புதியமாதவி, மும்பை
என் கவிதைகள் சாகவேண்டும்
சாகாவரம் பெற்ற
கவிதைகளுக்காக தவமிருக்கும்
எழுத்துலகில்
வேண்டாம் வரம்.
சாகவேண்டும்
என் கவிதைகள் சாகவேண்டும்.
ஹேராம் ..
என் கவிதைகளை
வாழவைப்பதற்காய்
நீ அரசியல்வாதிகளின்
அரண்மனையில்
அடிக்கடி
அவதாரம் எடுக்கிறாய்.
குண்டுமழையில்
இரத்த வெள்ளத்தில்
நனைந்த இரவில்
ஹேராம் ..
என் கவிதைகள்
உனக்கு குடைப் பிடித்தன.
ஹேராம்
உன் ராமராஜ்யத்தில்
நான் எழுதிய
உன் கவிதைகளை
எரித்துவிடு.
(இதோ அன்று நான் எழுதிய
உன் கவிதை..)
ஹே.. ராம்..!
உன் ஜனனம்
ஏன்
சாபக்கேடானது?
நீ-
முடிசூட வரும்போதெல்லாம்
எங்கள் மனிதநேயம்
ஏன்
நாடுகடத்தப்படுகிறது?
ஹே..ராம்..!
கோட்சேயின் குண்டுகளில்
மகாத்மாவின் மரணத்தில்
நீ
ஏன்
மறுபிறவி எடுத்தாய்?
ஹே..ராம்..!
உன் ராமராஜ்யத்தில்
மனித தர்மம்
ஏன்
வாலி வதையானது?
ஹே..ராம்..!
குரங்குகளின்
இதயத்தில் கூட
குடியிருக்கும் நீ
மனிதர்களின்
இதயத்தில்
வாடகைக்கு கூட
ஏன்
வர மறுக்கின்றாய்?
ஹே..ராம்..!
இந்து என்றும்
இசுலாமியன் என்றும்
கிறித்தவன் என்றும்
சீக்கியன் என்றும்
உன் ராமராஜ்யத்தில்
வழங்கப்பட்ட
அடையாள அட்டைகளை
தீயில் எரித்துவிட்டோம்.
ஹே..ராம்..!
எங்களுக்கும்
இனி
அவதார புருஷர்கள்
தேவையில்லை.
ஹே..ராம்..!
உன்னை இன்று
நாடு கடுத்துகின்றோம்..!
ஹே..ராம்..!
இது
தசரதன் ஆணையுமல்ல..
கைகேயி கேட்கும் வரமுமல்ல..
பூமிமகள் சீதை
உனக்கு இட்ட
சாபம்..!!!!.
( 2003ல் வெளியான என் கவிதை நூல் “ஹே..ராம்” கவிதை நூலிருந்து)
puthiyamaadhavi@hotmail.com
- கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி நிலையம் – 4
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 8
- கிடப்பில் போட வேண்டிய சூது சமுத்திரத் திட்டம்
- சிந்தனையில் மாற்றம் வேண்டும்
- வன்முறையே வழிகாட்டி நெறியா?
- காட்டில் விழுந்த மரம்
- பங்க்ச்சுவாலிட்டி
- “படித்ததும் புரிந்ததும்”.. (3) தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்
- மேலும் சில விடை தெரியாத கேள்விகள்
- பி எஸ் நரேந்திரன் கட்டுரையைப் படித்தபோது – மூக்கணாங்கயிறு கட்டிய டிராகன்தான் அமெரிக்கா
- ‘நந்தகுமாரா நந்தகுமாரா:’ கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள்
- எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் – 60
- அலேர்ஜியும் ஆஸ்மாவும்
- பாரதி காலப் பெண்ணியம்
- பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914- 09. 06.1981)
- மாற்றுத்திரை குறும்படம்,ஆவணப்படம் திரையிடல்…
- கடிதம்
- கடிதம் (ராமர் சேதுவும் கண்ணகி சிலையும்)
- சொன்னாலும் சொல்லுவார்கள்- மலர் மன்னன் கட்டுரை
- ஜெயமோகனின் ஏழாம் உலகம்
- காதல் நாற்பது – 40 எனக்காகக் காத்திருந்தாய் !
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 25
- மாத்தா ஹரி – அத்தியாயம் 29
- நீயாவது அப்படிச் சொல்லாதே
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 4
- ஹெச்.ஜி.ரசூலுக்கு மறுபடியும் அநியாயம் – எழுத்தும் எதிர்வினையும் — ஒரு பார்வை
- கவிஞர் ரசூலின் கட்டுரையும் சர்ச்சையும்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம்
- மோடியின் மோடிவித்தைக்கும் அத்வானியின் அரசியல் நடவடிக்கைக்கும் தற்போது ராமர் அவசியம் தேவை!
- ஹேராம்.. என் கவிதைகள் சாகவேண்டும்
- சுயநலம் !
- இரவு நட்சத்திரங்கள்
- சிலைப்பதிவு
- மாலை பொழுதுகள்
- செல்வி காருண்யா கருணாகரமூர்த்தி நடன அரங்கேற்றம்