This entry is in the series 20090402_Issue

ஹெச்.ஜி.ரசூல்


எந்தச் சாயலும் இல்லாமல்
வாழ் நினைத்தாலும்
எந்தச் சாயலாவது தெரிந்து விடுகிறது.
சாயலற்று வாழ்வதில்தான்
அர்த்தமென சொன்னாலும்
தவிக்கமுடியாததாகிவிட்டது
சாயலோடு வாழ்வது.
ஞாபகத்தை கிளறிவிட்டு
மெளனத்தில் உறைகிறாய்
முன்நின்று எதுவும் பேசாமல்
இயல்பாய் சிரித்து
பதிலுக்கு எதையேனும் செய்ய
தோன்றவில்லை இப்போது.
எனக்கென என்றோ ஒருநாள்
நீ செய்த இதயமொன்று.


Series Navigation