் விழுதுகள் போன்ற ஒரு கதை மெளனி எழுதிய எல்லா கதைகளைவிடவும் மேலானது என்று தளையசிங்கம் சொல்லியிருக்கிறாரே

வேதசகாயகுமார்: தளையசிங்கத்தை பொறுத்தவரை அந்தக்கருத்து உண்மையானதுதான். அவருக்கு இலக்கியப்படைப்பில் சாராம்சமாக திரண்டுவரும் மெய்யின் தரிசனம் முக்கியமானது. மெளனியிலும் புதுமைப்பித்தனிலும் அந்தமெய்யனுபவம் குறித்த ஒரு தத்தளிப்புதான் இருக்கிறது .

வெங்கட் சாமிநாதன்: புதுமைப்பித்தைன் பல கதைகளில் ஆழ்மானமெய்யனுபவம் உள்ளது . ஜெயகாந்தனில் இருப்பது அத்தகைய அனுபவமல்ல , அவ்வனுபவம் பற்றிய ஒரு கருத்து [idea] மட்டும்தான் . அதை தளையசிங்கம் அனுபவத்தின் தீவிரத்தைவிட மேலானதாக பார்ப்பது ஏற்கனவே நான் சொன்னதுபோல அவரது மிதமிஞ்சிய புதுயுக ஈர்ப்பு காரணமாகத்தான் .

நாஞ்சில்நாடன்: எனது கருத்தும் அதுதான் .புதுமைப்பித்தன் கதைகளை ஜெயகாந்தன் கதைகளுடன் ஒப்பிடுவது அபத்தம் .ஜெயகாந்தன் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட இடத்துக்கே போய் சேர்கிறார் .

எம் யுவன்: வெ சா சொன்ன கருத்தையே நானும் சொல்ல விரும்புகிறேன். உண்மையான மெய்யனுபவம் ஜெயகாந்தனின் இக்கதை யில் உள்ளது போல இத்தனை திட்டவட்டமானதாக முடிவுற்றதாக இருக்காது. அதற்கு புதிய புதிய தளங்கள் உருவானபடியே இருக்கும் .அது நம் மனத்தில் வளர்ந்தபடியே இருக்கும். இன்னொன்றும் சொல்லவேண்டும் , விவேகம் அல்லது wisdom ஒரு போதும் மெய்யனுபவமல்ல. அதை நாம் பிரித்துபார்த்தாகவேண்டும். விவேகம் அனுபவமுதிர்ச்சியில் இருந்தோ, அல்லது மரபில் இருந்தோ வரமுடியும்.நாட்டுப்புற கலைகள் கதைகளில் அது உண்டு. மெய்யனுபவத்தில் ஒரு புதுமை, வியப்பினையும் பிரமிப்பினையும் ஊட்டும் ஒரு அம்சம், எப்போதுமே இருந்தபடியே இருக்கிறது.. ஜெயகாந்தனின் கதையில் மரபான விவேகம் மட்டும்தான் இருக்கிறது . அது நல்ல கதைதான் , மகத்தான கதைஅல்ல .

வேதசகாய குமார்:தளையசிங்கத்தின் பார்வையில் கலைப்படைப்புக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவும் முக்கியமானது.மெளனிகதைகளை அவர் அப்படிகுறைத்துமதிப்பிட்டதற்கு அதுதான் காரணம் என்று சொல்லலாம்.

அன்பு வசந்தகுமார்: அவர் என்ன சொல்கிறார் ? கதைகள் சமூக மனத்தை நோகி பேச முயலவேண்டும் என்றா ? மார்க்ஸியர் கூட இப்போது அப்படி சொல்லமாட்டார்கள்.

வேதசகாயகுமார்: அவரை பொறுத்தவரை கலையின் ஆக்கம் மெய்யை தேடுதலும் கண்டடைதலும் வெளிப்படுத்தலும்தான். அக்கலைப்படைப்பினை சமூகம் ஏற்பதில் மூன்று நிலைகளை அவர் சொல்கிறார் . ஒன்று அது சமூகத்தை செயல்படத்தூண்ட வேண்டும் . இரண்டு அது சமூகத்தில் ஏற்கனவே இருந்துவரும் முற்போக்கான செயல்பாடுகளுடன் ஒத்துழைக்கவேண்டும். மூன்று அது சமூகத்தின் எதிர்மறையான போக்குகளை எதிர்க்கவேண்டும் .அதாவது தளைய சிங்கத்தை பொறுத்தவரை ஒரு இலக்கியபடைப்பு சமுக்கத்தின் வளார்ச்சிக்க்க்கு எந்தபங்காற்றுகிறது என்பதே அதை அளக்க அளவுகோல் . அப்படி பங்காற்றாத படைப்பு எத்தனை அழகுகள் கொண்டிருந்தாலும் அவரால் ஏற்க முடியாது . சமூகப் பயனற்ற கலை என்பதை அவரால் ஒப்பவே முடியவில்லை ….

எம் யுவன் : கலையின் பயன் மதிப்பு அல்லது சமூக மதிப்பு என்ன என்று உடனடியாக எவரும் மதிப்பீடு செய்துவிட முடியாது. கலை அறிகிறது வெளிப்படுத்துகிறது.அதன் பயன் அதுதான் .அதன் பணியே அதன் பயன் என்று சொல்லலாம்.அதைபயன் படுத்துவதும் சரி தவறாக பயன்படுத்துவதும் சரி சமூகத்தின் விருப்பம் மனநிலை சார்ந்த விஷயங்கள் மட்டுமே.

மோகனரங்கன்: அதைவிட கலையின் சமூக பயனை யார் தீர்மானிப்பது , எந்த அளவுகோல் என்பதுதான் பிரச்சினை. முற்போக்கு ,நல்ல போக்கு என்பதையேல்லாம் தீர்மானிக்க அளவுகோல் என்ன ? பழ்ழைய மார்க்ஸியர்கள் சோவியத் ரஷ்யாவை எதிர்த்து எழுதிய எல்லா எழுத்தாளார்களையுமே முற்போக்குக்கு எதிரானவர்கள் என்றுதான் சொன்னார்கள் .கொல்லவும் செய்தார்கள். இப்படி ஒரு அளவுகோலை வைத்தால் இலக்கிய படைப்புக்குமேலே வேறு ஒரு அதிகாரத்தை வைப்பதுபோலத்தான் ஆகும்.அது இலக்கியத்தையே அழித்த்விடும் .தத்துவம் கூட இலக்கியத்த்க்கு உதவிதான் செய்யமுடியுமே யொழிய வழி நடத்தமுடியாது…

வேதசகாய குமார்: தத்துவம் அரசியல் போன்றவற்றுக்கும் இலக்கியத்துக்கும் இடையே இப்படி ஒரு பிரச்சினை எபோதுமே உள்ளது . எல்லையை எப்படி யார் வகுப்பது என்ற பிரச்சினை ,..

மதிய உண்வுக்கான நேரம் நெருங்கியபடியால் காலை அமர்வு முடிக்கப்பட்டது .மாலை ஆறுமணிக்கு அமர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டது .

[மாலை அமர்வு பற்றிய குறிப்புகள் தொடரும் ]

==

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue

ஜெயமோகன்


ஒன்று

மு .தளையசிங்கத்தின் படைப்புலகம் குறித்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வது குறித்து அறிவித்து ஒரு வருடமாகபோகிறது . சமீபத்தில்தான் ஊட்டியில் ,மே மாதம் நான்கு முதல் ஆறு வரை விவாதக்கூட்டம் ஒன்றை சொல் புதிது மும்மாத இதழின் பொறுப்பில் , குரு நித்யா ஆய்வரங்கம் சார்பில் , ஏற்பாடு செய்தோம் .கூட்டம் சொல் புதிதின் கூட்டங்கள் வழக்கமாக நடப்பதுபோல மிக நட்பார்ந்த விதத்தில் , தீவிரமான விவாதங்களுடன் நடந்தது .

தடைகள், பிரச்சினைகள்

உண்மையில் சென்ற நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டது இது . ஊட்டியின் தட்பவெப்பநிலை மிக மோசமாக இருந்ததால் முதலில் ஒத்திப்போடப்பட்டது . பின்பு ஒரு மாதக்காலம் ஊட்டி – கோவை பாதை பழுதடைந்ததனால் தடை ஏற்பட்டது . பின்பு ‘சொல் புதிதை ‘ புதிய சூழலில் அச்சிடும் நிலை ஏற்பட்டது. அதில் வெளியிடத் திட்டமிட்டிருந்த தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் குறித்த ஆய்வுகளுக்கான பயணங்கள் ,அதன் உபரி பக்கங்கள் ஆகியவை காரணமாக நிதிநிலை ஒரு பிரச்சினையாக ஆயிற்று . ஆய்வரங்கை நடத்த வேண்டுமென மிக ஆர்வமாக இருந்த தளையசிங்கத்தின் இளம் வாசகரான ஆர் .பிரபு [மயிலாடுதுறை] தன் சேமிப்பில் இருந்து ஆகும் செலவில் பாதியை அளித்தார் . ஊட்டி நாராயண குருகுலத்திலிருந்து டாக்டர் சுவாமி தம்பான் கூப்பிட்டு கூட்டம் நடத்தலாமே என்ற்று ஊக்குவித்தார். ஊட்டி நண்பர் நிர்மால்யா [கேரள தலித் பே ‘ராளி அய்யன்காளியின் வரலாற்றை எழுதியவர் , மொழிபெயர்ப்பாளர் ] ஆர்வம் காட்டியதுடன் செலவில் ஒரு பகுதியையும் ஏற்பதாகச் சொன்னார் . மீதி செலவை அருண்மொழி நங்கை அவளது சேமிப்பில் இருந்து அளித்தாள் .

கூட்டம் உறுதிசெய்யப்பட்ட பின்பு மேலும் பிரச்சினைகள் . நித்யா ஆய்வரங்குகளை முன்பு ஹொகேனெகல்லில் ஏற்பாடு செய்தவரான நண்பர் தங்கமணி [மொரப்பூர் ] அவர்களின் திருமணம் மே ஆறாம்தேதி . இன்னொரு நண்பரான முகையூர் அசதா[எழுத்தாளர் ]வின் திருமணமும் ஆறாம்தேதி . ஆய்வரங்கின் முக்கிய உறுப்பினர்களான நண்பர் பாவண்ணன் , பிரேம் ஆகியோர் வரமுடியாத நிலை . முக்கியமாக , ஆய்வரங்கின் புரவலரான பிரபு பொறியியல் தேர்வுகள் நீட்டிக்கப்பட்டமையால் வரமுடியாமல் ஆயிற்று . தேதியை மேலும் நீட்டிக்க முடியாத நிலையில் கூட்டத்தை நடத்துவது என முடிவெடுத்தாலும் சற்று சோர்வு இருந்தது .

முக்கியமான தடை தளைய சிங்கத்தின் நூல்கள் கிடைக்கவில்லை என்பதே . ஒரே பிரதியில் இருந்து ஒளிநகல் செய்து அனைவருக்கும் அளிக்க நேர்ந்தது . அதற்கான செலவே அரங்கின் முக்கியச் செலவாக இருந்தது . வேதசகாயகுமார் , ஜெயமோகன் , சரவணன் ஆகியோருடைய கட்டுரைகளை ஒளிநகல் செய்து அனைவருக்கும் முன்கூட்டியே அனுப்பினோம். தளைய சிங்கத்தின் கருத்துக்கள் வாழ்க்கைக்குறிப்பு ஆகியவற்றை 40 கைப்பக்க அளவில் மலையாளத்தில் மொழியாக்கம் செய்து குருகுலப் பிரம்மசாரிகளுக்கும் சுவாமி வினய சைதன்யாவிற்கும் அனுப்பினேன். கூட்டங்களில் கட்டுரையை படிப்பது சோர்வுதருகிறது. ஆகவே அவற்றை சுருக்கமாக பேச வைத்தோம் . கூட்டத்துக்கு இடம் குருகுலத்தால் இலவசமாக அளிக்கப்பட்டது . சமையல் பொருட்கள் வாங்கி அளித்ததும் ,கம்பிளிபோர்வைகள் வாடகைக்கு எடுத்ததும் மட்டுமே எங்கள் செலவாக இருந்தது . நிர்மால்யா கடுமையாக உழைத்து ஏற்பாடுகள் செய்தார் . குருகுலத்தின் பிரம்மசாரிகள் சமையல் செய்து உதவினார்கள் .

ஏன் தளையசிங்கம் ?

நித்யா கருத்தரங்கம் தனிப்பட்ட எழுத்தாளர்களைப்பற்றி நடத்தும் மூன்றாவது அரங்கு இது. பிரபஞ்சன் , நாஞ்சில் நாடன் ஆகியோரைப்பற்றி ஆய்வரங்குகள் நடத்தப்பட்டுள்ளன . தளையசிங்கத்தைப் பற்றி பேச வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட தெளிவான காரணங்கள் உண்டு . சொல் புதிதில் ஆரம்பம் முதலே தத்துவ அறிவியல் கட்டுரைகள் வெளியிட்டு வருகிறோம் .தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் இவ்விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டதேயில்லை . கலை இலக்கியம் ஆகியவற்றுக்கும் அறிவியல் தத்துவம் ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி மீண்டும் மீண்டும் நித்யா பேசியிருக்கிறார் . நவீன அறிவியல் இன்று தத்துவப் பிரச்சினைகளை நேரடியாகக் கையாள்வதாக ஆகியுள்ள நிலையில் இத்தொடர்பை மேலும் அழுத்திக் காட்டவேண்டியுள்ளது . அறிவியல் தத்துவம் இலக்கியம் மெய்யியல் ஆகிய தளங்களை தொட்டுப்பேசும் ஒரே தமிழ் முன்னோடிச் சிந்தனையாளர் தளைய சிங்கம் மட்டுமே . பிறரைப்போல அவர் மேற்கத்திய சிந்தனைகளை தமிழுக்கு இறக்குமதி செய்ய முனையவில்லை . அச்சிந்தனையாளர்கள் அங்கு எதிர்கொண்ட அதே பிரச்சினைகளை தமிழ் சூழலில் நின்று எதிர்கொள்ள முயல்கிறார் . அதில் அவர் அடைந்த வெற்றியும் தோல்வியும் நமக்கு முக்கியமானவை .

தமிழில் தளையசிங்கம் உரிய முறையில் கவனிக்கப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை .இதற்குக் காரணம் தளைய சிங்கம் அடிப்படைகளை பற்றி பேசியவர் என்பதே. தமிழில் இலக்கிய விமரிசனம் பலவீனமாக உள்ளது , விமரிசன மொழி இல்லை போன்ற குறைகள் பொதுவாகச் சுட்டப்படுபவை . இலக்கியப்படைப்புகளைப்பற்றிய பேச்சுகளில் பொத்தாம் பொதுவான கூற்றுக்கள் வெறும் அரசியல் நிலைபாடுகள் , அக்கப்போர்கள் மட்டுமே இங்கு காணக் கிடைக்கின்றன .இதற்குக் காரணம் இங்கு அடிப்படைகளைப்பற்றிய விவாதம் நடப்பதில்லை, பெரும்பாலோர் அடிப்படைகளை பற்றி ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள முயல்வதேயில்லை என்பதே. பலகாலமாக இங்கு தரமான இலக்கியம் குறித்து பேசப்படுகிறது . ஆனால் தரம் என்றால் என்ன என்ற வினாவை எவரும் எழுப்பிக் கொண்டதில்லை. இலக்கிய அனுபவம் என்பது என்ன , அழகு என்பது எந்ன என்பது போன்ற கேள்விகள் கூட எழுந்தது இல்லை. இவற்றை புறவயமாக சொல்ல முயலும்போது தத்துவத்தின் எல்லைக்குள் இலக்கியம் நகர்ந்துவிடுகிறது .

தத்துவமே இலக்கிய விமரிசனத்தை தருக்கபூர்வமாக ஆக்குகிறது . இலக்கியவிமரிசனத்தின் மொழி தத்துவத்தின் தனிமொழியின் நகலேயாகும்.சமகால சிந்தனைகளில் இருந்தே இலக்கியவிமரிசனம் தன் விமரிசன /ஆய்வு உபகரணங்களைப் பெற முடியும். தமிழில் அடிப்படைகள் பற்றிய தேடல் இல்லாமையால் தத்துவ நோக்கும் உருவாகவில்லை , விமரிசன மொழியும் உருவாகவில்லை . இப்போது நாம் சுயமான ஒரு தேடலை அடிப்படைகளை முன்வைத்து செய்ய முயன்றால் நம் முன் உள்ள ஒரே மூன்னுதாரணம் தளையசிங்கமே . அடிப்படைகளை வகுத்துக் கொள்ள அவர் பல கோணங்களில் முயல்கிறார்.அதை நாம் ஏற்கலாம் ,மறுக்கலாம் ,மேலும் முன்னேறலாம் .ஆனால் அவர் மிக முக்கியமான ஒரு துவக்கப்புள்ளி.

சமீபகாலம் வரை நவீனத்துவம் உருவாக்கிய இலக்கிய அணுகுமுறையே இங்கு வலிமையாக இருந்தது . இலக்கியவாதியின் இலக்கு அழகியல் முழுமை கொண்ட படைப்பை உருவாக்குவது மட்டுமே ,இலக்கியப்படைப்புக்கு சமூகப் பங்களிப்பு என்று ஏதுமில்லை என்பது போன்ற கருத்துக்கள் இங்கு வலுவாக இருந்தன. இன்று சமூகம் கருத்துக்களாலேயே கட்டப்பட்டுள்ளது என்றும் , அக்கருத்துக்கள் ஆழ்மன அளவில் படிமங்களாக தொகுக்கப்பட்டுள்ளன என்றும் கருதப்படுகிறது .ஆழ்மனதுடன் உரையாடும் இலக்கியம் சமூகக் கருத்தியலிலும் ,அதன் மூலம் சமூக அமைப்பிலும் ஆழமான தாக்கத்தை நிகழ்த்துகிறது எனப்படுகிறது . இன்றைய எழுத்து இவ்வகையில் சமூகத்தின் ஆழ்மனக்கட்டமைப்பு நோக்கி பேச முற்படுகிறது . அழகுப்பொருளாக இலக்கியம் இன்று கருதப்படுவது இல்லை .இந்தக் கோணத்தில் இலக்கியவாதியின் சமூகப் பொறுப்பு என்ன , அதை அவன் எப்படி வெளிப்படுத்த முடியும் என்பதெல்லாம் முக்கியமான பிரச்சினையாக ஆகிறது .

ஆகவே தன் அழகியலையும் அறத்தையும் இலக்கியவாதி எந்த அடிப்படையில் அமைத்துக் கொள்வது என்ற வினா இன்று மேலும் முக்கியப்படுகிறது. அவன் வெறும் அழகு உற்பத்தியாளனல்ல. அவன் பொறுப்பற்ற அராஜகவாதியாக இருக்கமுடியாது .தன் செயல்கள் மீதும் விளைவுகள் மீதும் அவனுக்குத் தெளிவான புரிதல் இருக்கவேண்டும் . அதாவது இலக்கியவாதியின் மெய்யியல் என்ன என்பது இன்று ஒரு முக்கியமான கேள்வி . அக்கேள்வியைத் துவங்க மிகப் பொருத்தமான முன்னோடி இலக்கியவாதி தளையசிங்கம் தான் .

பொதுவாக ஈழ எழுத்தாளர்களும் விமரிசகர்களும் தமிழ்நாட்டு இலக்கியத்தை குறித்து காட்டிய ஆர்வத்தையும் முன்வைத்த விமரிசன எதிர்கொள்ளலையும் தமிழ் எழுத்தாளர்களும் விமரிசகர்களும் முன்வைத்தது இல்லை . இது குறித்து நானும் எம் வேதசகாய குமாரும் பலமுறை விவாதித்தது உண்டு. அதன் விளைவே வேதசகாய குமார் ‘காலம் ‘ இதழில் எழுதிய ஈழச் சிறுகதைகள் குறித்த கட்டுரை . ஈழச்சிறுகதைகளை அங்குள்ள பார்வைக்கு நேர் மாறான அழகியல் சார்ந்த அணுகுமுறையுடன் மதிப்பிட்டு ஒரு விமரிசனச் சட்டகத்தினை உருவாக்கும் அக்கட்டுரை முக்கியமான முன்னோடி முயற்சி .அதில் ஈழ இலக்கியத்தின் முதன்மையான முன்னோடியாக தளையசிங்கத்தையே அவர் முன்வைக்கிறார் .அவ்வகையிலும் அவரைப்பற்றி பேசவேண்டிய அவசியமுள்ளது என்று பட்டது . ஆகவேதான் இவ்விவாதத்தை திட்டமிட்டோம் .

இரண்டு

முதல்நாள் அமர்வு . 4/5/2002 காலை

ஊட்டியில் இது உச்ச சீசன் .பேருந்துகள் நெரிசலால் தாமதம் .ஆகவே பலர் வந்துசேர்வதற்கு பிந்திவிட்டது . நானும் அருண்மொழியும் வேதசகாயகுமாரும் சென்ற பேருந்து சரியான ஓட்டை .கிளம்பும்போதே நல்ல மழை . உள்ளே சற்று குறைவாக மழை . முன் கண்ணாடி துடைப்பான் வேலை செய்யவில்லை . ஆகவே ஊட்டியில் இரண்டுமணி நேரம் தாமதமாக காலை எட்டுமணிக்கு சென்றிறங்கினோம் . மழைமூட்டமாகவும் குளிராகவும் இருந்தது. எங்கும் சுற்றுலாக்கூட்டம் . குருகுலம் அமைதியாக தனித்து இருந்தது . ஏற்கனவே வெங்கட் சாமிநாதன் , தேவகாந்தன்,நாஞ்சில் நாடன் , கீதாஞ்சலி பிரியதரிசினி , சூத்ரதாரி, க.மோகன ரங்கன் , அன்பு வசந்தகுமார் , [தாமரை ]ஆறுமுகம் , ஆர் பி ராஜநாயகம் ,ஆகியோர் வந்து சமையலறையில் டா குடித்துக் கொண்டிருந்தனர் . சரவணன் , ப சிவகுமார் ஆகியோர் சற்றுப் பிந்தி வந்தனர் . மதிய உணவுக்க்கு பின்பு முதல் அமர்வை வைத்துக் கொள்ளலாம் , அதுவரை வெறுமே பேசி அறிமுகம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்தோம் . சிலர் ஒருவருக்கொருவர் முதல்முறையாகச் சந்திப்பவர்கள் .உற்சாகமான உரையாடல்களாக இருந்தது . இருண்ட வானம் மேலும் இருட்டி மழை கொட்டியது .நல்ல குளிரில் நனைந்து நடுங்கியபடி முத்துராமன் வந்து சேர்ந்தார்.தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் கடும் கோடைகாலம் .ஆகவே பலருக்கும் குளிர் பிடித்திருந்து .

முதலில் தளையசிங்கத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதன் தேவை குறித்து நான் விளக்கினேன் . ஈழ எழுத்துக்களைப்பற்றி இங்கு பேசும்போது உள்ள சிக்கல்களைப்பற்றியும் சொன்னேன். ஈழ இலக்கியச்சூழலில் தமிழகம் குறித்த அச்சமும் அவநம்பிக்கையும் உண்டு. தமிழகத்தில் தங்கள் எழுத்துக்களுக்கு புறக்கணிப்பு இருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.தமிழக எழுத்துக்களே கூட தமிழகத்தில் புறக்கணிப்பைத்தான் பெறுகின்றன என்பதை அவர்கள் கருத்தில் கொள்வது இல்லை . அதேபோல இங்கிருந்து கடுமையான விமரிசனங்கள் வந்தால் அதை ‘பெருநில மனோபாவம் ‘ என சொல்ல ஈழ எழுத்தாளர்கள் தயங்குவது இல்லை. இங்கு எல்லா தமிழ் எழுத்தாளர்களைப்பற்றியும் கடுமையான விமரிசனக்களே உள்ளன என்ற உண்மையையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை . இந்நிலையில் இந்திய இலக்கியவாதிகளுக்கு சிலசிக்கல்கள் ஏற்படுகின்றன . அவர்களில் புகழ்பெற்றவர்கள் சிலர் ஈழ இலக்கியம் இந்தியாவுக்கே முன்னோடி ,அடுத்தநூற்றாண்டின் விடிவெள்ளி என்றெல்லாம் சொல்லிவிடுகின்றனர் . நம்பாவிட்டாலும் அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது . இந்நிலையில் தீவிரமான விமரிசனத்தை முன்வைப்பது மேலும் சிக்கலாகிறது .

அத்துடன் ஈழ இலக்கியத்தின் இயல்பு வேறு இந்திய தமிழிலக்கியத்தின் இயல்பு வேறு . அவர்கள் வாழ்க்கையின் நேரடியான அனுபவங்களுக்கு மிகவும் அருகாமையில் இருக்கிறார்கள் . ஆகவே தீவிரம் அங்குள்ள எழுத்துக்கு முதல் இயல்பாக உள்ளது . இலக்கியத்தை ஒரு நேரடியான சமூக அரசியல் செயல்பாடாகக் கொள்பவர்களும் அங்கு அதிகம். நமது படைப்பாளிகள் பெரும்பாலோர் நேரடியான செயல்பாடுகளில் அவநம்பிக்கை உடையவர்கள் . நமது இலக்கியப்படைப்புகளோ சூட்சுமத்தை முதன்மையாகக் கொண்டு இயங்குபவை .அவர்களுடைய படைப்பில் நுட்பங்களை எதிர்பார்த்து நாம் ஏமாற்றம் கொள்வது போலவே நமது படைப்பில் நேரடியான வேகத்தை எதிர்பார்த்து அவர்களும் ஏமாற்றம் அடைகிறார்கள் .இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் நெருங்கிவரவேண்டியுள்ளது . அதற்கு ஒருவரை ஒருவர் மனம் திறந்து விமரிசிக்கவும் வேண்டியது அவசியம் . இன்றைய சூழலில் நாம் செய்ய வேண்டியது அவர்கள் படைப்புகளைப்பற்றி நாம் என்ன எண்ணுகிறோம் என்பதை எந்த தயக்கமும் இல்லாமல் சொல்வதேயாகும் .அதனால் சிலர் புண்படகூடும்தான் .ஆனால் இலக்கியம் நட்புறவை வளர்க்கும் ராஜதந்திரக் கலை அல்ல . என்னைப் பொறுத்தவரை என் கருத்தை கடுமையாகவே முன்வைத்திருக்கிறேன் என்றேன்

பின்பு நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கேற்ப தளையசிங்கத்தின் தனிப்பட்ட வாழ்க்கை ,படைப்புகள் உருவான சூழல் குறித்து ஓர் எளிய அறிமுகம் அளித்தேன். ஆசியராக வாழ்க்கையைத் தொடங்கிய தளையசிங்கம் தன் குருவாகிய நந்தகோபாலகிரியை கண்டதன் பிறகு சமூகப் போராட்டத்தையும் ஆன்மீகத் தேட்டத்தையும் இணைத்துக் கொண்டார். புங்குடு தீவு கண்ணகியம்மன் கோயிலில் நன்னீர் கிணறுகளில் தலித் மக்களுக்கு நீர் பிடிக்கும் உரிமைக்காக முன் நின்று போராடினார் . அதன் பொருட்டே அவரது மரணமும் நிகழ்ந்தது . அதன் பின்னணி குறித்து தேவகாந்தன் சொன்னார் . பொதுவாக அது அனைவருக்குமே முக்கியமான ஒரு விஷயமாக தோன்றியது . தன் நம்பிக்கைகளின் படி வாழ்வதென்பது எழுத்தாளனுக்கு எப்போதுமே பெரிய சவால் தான் என்றார் நாஞ்சில்நாடன் .அதுவும் இலட்சிய வாதிகள் அப்படி வாழ முயல்வது பெரிய சிக்கல்களுக்கு இட்டுசெல்லும் . அவ்வகையில் தளையசிங்கத்தின் தியாக வாழ்க்கை அவரது எழுத்துக்களை வெறும் கனவுகள் என உதாசீனப்படுத்த முடியாத நிலையை உருவாக்குகிறது என்றார் .

இலக்கியத்தால் சமூக மாற்றம் சாத்தியமில்லை , அழகியல் ரீதியான ஒரு கச்சிதமான முழுமையான வடிவத்தினை அடைவதே இலக்கியத்தின் சவால் என்று நவீனத்துவம் நம்பியது , அந்நம்பிக்கை இல்லாதவர் தளையசிங்கம் என்றார் மோகன ரங்கன் . அந்நம்பிக்கையே தமிழக நவீனத்துவபடைப்பாளிகள்பலரிடம் இயங்கியது . அந்நம்பிக்கையுடன் இயங்கிஉஅ போதிலும்கூட அவர்களில் எவருமே வெறும் வடிவ விளையாட்டையோ மொழியாட்டத்தையோ ஆடியவர்களல்ல .அவர்களை மீறி அவர்கள் கலையில் சமூகப் பொறுப்பும் அறச்சீற்றமும் வெளிப்படவே செய்தது அது சிறந்த இலக்கியப்படைப்புகள்பலவற்றை உருவாக்கியது .தளையசிங்கம் முதலில் நவீனத்துவத்துக்கு முந்தைய காலகட்டத்தை சார்ந்தவராக இருந்தார் . கதைகளில் தன் தரப்பை முன்வைத்து பேச முயன்றார் . அக்கருத்தின் எல்ல்லையை மீறி அவருடைய கலை நகர்ந்தபோது அவை சிறந்த படைப்புகளாயின. அதன் பின் அவரது படைப்புகள் நவீனத்துவ சாயல் கொண்டன. பிறகு தன் பாதையில் அதைக் கடந்து சென்றார் . இலக்கியத்தின் சமூகப்பங்களிப்பு என்ன என்ற கேள்வி எப்போதுமே தளைய சிங்கத்திடம் இருந்துகொண்டிருந்தது . ஆகவே அவரால் கடைசி வரை மார்க்ஸியத்தின் முக்கியத்துவத்தை உதறமுடியவில்லை . மிகவும் ஆன்மீகமான தளங்களை நோக்கிச் சென்றபோதும் கூட அவர் மார்க்ஸிய அடிப்படைகளை கைவிடவில்லை என்று எம் வேதசகாயகுமார் சொன்னார் .ர் .

அரங்கின் முதல் கட்டுரை யை ‘சரவணன்1978 ‘ முன்வைத்தார் . [ சொல் புதிதின் ஆசிரியர் . தமிழ் முதுகலை பட்டதாரி . பிறந்த வருடத்தை சேர்த்து புனைபெயரை உருவாக்கியுள்ளார் ] சரவணனின் கட்டுரை தளையசிங்கத்தின் கதைகளின் அமைப்பையும் சாராம்சத்தையும் முன்வைத்து அவரை அறிய முயல்வது . தளையசிங்கம் அடிப்படையில் தத்துவ பிரச்சாரகரே என்பதை சரவணன் ஏற்கிறார். ஆனால் தத்துவப்பிரச்சாரகர்கள் பொதுவாக தங்கள் தரிசனத்துக்கு ஏற்ப தங்கள் கதைசந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்வார்கள் .தங்கள் மையத்தை அழுத்தும் முகமாக கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களை தொகுத்துக் காட்டுவார்கள் . தளைய சிங்கத்தின் துவக்க காலக் கதைகள் இப்பலவீனங்களுக்கு ஆட்படாமல் தனித்து நிற்கின்றன என்றார் சரவணன்.

தளையசிங்கம் மனித மன ஓட்டங்களை சித்தரிக்கும் போது அவற்றை மிக சிக்கலான பன்மை இயக்கங்களாகவே காட்டுகிறார் , ஒற்றைப்படையான நீட்சியாக அல்ல என்று சரவணன் அவரது கோட்டை ,தேடல், வீழ்ச்சி போன்ற கதைகளை முன்வைத்து விரிவாக விளக்கினார் .இக்கதைகளில் மனம் முரண்பட்டு ,மோதிக் கொண்டபடி முன்னகர்கிறது. எப்போதுமே மனதின் நுட்பமான ஒரு பகுதி குறிப்புணர்த்தப்பட்டு அடியில் மறைந்துள்ளது.தளையசிங்கம் தன் கதைகளில் முதல்கட்டத்தில் எளிய பாசாங்குகள் , இரட்டைவேடங்கள் ஆகியவற்றின் அடியில் உள்ள அப்பட்டமான உண்மையை வெளியே இழுத்துப்போடுகிறார். கோட்டை இதற்கு சிறந்த உதாரணம் . அடுத்த கட்ட கதையில் அந்தப்பட்டமான கசக்கும் அந்தரங்க உண்மைக்கு அப்பால் ஆன்மீகமான ஒரு பேருண்மை உள்ளதை சூட்சுமமாகத் தொட்டுக் காட்டுகிறார் . முதலில் அவர் ஒழுக்கமறுப்பாளராக [amoral ] தன்னை வெளிக்காட்டுகிறார் .பின்பு அதனூடாக ஆன்மீகமான தளங்களுக்கு சென்று சேர்கிறார். இவை அவரது வளார்ச்சி நிலைகள் . இந்த வளர்ச்சியே அவரை தமிழின் முக்கியமான படைப்பாளியாக ஆக்குகிறது என்றார் சரவணன்.

வேதசகாய குமார் : சரவணன் தன் கட்டுரையில் தளைய சிங்கம் இதை சொல்கிறார் , இதை வலியுறுத்துகிறார் என்று வகுத்துக்காட்ட முயல்வது கல்வித்துறை சார்ந்த விமரிசன மரபின் பாணியில் உள்ளது . ஒரு படைப்பாளி எதையுமே வலியுறுத்தவில்லை என்று கொள்வதே சரியான வாசிப்பாக இருக்க முடியும் . நாம் எதை வாசிக்கிறோமென்பதையே நாம் சொல்லவேண்டும் என்றார். தளையசிங்கம் மன ஓட்டத்தை சித்தரிக்கும்போது ஒருங்கிணைவுள்ள சிந்தனையாக காட்டாமல் சிதறிப்பரக்கும் எண்ணத்துணுக்குகளாகவே எழுதுகிறார் . இது முக்கியமான கலைஞனை இனம் காட்டுகிறது என்று சரவணன் சொன்னது ஏற்புடையதே . ஆனால் அதன் மூலம் அவர் ஓர் அகவய அனுபவத்தையே தர முயல்கிறார் . மனம் பற்றிய கோட்பாடுகளையல்ல .

தேவதேவன்: தளையசிங்கத்தின் கதைகள் உள்ளுணர்வின் தூண்டுதலால் உருவானவை என்பதை விட அவை கருத்துக்களாக முதலில் தரிக்கப்பட்டவை என்று சோல்வதே சரியாக இருக்கும் . அவரது கதைகளை கருத்துக்களாக சுருக்கிவிடுவது சாத்தியமாகவே உள்ளது .

மோகனரங்கன்: எல்லா கதைகளும் அப்படி இல்லை . புதுயுகம் பிறக்கிறது என்ற தொகுப்பில் உள்ள ஆரம்ப கால கதைகள் ஆழமான அகத்தூண்டல் உள்ள கதைகளாகவே உள்ளன. போர்பறை தொகுப்பிலும் பிறகும் உள்ள பிற்காலக் கதைகள் தான் கருத்துக்களை மையமாக கொண்டு இயங்குபவை .

தேவதேவன் : கருத்துக்களை வலியுறுத்தும் பொருட்டோ ,பிரச்சாரம் செய்யும் பொருட்டோ எழுதப்பட்ட கதைகள் அவை என நான் எண்ணவில்லை . அவை கருத்தாக முதலில் தரிக்கப்பட்டவை . அதாவது கேள்விக்கு பதிலாக பதிலே அவற்றின் ஆதாரம் . அந்த கருத்தை அவர் எளிமைப்படுத்தவில்லை . வலியுறுத்தவுமில்லை . அதை அனுபவமாக ஆக்குகிறார் .அந்த அனுபவத்தின் வீச்சு அக்கருத்தை பற்பல தளங்களுக்கு நகர்த்திச் செல்கிறது .அந்தக்கருத்து சில கதைகளில் அவ்வனுபவத்தளத்தின் மூலமாக ஒரு தரிசனமாகவே வளர்ந்து விடுகிறது . உதாரணமாக ரத்தம் , தொழுகை போன்ற கதைகள் .மோகனரங்கன் குறிப்பிட்ட பிற்காலக் கதைகளில் அவ்வளர்ச்சி நிகழவில்லை . அவரது நல்ல கதைகள் கூட அவற்றின் கலைத்திறனால் முக்கியத்துவம் அடைபவை அல்ல ,அவற்றின் தரிசனப் பண்பால் முக்கியத்துவம் அடைபவையேயாகும்.

வேதசகாய குமார் : அதற்குக் காரணம் தளையசிங்கம் எப்போதுமே ஒரு தத்துவ வாதியாகவும் செயல்படுகிறார் என்பதுதான் . ஆழமான ஒரு தத்துவக்கேள்வியை எழுப்பி ஒரு நிலைகுலைவை உருவாக்கி வாசகனை சிந்திக்கவைத்தால் கலையின் வேலை முழுமையடைகிறது .ஆனால் தத்துவவாதி அப்படி போய்விட முடியாது . அவனுக்கு விடையும் வேண்டும் . புதுமைப்பித்தனின் அகலிகை கதைக்கு தளையசிங்கம் ஆற்றிய எதிர்வினையே அவரது அகலிகை கதை . புதுமைப்பித்தன் தன் கதையில் நமது மனசாட்சியை நோக்கியும் நமது வரலாற்றை நோக்கியும் ஆழமான கேள்வியை எழுப்பிவிட்டு நின்றுவிடுகிறார் . கெளதமனுக்கும் அகலிகைக்கும் தங்கள் கேள்விகளுக்கு விடையே கிடைக்கவில்லை .ஆனால் தளைய சிங்கம் மேலே செல்கிறார் . கதையை வளர்த்தி சென்று அகலிகைக்கு ஆன்மீகமான விடை கிடைக்கசெய்கிறார் . இதுதான் கலைஞனுக்கும் தளையசிங்கத்துக்கும் இடையேயான வேறுபாடு . ஆனால் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று உண்டு .புதுமைப்பித்தனின் கதை சிறுகதைக்குரிய அழகியல் முழுமையுடன் கலைவெற்றியை அடைகிறது . தளையசிங்கத்தின் கதை தத்துவ விவாதமாக மாறி தேவைக்குமேல் நீண்டு ஒரு சாதாரணமான கதையாக ஆகிவிட்டது .அவரது கதையின் முக்கியத்துவம் அவர் முன்வைத்த ஒட்டுமொத்த தத்துவப்பார்வைமீது அதை போட்டுப்பார்க்கும்போதுமட்டும் உருவாகிவருவதாகும் .

ஜெயமோகன்: தளையசிங்கம் அவரது ஆரம்பகால அழகியல் நோக்கில் நின்றிருந்தாரென்றால் மேலும் நல்ல கதைகளை எழுதியிருப்பார் .அவரது தத்துவத்தேடல் அவரை அங்கு நிற்க அனுமதிக்கவில்லை .ஆனால் அவரது படைப்பூக்கம் அவர் தத்துவவாதியாக ஆனபோது இல்லாமல் போய்விட்டது என்று கூறுவதை நான் ஏறகமாட்டேன் . அவர் சிறுகதையின் அழகியல் பாணியை விட்டு வெளியே நகர்ந்துவிட்டார் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். தத்துவார்த்த சிந்தனையும் படைப்பூக்கத்தின் விளைவே .

வெங்கட் சாமிநாதன் : இப்போது நான் பார்க்கும்போது தளையசிங்கம் எந்த வடிவிலும் முக்கியமாக எதையும் சாதிக்கவில்லை என்றே எனக்கு படுகிறது. எங்குமே அவரால் நிற்கமுடியவில்லை . மேகம் போல கலைந்து கலைந்து மாறி சென்றபடியே இருந்தார். அவரது சிறுகதைகளின் வடிவங்கள் முழுமையும் துல்லியமும் இல்லாதவை . அவரது சிந்தனைகளும் ஒழுங்கும் மையமும் இல்லாதவை .அவரை வகுத்துக் கொள்வது கடினம் .ஆனால் தளைய சிங்கம் பயணம் செய்தார் ,எங்குமே தேங்கிநிற்கவில்லை .அது மேலான கலைஞனுக்குரிய குணம்.அவர் எதையுமே தெளிவாகசொல்லவில்லை என்பது பலவீனம் என்றால் எல்லாவற்றிலும் இருந்து வெளியேறியபடியே இருந்தார் என்பது பலம் .எங்காவது உறைந்து நின்றுவிடுவதே வழக்கமாக உள்ள தமிழ் சூழலில் இது அபூர்வமான ஒரு விஷயம்தான்.

வேதசகாயகுமார்: சரவணன் தன் கட்டுரையில் தளையசிங்கம் யாழ்ப்பாண சமூகத்தின் போலிவேடங்களை அம்பலப்படுத்துவது பற்றி சொல்லியிருந்தது மிக முக்கியமான கருத்து . அவரது பார்வை முதலில் விழுவதே ஒழுக்கம் அறம் என்றெல்லாம் சொல்லி மனிதர்கள் போடும் போலிவேடங்கள் மீது தான் .மிக மூர்க்கமாக அவற்றை கிழித்தெறிய தளையசிங்கம் முயல்கிறார் . ‘கோட்டை ‘ அப்படிப்பட்ட முக்கியமான கதைதான் . ஆனால் ‘தொழுகை ‘ அதற்கு அப்பாலும் செல்கிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். அவள் சைவ வேளாளப் பெண் . அவன் சாணான் . அவளுடைய வீட்டுக்குள் வயது வந்த பெண்கள் தூங்குகின்றன. கதவை சாத்திவிட்டு அவனுடன் சல்லாபத்தில் ஈடுபடுகிறாள். அவனை அவள் சந்த்தித்தே பத்துநாள்தான் ஆகிறது .அவனுடன் அவளுக்கு உள்ள உறவு முழுக்க முழுக்க காமம் மட்டும் தான் . அவன் அவளை ஒரு பெண்ணுடல ‘க மூர்க்கமாக கையாள்வதும் அவள் வைதபடி முரண்டுவதுமெல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது . அவளுடைய மனம் கணவன் மீதுதான் இருக்கிறது . அவர் என் உயிர் ,உன் மீது தான் ஆசை என்கிறாள் . முத்துவுக்கு அந்த நிலை போதவில்லை .வெறும் காமக்கருவியாக அவனால் இருக்க முடியாது . ஆகவே அவன் பேரம் பேசுகிறான் . பயம்காட்டுகிறான். இதெல்லாம் ஒரு தளம் . ஆனால் பிறகு என்ன ஆகிறது ? உறவுக்கு பிறகு அவர்கள் மனநிலையே மாறிப்போய் விடுகிறது . ஒழுக்கரீதியான ஒரு அதிர்ச்சியைக் கொடுத்து முடிந்திருக்கவேஎண்டிய கதை ஆன்மீகமான ஒரு தளத்துக்கு நகர்ந்துவிடுகிறது .

நாஞ்சில்நாடன் : ஆனால் அந்தக்கதையில் எல்லாமே திட்டமிட்டு உருவாக்கியதுபோலத்தான் உள்ளது .வேளாள பெண் நாடார் ஆண் .அவர்கள் உடலுறவு கொள்ளும்போது திருப்பாவை கேட்பது எல்லாம் வெளிப்படையாக திட்டமிட்டவை போல்த்தானே உள்ளன. இந்தக்கதை எழுதப்பட்ட காலத்தில் பெரிய அதிர்ச்சி தரும் கதையாஅக் இருந்திருக்கலாம் .ஆனால் இன்று அப்படியல்ல, அதைவிட பெரிய அதிர்ச்சிகளை நம் இலக்கியம் சந்தித்துவிட்டது.

வேதசகாயகுமார் : உண்மை .அக்கதை அதிர்ச்சியை மட்டுமே அளிப்பதாக இருந்தால் அப்படி சொல்லலாம். ஆனால் அக்கதை அந்த எல்லையை தாண்டி செல்கிறது .அந்த முடிவு வரிகளை படிக்கிறேன் ‘ ‘செல்லம்மாவின் தோற்றம் அவனை பிரமிக்க வைக்கிறது . உடலின் ஒவ்வொரு மயிர்க்காலிலும் துளிர்த்து பொங்கிய வியர்வை ஒளியோடு போட்டிபோட்டு பூரித்து பிரகாசித்த அவ்ளின் முகம் அவனை புல்லரிக்க வைக்கிறது .எங்கோபார்த்ததோற்றம் .கோயில் சாத்துப்படி -ஸ்தான மூலையில் தங்கத்தால் செய்து நிற்கும் அம்மன் சிலையின் அருள் செறிந்த தோற்றம் …..தங்கச்சிலை தெய்வச்சிலை ,தெய்வம்… ‘ ‘ இதைதொடர்ந்து அந்த திருவெம்பாவை பாடல்கேட்கிறது. இங்கு பள்ளியெழுச்சி , புதுப்புனலாடல் அனைத்துக்கும் குறியீட்டு ரீதியாக விரிவான பொருள் வந்துவிடுகிறது.

ஜெயமோகன்: ‘ ‘ஒன்றின் மெய்யான தன்மையில்தான் அதன் அசல் தரிசனம் உள்ளது .நாகரீகம் புனிதம் விலக்கப்பட்டவை என்ற பூச்சு கொண்டு அந்த மெய்யான தனமையை மறைத்தால் அதை நான் அறியவே முடியாது என்று தளையசிங்கம் சொல்கிறார் ‘ ‘ என்று சரவணன் எழுதுகிறார்…. ..

வேதசகாயகுமார்: மெய்யான தன்மையை உடைத்துக் காட்டுவது அல்ல ,அதை ஆன்மீகமான இடத்துக்கு உயர்த்துவதும் இக்கதையில் உள்ளது .தொழுகை எது ? காம உறவா ? மனமும் உடலும் அதன் முழுமையில் கூடும்போது அது ஒரு வகையான தொழுகை என்கிறார் தளையசிங்கம் .அதாவது கலகத்தைக் கூட ஆன்மீகமான ஒன்றாகவே அவர் காண்கிறார்

ஜெயமோகன் :முக்கியமான ஆன்மீகவாதிகளில் எல்லாம் ஒரு அராஜக அம்சம் உள்ளதை காணலாம்.அது அவர்களுடைய ஆரம்ப காலத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது .ஏசு மக்தலீனாமேரியை மன்னித்தது அப்படிப்பட்ட ஒரு கலகம் தான். தல்ஸ்தோய் , கசன்ந் சகிஸ் , ஹெஸ் முதலிய ஆன்மீக அம்சம் உள்ளபடைப்பாளிகளில் எல்லாமே ஒழுக்கம்மீறிய அல்லது ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்ட [amoral] தளம் ஒன்று எப்ப்பொதுமே உள்ளது . இவ்வுலகம் போடும் வேடங்களுக்கு எதிரான பொறுமையின்மையின் விளைவு அது. ஆனால் அந்த கலகம் அங்கேயே நிற்பது இல்லை .அது மேலேறிச் செல்கிறது .

மோகனரங்கன்: ஆனால் சில கதைகளில் தளையசிங்கம் தன் தத்துவ விசாரத்துக்கு ஒரு குறியீட்டு வடிவம் உருவாக்கும் பொருட்டு கதைகளை எழுதுகிறாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.உதாரணமாக கோயில்கள் என்ற கதை . மரணத்தின் பின்னணியில் வாழ்க்கையை வைத்துப் பார்த்து உடலே ஒரு கோயில் என்ற இடத்துக்கு நேரடியாகவே போய்விடுகிறார் .

ஜெயமோகன்: சரவணன் சொல்லும் வீழ்ச்சி போன்ற கதைகளும் அப்படி தத்துவசட்டகத்துக்கு ஏற்ப கட்டப்பட்டவையே .

சூத்ரதாரி: ஆரம்பகால கதைகளில் அவர் மன ஓட்டத்தின் இயல்பான நகர்வை ஒரு கலைஞனாக பதிவு செய்கிறார் .ஆகவே அவை வெறும் தத்துவ சட்டகங்களாக இல்லை .பிற்கால கதைகளில் அவர் சிந்தனை ஓட்டத்தையே சொல்கிறார் ,அது தத்துவ சிந்தனையாக இருக்கிறது .

தேவகாந்தன் : யாழ்ப்பாணச் சமூகத்தைப் பற்றி இங்கு சொல்லவேண்டும் .கிடுகுவேலி கலாச்சாரம் என்பார்கள் .ஒவ்வொருவரும் தன் எலைக்குள் தனித்து இருப்பார்கள் .ஆகவே போலித்தனமும் அதிகம். அந்தக் கிடுகுவேலிகளை உடைக்கமுய்ல்கிறார் தளையசிஙகம் .அதை உடைத்தால் மட்டுமே வெளியேறமுடியும் சுதந்திரம் கிடைக்கும் , அடிப்படையானதேடல்கள் சாத்தியம் என அவர் நம்புகிறார். கோட்டை , தொழுகை போன்ற கதைகள் எல்லாமே இப்படிப்பட்டவைதான்.அதன் அடுத்த கட்டத்தில் அவர் சமூக நடவடிக்கைகளில் தீவிரம்னாக இறங்கினார். இம்மாதிரி அதிர்ச்சிகள் தருவதிலோ தத்துவ விசாரத்திலோ நின்றுவிடவில்லை .

மோகனரங்கன் : எனக்கு பிரச்சினை வருவதே அவர் அரசியல் சமூக செயல்பாடுகளை பற்றி பேசத்தொடங்கும்போதுதான்.அவர் மிக திட்டவட்டமாக பேச ஆரம்பிக்கிறார். இதுதான் சரி என்று சொல்லாஅரம்பிக்கும்போதே அறிவதிகாரம் வந்தாகிவிட்டது .அவர் செய்தது சரியாக இருக்கலாம் .ஆனால் அதை அவர் வகுத்து சித்தாந்தமாக முன்வைக்கிறார்.அது நிறுவனமாகும் , அதிகார செயல்பாடுகளாகும் .படிப்படியாக அழிவு சக்தியாக மாறும் .

ஜெயமோகன்: தளையசிங்கம் சித்தாந்தி அல்ல. கலைஞனாக தொடங்கி தத்துவ தேடலில் முடிந்தவர் .

மோகனரங்கன் :அவரை சித்தாந்தியாக ஆக்கியிருக்கலாம் .அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தன.

வெங்கட் சாமிநாதன் : அவருடைய கதைகளில் எல்லாவகையான வாழ்க்கைபார்வைக்கும் இடம் இருந்தது .கடைசியில் அவர் தத்துவம் என்று ஆரம்பித்தபோது அதெல்லாம் இல்லாமலாகி ஒரே விஷயம் மட்டும் மீண்டும் மீண்டும் வர ஆரம்பித்தது என்று படுகிறது .

வேதசகாய குமார் : ஓர் இலக்கியவாதியாக ஆவதற்காக எல்லாவற்றையும் துறக்க தயாராக இருப்பதாக அவர் ஆரம்பத்தில் சொல்கிறார் ,பிறகு தத்துவத்துக்காக இலக்கியத்தையே துறந்தார் .

ஜெயமோகன் : உண்மைக்காக . அப்படித்தான் அவர் சொல்கிறார் .அவரை பொறுத்தவரை இலக்கியம் மெய்மைக்கான தேடலே ,அப்பயணமே அவரை இங்கெல்லாம் இட்டு சென்றது .

மதிய உணவுக்காக கூட்டம் பிரிந்தது . மழை இருட்டி , குளிர் பெருகியது . கோடைதானே என்று பலர் ஸ்வெட்டர் கொண்டுவரவில்லை .கைகளை மார்பில் கட்டி பணிவுடன் நின்றிருந்தார்கள் .அவர்களுக்கு குருகுல பிரம்மசாரிகளிடம் இருந்து இரவல் வாங்கிய ஸ்வெட்டர்களை தந்தோம். பேசியபடியே மதிய உணவுக்கு பிரிந்தோம்.

முதல்நாள் அரங்கு , மாலை 6 மணி

மதிய உணவுக்கு பிறகு குருகுல அறைக்குளேயே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம் .நல்ல மழை பெய்தது . சில இடங்களில் ஆலங்கட்டிகள் விழுந்தன . இம்மாதிரி சந்திப்புகளின் முக்கியக் கவர்ச்சியே இப்படி அனைவரும் கூடி அமர்ந்து அரட்டை அடிப்பதுதான் .இலக்கியவாதிகள் பற்றிய வேடிக்கைகள் , கொஞ்சம் வம்புகள்,பரஸ்பரக் கிண்டல்கள் . இதற்கு மிக முக்கியமானத் தேவை நட்பார்ந்த சூழல் . தனிப்பட்ட குரோதங்கள் கொண்ட ஒரே ஒருவர் இருந்தாலும் இவ்வரட்டைகள் மிக மோசமான மனபாதிப்பு ஏற்படுத்த ஆரம்பித்துவிடும். அதேபோல கட்டுப்படின்றி மது அருந்துபவர்கள் , தன்னை முன்னிலைப்படுத்தும் பொருட்டு ஆர்ப்பாட்டங்கள் செய்பவர்கள் ஆகியோரும் இச்சூழலை சிதைத்துவிடூவார்கள் .சொல் கூட்டங்களுக்கு எல்லா தரப்பினரையும் அழைத்தாலும் எப்ப்பொதுமே நட்பின் எல்லைகளை தாண்டாதவர்களையே அழைக்கிறோம் . இப்போது பின்னால் திரும்பி பார்க்கும்போது முக்க்கியமான ஆக்கங்களை எழுதிய கணங்களும் நண்பர்களுடன் உரையாடிய நாட்களும் மட்டுமே இலக்கிய வாழ்வில் மகிழ்ச்சிகரமானவையாக ஒளிபெற்று தெரிகின்றன. அங்கீகாரங்கள் ,வெற்றிகள் ,விழாக்கள் எதுவுமே மனதில் ஆழப்பதியவில்லை .

ஆறுமணிக்கு நூலக அறையில் கூடினோம் .ஆளுக்கொரு கனத்த கம்பிளியை எடுத்து போர்த்திக்கொண்டு அமர்ந்தார்கள் .மோகனரங்கன் தன் கட்டுரையை வாசித்தார் .மோகனரங்கனின் கட்டுரை தளையசிங்கத்தின் கதைகளை மதிப்பிட்டபடி தொடங்கியது .மனித வாழ்க்கையின் விசித்திரத்தையும் புரிந்துகொள்ள முடியாத தன்மையையும் கொண்டு அதை கூர்ந்துகவனிப்பவனாகவே எழுத்தாளன் செயல்படுகிறான்.அவன் தத்துவ ஆசிரியனாக ஆகும்போது அந்த வியப்புணர்வு இல்லாமலாகிறது .அவன் விடைகளையும் தீர்வுகளையும் முன்வைக்க ஆரம்பித்துவிடுகிறான். தளையசிங்கத்துக்கும் இதுதான் நடந்தது . தளைய சிங்கத்தின் கதைகளில் தொடக்க காலத்தில் உண்மையை நோக்கிச் செல்லும் உக்கிரம் இருந்தது ,அது முக்கியமானது .ஆனால் அவரது தத்துவ நோக்கு குறித்து த்னக்கு பல ஐயங்கள் உள்ளன என்றார் மோகனரங்கன் .

தளையசிங்கத்தின் கோட்பாடுகள் , இலட்சியங்கள் ஆகியவை நிதரிசனத்தின் தொடர்போ , கறாரான அறிவார்ந்த புறவயத் தருக்கங்களோ இல்லாமல் வெறும் கனவுகளாகவே நின்று விட்டிருக்கின்றன என்றார் மோகனரங்கன். இந்த காரணத்தால் அவை கவித்துவக் கூற்றுகள்ளாகவோ வெற்றுக் கனவுகளாகவோ நின்றுவிடுகின்றன. மேலும் தளையசிங்கம் உபயோகிக்கும் இந்திய சிந்தனை மரபு சார்ந்த கருத்தியல் உபகரணங்கள் மிகுந்த இடர்களை விளைவிப்பவையாக உள்ளனன . யோகம் , அன்னமய கோசம் போன்ற சொற்களெல்லாம் வேறு ஒரு சூழலில் வேறுவெறு பொருளில் பயன்படுத்தப்படுபவை . ஆகவே தளையசிங்கம் சொல்வதை புரிந்து கொள்வதில் பல மயக்கங்கள் ஏற்படுகின்றன. செயல்தளத்துக்கு ஏற்ப திட்டவட்டமாக வடிவமைக்கப்படாத கோட்பாடினால் பயன் இல்லை . அப்படி வடிவமைக்கப்படும் போதே அது மாற்று உண்மைகளை மறுக்கும் அறிவதிகாரம் ஆகியும் விடுகிறது .தன்னளவில் எந்த சித்தாந்தத்தையும் சந்தேகத்துடன்த்‘ன் பார்க்க முடியும் என்றார் மோகனரங்கன் .சித்தாந்தங்கள் உலகில் போதிய அழிவை ஏற்கனவே உருவாக்கிவிட்டிருக்கின்றன.சித்தாந்தங்களால் முழுமையான உண்மையை ஒரு போதும் நெருங்கமுடியாது .

ஜெயமோகன்: தளையசிங்கம் முன்வைப்பவை கோட்பாடுகள்தானா ? அவை ஒரு சிந்தனையாளனின் அகத்தரிசனக்கள் என்ற நிலையில் மட்டும்தானே உள்ளன ? கோட்பாடுகள் விரிவான தருக்க அமைப்பை கொண்டிருக்கும் . தங்கள் கூற்றுக்களை அவை நிறுவ முயன்றபடியே இருக்கும் .அனைத்துக்கும் மேலாக கோட்பாடுகளை அடுத்த கட்ட அறிஞர்கள் மேலும் மேலும் வளர்த்து சென்றபடியே இருக்க முடியும் . அதாவது கோட்பாடு தன்னளவில் அதை, உருவாக்கியவனின் அடையாளம் இல்லாமல் செயல்பட முடியும் . ஆனால் தளையசிங்கத்தின் தரிசனங்களை நாம் அவரில் இருந்து பிரிக்கவே முடியாது அல்லவா ?

தேவகாந்தன்: மு பொன்னம்பலம் போன்ற சிலர் தளையசிங்கத்தின் கருத்துக்ளை கோட்பாடுகளாக ஆக்கிக் கொள்ள முயன்றிருக்கிறார்கள் . பொன்னம்பலம் தளையசின்ங்கத்தை மையமாகி ஒரு மதமனப்பான்மையையே உருவாக்க முயல்கிறார் என்று படுகிறது .

ஜெயமோகன்: ஆனால் அதற்குரிய தருக்கக் கட்டுமானத்தை தளையசிங்கத்தில் இருந்து பெற முடியாது .அவரது அகவயமான கூற்றுக்களை விளக்கி விரித்து கோட்பாடாக மாற்ற முடியும் , அவ்வளவுதான்

தேவதேவன்: இம்மாதிரி ஒரு தரிசனத்திலிருந்து தத்துவத்தை உருவாக்குவது எப்போதும் உலகமெங்கும் நடைபெற்று வருகிறது . இன்னும் சொல்லப்போனால் எல்லா தத்துவ சட்டகங்களும் ஒரு படைப்பாளியின் மேலான தரிசன மன எழுச்சியை அடுத்துவரும் தலைமுறையானது தொகுத்து வகுத்துக்கொள்ள முயலும்போது உருவவதேயாகும்.உதாரணமாக புத்தர் தரிசன மனநிலையில் இருந்துகொண்டு கவித்துவமாக பேசுகிறார் . எப்போது புத்தரின் க்ஷணவாதம் ஒரு கோட்பாடாக மாறியதோ அப்போதே புத்தர் நிராகரிக்கப்படுகிறார் .ஆகவேதான் தன் மெய்மையனுபவத்தை விளக்க அவர் முற்படவில்லை . அதை விளக்கும்படி கோரப்பட்டபோது அந்த ஞானம் அனைவருக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும்போது பேசலாம் என்று சொன்னார்.

ஜெயமோகன் : விஷ்ணுபுரத்தில் இது வருகிறது .புத்தர் எல்லாமே நிலையற்றது ,நாம் அறிபவை எதுவுமே அறியும் நிலையில் மாறாமல் இல்லை என்றார் .அதை தத்துவார்த்தமாக விரிவுபடுத்தும் நாகார்ச்சுனர் உண்மையில் எதுவுமே இல்லை நமது அறிவுகூட என்ற சூனியவாத கோட்பாட்டுக்கு போய் சேர்கிறார் .

தேவதேவன் : மகாயான பெளத்தமே புத்தரிலிருந்து வெகு தொலைவில் நிற்கும் ஒன்றுதான்.

மோகனரங்கன்:விடைகளை யார் முன்வைத்தாலும் அப்படித்தான் ஆகும்

ஆர்.பி ராஜநாயகம்: புத்தரைப்பற்றி சொன்னீர்கள் . என் நண்பர் ஒருவர் ,அவர் ஒரு முஸ்லீம் , மதுரைக்கு அருகேயுள்ள ஒரு சங்கிலிக் கருப்பனைப்பற்றி ஆய்வு செய்தார் . ஏழடி உயரமுள்ள சிலை அது .வெள்ளியில் மீசையும் கண்களும் செய்து பதித்திருப்பார்கள் . வருடத்தில் எப்படியும் அங்கு இரண்டாயிரம் ஆடுகளாவது பலிவிழாமல் இருக்காது . தேவர் சாதிக்கு முக்கியமான கோயில் . நண்பருக்கு சிலையின் அமைப்பைப் பார்த்து சந்தேகம் .பூசாரியை கைக்குள் போட்டுக் கொண்டு ஒருநள் உள்ளே நுழைந்து மீசையும் கண்களையும் எடுத்துப்பார்த்துவிட்டார் .அவர் சந்தேகப்பட்டது சரிதான் , அது ஒரு புத்தர் சிலை ! வெளியே சொல்ல முடியுமா, தலை காணாமல் போய்விடும் என்றார்….

வேதசகாய குமார்: விழுப்புரத்துக்கு அருகேகூட ஒரு சிலை இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். .தலையில்லாத முனிசாமி .வருடத்திற்கு ஒருமுறை தலையை வேறு எங்கிருதோ கொண்டுவந்து வைப்பார்கள் ,உடனே ஒரு ஆயிரம் ஆடாவது வெட்டப்படுமாம். அது புத்தரின் தலை .

ஜெயமோகன்: இது பெளத்தம் கைவிடப்பட்டபிறகு அச்சிலைகளை கைப்பற்றிய மற்ற மதத்தவர் செய்வது .ஆனால் பெளத்தர்களில் வஜ்ராயனர்கள் புத்தருக்கே உயிர்பலி அளித்திருக்கிறார்கள், விஷ்ணுபுரத்தில் கூட அப்படி ஒரு இடம் வரும்…

தாமரை ஆறுமுகம் : மோகனரங்கன் கட்டுரை பற்றிய என் கருத்துக்களை தொகுத்துச் சொல்கிறேன். ஒன்று தளையசிங்கம் மார்க்ஸியத்தில் காணும் முக்கியமான குறைபாடு அதில் தனிமனிதனின் ஆன்மீக கடைத்தேற்றத்துக்கு ஏதும் வழியில்லை என்பதுதான் . இந்தபோதாமையை நிரப்ப மார்க்ஸியத்திலிருந்து மேலே போக வேண்டுமென அவர் எண்ணுகிறார் . அதற்கான முயற்சியில் அவர் செய்தது மார்க்ஸியத்துடன் அரவிந்தர் போன்ற சில ஆன்மீக சிந்தனையாளர்களில் சிந்தனைகள் சிலவற்றை ஒட்ட வைத்தது தான் .எங்கல்ஸுக்கும் இடையேயான கருத்தொற்றுமையைக்கூட குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மார்க்சியத்தை ஒரு அறிவியல்கோட்பாடாக பார்க்காமல் ஒரு விதமான தரிசனமாகவும் , மார்க்ஸை ஒரு அதிமானுடனாகவும் பார்க்கிறாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது . என்னதான் ஆன்மீகம் பேசினாலும் செயல்தளத்துக்கு வரும்போது அவரால் மார்க்சியத்தைதாண்டி செல்லமுடியவில்லை . கருத்துக்களிலும் கைலாசபதியிடம் உள்ள அதே குறைகளை இவரிடமும் காணலாம்.இவரும் கருத்து செயல்பாடை நேரடியான பொருளில் ஒருவகைப் பிரச்சாரமாகவே காண்கிறார் .

சூத்ரதாரி: ஆனால் கலையை தளையசிங்கம் அப்படிக் காணவில்லையே .அவர் ‘கலை பரவச விடுதலையை அளிக்கும் ‘ என்றுதானே சொல்கிறார் .

தாமரை ஆறுமுகம் :உண்மைதான் .ஆனால் தன் கருத்துக்களை அவர் உபதேசம்தான் செய்கிறார் .மெய்யுளிலும் உபதேசம்தான் உள்ளது.

மோகனரங்கன் : ஆனால் தளையசிங்கம் தன் போராட்டங்களில் காந்திய மார்க்கத்தையே கடைப்பிடித்துள்ளார் .குறிப்பாக சிரமதானம் போன்றவிஷயங்களில் அவருக்கு நம்பிக்கை இருந்துள்ளது .

தாமரை ஆறுமுகம் : அது உண்மை.ஆனால் அவருடைய மனத்தில் இருந்த சமூக மாற்றம் பற்றிய சித்திரமானது மார்க்ஸிய அடிப்படையிலானது என்றே தோன்றுகிறது .

அன்பு வசந்தகுமார் :தளையசிங்கம் முரணியக்க இயங்கியல் போன்ற மார்க்ஸிய தத்துவ அடிப்படைகள் மீது ஐயங்களை எழுப்புகிறார் .ஆனால் சமத்துவம் ,விடுதலை ,மக்கள்போராட்டம் போன்ற கருத்துக்களில் அவரது பார்வை மரபான மார்க்ஸிய பார்வையேதான். விழிப்புணர்வு பெற்ற ஒரு சிறுபான்மையினர் உழைக்கும் மக்களை விடுதலை உணர்ச்சி பெறச்செய்வது பற்றி அவர் பேசுமிடமும் மார்க்ஸிய அடிப்படைக்குள்தான் வருகிறது .மார்க்ஸியத்தில் இருந்து அடுத்த தளத்துக்கு போக முடியுமா என்று பார்த்த ஒரு மார்க்ஸியர் என்று அவரைச் சொல்லலாம் .

தேவகாந்தன் :எனது கருத்தும் அதுதான் ,தளையசிங்கம் இலங்கையில் கல்வித்துறை பத்திரிகை ஆகியவற்றை ஆயுதமாக கொண்டு உருவாகி வந்த முற்போக்கு முகாமின் அதிகாரத்தை தான் எதிர்த்தார் . அவர்கள் இலக்கியத்தை வெறும் அரசியலாகவும் சமூகவியலாகவும் குறுக்குவதை கண்டித்தார் . ஆனால் மார்க்ஸியத்துக்கும் அவருக்கும் இடையே நேரடியான ந்ல்லுறவுதான் இருந்தது .தளையசிங்கத்தின் கருத்துக்களை மார்க்ஸியத்திலிருந்து பிரிக்கமுடியாது.

ஜெயமோகன்: தளையசிங்கத்தில் அவரது காலகட்டத்து எல்லா இலட்சியவாதங்களின் தாக்கமும் உள்ளது . மார்க்ஸியம் அக்கால கட்டத்து இலட்சியவாதங்களில் முக்கியமானது . விவேகானந்தர் ,காந்தி ,அரவிந்தர், பாரதி ஆகியோரும் அவரை பாதித்துள்ளனர் . அடிப்படையில் அவர் ஒரு இலட்சியவாதி என்பதே இதற்குக் காரணம் .அவரில் பாதிப்பு செலுத்தாதவர்கள் இலட்சியவாதப்பண்பு இல்லாத மேற்கத்திய எழுத்தாளர்கள் தான். எனக்கு வியப்பு என்னவெனில் இவ்வளவு இலட்சியவாதப்பண்பு உள்ளவரில் ஏன் தல்ஸ்தோயின் தாக்கம் சொல்லும்படியாக இல்லை என்பதுதான்.அவர் எங்கும் தல்ஸ்தோய் பற்றி குறிப்பிட்டதேயில்லை …

வெங்கட் சாமிநாதன் : நான் தளையசிங்கத்திடம் காணும் குறையே அதுதான் .அவரது புதுயுகம் என்பது மார்க்ஸியத்தையே சற்று திருப்பிப் போட்டு பார்த்தது மட்டும்தான் . எல்லாரும் சமமாக ஆவது , அரசு உதிர்ந்துபோவது , தனியுடைமை இல்லமலாவது என்றெல்லாம் மார்க்ஸியம் சொல்லும் கனவைத்தான் இவரும் அடுத்த யுகம் என்று சொல்கிறார் . ஆனால் இத்தகைய கனவுகள் எல்லாம் என்ன ஆயிற்று வரலாற்றில் ? மனிதனின் இயல்பான சின்னத்தனம் ,சுயநலம் ,அதிகாரவெறி ஆகியவை இத்தகைய கனவுகளையெல்லாம் அழித்துவிட்டதைத்தானே பார்க்கிறோம் அரசாங்கம் இல்லாமலாகும் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட அமைப்பில் அரசாங்கம் சரித்திரத்திலேயே இல்லாத அளவு வலிமையுள்ளதாக ஆயிற்று. ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பில் ஏழைகள்தான் கூட்டம்கூட்டமாக கொன்றொழிக்கப்பட்டனர் .இதோ நம்முடைய காலத்திலேயே காந்தியக்கனவு -ராமராஜ்யம் -இல்லமலாயிற்று . இவ்வளவுக்குபிறகும் நாம் எப்படி இம்மாதிரி வெற்று இலட்சியக்கனவுகளை மதிக்க முடியும் ?

ஆர். பி .ராஜநாயகம் : என் சொந்தக்காரர் ஒருவர் வினோபாவேயின் ஆசிரமத்தில் இருந்தார். ஏராளமான சொத்து வைத்திருந்தவர் . வினோபாபேச்சைக்கேட்டு எல்லாவற்றையும் பூதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் . ஆனால் கடைசியில் வினோபாவின் இயக்கத்தில் அவரைத்தவிர எல்லாருமே அயோக்கியர்கள் ஆக இருந்தார்களாம். ஆசிரமத்திற்குள்ளேயே விபச்சாரம் நடக்குமாம். கடைசியில் வினோபாவுக்கே இது தெரிந்துவிட்டது .இனி உயிரோடு இருக்கவேண்டாம் என்று உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்டார் .

நாஞ்சில்நாடன் : ஆமாம் ,அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் . இந்திராகாந்தி அவரைப்பார்க்கசென்றபோது இந்த உடை அழுக்காகிவிட்டது கழற்றப்போகிறேன் என்றுதான் சொன்னாராம்…. தளையசிங்கம் சீக்கிரமே போய்சேர்ந்துவிட்டார் .

வேதசகாயகுமார் : மோகனரங்கன் தளையசிங்கத்தின் இலக்கியமதிப்பீடுகள் ஏற்புடையவையாக இல்லை என்று சொன்னார் . தளையசிங்கம் புதுமைப்பித்தனைவிட ஜெயகாந்தனை தூக்கிப்பிடிப்பது கசப்பூட்டுவதாகக் கூறினார் . …

மோகனரங்கன்: மெளனி புதுமைப்பித்தன் ஆகியோருடைய எல்லா கதைகளும் சேர்ந்தால்கூட ஜெயகாந்தனின் பிரளயம் ,விழுதுகள் போன்ற கதைகளுக்கு சமமல்ல என்று அவர் சொல்வது அபத்தமான முடிவென்றே படுகிறது.கலையின் நுட்பங்களை கணக்கில் கொள்ளாது பொத்தாம் பொதுவாக மையக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த முடிவுக்கு வருகிறார் ….

வேதசகாய குமார் : இந்த எண்ணம் இங்கு உருவாக்கப்பட்ட ஒன்றா என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது . காரணம் இங்கு தளையசிங்கத்தின் விமரிசன ஆளுமைபற்றி பேசப்படும்போதெல்லாம் ஜெயகாந்தனை தூக்கிபிடித்தார் ,ஆகவே இலக்கியத்தின் கருத்துக்களை மட்டுமே கணக்கில் கொள்ளும் இயந்திரவாத அணுகுமுறை உடையவர் என்று தளையசிங்கம் குற்றம் சாட்டப்படுகிறார் . இந்த விமரிசனத்தினை உருவாக்கியவர்கள் தளையசிங்கத்தின் ஆரம்பகட்ட விமரிசனங்களை குறிப்பாக ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியை எந்த அளவுக்கு பொருட்படுத்தியுள்ளனர் என்று தெரியவில்லை . ஏழாண்டு இலக்கியவளர்ச்சியை பார்த்தால் அதில் தெரியும் தளையசிங்கம் படைப்பை வடிவம் உள்ளடக்கம் என்று பிரித்து பார்ப்பவரே அல்ல. அவருக்கு இரண்டும் பிரிக்கமுடியாதவையாகவே பட்டிருக்கின்றன.உதாரணமாக எஸ்பொன்னுதுரையை நிராகரிக்க தளையசிங்கம் முன்வைக்கும் வாதகதிகள் அனைத்துமே மொழி மற்றும் வடிவம் சம்பந்தப்பட்டவை… .

நாஞ்சில்நாடன்: எந்தக் கோணத்தில் ஆனால் என்ன , ஜெயகாந்தன் கதைகளுக்கு புதுமைப்பித்தன் கதைகளைவிட ஆழமும் மதிப்பும் ஏற்படும் ஓர் அணுகுமுறையை எப்படி ஏற்கமுடியும் ?

வேதசகாயகுமார்: ஒன்று கவனிக்கவேண்டும் ,ஜெயகாந்தனின் எல்லா கதைகளையுமல்ல ஆரம்பகட்ட கதைகளையே தளையசிங்கம் குறிப்பிடுகிறார் .சொல்லப்போனால் பிரளயம் விழுதுகள்போன்ற ஓரிரு கதைகளை மட்டுமே அவர் குறிப்பிட்டு பேசுகிறார் . புதுமைப்பித்தனை விட ஜெயகாந்தனைமேலாக மதிப்பவனல்ல நான்.புதுமைப்பித்தன் கதைகளை கலைக்கும் ஜெயகாந்தன் கதைகளை போலிக்கலைக்கும் ஒப்பிட்டு நான் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ என்று ஒரு நூலே எழுதியுள்ளேன். நான் இங்கு பேச விழைவது ஏன் தளையசிங்கம் ஜெயகாந்தனை முன்வைத்தார் என்பதை எளிமைப்படுத்தக் கூடாது என்றுதான் .ஜெயகாந்தனின் கலைச்சிதறல்களை அறியமுடியாதவரல்ல தளையசிங்கம். ஓரிரு முறை அவரே அதை சொல்லியும் இருக்கிறார் .கலை என்பது ஆழமான அகவய அனுபவமேயொழிய கருத்தை அறிந்துகெ ‘ள்ளும் சகஜநிலையல்ல என அவரளவுக்கு அழுத்திச் சொன்னவர்களும் இல்லை. கலையை மதிப்பிட சக்தியற்று உடன்பாடான கருத்துக்களைதேடி அவற்றைகண்டடைந்ததும் அப்படைப்பாளியை ஏற்கும் மேலோட்டமான வாசகராக தளையசிங்கத்தை அவரை ஆய்வு செய்யும் எவருமேசொல்லமாட்டார்கள் .பிறகும் ஏன் அவர் ஜெயகாந்தனை முன்வைத்தார் ?அவரது மனதில் தனது இலக்கியப் படைப்புக்கான ஒரு முன்வரைவு உள்ளது . அதன் கூறுகள் சிலவற்றை அவர் ஜெயகாந்தனில் காண்கிறார் ….

மோகனரங்கன்: மெய்யுளில் அவர் அதற்காக முயற்சி செய்கிறாரே …

வேதசகாய குமார்: அம்முயற்சி ஒரு தோல்வி என எல்லாருக்கும் தெரியும் .கடைசிவரை அவரால் தன் மனத்தில் இருந்த வடிவததை உருவாக்கிக் காட்டமுடியவைல்லை .அதன் ஒரு கோட்டுச்சித்திரத்தை ம்னெய்யுள் தருகிறது . அதன்படி தளைய சிங்கம் கனவுகண்ட இலக்கியப்படைப்பானது எதிர்மறைத்தன்மை உடையதல்ல. விமரிசனத்தை மட்டும் முன்வைபதுமல்ல.பெரும் இலட்சியக்கனவுகளை முன்வைப்பது . கவிதையும் ,அறிவார்ந்த தருக்கமும் ,கறொஅனைவீச்சும் இணைந்த ஒன்று .அப்படிப்பார்க்கும்போது ஜெயகாந்தனிலுள்ள இலட்சியக்கனவின் அம்சமும் , அறிவார்ந்ததன்மையும் முக்கியமாக அவருக்கு பட்டது இயல்பே ….

நாஞ்சில்நாடன் : புதுமைப்பித்தனிலும் அந்த இலட்சியக்கனவு இல்லாமலில்லை …..

வேதசகாயகுமார்: அதை தளையசிங்கமும் ஒப்புக் கொள்கிறார். தமிழில் முதன் முதலாக இன்று மிகபரவலாக உள்ள பாரதி > புதுமைப்பித்தன் என்ற வரிசையை உருவாக்கியவர் தளையசிங்கம்தான் . அதற்குமுன்பு அந்த வரிசை அப்படியில்லை . நடுவேபலபெயர்கள் . கு ப ரா, பாரதிதாசன் என்று ஏராளமான பேர்கள் . புதுமைப்பித்தனில் உள்ள இலட்சியவாத அம்சம் தளையசிங்கத்தை கவர்ந்தேயிருந்தது. ஆனால் ஒரு புதுயுகத்தைக் கனவுகாணும் வலிமை பெரும் கலைஞனுக்கு இருக்கவேண்டுமென அவர் எதிர்பார்த்தார் .

வெங்கட் சாமிநாதன் : மோகன ரங்கன் கட்டுரையில் தளையசிங்கம் பேர்மனம் பற்றி சொல்லியிருப்பவையெல்லாம் வெறும் கனவுகளாக உள்ளன என்று சொல்வதை நான் ஏற்கிறேன் . பேர்மனம் என்றால் அவர் என்ன சொல்கிறார் என்று தெளிவாக புரியவில்லை . இன்றைய குழந்தையின் மனவளர்ச்சி நேற்றைய குழந்தையை விட மிக அதிகம் . இன்றைய வசதிகள் சூழல் கருவிகள் இதெல்லாம் பலமடங்கு அதிகம் .ஆனால் பேர்மனம் இதனால் உருவாகுமா ? இவை அளவுசார்ந்த வளர்ச்சிகள்.அது குணவயமான ஒரு வளர்ச்சி நிலை அல்லவா ? தளையசிங்கம் அதை எளிமைப்படுத்துகிறார் .அனைத்து மனிதர்களுக்கும் சாத்தியமான ஒன்றாக அதை உருவகிக்கிறார் . மனிதமனத்தின் உன்னத நிலைகள் பல சாத்தியம்தான் என நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவற்றுக்காக தேடி அவற்றை முயன்று அடையும் மனங்கள் சில மட்டுமே. ஏன் எப்படி அந்த தாகம் ஏற்படுகிறது என்றெல்லாம் விளக்கிவிடமுடியாது. அதை ஒருபோதும் அனைவருக்கும் உரிய ஒன்றாக மாற்ற முடியாது .அதை கற்பிக்கவோ பரப்பவோ முடியாது .தளைய சிங்கம் பேர்மனம் பற்றி சொல்லும்போது தாயத்து விற்பவனின் மொழியில் இதோ இதை வாங்கி கட்டிக் கொள் உனக்கு பேர்மனம் கிடைக்கும் என்பது போல பேசுகிறார் . அதற்கு யோக முறைகளையெல்லாம் சிபாரிசு செய்கிறார் .இதெல்லாம் எனக்கு மிக அபத்தமாகவே படுகிறது. ரஷ்யாவிலே கம்யூனிசம் ஸ்தாபித்தபோது சொன்னார்கள் உடைமை உணர்வில்லாத ஜனங்களை கல்வி மூலம் உருவாக்குவோம் என்று . என்ன ஆயிற்று ? இரண்டு தலைமுறை வந்ததே நடந்ததா ? அதைப்போலத்தான் இதுவும் .ஒரு கனவுக்கு ஏற்ப சமூகத்தை பயிற்றுவிக்கமுயற்சி செய்தால் நேர் எதிரான விளைவுகள் உருவாகும் அழிவுதான் ஏற்படும் .

ஜெயமோகன்: இங்கே ஒரு விஷயத்தை சொல்லவேண்டும் .தளையசிஙக்ம் புதுயுகத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய ஒரு சமுக்கசெயல்திட்டமாக முன்வைக்கவில்லை.அதை மானுடகுலத்தின் ஒரு பரிணாமகட்டமாகத்தான் குறிப்பிடுகிறார் .

மோகனரங்கன் : அன்னமய கோசம் ,பிராணமய கோசம் என்பதெல்லாம் தனிமனித உடல் சம்பந்தமானவை .அதை எப்படி சமூகத்துக்கும் சரித்திரத்துக்கும் போட்டு பார்க்கிறார் என்று புரியவில்லை .

வெங்கட் சாமிநாதன்: அவை சைவசித்தாந்தத்தின் கருத்துக்கள் ….

ஜெயமொகன்:இல்லை ,அது இந்திய சிந்தனைகளில் அனைத்திலுமே பழங்காலம் முதல் காணப்படும் கருத்துருவம் தான்.

வெங்கட் சாமிநாதன்: அப்படியா ?

சுவாமி வினயசைதன்யா: முதன்முதலாக உபநிஷதங்களில் இந்த உருவகம் வருகிறது .பிறகு எல்லா மரபுகளும் ஆயுர்வேதம் கூட இதை ஏற்றுக் கொண்டுள்ளன .

ஜெயமோகன் : மனித உடலையும் பிரபஞ்சத்தையும் ஒரே போல அளந்து வகுக்கும் மனப்போக்கின் விளைவு இது என ஊகிக்கிறேன் .மனிதன் என்பவன் பற்பல அடுக்குகளினாலானவன் .ஒன்று மனித உடல் .அது பருப்பொருளாலானது . அதுவே அன்னமய கோசம் .அதன் அடுத்த தளம் உயிர் .அது பிராணமய கோசம் . அதற்கடியில் மனம் இயங்கியபடியே உள்ளது .அது மனோமயகோசம் . அதற்கு அடியில் அம்மனையக்கத்தை அறியக்கூடிய ஒரு உட்பிரக்ஜை உள்ளது .அப்படியொன்று இருப்பதனால்தான் மன இயக்கத்தையே நம்மால் அறிய முடிகிறது .இதை ஆனந்தமயகோசம் என வகுக்கிறார்கள் .பலவிதமான வகைபாடுகள் உண்டு . யோகமரபின்படி மொத்தம் ஏழுவகையான தளங்கள் அடங்கியது மானுட இருப்பு . [அன்னம் ,பிராணன், அசுத்த மனம்,சுத்தமனம் ,அனந்தம், சின்மயம், சதானந்தம்,என ஏழு கோசங்கள் ] அந்த ஒவ்வொரு மனமும் இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு தளத்துடன் உறவு கொள்கின்றன என்று கருதினார்கள். அன்னம் அன்னமய உலகை அறிகிறது. பிராணன் பிராணமய உலகை. அவ்வாறு .அவ்வாறு பிரபஞ்சமும் ஏழுதளங்களாக உள்ளது என்றனர் . இங்கே மோகன ரங்கன் இம்மாதிரியான உருவகங்களை ஏற்க முடியாமலிருப்பதன் சிக்கலைப்பற்றி ச் சொன்னார்.இவற்றை உருவகங்களாக பார்க்காததன் பிரச்சினைதான் அது .ஆழ்மனம் , நனவிலி , தொல்படிமம் என்பதெல்லாம் கூட உருவகங்கள்தானே ? அவற்றை நாம் சாதாரணமாக கையாளவில்லையா ?

மோகனரங்கன் : என் பிரச்சினை அதுவல்ல. மரபான அர்த்தத்தில் இவற்றை புறவயமான கருதுகோள்களாக கருதவில்லை, அகவய உருவகங்களாகவே கருதுகிறார்கள் .அந்த அடிப்படையை எப்படி தளையசிங்கம் மாற்றிகிறார் என்பது தெளிவாக இல்லை என்பதே .

ஜெயமோகன்: தளையசிங்கம் இக்கருத்துக்களை பரிணாமத்தை விளங்கிக் கொள்ளும் ஒரு முறையாக பயன்படுத்துகிறார் . பூமியில் முதலில் உடல் உருவாயிற்று.பிறகு உயிர் .அதன் பின் மனம். இன்று மனதை மையமாக கொண்ட வாழ்க்கை இங்கு உள்ளது .இனி அழ்மனதை அல்லது மேல்மனதை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை உருவாகும் ஏன்கிறார் …..

வினயசைதன்யா: இங்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன் . உங்கள் தமிழ் பேச்சை நான் போதுமான அளவுக்கு பின்தொடரமுடியவில்லை . தளையசிங்கம் பற்றி ஜெயமோகன் அனுப்பிய குறிப்பை மட்டுமே நான் படித்துமுள்ளேன். உபநிடதத்தில் அன்னமய கோசம் பிராணமய கோசம் குறித்து வரும் இடத்தில் ஒரு சிக்கல் உள்ளது .வேதாந்த விவாதத்தில் இரு பெரும் தரப்புகளாக உள்ளது இது . பிருகுமுனிவரின் மகன் அவரிடம் மெய்மை என்றால் என்ன என்று கேட்கிறான் .அவர் ‘சென்று தவம் செய் ‘ என்கிறார் . அவன் தவம் செய்து அறிகிறான், உடலே மெய். அன்னம் அனத்தை உண்கிறது .அன்னத்தில் சேர்கிறது . ஆகவே அன்னமயகோசமே மெய் .அதை அவன் தந்தையிடம் சொல்லும்போது அவர் மேலும் தவம் செய் என்கிறார் . அவன் மேலும் தவம் செய்கிறான். அப்போது பிராணனே மெய் என உணர்கிறான் .அன்னமய உலகை இயக்குவது உயிரே . அதை அவன் தந்தையிடம் சொல்கிறான் . மேலும் தவம் செய் என்கிறார் தந்தை . அவன் தவம் செய்து மனமே மெய் என அறிகிறான் . அதை தந்தையிடம் சொல்ல அவர் மேலும் தவம் செய்ய சொல்கிறார் .இவ்வாறு அவன் நகர்ந்து சென்று மெய்யை அறிகிறான்.

இங்கு என்ன சிக்கல் வருகிறது என்றால் இந்த இடத்தை விளக்கியவர்கள் சிலர் ஆனந்தம் ஒன்றே மெய் என இது உணர்த்துவதாக பொருள் கொண்டனர். உடல் உயிர் மனம் முதலியவை திரைகளைப்போல என்றும் , அவற்றை ஒவ்வொன்றாக கிழித்து இறுதியில் உண்மையை சென்றடையவேண்டுமென்றும் சொன்னார்கள் . உண்மையில் பிருகு முனிவர் மகன் உடலை மெய் என அறிந்து வரும் போது அதை மறுக்கவில்லை .அப்படி மறுக்கும் சொல்லே உபநிடதத்தில் இல்லை . மேலும் போ என்று மட்டுமே சொல்கிறார் . இதை குறிப்பிட்டு சொல்லிய நாராயணகுரு அன்னமய கோசமும் பிராணமய கோசங்களும் எல்லாம் பொய்தோற்றங்களல்ல , அவை உண்மையின் மாறுபட்ட படிநிலைகள் மட்டுமே என்று சொன்னார் . உடலையும் பருப்பிரபஞ்சத்தையும் பொய் என நிராகரித்து அவற்றுக்கு அப்பால் உண்மையை தேடும் போக்கை அவர் ஏற்கவில்லை . தளையசிங்கம் எந்தப் போக்கை ஏற்கிறார் என்பதை கவனிக்கவேண்டும் ….

ஜெயமோகன்: என் வாசிப்பில் கிடைத்தவரை பார்த்தால் தளையசிங்கம் பருப்பொருளை நிராகரிக்கும் மாயவாதம் நோக்கிபோகவில்லை .

தேவதேவன்: சீர்திருத்தம் செய்ய முற்படுவதும் சரி , வாழ்க்கையைப்பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் பெரும் கனவுகளை உருவாக்கிக் கொள்வதும் சரி, ஆன்மீகத் தேடலுக்கு எதிரானவையே. நான் புரிந்துகொண்டவரை ஆன்மீகம் அடிப்படையில் ஒரு முடிவற்ற தேடலே . அது எதிலுமே முழு உறுதியும் திருப்தியும் கொள்வது இல்லை . தளையசிங்கம் என்ன செய்கிறார் ?பெரும் கனவுகளில் மூழ்குகிறார். சமூகத்தையும் வாழ்க்கையையும் அதற்கேற்ப மாற்றிவிடும் முய்ற்சியில் ஈடுபடுகிறார் . யோசித்துப் பார்த்தால் இதற்குப்பின்னால் உள்ள அகங்காரம் என்ன என்று தெரியும் .அந்த அகங்காரம் ஆன்மீக தேடலுடையவனிடம் ஒருபோதும் இருக்காது .இதுதான் தளையசிங்கம் அடைந்த பெரியதடை என்று படுகிறது.

அன்பு வசந்த குமார் : அவருடைய இலக்கும் சரி ,வழிமுறையும் சரி ,மிக தூலமாக உள்ளன . அவற்றில் ஒரு யதார்த்தவாதியின் மனச்சித்திரம்தான் தெரிகிறது .அக்கனவின் வீச்சில்தான் கற்பனைபோக்கு உள்ளது . என் பார்வையில் அவரது முக்கியமான பிரச்சினையே அவரது அணுகுமுறையில் உள்ள முரண்பாடுதான்.அவர் பேசுவது மெய்யியல் விடுதலை பற்றி.ஆனால் அவர் அதற்குரிய வழிமுறையாக கருதியது அரசியல் .

தேவகாந்தன்: அவர் ஈழத் தேர்தல்களில் கூட பங்குபெற்றிருக்கிறார் ….

நாஞ்சில்நாடன்: ஆகவே தளையசிங்கம் ‘ ‘ ‘ ‘அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக எழுத்தாளர்களும் கலைஞர்களும் இல்லாமலிருக்க வேண்டுமென்றால் அவர்களே அரசியல்வாதிகளாக இருக்கவேண்டும் ‘ ‘ என்று மெய்யுளில் சொல்லும்போது நேரடியான அரசியலை மட்டுமே குறிப்பிடுகிறார் என்பது தெளிவு . என்னை பொறுத்தவரை எழுத்தாளர்கள் அரசியலில் நேரடியாக ஈடுபட்டால் இன்னும் குழப்பம் தான் வரும் .அதற்கேற்ற தெளிவு அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை . இலக்கிய விவகாரங்களிலேயே பார்க்கிறோமே . எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் மூலம் மறைமுகமாக கருத்தியல் சார்ந்து ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த முடியும் . அதுகூட எனக்கு சந்தேகமாகத்தான் உள்ளது .தளையசிங்கம் சொல்லும் பலவிஷயங்கள் இப்படி வெற்றுக் கனவுகளாகவே உள்ளன.

மோகனரங்கன் :அந்தக் கனவுகளை அவர் கலையாக மாற்றியிருந்தால் அதன் மதிப்பே வேறு . அதைத்தான் நான் சொல்லவிரும்பினேன்.

இரவு பத்து மணிக்கு அமர்வை முடித்தோம் . குளிர் ஏறிவிட்டிருந்தது . ஆனால் அதன் பிறகும் அவரவர் அறைகளில் ஓரிருவராக கூடி அமர்ந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் . கம்பிளி முதலியவை கிடைத்தனவா என்று கேட்க நான் அறைகளுக்குள் சென்ற போது நாஞ்சில்நாடன் , அன்பு வசந்தகுமார் ,தாமரை ஆறுமுகம் ,வேதசகாய குமார் ஆகியோர் ஒரு குழுவாகவும் தேவகாந்தன், வெங்கட்சாமிநாதன் ஆகியோர் தனியாகவும் , மோகனரங்கன் சூத்ரதாரி மற்ற இளைஞர்கள் தனிகுழுவாகவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன் . எல்லாருமே மிகவும் களைத்து போயிருந்தார்கள் .ஆனால் யாருமே தூங்க விரும்பவுமில்லை. காலையில் எழுந்து காலைநடை போகவேண்டும் என்று சொல்லி அவர்களிடம் தூங்குமாறு கேட்டுக் கொள்ளவேண்டியிருந்தது . இலக்கியவாதிகளுக்கு ஒருபோதும் பேசி அலுப்பதில்லை .

[இரண்டாம் நாள் அமர்வு தொடரும்]

***

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள்

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue

ஜெயமோகன்


ஒன்று

மு .தளையசிங்கத்தின் படைப்புலகம் குறித்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வது குறித்து அறிவித்து ஒரு வருடமாகபோகிறது . சமீபத்தில்தான் ஊட்டியில் ,மே மாதம் நான்கு முதல் ஆறு வரை விவாதக்கூட்டம் ஒன்றை சொல் புதிது மும்மாத இதழின் பொறுப்பில் , குரு நித்யா ஆய்வரங்கம் சார்பில் , ஏற்பாடு செய்தோம் .கூட்டம் சொல் புதிதின் கூட்டங்கள் வழக்கமாக நடப்பதுபோல மிக நட்பார்ந்த விதத்தில் , தீவிரமான விவாதங்களுடன் நடந்தது .

தடைகள், பிரச்சினைகள்

உண்மையில் சென்ற நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டது இது . ஊட்டியின் தட்பவெப்பநிலை மிக மோசமாக இருந்ததால் முதலில் ஒத்திப்போடப்பட்டது . பின்பு ஒரு மாதக்காலம் ஊட்டி – கோவை பாதை பழுதடைந்ததனால் தடை ஏற்பட்டது . பின்பு ‘சொல் புதிதை ‘ புதிய சூழலில் அச்சிடும் நிலை ஏற்பட்டது. அதில் வெளியிடத் திட்டமிட்டிருந்த தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் குறித்த ஆய்வுகளுக்கான பயணங்கள் ,அதன் உபரி பக்கங்கள் ஆகியவை காரணமாக நிதிநிலை ஒரு பிரச்சினையாக ஆயிற்று . ஆய்வரங்கை நடத்த வேண்டுமென மிக ஆர்வமாக இருந்த தளையசிங்கத்தின் இளம் வாசகரான ஆர் .பிரபு [மயிலாடுதுறை] தன் சேமிப்பில் இருந்து ஆகும் செலவில் பாதியை அளித்தார் . ஊட்டி நாராயண குருகுலத்திலிருந்து டாக்டர் சுவாமி தம்பான் கூப்பிட்டு கூட்டம் நடத்தலாமே என்ற்று ஊக்குவித்தார். ஊட்டி நண்பர் நிர்மால்யா [கேரள தலித் பே ‘ராளி அய்யன்காளியின் வரலாற்றை எழுதியவர் , மொழிபெயர்ப்பாளர் ] ஆர்வம் காட்டியதுடன் செலவில் ஒரு பகுதியையும் ஏற்பதாகச் சொன்னார் . மீதி செலவை அருண்மொழி நங்கை அவளது சேமிப்பில் இருந்து அளித்தாள் .

கூட்டம் உறுதிசெய்யப்பட்ட பின்பு மேலும் பிரச்சினைகள் . நித்யா ஆய்வரங்குகளை முன்பு ஹொகேனெகல்லில் ஏற்பாடு செய்தவரான நண்பர் தங்கமணி [மொரப்பூர் ] அவர்களின் திருமணம் மே ஆறாம்தேதி . இன்னொரு நண்பரான முகையூர் அசதா[எழுத்தாளர் ]வின் திருமணமும் ஆறாம்தேதி . ஆய்வரங்கின் முக்கிய உறுப்பினர்களான நண்பர் பாவண்ணன் , பிரேம் ஆகியோர் வரமுடியாத நிலை . முக்கியமாக , ஆய்வரங்கின் புரவலரான பிரபு பொறியியல் தேர்வுகள் நீட்டிக்கப்பட்டமையால் வரமுடியாமல் ஆயிற்று . தேதியை மேலும் நீட்டிக்க முடியாத நிலையில் கூட்டத்தை நடத்துவது என முடிவெடுத்தாலும் சற்று சோர்வு இருந்தது .

முக்கியமான தடை தளைய சிங்கத்தின் நூல்கள் கிடைக்கவில்லை என்பதே . ஒரே பிரதியில் இருந்து ஒளிநகல் செய்து அனைவருக்கும் அளிக்க நேர்ந்தது . அதற்கான செலவே அரங்கின் முக்கியச் செலவாக இருந்தது . வேதசகாயகுமார் , ஜெயமோகன் , சரவணன் ஆகியோருடைய கட்டுரைகளை ஒளிநகல் செய்து அனைவருக்கும் முன்கூட்டியே அனுப்பினோம். தளைய சிங்கத்தின் கருத்துக்கள் வாழ்க்கைக்குறிப்பு ஆகியவற்றை 40 கைப்பக்க அளவில் மலையாளத்தில் மொழியாக்கம் செய்து குருகுலப் பிரம்மசாரிகளுக்கும் சுவாமி வினய சைதன்யாவிற்கும் அனுப்பினேன். கூட்டங்களில் கட்டுரையை படிப்பது சோர்வுதருகிறது. ஆகவே அவற்றை சுருக்கமாக பேச வைத்தோம் . கூட்டத்துக்கு இடம் குருகுலத்தால் இலவசமாக அளிக்கப்பட்டது . சமையல் பொருட்கள் வாங்கி அளித்ததும் ,கம்பிளிபோர்வைகள் வாடகைக்கு எடுத்ததும் மட்டுமே எங்கள் செலவாக இருந்தது . நிர்மால்யா கடுமையாக உழைத்து ஏற்பாடுகள் செய்தார் . குருகுலத்தின் பிரம்மசாரிகள் சமையல் செய்து உதவினார்கள் .

ஏன் தளையசிங்கம் ?

நித்யா கருத்தரங்கம் தனிப்பட்ட எழுத்தாளர்களைப்பற்றி நடத்தும் மூன்றாவது அரங்கு இது. பிரபஞ்சன் , நாஞ்சில் நாடன் ஆகியோரைப்பற்றி ஆய்வரங்குகள் நடத்தப்பட்டுள்ளன . தளையசிங்கத்தைப் பற்றி பேச வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட தெளிவான காரணங்கள் உண்டு . சொல் புதிதில் ஆரம்பம் முதலே தத்துவ அறிவியல் கட்டுரைகள் வெளியிட்டு வருகிறோம் .தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் இவ்விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டதேயில்லை . கலை இலக்கியம் ஆகியவற்றுக்கும் அறிவியல் தத்துவம் ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி மீண்டும் மீண்டும் நித்யா பேசியிருக்கிறார் . நவீன அறிவியல் இன்று தத்துவப் பிரச்சினைகளை நேரடியாகக் கையாள்வதாக ஆகியுள்ள நிலையில் இத்தொடர்பை மேலும் அழுத்திக் காட்டவேண்டியுள்ளது . அறிவியல் தத்துவம் இலக்கியம் மெய்யியல் ஆகிய தளங்களை தொட்டுப்பேசும் ஒரே தமிழ் முன்னோடிச் சிந்தனையாளர் தளைய சிங்கம் மட்டுமே . பிறரைப்போல அவர் மேற்கத்திய சிந்தனைகளை தமிழுக்கு இறக்குமதி செய்ய முனையவில்லை . அச்சிந்தனையாளர்கள் அங்கு எதிர்கொண்ட அதே பிரச்சினைகளை தமிழ் சூழலில் நின்று எதிர்கொள்ள முயல்கிறார் . அதில் அவர் அடைந்த வெற்றியும் தோல்வியும் நமக்கு முக்கியமானவை .

தமிழில் தளையசிங்கம் உரிய முறையில் கவனிக்கப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை .இதற்குக் காரணம் தளைய சிங்கம் அடிப்படைகளை பற்றி பேசியவர் என்பதே. தமிழில் இலக்கிய விமரிசனம் பலவீனமாக உள்ளது , விமரிசன மொழி இல்லை போன்ற குறைகள் பொதுவாகச் சுட்டப்படுபவை . இலக்கியப்படைப்புகளைப்பற்றிய பேச்சுகளில் பொத்தாம் பொதுவான கூற்றுக்கள் வெறும் அரசியல் நிலைபாடுகள் , அக்கப்போர்கள் மட்டுமே இங்கு காணக் கிடைக்கின்றன .இதற்குக் காரணம் இங்கு அடிப்படைகளைப்பற்றிய விவாதம் நடப்பதில்லை, பெரும்பாலோர் அடிப்படைகளை பற்றி ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள முயல்வதேயில்லை என்பதே. பலகாலமாக இங்கு தரமான இலக்கியம் குறித்து பேசப்படுகிறது . ஆனால் தரம் என்றால் என்ன என்ற வினாவை எவரும் எழுப்பிக் கொண்டதில்லை. இலக்கிய அனுபவம் என்பது என்ன , அழகு என்பது எந்ன என்பது போன்ற கேள்விகள் கூட எழுந்தது இல்லை. இவற்றை புறவயமாக சொல்ல முயலும்போது தத்துவத்தின் எல்லைக்குள் இலக்கியம் நகர்ந்துவிடுகிறது .

தத்துவமே இலக்கிய விமரிசனத்தை தருக்கபூர்வமாக ஆக்குகிறது . இலக்கியவிமரிசனத்தின் மொழி தத்துவத்தின் தனிமொழியின் நகலேயாகும்.சமகால சிந்தனைகளில் இருந்தே இலக்கியவிமரிசனம் தன் விமரிசன /ஆய்வு உபகரணங்களைப் பெற முடியும். தமிழில் அடிப்படைகள் பற்றிய தேடல் இல்லாமையால் தத்துவ நோக்கும் உருவாகவில்லை , விமரிசன மொழியும் உருவாகவில்லை . இப்போது நாம் சுயமான ஒரு தேடலை அடிப்படைகளை முன்வைத்து செய்ய முயன்றால் நம் முன் உள்ள ஒரே மூன்னுதாரணம் தளையசிங்கமே . அடிப்படைகளை வகுத்துக் கொள்ள அவர் பல கோணங்களில் முயல்கிறார்.அதை நாம் ஏற்கலாம் ,மறுக்கலாம் ,மேலும் முன்னேறலாம் .ஆனால் அவர் மிக முக்கியமான ஒரு துவக்கப்புள்ளி.

சமீபகாலம் வரை நவீனத்துவம் உருவாக்கிய இலக்கிய அணுகுமுறையே இங்கு வலிமையாக இருந்தது . இலக்கியவாதியின் இலக்கு அழகியல் முழுமை கொண்ட படைப்பை உருவாக்குவது மட்டுமே ,இலக்கியப்படைப்புக்கு சமூகப் பங்களிப்பு என்று ஏதுமில்லை என்பது போன்ற கருத்துக்கள் இங்கு வலுவாக இருந்தன. இன்று சமூகம் கருத்துக்களாலேயே கட்டப்பட்டுள்ளது என்றும் , அக்கருத்துக்கள் ஆழ்மன அளவில் படிமங்களாக தொகுக்கப்பட்டுள்ளன என்றும் கருதப்படுகிறது .ஆழ்மனதுடன் உரையாடும் இலக்கியம் சமூகக் கருத்தியலிலும் ,அதன் மூலம் சமூக அமைப்பிலும் ஆழமான தாக்கத்தை நிகழ்த்துகிறது எனப்படுகிறது . இன்றைய எழுத்து இவ்வகையில் சமூகத்தின் ஆழ்மனக்கட்டமைப்பு நோக்கி பேச முற்படுகிறது . அழகுப்பொருளாக இலக்கியம் இன்று கருதப்படுவது இல்லை .இந்தக் கோணத்தில் இலக்கியவாதியின் சமூகப் பொறுப்பு என்ன , அதை அவன் எப்படி வெளிப்படுத்த முடியும் என்பதெல்லாம் முக்கியமான பிரச்சினையாக ஆகிறது .

ஆகவே தன் அழகியலையும் அறத்தையும் இலக்கியவாதி எந்த அடிப்படையில் அமைத்துக் கொள்வது என்ற வினா இன்று மேலும் முக்கியப்படுகிறது. அவன் வெறும் அழகு உற்பத்தியாளனல்ல. அவன் பொறுப்பற்ற அராஜகவாதியாக இருக்கமுடியாது .தன் செயல்கள் மீதும் விளைவுகள் மீதும் அவனுக்குத் தெளிவான புரிதல் இருக்கவேண்டும் . அதாவது இலக்கியவாதியின் மெய்யியல் என்ன என்பது இன்று ஒரு முக்கியமான கேள்வி . அக்கேள்வியைத் துவங்க மிகப் பொருத்தமான முன்னோடி இலக்கியவாதி தளையசிங்கம் தான் .

பொதுவாக ஈழ எழுத்தாளர்களும் விமரிசகர்களும் தமிழ்நாட்டு இலக்கியத்தை குறித்து காட்டிய ஆர்வத்தையும் முன்வைத்த விமரிசன எதிர்கொள்ளலையும் தமிழ் எழுத்தாளர்களும் விமரிசகர்களும் முன்வைத்தது இல்லை . இது குறித்து நானும் எம் வேதசகாய குமாரும் பலமுறை விவாதித்தது உண்டு. அதன் விளைவே வேதசகாய குமார் ‘காலம் ‘ இதழில் எழுதிய ஈழச் சிறுகதைகள் குறித்த கட்டுரை . ஈழச்சிறுகதைகளை அங்குள்ள பார்வைக்கு நேர் மாறான அழகியல் சார்ந்த அணுகுமுறையுடன் மதிப்பிட்டு ஒரு விமரிசனச் சட்டகத்தினை உருவாக்கும் அக்கட்டுரை முக்கியமான முன்னோடி முயற்சி .அதில் ஈழ இலக்கியத்தின் முதன்மையான முன்னோடியாக தளையசிங்கத்தையே அவர் முன்வைக்கிறார் .அவ்வகையிலும் அவரைப்பற்றி பேசவேண்டிய அவசியமுள்ளது என்று பட்டது . ஆகவேதான் இவ்விவாதத்தை திட்டமிட்டோம் .

இரண்டு

முதல்நாள் அமர்வு . 4/5/2002 காலை

ஊட்டியில் இது உச்ச சீசன் .பேருந்துகள் நெரிசலால் தாமதம் .ஆகவே பலர் வந்துசேர்வதற்கு பிந்திவிட்டது . நானும் அருண்மொழியும் வேதசகாயகுமாரும் சென்ற பேருந்து சரியான ஓட்டை .கிளம்பும்போதே நல்ல மழை . உள்ளே சற்று குறைவாக மழை . முன் கண்ணாடி துடைப்பான் வேலை செய்யவில்லை . ஆகவே ஊட்டியில் இரண்டுமணி நேரம் தாமதமாக காலை எட்டுமணிக்கு சென்றிறங்கினோம் . மழைமூட்டமாகவும் குளிராகவும் இருந்தது. எங்கும் சுற்றுலாக்கூட்டம் . குருகுலம் அமைதியாக தனித்து இருந்தது . ஏற்கனவே வெங்கட் சாமிநாதன் , தேவகாந்தன்,நாஞ்சில் நாடன் , கீதாஞ்சலி பிரியதரிசினி , சூத்ரதாரி, க.மோகன ரங்கன் , அன்பு வசந்தகுமார் , [தாமரை ]ஆறுமுகம் , ஆர் பி ராஜநாயகம் ,ஆகியோர் வந்து சமையலறையில் டா குடித்துக் கொண்டிருந்தனர் . சரவணன் , ப சிவகுமார் ஆகியோர் சற்றுப் பிந்தி வந்தனர் . மதிய உணவுக்க்கு பின்பு முதல் அமர்வை வைத்துக் கொள்ளலாம் , அதுவரை வெறுமே பேசி அறிமுகம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்தோம் . சிலர் ஒருவருக்கொருவர் முதல்முறையாகச் சந்திப்பவர்கள் .உற்சாகமான உரையாடல்களாக இருந்தது . இருண்ட வானம் மேலும் இருட்டி மழை கொட்டியது .நல்ல குளிரில் நனைந்து நடுங்கியபடி முத்துராமன் வந்து சேர்ந்தார்.தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் கடும் கோடைகாலம் .ஆகவே பலருக்கும் குளிர் பிடித்திருந்து .

முதலில் தளையசிங்கத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதன் தேவை குறித்து நான் விளக்கினேன் . ஈழ எழுத்துக்களைப்பற்றி இங்கு பேசும்போது உள்ள சிக்கல்களைப்பற்றியும் சொன்னேன். ஈழ இலக்கியச்சூழலில் தமிழகம் குறித்த அச்சமும் அவநம்பிக்கையும் உண்டு. தமிழகத்தில் தங்கள் எழுத்துக்களுக்கு புறக்கணிப்பு இருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்.தமிழக எழுத்துக்களே கூட தமிழகத்தில் புறக்கணிப்பைத்தான் பெறுகின்றன என்பதை அவர்கள் கருத்தில் கொள்வது இல்லை . அதேபோல இங்கிருந்து கடுமையான விமரிசனங்கள் வந்தால் அதை ‘பெருநில மனோபாவம் ‘ என சொல்ல ஈழ எழுத்தாளர்கள் தயங்குவது இல்லை. இங்கு எல்லா தமிழ் எழுத்தாளர்களைப்பற்றியும் கடுமையான விமரிசனக்களே உள்ளன என்ற உண்மையையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை . இந்நிலையில் இந்திய இலக்கியவாதிகளுக்கு சிலசிக்கல்கள் ஏற்படுகின்றன . அவர்களில் புகழ்பெற்றவர்கள் சிலர் ஈழ இலக்கியம் இந்தியாவுக்கே முன்னோடி ,அடுத்தநூற்றாண்டின் விடிவெள்ளி என்றெல்லாம் சொல்லிவிடுகின்றனர் . நம்பாவிட்டாலும் அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது . இந்நிலையில் தீவிரமான விமரிசனத்தை முன்வைப்பது மேலும் சிக்கலாகிறது .

அத்துடன் ஈழ இலக்கியத்தின் இயல்பு வேறு இந்திய தமிழிலக்கியத்தின் இயல்பு வேறு . அவர்கள் வாழ்க்கையின் நேரடியான அனுபவங்களுக்கு மிகவும் அருகாமையில் இருக்கிறார்கள் . ஆகவே தீவிரம் அங்குள்ள எழுத்துக்கு முதல் இயல்பாக உள்ளது . இலக்கியத்தை ஒரு நேரடியான சமூக அரசியல் செயல்பாடாகக் கொள்பவர்களும் அங்கு அதிகம். நமது படைப்பாளிகள் பெரும்பாலோர் நேரடியான செயல்பாடுகளில் அவநம்பிக்கை உடையவர்கள் . நமது இலக்கியப்படைப்புகளோ சூட்சுமத்தை முதன்மையாகக் கொண்டு இயங்குபவை .அவர்களுடைய படைப்பில் நுட்பங்களை எதிர்பார்த்து நாம் ஏமாற்றம் கொள்வது போலவே நமது படைப்பில் நேரடியான வேகத்தை எதிர்பார்த்து அவர்களும் ஏமாற்றம் அடைகிறார்கள் .இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் நெருங்கிவரவேண்டியுள்ளது . அதற்கு ஒருவரை ஒருவர் மனம் திறந்து விமரிசிக்கவும் வேண்டியது அவசியம் . இன்றைய சூழலில் நாம் செய்ய வேண்டியது அவர்கள் படைப்புகளைப்பற்றி நாம் என்ன எண்ணுகிறோம் என்பதை எந்த தயக்கமும் இல்லாமல் சொல்வதேயாகும் .அதனால் சிலர் புண்படகூடும்தான் .ஆனால் இலக்கியம் நட்புறவை வளர்க்கும் ராஜதந்திரக் கலை அல்ல . என்னைப் பொறுத்தவரை என் கருத்தை கடுமையாகவே முன்வைத்திருக்கிறேன் என்றேன்

பின்பு நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கேற்ப தளையசிங்கத்தின் தனிப்பட்ட வாழ்க்கை ,படைப்புகள் உருவான சூழல் குறித்து ஓர் எளிய அறிமுகம் அளித்தேன். ஆசியராக வாழ்க்கையைத் தொடங்கிய தளையசிங்கம் தன் குருவாகிய நந்தகோபாலகிரியை கண்டதன் பிறகு சமூகப் போராட்டத்தையும் ஆன்மீகத் தேட்டத்தையும் இணைத்துக் கொண்டார். புங்குடு தீவு கண்ணகியம்மன் கோயிலில் நன்னீர் கிணறுகளில் தலித் மக்களுக்கு நீர் பிடிக்கும் உரிமைக்காக முன் நின்று போராடினார் . அதன் பொருட்டே அவரது மரணமும் நிகழ்ந்தது . அதன் பின்னணி குறித்து தேவகாந்தன் சொன்னார் . பொதுவாக அது அனைவருக்குமே முக்கியமான ஒரு விஷயமாக தோன்றியது . தன் நம்பிக்கைகளின் படி வாழ்வதென்பது எழுத்தாளனுக்கு எப்போதுமே பெரிய சவால் தான் என்றார் நாஞ்சில்நாடன் .அதுவும் இலட்சிய வாதிகள் அப்படி வாழ முயல்வது பெரிய சிக்கல்களுக்கு இட்டுசெல்லும் . அவ்வகையில் தளையசிங்கத்தின் தியாக வாழ்க்கை அவரது எழுத்துக்களை வெறும் கனவுகள் என உதாசீனப்படுத்த முடியாத நிலையை உருவாக்குகிறது என்றார் .

இலக்கியத்தால் சமூக மாற்றம் சாத்தியமில்லை , அழகியல் ரீதியான ஒரு கச்சிதமான முழுமையான வடிவத்தினை அடைவதே இலக்கியத்தின் சவால் என்று நவீனத்துவம் நம்பியது , அந்நம்பிக்கை இல்லாதவர் தளையசிங்கம் என்றார் மோகன ரங்கன் . அந்நம்பிக்கையே தமிழக நவீனத்துவபடைப்பாளிகள்பலரிடம் இயங்கியது . அந்நம்பிக்கையுடன் இயங்கிஉஅ போதிலும்கூட அவர்களில் எவருமே வெறும் வடிவ விளையாட்டையோ மொழியாட்டத்தையோ ஆடியவர்களல்ல .அவர்களை மீறி அவர்கள் கலையில் சமூகப் பொறுப்பும் அறச்சீற்றமும் வெளிப்படவே செய்தது அது சிறந்த இலக்கியப்படைப்புகள்பலவற்றை உருவாக்கியது .தளையசிங்கம் முதலில் நவீனத்துவத்துக்கு முந்தைய காலகட்டத்தை சார்ந்தவராக இருந்தார் . கதைகளில் தன் தரப்பை முன்வைத்து பேச முயன்றார் . அக்கருத்தின் எல்ல்லையை மீறி அவருடைய கலை நகர்ந்தபோது அவை சிறந்த படைப்புகளாயின. அதன் பின் அவரது படைப்புகள் நவீனத்துவ சாயல் கொண்டன. பிறகு தன் பாதையில் அதைக் கடந்து சென்றார் . இலக்கியத்தின் சமூகப்பங்களிப்பு என்ன என்ற கேள்வி எப்போதுமே தளைய சிங்கத்திடம் இருந்துகொண்டிருந்தது . ஆகவே அவரால் கடைசி வரை மார்க்ஸியத்தின் முக்கியத்துவத்தை உதறமுடியவில்லை . மிகவும் ஆன்மீகமான தளங்களை நோக்கிச் சென்றபோதும் கூட அவர் மார்க்ஸிய அடிப்படைகளை கைவிடவில்லை என்று எம் வேதசகாயகுமார் சொன்னார் .ர் .

அரங்கின் முதல் கட்டுரை யை ‘சரவணன்1978 ‘ முன்வைத்தார் . [ சொல் புதிதின் ஆசிரியர் . தமிழ் முதுகலை பட்டதாரி . பிறந்த வருடத்தை சேர்த்து புனைபெயரை உருவாக்கியுள்ளார் ] சரவணனின் கட்டுரை தளையசிங்கத்தின் கதைகளின் அமைப்பையும் சாராம்சத்தையும் முன்வைத்து அவரை அறிய முயல்வது . தளையசிங்கம் அடிப்படையில் தத்துவ பிரச்சாரகரே என்பதை சரவணன் ஏற்கிறார். ஆனால் தத்துவப்பிரச்சாரகர்கள் பொதுவாக தங்கள் தரிசனத்துக்கு ஏற்ப தங்கள் கதைசந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்வார்கள் .தங்கள் மையத்தை அழுத்தும் முகமாக கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களை தொகுத்துக் காட்டுவார்கள் . தளைய சிங்கத்தின் துவக்க காலக் கதைகள் இப்பலவீனங்களுக்கு ஆட்படாமல் தனித்து நிற்கின்றன என்றார் சரவணன்.

தளையசிங்கம் மனித மன ஓட்டங்களை சித்தரிக்கும் போது அவற்றை மிக சிக்கலான பன்மை இயக்கங்களாகவே காட்டுகிறார் , ஒற்றைப்படையான நீட்சியாக அல்ல என்று சரவணன் அவரது கோட்டை ,தேடல், வீழ்ச்சி போன்ற கதைகளை முன்வைத்து விரிவாக விளக்கினார் .இக்கதைகளில் மனம் முரண்பட்டு ,மோதிக் கொண்டபடி முன்னகர்கிறது. எப்போதுமே மனதின் நுட்பமான ஒரு பகுதி குறிப்புணர்த்தப்பட்டு அடியில் மறைந்துள்ளது.தளையசிங்கம் தன் கதைகளில் முதல்கட்டத்தில் எளிய பாசாங்குகள் , இரட்டைவேடங்கள் ஆகியவற்றின் அடியில் உள்ள அப்பட்டமான உண்மையை வெளியே இழுத்துப்போடுகிறார். கோட்டை இதற்கு சிறந்த உதாரணம் . அடுத்த கட்ட கதையில் அந்தப்பட்டமான கசக்கும் அந்தரங்க உண்மைக்கு அப்பால் ஆன்மீகமான ஒரு பேருண்மை உள்ளதை சூட்சுமமாகத் தொட்டுக் காட்டுகிறார் . முதலில் அவர் ஒழுக்கமறுப்பாளராக [amoral ] தன்னை வெளிக்காட்டுகிறார் .பின்பு அதனூடாக ஆன்மீகமான தளங்களுக்கு சென்று சேர்கிறார். இவை அவரது வளார்ச்சி நிலைகள் . இந்த வளர்ச்சியே அவரை தமிழின் முக்கியமான படைப்பாளியாக ஆக்குகிறது என்றார் சரவணன்.

வேதசகாய குமார் : சரவணன் தன் கட்டுரையில் தளைய சிங்கம் இதை சொல்கிறார் , இதை வலியுறுத்துகிறார் என்று வகுத்துக்காட்ட முயல்வது கல்வித்துறை சார்ந்த விமரிசன மரபின் பாணியில் உள்ளது . ஒரு படைப்பாளி எதையுமே வலியுறுத்தவில்லை என்று கொள்வதே சரியான வாசிப்பாக இருக்க முடியும் . நாம் எதை வாசிக்கிறோமென்பதையே நாம் சொல்லவேண்டும் என்றார். தளையசிங்கம் மன ஓட்டத்தை சித்தரிக்கும்போது ஒருங்கிணைவுள்ள சிந்தனையாக காட்டாமல் சிதறிப்பரக்கும் எண்ணத்துணுக்குகளாகவே எழுதுகிறார் . இது முக்கியமான கலைஞனை இனம் காட்டுகிறது என்று சரவணன் சொன்னது ஏற்புடையதே . ஆனால் அதன் மூலம் அவர் ஓர் அகவய அனுபவத்தையே தர முயல்கிறார் . மனம் பற்றிய கோட்பாடுகளையல்ல .

தேவதேவன்: தளையசிங்கத்தின் கதைகள் உள்ளுணர்வின் தூண்டுதலால் உருவானவை என்பதை விட அவை கருத்துக்களாக முதலில் தரிக்கப்பட்டவை என்று சோல்வதே சரியாக இருக்கும் . அவரது கதைகளை கருத்துக்களாக சுருக்கிவிடுவது சாத்தியமாகவே உள்ளது .

மோகனரங்கன்: எல்லா கதைகளும் அப்படி இல்லை . புதுயுகம் பிறக்கிறது என்ற தொகுப்பில் உள்ள ஆரம்ப கால கதைகள் ஆழமான அகத்தூண்டல் உள்ள கதைகளாகவே உள்ளன. போர்பறை தொகுப்பிலும் பிறகும் உள்ள பிற்காலக் கதைகள் தான் கருத்துக்களை மையமாக கொண்டு இயங்குபவை .

தேவதேவன் : கருத்துக்களை வலியுறுத்தும் பொருட்டோ ,பிரச்சாரம் செய்யும் பொருட்டோ எழுதப்பட்ட கதைகள் அவை என நான் எண்ணவில்லை . அவை கருத்தாக முதலில் தரிக்கப்பட்டவை . அதாவது கேள்விக்கு பதிலாக பதிலே அவற்றின் ஆதாரம் . அந்த கருத்தை அவர் எளிமைப்படுத்தவில்லை . வலியுறுத்தவுமில்லை . அதை அனுபவமாக ஆக்குகிறார் .அந்த அனுபவத்தின் வீச்சு அக்கருத்தை பற்பல தளங்களுக்கு நகர்த்திச் செல்கிறது .அந்தக்கருத்து சில கதைகளில் அவ்வனுபவத்தளத்தின் மூலமாக ஒரு தரிசனமாகவே வளர்ந்து விடுகிறது . உதாரணமாக ரத்தம் , தொழுகை போன்ற கதைகள் .மோகனரங்கன் குறிப்பிட்ட பிற்காலக் கதைகளில் அவ்வளர்ச்சி நிகழவில்லை . அவரது நல்ல கதைகள் கூட அவற்றின் கலைத்திறனால் முக்கியத்துவம் அடைபவை அல்ல ,அவற்றின் தரிசனப் பண்பால் முக்கியத்துவம் அடைபவையேயாகும்.

வேதசகாய குமார் : அதற்குக் காரணம் தளையசிங்கம் எப்போதுமே ஒரு தத்துவ வாதியாகவும் செயல்படுகிறார் என்பதுதான் . ஆழமான ஒரு தத்துவக்கேள்வியை எழுப்பி ஒரு நிலைகுலைவை உருவாக்கி வாசகனை சிந்திக்கவைத்தால் கலையின் வேலை முழுமையடைகிறது .ஆனால் தத்துவவாதி அப்படி போய்விட முடியாது . அவனுக்கு விடையும் வேண்டும் . புதுமைப்பித்தனின் அகலிகை கதைக்கு தளையசிங்கம் ஆற்றிய எதிர்வினையே அவரது அகலிகை கதை . புதுமைப்பித்தன் தன் கதையில் நமது மனசாட்சியை நோக்கியும் நமது வரலாற்றை நோக்கியும் ஆழமான கேள்வியை எழுப்பிவிட்டு நின்றுவிடுகிறார் . கெளதமனுக்கும் அகலிகைக்கும் தங்கள் கேள்விகளுக்கு விடையே கிடைக்கவில்லை .ஆனால் தளைய சிங்கம் மேலே செல்கிறார் . கதையை வளர்த்தி சென்று அகலிகைக்கு ஆன்மீகமான விடை கிடைக்கசெய்கிறார் . இதுதான் கலைஞனுக்கும் தளையசிங்கத்துக்கும் இடையேயான வேறுபாடு . ஆனால் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று உண்டு .புதுமைப்பித்தனின் கதை சிறுகதைக்குரிய அழகியல் முழுமையுடன் கலைவெற்றியை அடைகிறது . தளையசிங்கத்தின் கதை தத்துவ விவாதமாக மாறி தேவைக்குமேல் நீண்டு ஒரு சாதாரணமான கதையாக ஆகிவிட்டது .அவரது கதையின் முக்கியத்துவம் அவர் முன்வைத்த ஒட்டுமொத்த தத்துவப்பார்வைமீது அதை போட்டுப்பார்க்கும்போதுமட்டும் உருவாகிவருவதாகும் .

ஜெயமோகன்: தளையசிங்கம் அவரது ஆரம்பகால அழகியல் நோக்கில் நின்றிருந்தாரென்றால் மேலும் நல்ல கதைகளை எழுதியிருப்பார் .அவரது தத்துவத்தேடல் அவரை அங்கு நிற்க அனுமதிக்கவில்லை .ஆனால் அவரது படைப்பூக்கம் அவர் தத்துவவாதியாக ஆனபோது இல்லாமல் போய்விட்டது என்று கூறுவதை நான் ஏறகமாட்டேன் . அவர் சிறுகதையின் அழகியல் பாணியை விட்டு வெளியே நகர்ந்துவிட்டார் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். தத்துவார்த்த சிந்தனையும் படைப்பூக்கத்தின் விளைவே .

வெங்கட் சாமிநாதன் : இப்போது நான் பார்க்கும்போது தளையசிங்கம் எந்த வடிவிலும் முக்கியமாக எதையும் சாதிக்கவில்லை என்றே எனக்கு படுகிறது. எங்குமே அவரால் நிற்கமுடியவில்லை . மேகம் போல கலைந்து கலைந்து மாறி சென்றபடியே இருந்தார். அவரது சிறுகதைகளின் வடிவங்கள் முழுமையும் துல்லியமும் இல்லாதவை . அவரது சிந்தனைகளும் ஒழுங்கும் மையமும் இல்லாதவை .அவரை வகுத்துக் கொள்வது கடினம் .ஆனால் தளைய சிங்கம் பயணம் செய்தார் ,எங்குமே தேங்கிநிற்கவில்லை .அது மேலான கலைஞனுக்குரிய குணம்.அவர் எதையுமே தெளிவாகசொல்லவில்லை என்பது பலவீனம் என்றால் எல்லாவற்றிலும் இருந்து வெளியேறியபடியே இருந்தார் என்பது பலம் .எங்காவது உறைந்து நின்றுவிடுவதே வழக்கமாக உள்ள தமிழ் சூழலில் இது அபூர்வமான ஒரு விஷயம்தான்.

வேதசகாயகுமார்: சரவணன் தன் கட்டுரையில் தளையசிங்கம் யாழ்ப்பாண சமூகத்தின் போலிவேடங்களை அம்பலப்படுத்துவது பற்றி சொல்லியிருந்தது மிக முக்கியமான கருத்து . அவரது பார்வை முதலில் விழுவதே ஒழுக்கம் அறம் என்றெல்லாம் சொல்லி மனிதர்கள் போடும் போலிவேடங்கள் மீது தான் .மிக மூர்க்கமாக அவற்றை கிழித்தெறிய தளையசிங்கம் முயல்கிறார் . ‘கோட்டை ‘ அப்படிப்பட்ட முக்கியமான கதைதான் . ஆனால் ‘தொழுகை ‘ அதற்கு அப்பாலும் செல்கிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். அவள் சைவ வேளாளப் பெண் . அவன் சாணான் . அவளுடைய வீட்டுக்குள் வயது வந்த பெண்கள் தூங்குகின்றன. கதவை சாத்திவிட்டு அவனுடன் சல்லாபத்தில் ஈடுபடுகிறாள். அவனை அவள் சந்த்தித்தே பத்துநாள்தான் ஆகிறது .அவனுடன் அவளுக்கு உள்ள உறவு முழுக்க முழுக்க காமம் மட்டும் தான் . அவன் அவளை ஒரு பெண்ணுடல ‘க மூர்க்கமாக கையாள்வதும் அவள் வைதபடி முரண்டுவதுமெல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது . அவளுடைய மனம் கணவன் மீதுதான் இருக்கிறது . அவர் என் உயிர் ,உன் மீது தான் ஆசை என்கிறாள் . முத்துவுக்கு அந்த நிலை போதவில்லை .வெறும் காமக்கருவியாக அவனால் இருக்க முடியாது . ஆகவே அவன் பேரம் பேசுகிறான் . பயம்காட்டுகிறான். இதெல்லாம் ஒரு தளம் . ஆனால் பிறகு என்ன ஆகிறது ? உறவுக்கு பிறகு அவர்கள் மனநிலையே மாறிப்போய் விடுகிறது . ஒழுக்கரீதியான ஒரு அதிர்ச்சியைக் கொடுத்து முடிந்திருக்கவேஎண்டிய கதை ஆன்மீகமான ஒரு தளத்துக்கு நகர்ந்துவிடுகிறது .

நாஞ்சில்நாடன் : ஆனால் அந்தக்கதையில் எல்லாமே திட்டமிட்டு உருவாக்கியதுபோலத்தான் உள்ளது .வேளாள பெண் நாடார் ஆண் .அவர்கள் உடலுறவு கொள்ளும்போது திருப்பாவை கேட்பது எல்லாம் வெளிப்படையாக திட்டமிட்டவை போல்த்தானே உள்ளன. இந்தக்கதை எழுதப்பட்ட காலத்தில் பெரிய அதிர்ச்சி தரும் கதையாஅக் இருந்திருக்கலாம் .ஆனால் இன்று அப்படியல்ல, அதைவிட பெரிய அதிர்ச்சிகளை நம் இலக்கியம் சந்தித்துவிட்டது.

வேதசகாயகுமார் : உண்மை .அக்கதை அதிர்ச்சியை மட்டுமே அளிப்பதாக இருந்தால் அப்படி சொல்லலாம். ஆனால் அக்கதை அந்த எல்லையை தாண்டி செல்கிறது .அந்த முடிவு வரிகளை படிக்கிறேன் ‘ ‘செல்லம்மாவின் தோற்றம் அவனை பிரமிக்க வைக்கிறது . உடலின் ஒவ்வொரு மயிர்க்காலிலும் துளிர்த்து பொங்கிய வியர்வை ஒளியோடு போட்டிபோட்டு பூரித்து பிரகாசித்த அவ்ளின் முகம் அவனை புல்லரிக்க வைக்கிறது .எங்கோபார்த்ததோற்றம் .கோயில் சாத்துப்படி -ஸ்தான மூலையில் தங்கத்தால் செய்து நிற்கும் அம்மன் சிலையின் அருள் செறிந்த தோற்றம் …..தங்கச்சிலை தெய்வச்சிலை ,தெய்வம்… ‘ ‘ இதைதொடர்ந்து அந்த திருவெம்பாவை பாடல்கேட்கிறது. இங்கு பள்ளியெழுச்சி , புதுப்புனலாடல் அனைத்துக்கும் குறியீட்டு ரீதியாக விரிவான பொருள் வந்துவிடுகிறது.

ஜெயமோகன்: ‘ ‘ஒன்றின் மெய்யான தன்மையில்தான் அதன் அசல் தரிசனம் உள்ளது .நாகரீகம் புனிதம் விலக்கப்பட்டவை என்ற பூச்சு கொண்டு அந்த மெய்யான தனமையை மறைத்தால் அதை நான் அறியவே முடியாது என்று தளையசிங்கம் சொல்கிறார் ‘ ‘ என்று சரவணன் எழுதுகிறார்…. ..

வேதசகாயகுமார்: மெய்யான தன்மையை உடைத்துக் காட்டுவது அல்ல ,அதை ஆன்மீகமான இடத்துக்கு உயர்த்துவதும் இக்கதையில் உள்ளது .தொழுகை எது ? காம உறவா ? மனமும் உடலும் அதன் முழுமையில் கூடும்போது அது ஒரு வகையான தொழுகை என்கிறார் தளையசிங்கம் .அதாவது கலகத்தைக் கூட ஆன்மீகமான ஒன்றாகவே அவர் காண்கிறார்

ஜெயமோகன் :முக்கியமான ஆன்மீகவாதிகளில் எல்லாம் ஒரு அராஜக அம்சம் உள்ளதை காணலாம்.அது அவர்களுடைய ஆரம்ப காலத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது .ஏசு மக்தலீனாமேரியை மன்னித்தது அப்படிப்பட்ட ஒரு கலகம் தான். தல்ஸ்தோய் , கசன்ந் சகிஸ் , ஹெஸ் முதலிய ஆன்மீக அம்சம் உள்ளபடைப்பாளிகளில் எல்லாமே ஒழுக்கம்மீறிய அல்லது ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்ட [amoral] தளம் ஒன்று எப்ப்பொதுமே உள்ளது . இவ்வுலகம் போடும் வேடங்களுக்கு எதிரான பொறுமையின்மையின் விளைவு அது. ஆனால் அந்த கலகம் அங்கேயே நிற்பது இல்லை .அது மேலேறிச் செல்கிறது .

மோகனரங்கன்: ஆனால் சில கதைகளில் தளையசிங்கம் தன் தத்துவ விசாரத்துக்கு ஒரு குறியீட்டு வடிவம் உருவாக்கும் பொருட்டு கதைகளை எழுதுகிறாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.உதாரணமாக கோயில்கள் என்ற கதை . மரணத்தின் பின்னணியில் வாழ்க்கையை வைத்துப் பார்த்து உடலே ஒரு கோயில் என்ற இடத்துக்கு நேரடியாகவே போய்விடுகிறார் .

ஜெயமோகன்: சரவணன் சொல்லும் வீழ்ச்சி போன்ற கதைகளும் அப்படி தத்துவசட்டகத்துக்கு ஏற்ப கட்டப்பட்டவையே .

சூத்ரதாரி: ஆரம்பகால கதைகளில் அவர் மன ஓட்டத்தின் இயல்பான நகர்வை ஒரு கலைஞனாக பதிவு செய்கிறார் .ஆகவே அவை வெறும் தத்துவ சட்டகங்களாக இல்லை .பிற்கால கதைகளில் அவர் சிந்தனை ஓட்டத்தையே சொல்கிறார் ,அது தத்துவ சிந்தனையாக இருக்கிறது .

தேவகாந்தன் : யாழ்ப்பாணச் சமூகத்தைப் பற்றி இங்கு சொல்லவேண்டும் .கிடுகுவேலி கலாச்சாரம் என்பார்கள் .ஒவ்வொருவரும் தன் எலைக்குள் தனித்து இருப்பார்கள் .ஆகவே போலித்தனமும் அதிகம். அந்தக் கிடுகுவேலிகளை உடைக்கமுய்ல்கிறார் தளையசிஙகம் .அதை உடைத்தால் மட்டுமே வெளியேறமுடியும் சுதந்திரம் கிடைக்கும் , அடிப்படையானதேடல்கள் சாத்தியம் என அவர் நம்புகிறார். கோட்டை , தொழுகை போன்ற கதைகள் எல்லாமே இப்படிப்பட்டவைதான்.அதன் அடுத்த கட்டத்தில் அவர் சமூக நடவடிக்கைகளில் தீவிரம்னாக இறங்கினார். இம்மாதிரி அதிர்ச்சிகள் தருவதிலோ தத்துவ விசாரத்திலோ நின்றுவிடவில்லை .

மோகனரங்கன் : எனக்கு பிரச்சினை வருவதே அவர் அரசியல் சமூக செயல்பாடுகளை பற்றி பேசத்தொடங்கும்போதுதான்.அவர் மிக திட்டவட்டமாக பேச ஆரம்பிக்கிறார். இதுதான் சரி என்று சொல்லாஅரம்பிக்கும்போதே அறிவதிகாரம் வந்தாகிவிட்டது .அவர் செய்தது சரியாக இருக்கலாம் .ஆனால் அதை அவர் வகுத்து சித்தாந்தமாக முன்வைக்கிறார்.அது நிறுவனமாகும் , அதிகார செயல்பாடுகளாகும் .படிப்படியாக அழிவு சக்தியாக மாறும் .

ஜெயமோகன்: தளையசிங்கம் சித்தாந்தி அல்ல. கலைஞனாக தொடங்கி தத்துவ தேடலில் முடிந்தவர் .

மோகனரங்கன் :அவரை சித்தாந்தியாக ஆக்கியிருக்கலாம் .அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தன.

வெங்கட் சாமிநாதன் : அவருடைய கதைகளில் எல்லாவகையான வாழ்க்கைபார்வைக்கும் இடம் இருந்தது .கடைசியில் அவர் தத்துவம் என்று ஆரம்பித்தபோது அதெல்லாம் இல்லாமலாகி ஒரே விஷயம் மட்டும் மீண்டும் மீண்டும் வர ஆரம்பித்தது என்று படுகிறது .

வேதசகாய குமார் : ஓர் இலக்கியவாதியாக ஆவதற்காக எல்லாவற்றையும் துறக்க தயாராக இருப்பதாக அவர் ஆரம்பத்தில் சொல்கிறார் ,பிறகு தத்துவத்துக்காக இலக்கியத்தையே துறந்தார் .

ஜெயமோகன் : உண்மைக்காக . அப்படித்தான் அவர் சொல்கிறார் .அவரை பொறுத்தவரை இலக்கியம் மெய்மைக்கான தேடலே ,அப்பயணமே அவரை இங்கெல்லாம் இட்டு சென்றது .

மதிய உணவுக்காக கூட்டம் பிரிந்தது . மழை இருட்டி , குளிர் பெருகியது . கோடைதானே என்று பலர் ஸ்வெட்டர் கொண்டுவரவில்லை .கைகளை மார்பில் கட்டி பணிவுடன் நின்றிருந்தார்கள் .அவர்களுக்கு குருகுல பிரம்மசாரிகளிடம் இருந்து இரவல் வாங்கிய ஸ்வெட்டர்களை தந்தோம். பேசியபடியே மதிய உணவுக்கு பிரிந்தோம்.

முதல்நாள் அரங்கு , மாலை 6 மணி

மதிய உணவுக்கு பிறகு குருகுல அறைக்குளேயே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம் .நல்ல மழை பெய்தது . சில இடங்களில் ஆலங்கட்டிகள் விழுந்தன . இம்மாதிரி சந்திப்புகளின் முக்கியக் கவர்ச்சியே இப்படி அனைவரும் கூடி அமர்ந்து அரட்டை அடிப்பதுதான் .இலக்கியவாதிகள் பற்றிய வேடிக்கைகள் , கொஞ்சம் வம்புகள்,பரஸ்பரக் கிண்டல்கள் . இதற்கு மிக முக்கியமானத் தேவை நட்பார்ந்த சூழல் . தனிப்பட்ட குரோதங்கள் கொண்ட ஒரே ஒருவர் இருந்தாலும் இவ்வரட்டைகள் மிக மோசமான மனபாதிப்பு ஏற்படுத்த ஆரம்பித்துவிடும். அதேபோல கட்டுப்படின்றி மது அருந்துபவர்கள் , தன்னை முன்னிலைப்படுத்தும் பொருட்டு ஆர்ப்பாட்டங்கள் செய்பவர்கள் ஆகியோரும் இச்சூழலை சிதைத்துவிடூவார்கள் .சொல் கூட்டங்களுக்கு எல்லா தரப்பினரையும் அழைத்தாலும் எப்ப்பொதுமே நட்பின் எல்லைகளை தாண்டாதவர்களையே அழைக்கிறோம் . இப்போது பின்னால் திரும்பி பார்க்கும்போது முக்க்கியமான ஆக்கங்களை எழுதிய கணங்களும் நண்பர்களுடன் உரையாடிய நாட்களும் மட்டுமே இலக்கிய வாழ்வில் மகிழ்ச்சிகரமானவையாக ஒளிபெற்று தெரிகின்றன. அங்கீகாரங்கள் ,வெற்றிகள் ,விழாக்கள் எதுவுமே மனதில் ஆழப்பதியவில்லை .

ஆறுமணிக்கு நூலக அறையில் கூடினோம் .ஆளுக்கொரு கனத்த கம்பிளியை எடுத்து போர்த்திக்கொண்டு அமர்ந்தார்கள் .மோகனரங்கன் தன் கட்டுரையை வாசித்தார் .மோகனரங்கனின் கட்டுரை தளையசிங்கத்தின் கதைகளை மதிப்பிட்டபடி தொடங்கியது .மனித வாழ்க்கையின் விசித்திரத்தையும் புரிந்துகொள்ள முடியாத தன்மையையும் கொண்டு அதை கூர்ந்துகவனிப்பவனாகவே எழுத்தாளன் செயல்படுகிறான்.அவன் தத்துவ ஆசிரியனாக ஆகும்போது அந்த வியப்புணர்வு இல்லாமலாகிறது .அவன் விடைகளையும் தீர்வுகளையும் முன்வைக்க ஆரம்பித்துவிடுகிறான். தளையசிங்கத்துக்கும் இதுதான் நடந்தது . தளைய சிங்கத்தின் கதைகளில் தொடக்க காலத்தில் உண்மையை நோக்கிச் செல்லும் உக்கிரம் இருந்தது ,அது முக்கியமானது .ஆனால் அவரது தத்துவ நோக்கு குறித்து த்னக்கு பல ஐயங்கள் உள்ளன என்றார் மோகனரங்கன் .

தளையசிங்கத்தின் கோட்பாடுகள் , இலட்சியங்கள் ஆகியவை நிதரிசனத்தின் தொடர்போ , கறாரான அறிவார்ந்த புறவயத் தருக்கங்களோ இல்லாமல் வெறும் கனவுகளாகவே நின்று விட்டிருக்கின்றன என்றார் மோகனரங்கன். இந்த காரணத்தால் அவை கவித்துவக் கூற்றுகள்ளாகவோ வெற்றுக் கனவுகளாகவோ நின்றுவிடுகின்றன. மேலும் தளையசிங்கம் உபயோகிக்கும் இந்திய சிந்தனை மரபு சார்ந்த கருத்தியல் உபகரணங்கள் மிகுந்த இடர்களை விளைவிப்பவையாக உள்ளனன . யோகம் , அன்னமய கோசம் போன்ற சொற்களெல்லாம் வேறு ஒரு சூழலில் வேறுவெறு பொருளில் பயன்படுத்தப்படுபவை . ஆகவே தளையசிங்கம் சொல்வதை புரிந்து கொள்வதில் பல மயக்கங்கள் ஏற்படுகின்றன. செயல்தளத்துக்கு ஏற்ப திட்டவட்டமாக வடிவமைக்கப்படாத கோட்பாடினால் பயன் இல்லை . அப்படி வடிவமைக்கப்படும் போதே அது மாற்று உண்மைகளை மறுக்கும் அறிவதிகாரம் ஆகியும் விடுகிறது .தன்னளவில் எந்த சித்தாந்தத்தையும் சந்தேகத்துடன்த்‘ன் பார்க்க முடியும் என்றார் மோகனரங்கன் .சித்தாந்தங்கள் உலகில் போதிய அழிவை ஏற்கனவே உருவாக்கிவிட்டிருக்கின்றன.சித்தாந்தங்களால் முழுமையான உண்மையை ஒரு போதும் நெருங்கமுடியாது .

ஜெயமோகன்: தளையசிங்கம் முன்வைப்பவை கோட்பாடுகள்தானா ? அவை ஒரு சிந்தனையாளனின் அகத்தரிசனக்கள் என்ற நிலையில் மட்டும்தானே உள்ளன ? கோட்பாடுகள் விரிவான தருக்க அமைப்பை கொண்டிருக்கும் . தங்கள் கூற்றுக்களை அவை நிறுவ முயன்றபடியே இருக்கும் .அனைத்துக்கும் மேலாக கோட்பாடுகளை அடுத்த கட்ட அறிஞர்கள் மேலும் மேலும் வளர்த்து சென்றபடியே இருக்க முடியும் . அதாவது கோட்பாடு தன்னளவில் அதை, உருவாக்கியவனின் அடையாளம் இல்லாமல் செயல்பட முடியும் . ஆனால் தளையசிங்கத்தின் தரிசனங்களை நாம் அவரில் இருந்து பிரிக்கவே முடியாது அல்லவா ?

தேவகாந்தன்: மு பொன்னம்பலம் போன்ற சிலர் தளையசிங்கத்தின் கருத்துக்ளை கோட்பாடுகளாக ஆக்கிக் கொள்ள முயன்றிருக்கிறார்கள் . பொன்னம்பலம் தளையசின்ங்கத்தை மையமாகி ஒரு மதமனப்பான்மையையே உருவாக்க முயல்கிறார் என்று படுகிறது .

ஜெயமோகன்: ஆனால் அதற்குரிய தருக்கக் கட்டுமானத்தை தளையசிங்கத்தில் இருந்து பெற முடியாது .அவரது அகவயமான கூற்றுக்களை விளக்கி விரித்து கோட்பாடாக மாற்ற முடியும் , அவ்வளவுதான்

தேவதேவன்: இம்மாதிரி ஒரு தரிசனத்திலிருந்து தத்துவத்தை உருவாக்குவது எப்போதும் உலகமெங்கும் நடைபெற்று வருகிறது . இன்னும் சொல்லப்போனால் எல்லா தத்துவ சட்டகங்களும் ஒரு படைப்பாளியின் மேலான தரிசன மன எழுச்சியை அடுத்துவரும் தலைமுறையானது தொகுத்து வகுத்துக்கொள்ள முயலும்போது உருவவதேயாகும்.உதாரணமாக புத்தர் தரிசன மனநிலையில் இருந்துகொண்டு கவித்துவமாக பேசுகிறார் . எப்போது புத்தரின் க்ஷணவாதம் ஒரு கோட்பாடாக மாறியதோ அப்போதே புத்தர் நிராகரிக்கப்படுகிறார் .ஆகவேதான் தன் மெய்மையனுபவத்தை விளக்க அவர் முற்படவில்லை . அதை விளக்கும்படி கோரப்பட்டபோது அந்த ஞானம் அனைவருக்கும் கிடைக்கும் நிலை ஏற்படும்போது பேசலாம் என்று சொன்னார்.

ஜெயமோகன் : விஷ்ணுபுரத்தில் இது வருகிறது .புத்தர் எல்லாமே நிலையற்றது ,நாம் அறிபவை எதுவுமே அறியும் நிலையில் மாறாமல் இல்லை என்றார் .அதை தத்துவார்த்தமாக விரிவுபடுத்தும் நாகார்ச்சுனர் உண்மையில் எதுவுமே இல்லை நமது அறிவுகூட என்ற சூனியவாத கோட்பாட்டுக்கு போய் சேர்கிறார் .

தேவதேவன் : மகாயான பெளத்தமே புத்தரிலிருந்து வெகு தொலைவில் நிற்கும் ஒன்றுதான்.

மோகனரங்கன்:விடைகளை யார் முன்வைத்தாலும் அப்படித்தான் ஆகும்

ஆர்.பி ராஜநாயகம்: புத்தரைப்பற்றி சொன்னீர்கள் . என் நண்பர் ஒருவர் ,அவர் ஒரு முஸ்லீம் , மதுரைக்கு அருகேயுள்ள ஒரு சங்கிலிக் கருப்பனைப்பற்றி ஆய்வு செய்தார் . ஏழடி உயரமுள்ள சிலை அது .வெள்ளியில் மீசையும் கண்களும் செய்து பதித்திருப்பார்கள் . வருடத்தில் எப்படியும் அங்கு இரண்டாயிரம் ஆடுகளாவது பலிவிழாமல் இருக்காது . தேவர் சாதிக்கு முக்கியமான கோயில் . நண்பருக்கு சிலையின் அமைப்பைப் பார்த்து சந்தேகம் .பூசாரியை கைக்குள் போட்டுக் கொண்டு ஒருநள் உள்ளே நுழைந்து மீசையும் கண்களையும் எடுத்துப்பார்த்துவிட்டார் .அவர் சந்தேகப்பட்டது சரிதான் , அது ஒரு புத்தர் சிலை ! வெளியே சொல்ல முடியுமா, தலை காணாமல் போய்விடும் என்றார்….

வேதசகாய குமார்: விழுப்புரத்துக்கு அருகேகூட ஒரு சிலை இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். .தலையில்லாத முனிசாமி .வருடத்திற்கு ஒருமுறை தலையை வேறு எங்கிருதோ கொண்டுவந்து வைப்பார்கள் ,உடனே ஒரு ஆயிரம் ஆடாவது வெட்டப்படுமாம். அது புத்தரின் தலை .

ஜெயமோகன்: இது பெளத்தம் கைவிடப்பட்டபிறகு அச்சிலைகளை கைப்பற்றிய மற்ற மதத்தவர் செய்வது .ஆனால் பெளத்தர்களில் வஜ்ராயனர்கள் புத்தருக்கே உயிர்பலி அளித்திருக்கிறார்கள், விஷ்ணுபுரத்தில் கூட அப்படி ஒரு இடம் வரும்…

தாமரை ஆறுமுகம் : மோகனரங்கன் கட்டுரை பற்றிய என் கருத்துக்களை தொகுத்துச் சொல்கிறேன். ஒன்று தளையசிங்கம் மார்க்ஸியத்தில் காணும் முக்கியமான குறைபாடு அதில் தனிமனிதனின் ஆன்மீக கடைத்தேற்றத்துக்கு ஏதும் வழியில்லை என்பதுதான் . இந்தபோதாமையை நிரப்ப மார்க்ஸியத்திலிருந்து மேலே போக வேண்டுமென அவர் எண்ணுகிறார் . அதற்கான முயற்சியில் அவர் செய்தது மார்க்ஸியத்துடன் அரவிந்தர் போன்ற சில ஆன்மீக சிந்தனையாளர்களில் சிந்தனைகள் சிலவற்றை ஒட்ட வைத்தது தான் .எங்கல்ஸுக்கும் இடையேயான கருத்தொற்றுமையைக்கூட குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மார்க்சியத்தை ஒரு அறிவியல்கோட்பாடாக பார்க்காமல் ஒரு விதமான தரிசனமாகவும் , மார்க்ஸை ஒரு அதிமானுடனாகவும் பார்க்கிறாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது . என்னதான் ஆன்மீகம் பேசினாலும் செயல்தளத்துக்கு வரும்போது அவரால் மார்க்சியத்தைதாண்டி செல்லமுடியவில்லை . கருத்துக்களிலும் கைலாசபதியிடம் உள்ள அதே குறைகளை இவரிடமும் காணலாம்.இவரும் கருத்து செயல்பாடை நேரடியான பொருளில் ஒருவகைப் பிரச்சாரமாகவே காண்கிறார் .

சூத்ரதாரி: ஆனால் கலையை தளையசிங்கம் அப்படிக் காணவில்லையே .அவர் ‘கலை பரவச விடுதலையை அளிக்கும் ‘ என்றுதானே சொல்கிறார் .

தாமரை ஆறுமுகம் :உண்மைதான் .ஆனால் தன் கருத்துக்களை அவர் உபதேசம்தான் செய்கிறார் .மெய்யுளிலும் உபதேசம்தான் உள்ளது.

மோகனரங்கன் : ஆனால் தளையசிங்கம் தன் போராட்டங்களில் காந்திய மார்க்கத்தையே கடைப்பிடித்துள்ளார் .குறிப்பாக சிரமதானம் போன்றவிஷயங்களில் அவருக்கு நம்பிக்கை இருந்துள்ளது .

தாமரை ஆறுமுகம் : அது உண்மை.ஆனால் அவருடைய மனத்தில் இருந்த சமூக மாற்றம் பற்றிய சித்திரமானது மார்க்ஸிய அடிப்படையிலானது என்றே தோன்றுகிறது .

அன்பு வசந்தகுமார் :தளையசிங்கம் முரணியக்க இயங்கியல் போன்ற மார்க்ஸிய தத்துவ அடிப்படைகள் மீது ஐயங்களை எழுப்புகிறார் .ஆனால் சமத்துவம் ,விடுதலை ,மக்கள்போராட்டம் போன்ற கருத்துக்களில் அவரது பார்வை மரபான மார்க்ஸிய பார்வையேதான். விழிப்புணர்வு பெற்ற ஒரு சிறுபான்மையினர் உழைக்கும் மக்களை விடுதலை உணர்ச்சி பெறச்செய்வது பற்றி அவர் பேசுமிடமும் மார்க்ஸிய அடிப்படைக்குள்தான் வருகிறது .மார்க்ஸியத்தில் இருந்து அடுத்த தளத்துக்கு போக முடியுமா என்று பார்த்த ஒரு மார்க்ஸியர் என்று அவரைச் சொல்லலாம் .

தேவகாந்தன் :எனது கருத்தும் அதுதான் ,தளையசிங்கம் இலங்கையில் கல்வித்துறை பத்திரிகை ஆகியவற்றை ஆயுதமாக கொண்டு உருவாகி வந்த முற்போக்கு முகாமின் அதிகாரத்தை தான் எதிர்த்தார் . அவர்கள் இலக்கியத்தை வெறும் அரசியலாகவும் சமூகவியலாகவும் குறுக்குவதை கண்டித்தார் . ஆனால் மார்க்ஸியத்துக்கும் அவருக்கும் இடையே நேரடியான ந்ல்லுறவுதான் இருந்தது .தளையசிங்கத்தின் கருத்துக்களை மார்க்ஸியத்திலிருந்து பிரிக்கமுடியாது.

ஜெயமோகன்: தளையசிங்கத்தில் அவரது காலகட்டத்து எல்லா இலட்சியவாதங்களின் தாக்கமும் உள்ளது . மார்க்ஸியம் அக்கால கட்டத்து இலட்சியவாதங்களில் முக்கியமானது . விவேகானந்தர் ,காந்தி ,அரவிந்தர், பாரதி ஆகியோரும் அவரை பாதித்துள்ளனர் . அடிப்படையில் அவர் ஒரு இலட்சியவாதி என்பதே இதற்குக் காரணம் .அவரில் பாதிப்பு செலுத்தாதவர்கள் இலட்சியவாதப்பண்பு இல்லாத மேற்கத்திய எழுத்தாளர்கள் தான். எனக்கு வியப்பு என்னவெனில் இவ்வளவு இலட்சியவாதப்பண்பு உள்ளவரில் ஏன் தல்ஸ்தோயின் தாக்கம் சொல்லும்படியாக இல்லை என்பதுதான்.அவர் எங்கும் தல்ஸ்தோய் பற்றி குறிப்பிட்டதேயில்லை …

வெங்கட் சாமிநாதன் : நான் தளையசிங்கத்திடம் காணும் குறையே அதுதான் .அவரது புதுயுகம் என்பது மார்க்ஸியத்தையே சற்று திருப்பிப் போட்டு பார்த்தது மட்டும்தான் . எல்லாரும் சமமாக ஆவது , அரசு உதிர்ந்துபோவது , தனியுடைமை இல்லமலாவது என்றெல்லாம் மார்க்ஸியம் சொல்லும் கனவைத்தான் இவரும் அடுத்த யுகம் என்று சொல்கிறார் . ஆனால் இத்தகைய கனவுகள் எல்லாம் என்ன ஆயிற்று வரலாற்றில் ? மனிதனின் இயல்பான சின்னத்தனம் ,சுயநலம் ,அதிகாரவெறி ஆகியவை இத்தகைய கனவுகளையெல்லாம் அழித்துவிட்டதைத்தானே பார்க்கிறோம் அரசாங்கம் இல்லாமலாகும் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட அமைப்பில் அரசாங்கம் சரித்திரத்திலேயே இல்லாத அளவு வலிமையுள்ளதாக ஆயிற்று. ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பில் ஏழைகள்தான் கூட்டம்கூட்டமாக கொன்றொழிக்கப்பட்டனர் .இதோ நம்முடைய காலத்திலேயே காந்தியக்கனவு -ராமராஜ்யம் -இல்லமலாயிற்று . இவ்வளவுக்குபிறகும் நாம் எப்படி இம்மாதிரி வெற்று இலட்சியக்கனவுகளை மதிக்க முடியும் ?

ஆர். பி .ராஜநாயகம் : என் சொந்தக்காரர் ஒருவர் வினோபாவேயின் ஆசிரமத்தில் இருந்தார். ஏராளமான சொத்து வைத்திருந்தவர் . வினோபாபேச்சைக்கேட்டு எல்லாவற்றையும் பூதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் . ஆனால் கடைசியில் வினோபாவின் இயக்கத்தில் அவரைத்தவிர எல்லாருமே அயோக்கியர்கள் ஆக இருந்தார்களாம். ஆசிரமத்திற்குள்ளேயே விபச்சாரம் நடக்குமாம். கடைசியில் வினோபாவுக்கே இது தெரிந்துவிட்டது .இனி உயிரோடு இருக்கவேண்டாம் என்று உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்டார் .

நாஞ்சில்நாடன் : ஆமாம் ,அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் . இந்திராகாந்தி அவரைப்பார்க்கசென்றபோது இந்த உடை அழுக்காகிவிட்டது கழற்றப்போகிறேன் என்றுதான் சொன்னாராம்…. தளையசிங்கம் சீக்கிரமே போய்சேர்ந்துவிட்டார் .

வேதசகாயகுமார் : மோகனரங்கன் தளையசிங்கத்தின் இலக்கியமதிப்பீடுகள் ஏற்புடையவையாக இல்லை என்று சொன்னார் . தளையசிங்கம் புதுமைப்பித்தனைவிட ஜெயகாந்தனை தூக்கிப்பிடிப்பது கசப்பூட்டுவதாகக் கூறினார் . …

மோகனரங்கன்: மெளனி புதுமைப்பித்தன் ஆகியோருடைய எல்லா கதைகளும் சேர்ந்தால்கூட ஜெயகாந்தனின் பிரளயம் ,விழுதுகள் போன்ற கதைகளுக்கு சமமல்ல என்று அவர் சொல்வது அபத்தமான முடிவென்றே படுகிறது.கலையின் நுட்பங்களை கணக்கில் கொள்ளாது பொத்தாம் பொதுவாக மையக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த முடிவுக்கு வருகிறார் ….

வேதசகாய குமார் : இந்த எண்ணம் இங்கு உருவாக்கப்பட்ட ஒன்றா என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது . காரணம் இங்கு தளையசிங்கத்தின் விமரிசன ஆளுமைபற்றி பேசப்படும்போதெல்லாம் ஜெயகாந்தனை தூக்கிபிடித்தார் ,ஆகவே இலக்கியத்தின் கருத்துக்களை மட்டுமே கணக்கில் கொள்ளும் இயந்திரவாத அணுகுமுறை உடையவர் என்று தளையசிங்கம் குற்றம் சாட்டப்படுகிறார் . இந்த விமரிசனத்தினை உருவாக்கியவர்கள் தளையசிங்கத்தின் ஆரம்பகட்ட விமரிசனங்களை குறிப்பாக ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியை எந்த அளவுக்கு பொருட்படுத்தியுள்ளனர் என்று தெரியவில்லை . ஏழாண்டு இலக்கியவளர்ச்சியை பார்த்தால் அதில் தெரியும் தளையசிங்கம் படைப்பை வடிவம் உள்ளடக்கம் என்று பிரித்து பார்ப்பவரே அல்ல. அவருக்கு இரண்டும் பிரிக்கமுடியாதவையாகவே பட்டிருக்கின்றன.உதாரணமாக எஸ்பொன்னுதுரையை நிராகரிக்க தளையசிங்கம் முன்வைக்கும் வாதகதிகள் அனைத்துமே மொழி மற்றும் வடிவம் சம்பந்தப்பட்டவை… .

நாஞ்சில்நாடன்: எந்தக் கோணத்தில் ஆனால் என்ன , ஜெயகாந்தன் கதைகளுக்கு புதுமைப்பித்தன் கதைகளைவிட ஆழமும் மதிப்பும் ஏற்படும் ஓர் அணுகுமுறையை எப்படி ஏற்கமுடியும் ?

வேதசகாயகுமார்: ஒன்று கவனிக்கவேண்டும் ,ஜெயகாந்தனின் எல்லா கதைகளையுமல்ல ஆரம்பகட்ட கதைகளையே தளையசிங்கம் குறிப்பிடுகிறார் .சொல்லப்போனால் பிரளயம் விழுதுகள்போன்ற ஓரிரு கதைகளை மட்டுமே அவர் குறிப்பிட்டு பேசுகிறார் . புதுமைப்பித்தனை விட ஜெயகாந்தனைமேலாக மதிப்பவனல்ல நான்.புதுமைப்பித்தன் கதைகளை கலைக்கும் ஜெயகாந்தன் கதைகளை போலிக்கலைக்கும் ஒப்பிட்டு நான் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ என்று ஒரு நூலே எழுதியுள்ளேன். நான் இங்கு பேச விழைவது ஏன் தளையசிங்கம் ஜெயகாந்தனை முன்வைத்தார் என்பதை எளிமைப்படுத்தக் கூடாது என்றுதான் .ஜெயகாந்தனின் கலைச்சிதறல்களை அறியமுடியாதவரல்ல தளையசிங்கம். ஓரிரு முறை அவரே அதை சொல்லியும் இருக்கிறார் .கலை என்பது ஆழமான அகவய அனுபவமேயொழிய கருத்தை அறிந்துகெ ‘ள்ளும் சகஜநிலையல்ல என அவரளவுக்கு அழுத்திச் சொன்னவர்களும் இல்லை. கலையை மதிப்பிட சக்தியற்று உடன்பாடான கருத்துக்களைதேடி அவற்றைகண்டடைந்ததும் அப்படைப்பாளியை ஏற்கும் மேலோட்டமான வாசகராக தளையசிங்கத்தை அவரை ஆய்வு செய்யும் எவருமேசொல்லமாட்டார்கள் .பிறகும் ஏன் அவர் ஜெயகாந்தனை முன்வைத்தார் ?அவரது மனதில் தனது இலக்கியப் படைப்புக்கான ஒரு முன்வரைவு உள்ளது . அதன் கூறுகள் சிலவற்றை அவர் ஜெயகாந்தனில் காண்கிறார் ….

மோகனரங்கன்: மெய்யுளில் அவர் அதற்காக முயற்சி செய்கிறாரே …

வேதசகாய குமார்: அம்முயற்சி ஒரு தோல்வி என எல்லாருக்கும் தெரியும் .கடைசிவரை அவரால் தன் மனத்தில் இருந்த வடிவததை உருவாக்கிக் காட்டமுடியவைல்லை .அதன் ஒரு கோட்டுச்சித்திரத்தை ம்னெய்யுள் தருகிறது . அதன்படி தளைய சிங்கம் கனவுகண்ட இலக்கியப்படைப்பானது எதிர்மறைத்தன்மை உடையதல்ல. விமரிசனத்தை மட்டும் முன்வைபதுமல்ல.பெரும் இலட்சியக்கனவுகளை முன்வைப்பது . கவிதையும் ,அறிவார்ந்த தருக்கமும் ,கறொஅனைவீச்சும் இணைந்த ஒன்று .அப்படிப்பார்க்கும்போது ஜெயகாந்தனிலுள்ள இலட்சியக்கனவின் அம்சமும் , அறிவார்ந்ததன்மையும் முக்கியமாக அவருக்கு பட்டது இயல்பே ….

நாஞ்சில்நாடன் : புதுமைப்பித்தனிலும் அந்த இலட்சியக்கனவு இல்லாமலில்லை …..

வேதசகாயகுமார்: அதை தளையசிங்கமும் ஒப்புக் கொள்கிறார். தமிழில் முதன் முதலாக இன்று மிகபரவலாக உள்ள பாரதி > புதுமைப்பித்தன் என்ற வரிசையை உருவாக்கியவர் தளையசிங்கம்தான் . அதற்குமுன்பு அந்த வரிசை அப்படியில்லை . நடுவேபலபெயர்கள் . கு ப ரா, பாரதிதாசன் என்று ஏராளமான பேர்கள் . புதுமைப்பித்தனில் உள்ள இலட்சியவாத அம்சம் தளையசிங்கத்தை கவர்ந்தேயிருந்தது. ஆனால் ஒரு புதுயுகத்தைக் கனவுகாணும் வலிமை பெரும் கலைஞனுக்கு இருக்கவேண்டுமென அவர் எதிர்பார்த்தார் .

வெங்கட் சாமிநாதன் : மோகன ரங்கன் கட்டுரையில் தளையசிங்கம் பேர்மனம் பற்றி சொல்லியிருப்பவையெல்லாம் வெறும் கனவுகளாக உள்ளன என்று சொல்வதை நான் ஏற்கிறேன் . பேர்மனம் என்றால் அவர் என்ன சொல்கிறார் என்று தெளிவாக புரியவில்லை . இன்றைய குழந்தையின் மனவளர்ச்சி நேற்றைய குழந்தையை விட மிக அதிகம் . இன்றைய வசதிகள் சூழல் கருவிகள் இதெல்லாம் பலமடங்கு அதிகம் .ஆனால் பேர்மனம் இதனால் உருவாகுமா ? இவை அளவுசார்ந்த வளர்ச்சிகள்.அது குணவயமான ஒரு வளர்ச்சி நிலை அல்லவா ? தளையசிங்கம் அதை எளிமைப்படுத்துகிறார் .அனைத்து மனிதர்களுக்கும் சாத்தியமான ஒன்றாக அதை உருவகிக்கிறார் . மனிதமனத்தின் உன்னத நிலைகள் பல சாத்தியம்தான் என நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவற்றுக்காக தேடி அவற்றை முயன்று அடையும் மனங்கள் சில மட்டுமே. ஏன் எப்படி அந்த தாகம் ஏற்படுகிறது என்றெல்லாம் விளக்கிவிடமுடியாது. அதை ஒருபோதும் அனைவருக்கும் உரிய ஒன்றாக மாற்ற முடியாது .அதை கற்பிக்கவோ பரப்பவோ முடியாது .தளைய சிங்கம் பேர்மனம் பற்றி சொல்லும்போது தாயத்து விற்பவனின் மொழியில் இதோ இதை வாங்கி கட்டிக் கொள் உனக்கு பேர்மனம் கிடைக்கும் என்பது போல பேசுகிறார் . அதற்கு யோக முறைகளையெல்லாம் சிபாரிசு செய்கிறார் .இதெல்லாம் எனக்கு மிக அபத்தமாகவே படுகிறது. ரஷ்யாவிலே கம்யூனிசம் ஸ்தாபித்தபோது சொன்னார்கள் உடைமை உணர்வில்லாத ஜனங்களை கல்வி மூலம் உருவாக்குவோம் என்று . என்ன ஆயிற்று ? இரண்டு தலைமுறை வந்ததே நடந்ததா ? அதைப்போலத்தான் இதுவும் .ஒரு கனவுக்கு ஏற்ப சமூகத்தை பயிற்றுவிக்கமுயற்சி செய்தால் நேர் எதிரான விளைவுகள் உருவாகும் அழிவுதான் ஏற்படும் .

ஜெயமோகன்: இங்கே ஒரு விஷயத்தை சொல்லவேண்டும் .தளையசிஙக்ம் புதுயுகத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய ஒரு சமுக்கசெயல்திட்டமாக முன்வைக்கவில்லை.அதை மானுடகுலத்தின் ஒரு பரிணாமகட்டமாகத்தான் குறிப்பிடுகிறார் .

மோகனரங்கன் : அன்னமய கோசம் ,பிராணமய கோசம் என்பதெல்லாம் தனிமனித உடல் சம்பந்தமானவை .அதை எப்படி சமூகத்துக்கும் சரித்திரத்துக்கும் போட்டு பார்க்கிறார் என்று புரியவில்லை .

வெங்கட் சாமிநாதன்: அவை சைவசித்தாந்தத்தின் கருத்துக்கள் ….

ஜெயமொகன்:இல்லை ,அது இந்திய சிந்தனைகளில் அனைத்திலுமே பழங்காலம் முதல் காணப்படும் கருத்துருவம் தான்.

வெங்கட் சாமிநாதன்: அப்படியா ?

சுவாமி வினயசைதன்யா: முதன்முதலாக உபநிஷதங்களில் இந்த உருவகம் வருகிறது .பிறகு எல்லா மரபுகளும் ஆயுர்வேதம் கூட இதை ஏற்றுக் கொண்டுள்ளன .

ஜெயமோகன் : மனித உடலையும் பிரபஞ்சத்தையும் ஒரே போல அளந்து வகுக்கும் மனப்போக்கின் விளைவு இது என ஊகிக்கிறேன் .மனிதன் என்பவன் பற்பல அடுக்குகளினாலானவன் .ஒன்று மனித உடல் .அது பருப்பொருளாலானது . அதுவே அன்னமய கோசம் .அதன் அடுத்த தளம் உயிர் .அது பிராணமய கோசம் . அதற்கடியில் மனம் இயங்கியபடியே உள்ளது .அது மனோமயகோசம் . அதற்கு அடியில் அம்மனையக்கத்தை அறியக்கூடிய ஒரு உட்பிரக்ஜை உள்ளது .அப்படியொன்று இருப்பதனால்தான் மன இயக்கத்தையே நம்மால் அறிய முடிகிறது .இதை ஆனந்தமயகோசம் என வகுக்கிறார்கள் .பலவிதமான வகைபாடுகள் உண்டு . யோகமரபின்படி மொத்தம் ஏழுவகையான தளங்கள் அடங்கியது மானுட இருப்பு . [அன்னம் ,பிராணன், அசுத்த மனம்,சுத்தமனம் ,அனந்தம், சின்மயம், சதானந்தம்,என ஏழு கோசங்கள் ] அந்த ஒவ்வொரு மனமும் இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு தளத்துடன் உறவு கொள்கின்றன என்று கருதினார்கள். அன்னம் அன்னமய உலகை அறிகிறது. பிராணன் பிராணமய உலகை. அவ்வாறு .அவ்வாறு பிரபஞ்சமும் ஏழுதளங்களாக உள்ளது என்றனர் . இங்கே மோகன ரங்கன் இம்மாதிரியான உருவகங்களை ஏற்க முடியாமலிருப்பதன் சிக்கலைப்பற்றி ச் சொன்னார்.இவற்றை உருவகங்களாக பார்க்காததன் பிரச்சினைதான் அது .ஆழ்மனம் , நனவிலி , தொல்படிமம் என்பதெல்லாம் கூட உருவகங்கள்தானே ? அவற்றை நாம் சாதாரணமாக கையாளவில்லையா ?

மோகனரங்கன் : என் பிரச்சினை அதுவல்ல. மரபான அர்த்தத்தில் இவற்றை புறவயமான கருதுகோள்களாக கருதவில்லை, அகவய உருவகங்களாகவே கருதுகிறார்கள் .அந்த அடிப்படையை எப்படி தளையசிங்கம் மாற்றிகிறார் என்பது தெளிவாக இல்லை என்பதே .

ஜெயமோகன்: தளையசிங்கம் இக்கருத்துக்களை பரிணாமத்தை விளங்கிக் கொள்ளும் ஒரு முறையாக பயன்படுத்துகிறார் . பூமியில் முதலில் உடல் உருவாயிற்று.பிறகு உயிர் .அதன் பின் மனம். இன்று மனதை மையமாக கொண்ட வாழ்க்கை இங்கு உள்ளது .இனி அழ்மனதை அல்லது மேல்மனதை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை உருவாகும் ஏன்கிறார் …..

வினயசைதன்யா: இங்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன் . உங்கள் தமிழ் பேச்சை நான் போதுமான அளவுக்கு பின்தொடரமுடியவில்லை . தளையசிங்கம் பற்றி ஜெயமோகன் அனுப்பிய குறிப்பை மட்டுமே நான் படித்துமுள்ளேன். உபநிடதத்தில் அன்னமய கோசம் பிராணமய கோசம் குறித்து வரும் இடத்தில் ஒரு சிக்கல் உள்ளது .வேதாந்த விவாதத்தில் இரு பெரும் தரப்புகளாக உள்ளது இது . பிருகுமுனிவரின் மகன் அவரிடம் மெய்மை என்றால் என்ன என்று கேட்கிறான் .அவர் ‘சென்று தவம் செய் ‘ என்கிறார் . அவன் தவம் செய்து அறிகிறான், உடலே மெய். அன்னம் அனத்தை உண்கிறது .அன்னத்தில் சேர்கிறது . ஆகவே அன்னமயகோசமே மெய் .அதை அவன் தந்தையிடம் சொல்லும்போது அவர் மேலும் தவம் செய் என்கிறார் . அவன் மேலும் தவம் செய்கிறான். அப்போது பிராணனே மெய் என உணர்கிறான் .அன்னமய உலகை இயக்குவது உயிரே . அதை அவன் தந்தையிடம் சொல்கிறான் . மேலும் தவம் செய் என்கிறார் தந்தை . அவன் தவம் செய்து மனமே மெய் என அறிகிறான் . அதை தந்தையிடம் சொல்ல அவர் மேலும் தவம் செய்ய சொல்கிறார் .இவ்வாறு அவன் நகர்ந்து சென்று மெய்யை அறிகிறான்.

இங்கு என்ன சிக்கல் வருகிறது என்றால் இந்த இடத்தை விளக்கியவர்கள் சிலர் ஆனந்தம் ஒன்றே மெய் என இது உணர்த்துவதாக பொருள் கொண்டனர். உடல் உயிர் மனம் முதலியவை திரைகளைப்போல என்றும் , அவற்றை ஒவ்வொன்றாக கிழித்து இறுதியில் உண்மையை சென்றடையவேண்டுமென்றும் சொன்னார்கள் . உண்மையில் பிருகு முனிவர் மகன் உடலை மெய் என அறிந்து வரும் போது அதை மறுக்கவில்லை .அப்படி மறுக்கும் சொல்லே உபநிடதத்தில் இல்லை . மேலும் போ என்று மட்டுமே சொல்கிறார் . இதை குறிப்பிட்டு சொல்லிய நாராயணகுரு அன்னமய கோசமும் பிராணமய கோசங்களும் எல்லாம் பொய்தோற்றங்களல்ல , அவை உண்மையின் மாறுபட்ட படிநிலைகள் மட்டுமே என்று சொன்னார் . உடலையும் பருப்பிரபஞ்சத்தையும் பொய் என நிராகரித்து அவற்றுக்கு அப்பால் உண்மையை தேடும் போக்கை அவர் ஏற்கவில்லை . தளையசிங்கம் எந்தப் போக்கை ஏற்கிறார் என்பதை கவனிக்கவேண்டும் ….

ஜெயமோகன்: என் வாசிப்பில் கிடைத்தவரை பார்த்தால் தளையசிங்கம் பருப்பொருளை நிராகரிக்கும் மாயவாதம் நோக்கிபோகவில்லை .

தேவதேவன்: சீர்திருத்தம் செய்ய முற்படுவதும் சரி , வாழ்க்கையைப்பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் பெரும் கனவுகளை உருவாக்கிக் கொள்வதும் சரி, ஆன்மீகத் தேடலுக்கு எதிரானவையே. நான் புரிந்துகொண்டவரை ஆன்மீகம் அடிப்படையில் ஒரு முடிவற்ற தேடலே . அது எதிலுமே முழு உறுதியும் திருப்தியும் கொள்வது இல்லை . தளையசிங்கம் என்ன செய்கிறார் ?பெரும் கனவுகளில் மூழ்குகிறார். சமூகத்தையும் வாழ்க்கையையும் அதற்கேற்ப மாற்றிவிடும் முய்ற்சியில் ஈடுபடுகிறார் . யோசித்துப் பார்த்தால் இதற்குப்பின்னால் உள்ள அகங்காரம் என்ன என்று தெரியும் .அந்த அகங்காரம் ஆன்மீக தேடலுடையவனிடம் ஒருபோதும் இருக்காது .இதுதான் தளையசிங்கம் அடைந்த பெரியதடை என்று படுகிறது.

அன்பு வசந்த குமார் : அவருடைய இலக்கும் சரி ,வழிமுறையும் சரி ,மிக தூலமாக உள்ளன . அவற்றில் ஒரு யதார்த்தவாதியின் மனச்சித்திரம்தான் தெரிகிறது .அக்கனவின் வீச்சில்தான் கற்பனைபோக்கு உள்ளது . என் பார்வையில் அவரது முக்கியமான பிரச்சினையே அவரது அணுகுமுறையில் உள்ள முரண்பாடுதான்.அவர் பேசுவது மெய்யியல் விடுதலை பற்றி.ஆனால் அவர் அதற்குரிய வழிமுறையாக கருதியது அரசியல் .

தேவகாந்தன்: அவர் ஈழத் தேர்தல்களில் கூட பங்குபெற்றிருக்கிறார் ….

நாஞ்சில்நாடன்: ஆகவே தளையசிங்கம் ‘ ‘ ‘ ‘அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக எழுத்தாளர்களும் கலைஞர்களும் இல்லாமலிருக்க வேண்டுமென்றால் அவர்களே அரசியல்வாதிகளாக இருக்கவேண்டும் ‘ ‘ என்று மெய்யுளில் சொல்லும்போது நேரடியான அரசியலை மட்டுமே குறிப்பிடுகிறார் என்பது தெளிவு . என்னை பொறுத்தவரை எழுத்தாளர்கள் அரசியலில் நேரடியாக ஈடுபட்டால் இன்னும் குழப்பம் தான் வரும் .அதற்கேற்ற தெளிவு அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை . இலக்கிய விவகாரங்களிலேயே பார்க்கிறோமே . எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் மூலம் மறைமுகமாக கருத்தியல் சார்ந்து ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த முடியும் . அதுகூட எனக்கு சந்தேகமாகத்தான் உள்ளது .தளையசிங்கம் சொல்லும் பலவிஷயங்கள் இப்படி வெற்றுக் கனவுகளாகவே உள்ளன.

மோகனரங்கன் :அந்தக் கனவுகளை அவர் கலையாக மாற்றியிருந்தால் அதன் மதிப்பே வேறு . அதைத்தான் நான் சொல்லவிரும்பினேன்.

இரவு பத்து மணிக்கு அமர்வை முடித்தோம் . குளிர் ஏறிவிட்டிருந்தது . ஆனால் அதன் பிறகும் அவரவர் அறைகளில் ஓரிருவராக கூடி அமர்ந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் . கம்பிளி முதலியவை கிடைத்தனவா என்று கேட்க நான் அறைகளுக்குள் சென்ற போது நாஞ்சில்நாடன் , அன்பு வசந்தகுமார் ,தாமரை ஆறுமுகம் ,வேதசகாய குமார் ஆகியோர் ஒரு குழுவாகவும் தேவகாந்தன், வெங்கட்சாமிநாதன் ஆகியோர் தனியாகவும் , மோகனரங்கன் சூத்ரதாரி மற்ற இளைஞர்கள் தனிகுழுவாகவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன் . எல்லாருமே மிகவும் களைத்து போயிருந்தார்கள் .ஆனால் யாருமே தூங்க விரும்பவுமில்லை. காலையில் எழுந்து காலைநடை போகவேண்டும் என்று சொல்லி அவர்களிடம் தூங்குமாறு கேட்டுக் கொள்ளவேண்டியிருந்தது . இலக்கியவாதிகளுக்கு ஒருபோதும் பேசி அலுப்பதில்லை .

[இரண்டாம் நாள் அமர்வு தொடரும்]

***

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்