This entry is in the series 20010812_Issue


பம்பாய் ரவை –1ஆழாக்கு

உளுத்தமாவு –2ஸ்பூன்

தேங்காய்த் துருவல் –2ஸ்பூன்

பெருங்காயத்தூள் –அரை ஸ்பூன்

மிளகு, சீரகம்

(பச்சையாகப் பொடி செய்தது) } –1ஸ்பூன்

உப்பு –1ஸ்பூன்

நெய் அல்லது வெண்ணெய் –1ஸ்பூன்

வாணலியை அடுப்பில் காயவைத்து, நன்கு காய்ந்தவுடன் எண்ணெய் எதுவும் விடாமல், ரவையைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்க வேண்டும். ஆறியபிறகு ரவையுடன் உளுத்தமாவு, மிளகு, சீரகப் பொடி, உப்பு, தேங்காய்த்துருவல், நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சிறிதளவு ஜலம்விட்டு கெட்டியாகப் பிசைந்து சிறிது சிறிதாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும். இதேபோன்று மைதா மாவிலும் இதே அளவு சாமான்களைக் கொண்டு சீடை செய்யலாம்.

Series Navigation