This entry is in the series 20110410_Issue

இளங்கோ


*
வலிந்து கூற எதுவுமற்று
ஓடுகிறான்

துரத்தும் நிழல்கள்
துணை வருகின்றன
துர்க்கனவின்
அகன்ற வாசல் வரை

கால் பாவும் மென்மையில்
முளைக்கின்றன முட்கள்

ஒவ்வொன்றாய்
நீ
இப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை
எவர் பொருட்டும்

வலிந்து கூற எதுவுமற்று
திரும்பி வருகிறான்

உன்
துர்க்கனவின் வாசலை
திறந்து வை
அவனுக்குப் பின்னே
இப்போது நிழல்கள் இல்லை

*****
–இளங்கோ

Series Navigation