செக்கு மாடு (குறுநாவல் முதல் பகுதி)

This entry is part [part not set] of 1 in the series 20010701_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக அவன் சங்கற்பம் செய்திருந்தான். நோர்வே போன்ற துருவத்து நாடுகளில் கோடை நாட்களில் பொழுது சாய்வதில்லை என்பது வேறு விடயம்.

அந்தப் பேயை யார் ஏவி விட்டிருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. அவனைச் சந்திப்பதற்க்காக சென்னைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தவமிருக்கும் அவன் தாய் கனகம்மாவுக்கும் காதலியும் தூரத்து உறவுக்காரியுமான கமலிக்கும் கூட இது பற்றிக் கடிதம் எழுதியிருந்தான். பதறிப் போன அவர்கள் மறுகடிதத்துக் குள்ளேயே மந்திரித்த நூலும் சென்னை வடபளனி வீபூதி பிரசாதமும் வைத்து அனுப்பினார்கள். இது அவசர முதலுதவி.

இதைவிட அவனது நலத்துக்காகத் தமிழகத்துக் கோவில்களுக்கு யாத்திரை போய் பிரார்த்தனை செய்யப் போவதாகவும் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். தங்கள் சேமிப்பில் கொஞ்சம் பணம் இருப்பதாகவும் தங்கள் யாத்திரைக்காகப் பணம் அனுப்புவது அவசியம் இல்லை என்றும் வேறு எழுதியிருந்தார்கள். ராசன்தான் குமரனுக்கு செய்வினை செய்து பேயை ஏவி விட்டிருக்கிறான் என்ற விடயத்தையும் கண்டுபிடித்து எழுதியிருந்தாள் கனகம்மா. மந்திரவாதிகளின் ஊரான மட்டக் களப்புக்கு அண்மையில் ராசன் போய் வந்திருப்பதாக அவளுக்கு துப்புக் கிடைத்திருக்கிறதாம்.

தன்னை நேசிக்க உலகத்தில் இரண்டுபேராவது இருக்கிறார்களே என்கிற விடயம் பாறாங் கல்லாக உறைந்துபோயிருந்த அவனது மனதை நெகிழ வைத்திருக்க வேண்டும். கடிதம் வந்த அன்று குமரன் அந்தக் கடிதத்தை முதமிட்டுக்கொண்டு நெடுநேரமாக அழுது கொண்டிருந்தான். பல்வேறு சமூக விடயங்களில் தாங்களே உயர்ந்தவர்கள் என்று கருதிய போதும் இந்து சமய, தமிழ் கலை கலாச்சார விடயங்களில் மட்டும் தமிழகம் சம்பந்தப் பட்டவை எல்லாம் மகத்தானவை என்று கருதுகிற சராசரி இலங்கைத் தமிழன்தான் அவனும். அம்மாவினதும் கமலியினதும் கடிதம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மந்திரித்த நூலைக் கையில் கட்டிக் கொண்டு ‘இனி ஏலுமென்றால் ஆட்டிப் பார்‘ எனெ தனக்கு தொல்லை தருகிற பேய்க்குச் சவாலும் விட்டான்.

கொஞ்ச நாட்களுக்குப் பேய் தென்படவில்லை. பேய்க்கு நேர்ந்த கதியைப் பற்றி அம்மாவுக்கும் கமலிக்கும் மகிழ்ச்சியோடு கடிதம் எழுதிய அன்று இரவே மீண்டும் பேயின் சேட்டைகள் ஆரம்பித்து விட்டன. பாத்திரங்களை உருட்டி ஒலி எழுப்புகிற வளமையான சேட்டைகளோடு பேய் இப்போது இரகசியத் தொனியில் பேசவும் செய்தது. நச்சுக் கொல்லி மருந்துகளுக்குப் பழக்கப் பட்டு விடுகிற கொசுக்களைப் போல அந்தப் பேயும் வீபூதிக்கும் மந்திரித்த நூலுக்கும் பழக்கப் பட்டுவிட்டது என்பதைப் புரிந்து கொண்டபோது அச்சத்தில் குமரனின் உடல் நடுக்கம் எடுத்தது.

2

இரண்டு வருடங்களுக்கு மேலாக குமரன் ஒஸ்லோவின் மத்தியில் இருக்கும் உணவு விடுதி ஒன்றில் பாத்திரம் கழுவுகிற மெசினுக்கு எடுபிடி ஆளாக இருந்து வருகிறான். வந்து குவிகிற எச்சில் தட்டுக்களையும் அழுக்குச் சமையல் பாத்திரங்களையும் அந்த இரும்புப் பூதத்தின் வாயில் திணிக்கிறதும் அது நக்கித் துடைத்துத் தருகிறவற்றை மீண்டும் வெளியில் எடுத்து அடுக்கி வைக்கிறதும் மட்டும்தான் அந்த ஊணவு விடுதியில் அவன் செய்து வருகிற வேலை. பயிற்றுவித்தால் ஒரு குரங்குகூட இதைச் செய்துவிடும் என்பது புரிகிற போதெல்லாம் குமரனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும்.

மழை நாட்களில் எச்சில் தட்டுகள் அவ்வளவாகப் பெருகாது. கழுவுகிற மெசினும் அவனும் சற்று ஓய்ந்திருப்பார்கள். அப்போதெல்லாம் தான் ஒரு பல்கலைக் களக பட்டதாரி என்கிற விசயத்தை அந்த மெசினுக்குப் புரிய வைக்க முயற்ச்சி செய்வான். வீட்டுச் சொந்தக்காரி ‘பேரித்‘ , அந்த உணவு விடுதி நிர்வாகி ‘ஆரில்ட்‘ என அவனோடு சம்பந்தப் படுகிற நோர்வேஜியர்களைப் போலவே அந்த மெசினும்கூட அவனது சிறப்பியல்புகளைப் புரிந்து கொள்வதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. இதுதான் அந்த மெசின்மீது அவனுக்கிருந்த மனத்தாங்கல்களுக்குக் காரணம். இருக்காதா பின்னே.

தமிழ் மாணவர்கள் இலங்கைப் பல்கலைக் களகங்களில் அனுமதி பெறுகிற சாத்தியம் அருகியிருந்த காலக் கட்டத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கே அனுமதி பெற்றவனல்லவா அவன். இதற்காக அவன் தனது இளமைக் காலம் முழுவதையுமே இழந்திருக்கிறான். பேராதனைப் பல்கலைக் கழக மாணவனாக இருந்த காலத்தில் இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்டு அகதியாக யாழ்ப்பாணத்துக்கு ஓடிச் சென்றான். பின் வருடக் கணக்கில் உண்ணாவிரதம் ஊர்வலம் என்று போராடி யாழ்ப்பாணப் பல்கலைக் களகத்துக்கு இடமாற்றம் பெற்று அங்கேயே படித்து முடித்து பட்டமும் பெற்றான். இவையெல்லாம் சாதனையே இல்லையா ? யாரும் இதனை பொருட்படுத்த வேண்டியதே இல்லையா ?

    வாட்டசாட்டமான தேகத்துடன் வேலை தேடி வந்திருக்கிறவன் இலங்கைத் தமிழன் என்று தெரிந்ததுமே அந்த உணவு விடுதியின் நிர்வாகி ஆரில்ட் பாத்திரம் கழுவுகிற வேலைக்கு குமரனே மிகப் பொருத்தமான நபர் எனப் புரிந்து கொண்டு அவனுக்கு வேலை வழங்கினான். அந்த மெசினுக்குக் கூட நெடும் காலமாக இலங்கைத் தமிழர்களது சகவாசம் இருந்ததில் தமிழைப் புரிந்து கொண்டது. குமரனும் அந்த மெசினுக்கு உண்மையுடன் குறிப்பறிந்து பணிபுரிந்தான். முறைப்படி அதனைப் பராமரிப்பது, வேலை முடிந்தபின் குளிப்பாட்டி ஈரம் துவட்டி விடுவது என அவன் அந்த மெசினுக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. தன்னை அழிப்பதற்க்குச் சதி செய்கிற பேயுடன் அந்த மெசின் தொடர்பு வைத்திருக்கிற விடயம் தெரிந்தபோது அவன் ஆடிப் போய்விட்டான். இந்தக் குழப்பத்தில் அந்தமெசினை அவன் உதைத்தது என்னவோ உண்மைதான். இதைப் போய் அந்த உணவு விடுதி யின் நிர்வாகி பெரிது படுத்தி இருக்க வேண்டாம். நிர்வாகி பக்கத்தில் எங்கோ நிற்க்கிற நேரம் பார்த்து அந்தப் பாத்திரம் கழுவும் மெசின் ‘சிசுக் கொலைகாரன், சிசுக் கொலைகாரன்‘ என அவனைக் கிண்டல் செய்தது.

அதுவரை பேய்மட்டும் அவன் மீது இப்படி ஒரு பழியைச் சுமத்தி வந்தது. குமரன் ஆத்திரத்துடன் ‘நீயுமா புரூட்டஸ்‘ என்று கத்தியபடி மெசினுக்கு உதை விட்டான்..

3

இன்றைய நாள் முடிவடைவதற்குள்ளேயே அந்தப் பேயை தேடிப் பிடித்து நொறுக்கிப் போட வேண்டுமென்று குமரனுக்கு வெறியேற்றப் பட்டதற்கு போதிய காரணங்கள் இருந்தன. குமரன் எப்போது வீட்டுக்குப் போனாலும் அவனது அறை மூலையில் இருந்த மின்சார அடுப்பங்கரையில் நாற்றமெடுக்கும் எச்சில் கோப்பைகளை பேய் குவித்து வைத்திருக்கும். அந்தப் பேய் இதனோடு திருப்திப் படாமல் இரவிரவாக அந்த எச்சில் பாத்திரங்களை நிலத்தில் எறிந்து உருட்டி ஒலி எழுப்பி அவனது தூக்கத்தையும் கூட கெடுத்தது. காலையில் போய்ப் பார்த்தால் பாத்திரங்கள் எதுவும் நிலத்தில் உருண்டிருக்காது.

ஒருமுறை எதிர்பாராத விதமாக அவனது வீட்டுக்கும் ஒரு விருந்தாளி வந்திருந்தான். பல்களைக்களக நண்பனான அந்த விருந்தாளி வீட்டுக்கு வந்த உடனேயே பேயின் ஆதரவாளனாக மாறி விட்டதில் குமரனது கோபத்துக்கு ஆளாக வேண்டி யிருந்தது. அடுப்பங்கரையில் எச்சில் கோப்பைகளைக் குவித்து வைப்பது பேயல்ல குமரன்தான் என்பது அவனது வாதம். “ஒஸ்லோ நகரம் முழுவதற்குமே எச்சில் கோப்பை கழுவித் தாறவன் நான், என்னைப் பார்த்து சாப்பிட்ட கோப்பை களுவ வக்கில்லாதவன் என்று சொல்ல நீ யாரடா ?” ஏன்று பேசி குமரன் அவனைத் துரத்தி விட்டான்.

அந்த இரவு எச்சில் பாத்திரங்களைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தது பேய். அவனுக்கு கோபம் தாளவில்லை. “சொல் நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்” என அவன் கத்தினான். மின்சார அடுப்பங்கரைப் பக்கமாக பேய் சிரிக்கும் சப்தம் கேட்டது. “உனது அக்கா குந்தவையின் சிசுவைக் கொலை செய்தது பாவம் இல்லாமல் என்னவாம்” என்று பேய் முனுமுனுத்தபோது அவன் உண்மையிலேயே தடுமாறிப் போனான். அவனது முகம் வெளிறிப்போனது. உடல் நடுங்கியது. “குந்தவை அக்காவின் பிள்ளையை நானா கொன்றேன்” என்று தன்னைத் தானே விசாரித்து துக்கித்தான்.

அவனுக்கு மூன்று சகோதர சகோதரிகள் . அக்காவின் பெயர் குந்தவை. தங்கையின் பெயர் செல்வி. தம்பி சுரேஸ். போர்க்களத்தில் மரணமடைந்து விட்ட அவனது இயக்கப் பெயர் மேஜர் பகத்சிங். குமரனின் அக்கா பிறந்த தசாப்தத்தில் பிறந்த பலருக்கு குந்தவை என்ற பெயர் வாய்த்திருந்தது. கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை வாசித்துவிட்டு யாழ்ப்பானத்து தமிழர்கள் சிலர் சோழ அரசர்களாகவும் இளவரசிகளாகவும் தங்களை வரித்துக் கொண்டு பகல் கனவுகளில் புலிக் கொடியுடன் பவனி வந்த நாட்கள் அது. புலிக் கொடி தாங்கியபடி குதிரைகளிலும் கப்பல்களிலும் திரிந்த அவர்கள் தமது கனவுலகச் சுப்பர்மான்களான சோழ அரசர்களது பெயர்களை தமது பிள்ளைகளுக்கும் சூட்டினர். அவனது அக்காவும் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் வெளிவந்த காலத்தில் பிறந்தவள்தான். அவளுக்கு சோள இளவரசி குந்தவைப் பிரட்டியின் பெயர் இப்படித்தான் வாய்த்தது.

4

பெயரின் பின்னனி எதுவாக இருந்த போதும் குந்தவை சராசரி யாழ்ப்பானத்துப் பெண்தான். சின்னவயதில் இருந்தே படிப்பில் அவளுக்கு ஈடுபாடிருக்கவில்லை. வீட்டுப் பணிகளை ஒரு ஈடுபாட்டோடு செய்கிறது, ஊர் ஊராக ஆள் அனுப்பி நல்ல பூக்கன்று நாற்றுகளைச் சேகரித்து வீட்டு வளவையும் முற்றத்தையும் பூஞ்சோலையாக்குவது; இலங்கை வானொலி `பூவும் பொட்டும் – மங்கையர் மஞ்சரி` நிகழ்ச்சிக்கு கடிதங்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பி வானொலியில் அவை வாசிக்கப் படுகிறபோது உச்சி குளிர்ந்து போவது, இப்படி அவளது உலகம் யாழ்ப்பானத்து சராசரி இளம் பெண்களின் உலகம்தான். இலங்கை வானொலியில் வாசிக்கப் பட்ட குந்தவையின் மிக சாதாரண கவிதை ஒன்றைப் பெண் பெயரில் “ஓகோ ஒகோ” எனப் புகழ்ந்து பாராட்டிக் கடிதமெழுதி குந்தவையின் சினேகிதனாகியவன்தான் ராசன். இதனை மோப்பம் பிடித்தது, ராசனின் ஊர், பெயர், சாதிசனங்களைப் பற்றிய தகவல்களை விசாரித்து அறிந்தது பின்னர் குந்தவையை விசாரித்து எச்சரித்தது இவையெல்லாம் யாருக்குமே தெரியாமல் நான்கு சுவர்களுக்குள் கனகம்மாவே நடத்தி முடித்திருந்த நாடகம். முதலில் காதல் ஒன்றும் இல்லை, வானொலிக் கவிதைகள் தொடர்பாகப் பாராட்டி ராசன் கடிதம் எழுதியது மட்டும்தான் நடந்தது என்று வாதிட்ட குந்தவைக்கு கனகம்மா தான் கைப்பற்றி வைத்திருந்த கடிதங்களைக் காட்டினாள். பின்னர் அவளிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு கதையை தங்கள் இருவருக்குள்ளும் அமுக்கி விட்டாள் கனகம்மா .

இது நடந்து நான்கைந்து வருடங்களுக்குப்பின் மீண்டும் ராசனும் குந்தவையும் தொடர்புகளை பராமரிக்கும் விடயம் கனகம்மாவுக்குத் தெரிய வந்தது. அப்பாவுக்குக்கூட இதனைச் சொல்ல வேண்டாம் என்ற நிபந்தனையோடு கனகம்மா அப்போது பல்கலைக்களக மாணவனாக இருந்த குமரனிடம் குந்தவையின் காதல் விபரம் சொன்னாள். குமரனே அப்பாவாக அவதாரம் எடுத்து, குந்தவையை அக்கா என்றும் பாராமல் கன்னத்தில் அறைந்து அட்டகாசம் செய்துவிட்டான். “எங்கள் அந்தஸ்தென்ன கேவலம் ஒரு சிறு சாப்பாட்டுக் கடை நடத்திற நாயை கல்யாணம் கட்டப் போறியா” என்று குமரன் கத்தினான். “தம்பி நீ பேசிற கொம்யுனிசம் இதுதானா” என்று கிளர்ந்த குந்தவை, பின் பணிந்துபோய் இனி ராசனிடம் தொடர்பு கொள்வதில்லை என்று மீண்டும் சத்தியம் செய்து கொடுத்தாள். இந்தத் தடவை கனகம்மா அவளை நம்பவில்லை. பின்னர் குந்தவைக்கு திருமணப் பேச்சுகள் ஆரம்பித்தபோதும் செவ்வாய் சாதகத்தில் எழாவது வீட்டில் குந்தியிருந்து திருமன முயற்ச்சிகளைத் தோற்கடித்துக் கொண்டிருந்தது.

இதுதான் அவர்களது வாழ்வைத் தலை கீழாக மாற்றிப் போட்ட சம்பவங்கள் பல வேகமாக இடம் பெற்ற காலக் கட்டம். “நாட்டுக்காக வீட்டை விட்டுப் போகிறேன். என்னைத் தேடவேண்டாம்” என துண்டெழுதி சோற்றுப் பானைக்குள் வைத்துவிட்டு சுரேஸ் காணாமல் போனது இந்தச் சம்பவக் கோவையின் தொடக்கம். அதன் பின் தங்கை செல்வி பூப்படைந்தது, நாகலிங்கம் பணியில் இருந்து ஓய்வூதியம் பெற்று வீட்டில் சாய்மனை நாற்காலி வாசியானது, போராளியாக இயக்கத்துக்குப் போன சுரேஸ்கா அகால மரணமடைந்து மாவீரனாகியது, குமரன் நோர்வேக்கு அகதியாக வந்து சேர்ந்து வீட்டாரின் சுமைதாங்கியானது எல்லாம் அடுத்தடுத்து இடம்பெற்ற சம்பவங்கள்.

5

குமரன் அகதியாக நோர்வே வந்து சிதைய யாழ்ப்பாணத்தில் அவனது குடும்பம் சமூக பொருளாதார ரீதியாகப் பலப்படத் தொடங்கியது. புதுப் பவிசு வந்ததில் நாகலிங்கம் தன்னையும் பணக்காரர் வரிசையில் தூக்கி இருத்திக் கொண்டார். கடந்த சில வருடங்களாகக் குந்தவைக்கு பள்ளி ஆசிரியர் மட்டத்தில்கூட ஒரு மாப்பிளை தேட முடியாமல் கஸ்டப் பட்ட நாகலிங்கம் திடாரென்று டாக்டர், எஞ்சினியர், பல்கலைக்களக விரிவுரையாளர் எனன்ற மட்டத்தில் மாப்பிளை தேட ஆரம்பித்தார். குந்தவைக்கு கொழும்பு பல்களைக்களக விரிவுரையாளரான பேரின்பத்தை திருமணம் பேசப் பட்டது. மாப்பிளை வீட்டார் மூன்று லட்சம் சீதணம் கேட்பதாக முதலில் கடிதம் வந்தது. குமரனும் சரி பணம் அனுப்புகிறேன் என்று வழி மொழிந்து பதில் எழுதினான்.

இதற்குள் பேரின்பத்தின் தாயார் மகனுக்கு பல பணக்கார வீடுகளில் இருந்து திருமணம் பேசி வருகிறார்கள் என்று கூறி தங்கள் பெருமை பேசத்தொடங்கினாள். குந்தவையின் சாதகமும் பேரின்பத்தின் சாதகமும் நன்கு பொருந்தி இருப்பதால்தான் தாங்கள் இந்த திருமணத்துக்கு சம்மதித்தாகவும் இந்த திருமணத்தால் தங்களுக்கு நட்டம்தான் என்றும் அவள் திரும்ப திரும்ப கூறியபோது நாகலிங்கம் கொதித்துப் போய்விட்டார். “நாங்கள் மட்டுமென்ன சின்னப் பணக்காரர்களா ? எனது மகன் குமரன் நோர்வேயில் கோடாஸ்வரனாக இருக்கிறான். படதாரி, பெரிய அறிஞன். நோர்வே அரசாங்கமே அவனை இலங்கைக்குத் திரும்பி செல்ல விடாமல் வேலை, வீடு எல்லாம் கொடுத்து தங்கள் நாட்டோடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலகாலத்தில் அவனுக்குக் குடியுரிமைகூடக் கொடுத்து விடுவார்கள். நாங்களும் பணக்காரர்தான். எங்களாலும் ஐந்து லட்சம் சீதனமாகக் கொடுக்க முடியும்” என்று ஆத்திரப் பட்டு பொரிந்து நாகலிங்கம் வாக்குறுதியும் வேறு கொடுத்து விட்டார். வீட்டில் கனகம்மா, செல்வி, குந்தவை எல்லோரும் இதைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டார்கள்.

இதை அறிந்ததும் குமரனுக்கு ஐந்தாறு நாட்களாக கை கால் ஓடவில்லை. ஒருநாள் முழுவதும் அறையைப் பூட்டிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதான். தனது தந்தையாராகிய நாகலிங்கத்தை ஏக வசனத்தில் திட்டித் தீர்த்து நீண்ட கடிதமொன்றும் எழுதினான். சம்பிராய பூர்வமாக “உங்கள் அன்பு மகன் குமரன்” என்று வீட்டுக்கு எழுதும் கடிதங்களை கையொப்பமிட்டு முடிப்பது அவனது வளக்கம். ஆனால் அந்தக் கடிதத்தில் அவன் வெறுமனவே “குமரன்” என்று மட்டுமே கையொப்பமிட்டிருந்தான். நாகலிங்கம் அதைப் பற்றி ஒன்றுமே அலட்டிக் கொள்ளவில்லை. உனது பெருமையை நிலை நாட்டத்தான் அப்படிச் சொன்னேன். அந்த லெக்சரர் மாப்பிள்ளை ஐந்து என்ன, பத்து லட்சமே பெறுவான். நீயும் கொஞ்ச நாளைக்கு ஜெர்மனியில் இருக்கின்ற பக்கத்து வீட்டுப் பையன் நாதனைப்போல இரண்டு வேலை மூன்றுவேலையென ஓடி ஆடிச் செய்யலாம்தானே. கவலையை விட்டுவிட்டு ஆகிறதைப் பார். சீதணப் பணத்தைக் கூடிய விரைவில் அனுப்பிவை.” என்று நான்கு வரியில் கடிதம் எழுதி யிருந்தார்.

ஒருவாறு பாரமிழுக்கிற மிருகம்போலாகி உறக்கத்தையும் ஓய்வையும் மறந்து இரண்டு மூன்று உணவு விடுதிகளில் ஓடி ஓடிக் களுவி ஐந்து லட்சம் அனுப்பியபோது, கனகம்மா குந்தவையும் கையுமாக கொழும்புக்கு வந்து தொலைபேசியில் விக்கி விக்கி அழுதாள். குந்தவை கர்ப்பமாய் இருக்கிறாள், அந்தப் படுபாவி ராசன்தான் அவளை ஏமாற்றிக் கெடுத்துப்போட்டான் என்று அழுத அம்மாவைச் சமாதானம் செய்த குமரன், ரகசியமாக கருச்சிதைவு செய்துவிட்டு ஏற்கனவே பேசி ஒழுங்காய் இருக்கிற மாதிரி பேரின்பத்துக்கே திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று தொலை பேசி மூலமே தீர்ப்பு வளங்கினான்.

“நீ மட்டும் கமலியைக் காதலிக்கலாம் நான் ராசனை விரும்பினால் மட்டும் பிழையா” என்று வாதாட முற்ப்பட்ட குந்தவையை “பொத்தடி வாய் வேசை” என்று நெத்தி அடியில் வாயை அடைத்தவன் கருச்சிதைவுக்குமுன் இனி அவளோடு எதுவும் பேசமுடியாது என்றும் மறுத்து விட்டான்.

“செப்புச் சல்லியும் சீதனமாகத் தனக்கு வேண்டாம் என்று ராசன் கடிதம் எழுதியிருக்கிறான் மகனே. குந்தவையை ராசனுக்கும் செல்வியை பேரின்பத்துக்கும் கலியாணம் செய்து வைப்போமா” என்று தயங்கி தயங்கி கோரிக்கை விடுத்த தாய் மீதும் வெறுப்பைக் கக்கினான். நாகலிங்கமும் குமரனும் , ராசனை நிராகரித்ததற்க்கு ஒரு சிறு உணவு விடுதியின் சொந்தக் காரனான ராசனது தாழ்ந்த சமூக அந்தஸ்துதான் காரணம். மற்றப்படி ராசனும் அவர்களும் ஒரே சாதிதான்.

குந்தவையின் திருமணம் நடந்து அதற்குள் இரண்டு வருட மாகிவிட்டது. அவள் இப்போது தனது கணவன் பேரின்பத்துடன் லண்டனுக்கு வரவிருக்கிறாள். “அத்தானுக்கு மேற்படிப்புக்காக புலமைப் பரிசில் கிடைத்திருக்கிறது. வருகிற யூன் மாதமளவில் லண்டன் செல்கிறோம். நான் தாயாக இருக்கிறேன். கட்டாயம் நீ என்னை வந்து பார்க்க வேண்டும்.” எனக் குந்தவை மகிழ்ச்சியோடு கடிதம் எழுதியிருந்தாள். லண்டனில்தான் குழந்தை பிறக்குமாம்.

(கடைசிப்பகுதி அடுத்த வாரம்)


  • செக்கு மாடு (குறுநாவல் முதல் பகுதி)

செக்கு மாடு (குறுநாவல் முதல் பகுதி)

This entry is part [part not set] of 17 in the series 20010629_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக அவன் சங்கற்பம் செய்திருந்தான். நோர்வே போன்ற துருவத்து நாடுகளில் கோடை நாட்களில் பொழுது சாய்வதில்லை என்பது வேறு விடயம்.

அந்தப் பேயை யார் ஏவி விட்டிருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. அவனைச் சந்திப்பதற்க்காக சென்னைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தவமிருக்கும் அவன் தாய் கனகம்மாவுக்கும் காதலியும் தூரத்து உறவுக்காரியுமான கமலிக்கும் கூட இது பற்றிக் கடிதம் எழுதியிருந்தான். பதறிப் போன அவர்கள் மறுகடிதத்துக் குள்ளேயே மந்திரித்த நூலும் சென்னை வடபளனி வீபூதி பிரசாதமும் வைத்து அனுப்பினார்கள். இது அவசர முதலுதவி.

இதைவிட அவனது நலத்துக்காகத் தமிழகத்துக் கோவில்களுக்கு யாத்திரை போய் பிரார்த்தனை செய்யப் போவதாகவும் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். தங்கள் சேமிப்பில் கொஞ்சம் பணம் இருப்பதாகவும் தங்கள் யாத்திரைக்காகப் பணம் அனுப்புவது அவசியம் இல்லை என்றும் வேறு எழுதியிருந்தார்கள். ராசன்தான் குமரனுக்கு செய்வினை செய்து பேயை ஏவி விட்டிருக்கிறான் என்ற விடயத்தையும் கண்டுபிடித்து எழுதியிருந்தாள் கனகம்மா. மந்திரவாதிகளின் ஊரான மட்டக் களப்புக்கு அண்மையில் ராசன் போய் வந்திருப்பதாக அவளுக்கு துப்புக் கிடைத்திருக்கிறதாம்.

தன்னை நேசிக்க உலகத்தில் இரண்டுபேராவது இருக்கிறார்களே என்கிற விடயம் பாறாங் கல்லாக உறைந்துபோயிருந்த அவனது மனதை நெகிழ வைத்திருக்க வேண்டும். கடிதம் வந்த அன்று குமரன் அந்தக் கடிதத்தை முதமிட்டுக்கொண்டு நெடுநேரமாக அழுது கொண்டிருந்தான். பல்வேறு சமூக விடயங்களில் தாங்களே உயர்ந்தவர்கள் என்று கருதிய போதும் இந்து சமய, தமிழ் கலை கலாச்சார விடயங்களில் மட்டும் தமிழகம் சம்பந்தப் பட்டவை எல்லாம் மகத்தானவை என்று கருதுகிற சராசரி இலங்கைத் தமிழன்தான் அவனும். அம்மாவினதும் கமலியினதும் கடிதம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மந்திரித்த நூலைக் கையில் கட்டிக் கொண்டு ‘இனி ஏலுமென்றால் ஆட்டிப் பார்‘ எனெ தனக்கு தொல்லை தருகிற பேய்க்குச் சவாலும் விட்டான்.

கொஞ்ச நாட்களுக்குப் பேய் தென்படவில்லை. பேய்க்கு நேர்ந்த கதியைப் பற்றி அம்மாவுக்கும் கமலிக்கும் மகிழ்ச்சியோடு கடிதம் எழுதிய அன்று இரவே மீண்டும் பேயின் சேட்டைகள் ஆரம்பித்து விட்டன. பாத்திரங்களை உருட்டி ஒலி எழுப்புகிற வளமையான சேட்டைகளோடு பேய் இப்போது இரகசியத் தொனியில் பேசவும் செய்தது. நச்சுக் கொல்லி மருந்துகளுக்குப் பழக்கப் பட்டு விடுகிற கொசுக்களைப் போல அந்தப் பேயும் வீபூதிக்கும் மந்திரித்த நூலுக்கும் பழக்கப் பட்டுவிட்டது என்பதைப் புரிந்து கொண்டபோது அச்சத்தில் குமரனின் உடல் நடுக்கம் எடுத்தது.

2

இரண்டு வருடங்களுக்கு மேலாக குமரன் ஒஸ்லோவின் மத்தியில் இருக்கும் உணவு விடுதி ஒன்றில் பாத்திரம் கழுவுகிற மெசினுக்கு எடுபிடி ஆளாக இருந்து வருகிறான். வந்து குவிகிற எச்சில் தட்டுக்களையும் அழுக்குச் சமையல் பாத்திரங்களையும் அந்த இரும்புப் பூதத்தின் வாயில் திணிக்கிறதும் அது நக்கித் துடைத்துத் தருகிறவற்றை மீண்டும் வெளியில் எடுத்து அடுக்கி வைக்கிறதும் மட்டும்தான் அந்த ஊணவு விடுதியில் அவன் செய்து வருகிற வேலை. பயிற்றுவித்தால் ஒரு குரங்குகூட இதைச் செய்துவிடும் என்பது புரிகிற போதெல்லாம் குமரனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும்.

மழை நாட்களில் எச்சில் தட்டுகள் அவ்வளவாகப் பெருகாது. கழுவுகிற மெசினும் அவனும் சற்று ஓய்ந்திருப்பார்கள். அப்போதெல்லாம் தான் ஒரு பல்கலைக் களக பட்டதாரி என்கிற விசயத்தை அந்த மெசினுக்குப் புரிய வைக்க முயற்ச்சி செய்வான். வீட்டுச் சொந்தக்காரி ‘பேரித்‘ , அந்த உணவு விடுதி நிர்வாகி ‘ஆரில்ட்‘ என அவனோடு சம்பந்தப் படுகிற நோர்வேஜியர்களைப் போலவே அந்த மெசினும்கூட அவனது சிறப்பியல்புகளைப் புரிந்து கொள்வதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. இதுதான் அந்த மெசின்மீது அவனுக்கிருந்த மனத்தாங்கல்களுக்குக் காரணம். இருக்காதா பின்னே.

தமிழ் மாணவர்கள் இலங்கைப் பல்கலைக் களகங்களில் அனுமதி பெறுகிற சாத்தியம் அருகியிருந்த காலக் கட்டத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கே அனுமதி பெற்றவனல்லவா அவன். இதற்காக அவன் தனது இளமைக் காலம் முழுவதையுமே இழந்திருக்கிறான். பேராதனைப் பல்கலைக் கழக மாணவனாக இருந்த காலத்தில் இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்டு அகதியாக யாழ்ப்பாணத்துக்கு ஓடிச் சென்றான். பின் வருடக் கணக்கில் உண்ணாவிரதம் ஊர்வலம் என்று போராடி யாழ்ப்பாணப் பல்கலைக் களகத்துக்கு இடமாற்றம் பெற்று அங்கேயே படித்து முடித்து பட்டமும் பெற்றான். இவையெல்லாம் சாதனையே இல்லையா ? யாரும் இதனை பொருட்படுத்த வேண்டியதே இல்லையா ?

வாட்டசாட்டமான தேகத்துடன் வேலை தேடி வந்திருக்கிறவன் இலங்கைத் தமிழன் என்று தெரிந்ததுமே அந்த உணவு விடுதியின் நிர்வாகி ஆரில்ட் பாத்திரம் கழுவுகிற வேலைக்கு குமரனே மிகப் பொருத்தமான நபர் எனப் புரிந்து கொண்டு அவனுக்கு வேலை வழங்கினான். அந்த மெசினுக்குக் கூட நெடும் காலமாக இலங்கைத் தமிழர்களது சகவாசம் இருந்ததில் தமிழைப் புரிந்து கொண்டது. குமரனும் அந்த மெசினுக்கு உண்மையுடன் குறிப்பறிந்து பணிபுரிந்தான். முறைப்படி அதனைப் பராமரிப்பது, வேலை முடிந்தபின் குளிப்பாட்டி ஈரம் துவட்டி விடுவது என அவன் அந்த மெசினுக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. தன்னை அழிப்பதற்க்குச் சதி செய்கிற பேயுடன் அந்த மெசின் தொடர்பு வைத்திருக்கிற விடயம் தெரிந்தபோது அவன் ஆடிப் போய்விட்டான். இந்தக் குழப்பத்தில் அந்தமெசினை அவன் உதைத்தது என்னவோ உண்மைதான். இதைப் போய் அந்த உணவு விடுதி யின் நிர்வாகி பெரிது படுத்தி இருக்க வேண்டாம். நிர்வாகி பக்கத்தில் எங்கோ நிற்க்கிற நேரம் பார்த்து அந்தப் பாத்திரம் கழுவும் மெசின் ‘சிசுக் கொலைகாரன், சிசுக் கொலைகாரன்‘ என அவனைக் கிண்டல் செய்தது.

அதுவரை பேய்மட்டும் அவன் மீது இப்படி ஒரு பழியைச் சுமத்தி வந்தது. குமரன் ஆத்திரத்துடன் ‘நீயுமா புரூட்டஸ்‘ என்று கத்தியபடி மெசினுக்கு உதை விட்டான்..

3

இன்றைய நாள் முடிவடைவதற்குள்ளேயே அந்தப் பேயை தேடிப் பிடித்து நொறுக்கிப் போட வேண்டுமென்று குமரனுக்கு வெறியேற்றப் பட்டதற்கு போதிய காரணங்கள் இருந்தன. குமரன் எப்போது வீட்டுக்குப் போனாலும் அவனது அறை மூலையில் இருந்த மின்சார அடுப்பங்கரையில் நாற்றமெடுக்கும் எச்சில் கோப்பைகளை பேய் குவித்து வைத்திருக்கும். அந்தப் பேய் இதனோடு திருப்திப் படாமல் இரவிரவாக அந்த எச்சில் பாத்திரங்களை நிலத்தில் எறிந்து உருட்டி ஒலி எழுப்பி அவனது தூக்கத்தையும் கூட கெடுத்தது. காலையில் போய்ப் பார்த்தால் பாத்திரங்கள் எதுவும் நிலத்தில் உருண்டிருக்காது.

ஒருமுறை எதிர்பாராத விதமாக அவனது வீட்டுக்கும் ஒரு விருந்தாளி வந்திருந்தான். பல்களைக்களக நண்பனான அந்த விருந்தாளி வீட்டுக்கு வந்த உடனேயே பேயின் ஆதரவாளனாக மாறி விட்டதில் குமரனது கோபத்துக்கு ஆளாக வேண்டி யிருந்தது. அடுப்பங்கரையில் எச்சில் கோப்பைகளைக் குவித்து வைப்பது பேயல்ல குமரன்தான் என்பது அவனது வாதம். “ஒஸ்லோ நகரம் முழுவதற்குமே எச்சில் கோப்பை கழுவித் தாறவன் நான், என்னைப் பார்த்து சாப்பிட்ட கோப்பை களுவ வக்கில்லாதவன் என்று சொல்ல நீ யாரடா ?” ஏன்று பேசி குமரன் அவனைத் துரத்தி விட்டான்.

அந்த இரவு எச்சில் பாத்திரங்களைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தது பேய். அவனுக்கு கோபம் தாளவில்லை. “சொல் நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்” என அவன் கத்தினான். மின்சார அடுப்பங்கரைப் பக்கமாக பேய் சிரிக்கும் சப்தம் கேட்டது. “உனது அக்கா குந்தவையின் சிசுவைக் கொலை செய்தது பாவம் இல்லாமல் என்னவாம்” என்று பேய் முனுமுனுத்தபோது அவன் உண்மையிலேயே தடுமாறிப் போனான். அவனது முகம் வெளிறிப்போனது. உடல் நடுங்கியது. “குந்தவை அக்காவின் பிள்ளையை நானா கொன்றேன்” என்று தன்னைத் தானே விசாரித்து துக்கித்தான்.

அவனுக்கு மூன்று சகோதர சகோதரிகள் . அக்காவின் பெயர் குந்தவை. தங்கையின் பெயர் செல்வி. தம்பி சுரேஸ். போர்க்களத்தில் மரணமடைந்து விட்ட அவனது இயக்கப் பெயர் மேஜர் பகத்சிங். குமரனின் அக்கா பிறந்த தசாப்தத்தில் பிறந்த பலருக்கு குந்தவை என்ற பெயர் வாய்த்திருந்தது. கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை வாசித்துவிட்டு யாழ்ப்பானத்து தமிழர்கள் சிலர் சோழ அரசர்களாகவும் இளவரசிகளாகவும் தங்களை வரித்துக் கொண்டு பகல் கனவுகளில் புலிக் கொடியுடன் பவனி வந்த நாட்கள் அது. புலிக் கொடி தாங்கியபடி குதிரைகளிலும் கப்பல்களிலும் திரிந்த அவர்கள் தமது கனவுலகச் சுப்பர்மான்களான சோழ அரசர்களது பெயர்களை தமது பிள்ளைகளுக்கும் சூட்டினர். அவனது அக்காவும் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் வெளிவந்த காலத்தில் பிறந்தவள்தான். அவளுக்கு சோள இளவரசி குந்தவைப் பிரட்டியின் பெயர் இப்படித்தான் வாய்த்தது.

4

பெயரின் பின்னனி எதுவாக இருந்த போதும் குந்தவை சராசரி யாழ்ப்பானத்துப் பெண்தான். சின்னவயதில் இருந்தே படிப்பில் அவளுக்கு ஈடுபாடிருக்கவில்லை. வீட்டுப் பணிகளை ஒரு ஈடுபாட்டோடு செய்கிறது, ஊர் ஊராக ஆள் அனுப்பி நல்ல பூக்கன்று நாற்றுகளைச் சேகரித்து வீட்டு வளவையும் முற்றத்தையும் பூஞ்சோலையாக்குவது; இலங்கை வானொலி `பூவும் பொட்டும் – மங்கையர் மஞ்சரி` நிகழ்ச்சிக்கு கடிதங்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பி வானொலியில் அவை வாசிக்கப் படுகிறபோது உச்சி குளிர்ந்து போவது, இப்படி அவளது உலகம் யாழ்ப்பானத்து சராசரி இளம் பெண்களின் உலகம்தான். இலங்கை வானொலியில் வாசிக்கப் பட்ட குந்தவையின் மிக சாதாரண கவிதை ஒன்றைப் பெண் பெயரில் “ஓகோ ஒகோ” எனப் புகழ்ந்து பாராட்டிக் கடிதமெழுதி குந்தவையின் சினேகிதனாகியவன்தான் ராசன். இதனை மோப்பம் பிடித்தது, ராசனின் ஊர், பெயர், சாதிசனங்களைப் பற்றிய தகவல்களை விசாரித்து அறிந்தது பின்னர் குந்தவையை விசாரித்து எச்சரித்தது இவையெல்லாம் யாருக்குமே தெரியாமல் நான்கு சுவர்களுக்குள் கனகம்மாவே நடத்தி முடித்திருந்த நாடகம். முதலில் காதல் ஒன்றும் இல்லை, வானொலிக் கவிதைகள் தொடர்பாகப் பாராட்டி ராசன் கடிதம் எழுதியது மட்டும்தான் நடந்தது என்று வாதிட்ட குந்தவைக்கு கனகம்மா தான் கைப்பற்றி வைத்திருந்த கடிதங்களைக் காட்டினாள். பின்னர் அவளிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு கதையை தங்கள் இருவருக்குள்ளும் அமுக்கி விட்டாள் கனகம்மா .

இது நடந்து நான்கைந்து வருடங்களுக்குப்பின் மீண்டும் ராசனும் குந்தவையும் தொடர்புகளை பராமரிக்கும் விடயம் கனகம்மாவுக்குத் தெரிய வந்தது. அப்பாவுக்குக்கூட இதனைச் சொல்ல வேண்டாம் என்ற நிபந்தனையோடு கனகம்மா அப்போது பல்கலைக்களக மாணவனாக இருந்த குமரனிடம் குந்தவையின் காதல் விபரம் சொன்னாள். குமரனே அப்பாவாக அவதாரம் எடுத்து, குந்தவையை அக்கா என்றும் பாராமல் கன்னத்தில் அறைந்து அட்டகாசம் செய்துவிட்டான். “எங்கள் அந்தஸ்தென்ன கேவலம் ஒரு சிறு சாப்பாட்டுக் கடை நடத்திற நாயை கல்யாணம் கட்டப் போறியா” என்று குமரன் கத்தினான். “தம்பி நீ பேசிற கொம்யுனிசம் இதுதானா” என்று கிளர்ந்த குந்தவை, பின் பணிந்துபோய் இனி ராசனிடம் தொடர்பு கொள்வதில்லை என்று மீண்டும் சத்தியம் செய்து கொடுத்தாள். இந்தத் தடவை கனகம்மா அவளை நம்பவில்லை. பின்னர் குந்தவைக்கு திருமணப் பேச்சுகள் ஆரம்பித்தபோதும் செவ்வாய் சாதகத்தில் எழாவது வீட்டில் குந்தியிருந்து திருமன முயற்ச்சிகளைத் தோற்கடித்துக் கொண்டிருந்தது.

இதுதான் அவர்களது வாழ்வைத் தலை கீழாக மாற்றிப் போட்ட சம்பவங்கள் பல வேகமாக இடம் பெற்ற காலக் கட்டம். “நாட்டுக்காக வீட்டை விட்டுப் போகிறேன். என்னைத் தேடவேண்டாம்” என துண்டெழுதி சோற்றுப் பானைக்குள் வைத்துவிட்டு சுரேஸ் காணாமல் போனது இந்தச் சம்பவக் கோவையின் தொடக்கம். அதன் பின் தங்கை செல்வி பூப்படைந்தது, நாகலிங்கம் பணியில் இருந்து ஓய்வூதியம் பெற்று வீட்டில் சாய்மனை நாற்காலி வாசியானது, போராளியாக இயக்கத்துக்குப் போன சுரேஸ்கா அகால மரணமடைந்து மாவீரனாகியது, குமரன் நோர்வேக்கு அகதியாக வந்து சேர்ந்து வீட்டாரின் சுமைதாங்கியானது எல்லாம் அடுத்தடுத்து இடம்பெற்ற சம்பவங்கள்.

5

குமரன் அகதியாக நோர்வே வந்து சிதைய யாழ்ப்பாணத்தில் அவனது குடும்பம் சமூக பொருளாதார ரீதியாகப் பலப்படத் தொடங்கியது. புதுப் பவிசு வந்ததில் நாகலிங்கம் தன்னையும் பணக்காரர் வரிசையில் தூக்கி இருத்திக் கொண்டார். கடந்த சில வருடங்களாகக் குந்தவைக்கு பள்ளி ஆசிரியர் மட்டத்தில்கூட ஒரு மாப்பிளை தேட முடியாமல் கஸ்டப் பட்ட நாகலிங்கம் திடாரென்று டாக்டர், எஞ்சினியர், பல்கலைக்களக விரிவுரையாளர் எனன்ற மட்டத்தில் மாப்பிளை தேட ஆரம்பித்தார். குந்தவைக்கு கொழும்பு பல்களைக்களக விரிவுரையாளரான பேரின்பத்தை திருமணம் பேசப் பட்டது. மாப்பிளை வீட்டார் மூன்று லட்சம் சீதணம் கேட்பதாக முதலில் கடிதம் வந்தது. குமரனும் சரி பணம் அனுப்புகிறேன் என்று வழி மொழிந்து பதில் எழுதினான்.

இதற்குள் பேரின்பத்தின் தாயார் மகனுக்கு பல பணக்கார வீடுகளில் இருந்து திருமணம் பேசி வருகிறார்கள் என்று கூறி தங்கள் பெருமை பேசத்தொடங்கினாள். குந்தவையின் சாதகமும் பேரின்பத்தின் சாதகமும் நன்கு பொருந்தி இருப்பதால்தான் தாங்கள் இந்த திருமணத்துக்கு சம்மதித்தாகவும் இந்த திருமணத்தால் தங்களுக்கு நட்டம்தான் என்றும் அவள் திரும்ப திரும்ப கூறியபோது நாகலிங்கம் கொதித்துப் போய்விட்டார். “நாங்கள் மட்டுமென்ன சின்னப் பணக்காரர்களா ? எனது மகன் குமரன் நோர்வேயில் கோடாஸ்வரனாக இருக்கிறான். படதாரி, பெரிய அறிஞன். நோர்வே அரசாங்கமே அவனை இலங்கைக்குத் திரும்பி செல்ல விடாமல் வேலை, வீடு எல்லாம் கொடுத்து தங்கள் நாட்டோடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலகாலத்தில் அவனுக்குக் குடியுரிமைகூடக் கொடுத்து விடுவார்கள். நாங்களும் பணக்காரர்தான். எங்களாலும் ஐந்து லட்சம் சீதனமாகக் கொடுக்க முடியும்” என்று ஆத்திரப் பட்டு பொரிந்து நாகலிங்கம் வாக்குறுதியும் வேறு கொடுத்து விட்டார். வீட்டில் கனகம்மா, செல்வி, குந்தவை எல்லோரும் இதைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டார்கள்.

இதை அறிந்ததும் குமரனுக்கு ஐந்தாறு நாட்களாக கை கால் ஓடவில்லை. ஒருநாள் முழுவதும் அறையைப் பூட்டிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதான். தனது தந்தையாராகிய நாகலிங்கத்தை ஏக வசனத்தில் திட்டித் தீர்த்து நீண்ட கடிதமொன்றும் எழுதினான். சம்பிராய பூர்வமாக “உங்கள் அன்பு மகன் குமரன்” என்று வீட்டுக்கு எழுதும் கடிதங்களை கையொப்பமிட்டு முடிப்பது அவனது வளக்கம். ஆனால் அந்தக் கடிதத்தில் அவன் வெறுமனவே “குமரன்” என்று மட்டுமே கையொப்பமிட்டிருந்தான். நாகலிங்கம் அதைப் பற்றி ஒன்றுமே அலட்டிக் கொள்ளவில்லை. உனது பெருமையை நிலை நாட்டத்தான் அப்படிச் சொன்னேன். அந்த லெக்சரர் மாப்பிள்ளை ஐந்து என்ன, பத்து லட்சமே பெறுவான். நீயும் கொஞ்ச நாளைக்கு ஜெர்மனியில் இருக்கின்ற பக்கத்து வீட்டுப் பையன் நாதனைப்போல இரண்டு வேலை மூன்றுவேலையென ஓடி ஆடிச் செய்யலாம்தானே. கவலையை விட்டுவிட்டு ஆகிறதைப் பார். சீதணப் பணத்தைக் கூடிய விரைவில் அனுப்பிவை.” என்று நான்கு வரியில் கடிதம் எழுதி யிருந்தார்.

ஒருவாறு பாரமிழுக்கிற மிருகம்போலாகி உறக்கத்தையும் ஓய்வையும் மறந்து இரண்டு மூன்று உணவு விடுதிகளில் ஓடி ஓடிக் களுவி ஐந்து லட்சம் அனுப்பியபோது, கனகம்மா குந்தவையும் கையுமாக கொழும்புக்கு வந்து தொலைபேசியில் விக்கி விக்கி அழுதாள். குந்தவை கர்ப்பமாய் இருக்கிறாள், அந்தப் படுபாவி ராசன்தான் அவளை ஏமாற்றிக் கெடுத்துப்போட்டான் என்று அழுத அம்மாவைச் சமாதானம் செய்த குமரன், ரகசியமாக கருச்சிதைவு செய்துவிட்டு ஏற்கனவே பேசி ஒழுங்காய் இருக்கிற மாதிரி பேரின்பத்துக்கே திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று தொலை பேசி மூலமே தீர்ப்பு வளங்கினான்.

“நீ மட்டும் கமலியைக் காதலிக்கலாம் நான் ராசனை விரும்பினால் மட்டும் பிழையா” என்று வாதாட முற்ப்பட்ட குந்தவையை “பொத்தடி வாய் வேசை” என்று நெத்தி அடியில் வாயை அடைத்தவன் கருச்சிதைவுக்குமுன் இனி அவளோடு எதுவும் பேசமுடியாது என்றும் மறுத்து விட்டான்.

“செப்புச் சல்லியும் சீதனமாகத் தனக்கு வேண்டாம் என்று ராசன் கடிதம் எழுதியிருக்கிறான் மகனே. குந்தவையை ராசனுக்கும் செல்வியை பேரின்பத்துக்கும் கலியாணம் செய்து வைப்போமா” என்று தயங்கி தயங்கி கோரிக்கை விடுத்த தாய் மீதும் வெறுப்பைக் கக்கினான். நாகலிங்கமும் குமரனும் , ராசனை நிராகரித்ததற்க்கு ஒரு சிறு உணவு விடுதியின் சொந்தக் காரனான ராசனது தாழ்ந்த சமூக அந்தஸ்துதான் காரணம். மற்றப்படி ராசனும் அவர்களும் ஒரே சாதிதான்.

குந்தவையின் திருமணம் நடந்து அதற்குள் இரண்டு வருட மாகிவிட்டது. அவள் இப்போது தனது கணவன் பேரின்பத்துடன் லண்டனுக்கு வரவிருக்கிறாள். “அத்தானுக்கு மேற்படிப்புக்காக புலமைப் பரிசில் கிடைத்திருக்கிறது. வருகிற யூன் மாதமளவில் லண்டன் செல்கிறோம். நான் தாயாக இருக்கிறேன். கட்டாயம் நீ என்னை வந்து பார்க்க வேண்டும்.” எனக் குந்தவை மகிழ்ச்சியோடு கடிதம் எழுதியிருந்தாள். லண்டனில்தான் குழந்தை பிறக்குமாம்.

(கடைசிப்பகுதி அடுத்த வாரம்)

Series Navigation