This entry is in the series 20080508_Issue

றஞ்சினி


மங்கிய மின் ஒளியில்
நனைந்து கொண்டிருக்கும்
மைன் நதியில்
உறங்கிக் கொண்டிருக்கும்
நகரத்தை
படம் பிடிக்கும்போது
எங்கிருந்தோ வந்து
தழுவிய பனிக்காற்று
நதியுடன் போராடி
என் நினைவுகளை
மீட்டுச்செல்கிறது

கலங்கிய நதியில்
அதிர்கிறது நகரம்
கலைந்துபோகிறது
புகைப்படக்கனவு


shanranjini@yahoo.com

20080508_Issue

சம்பந்தமில்லை என்றாலும் 12 : தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்